வியாழன், 8 மே, 2014

இருபத்தியோராம் நூற்றாண்டில் பெண்கள் - ITHI "Femme Vue" ஒளிப்படப் போட்டி முடிவுகள்

இந்த வருட மகளிர் தினத்தையொட்டி ITHI மகளிர் அமைப்பு அறிவித்த ஒளிப்படப் போட்டி குறித்து பகிர்வு இங்கே. கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா குறித்த பகிர்வு இங்கே. சென்ற ஞாயிறு, 4 மே 2014 காலை 11 மணி முதல் 5 மணி வரை பெங்களூர், வில்சன் கார்டன் FSMK அலுவலகத்தில் நடைபெற்ற கண்காட்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற படங்கள் எவை என்பதை முதலில் பார்ப்போம்.

A பிரிவு: தனிப்படங்கள்

#1 முதல் பரிசு:
Talk To Him 
(by Kunjila Mascillamani Henry)
கொல்கத்தாவின் கரியாத் எனுமிடத்தில் வளையல்களும் கழுத்து மாலைகளும் விற்கும் பெண்மணி. கணவனிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வர அவரிடம், தன் அழகால் ஈர்க்கப்பட்டு, ஒருவர் தன்னைப் படமெடுப்பதைப் பெருமையுடன் சொல்லி மகிழ்ந்த பின், அப்பாவிடம் பேசுமாறு மகனை அழைக்கும் தருணம். “அந்த அழகான புன்னகையை என்னால் மறக்கவே முடியாது” என்கிறார் படத்தை எடுத்த குஞ்சிலா.

#2 இரண்டாம் பரிசு

திங்கள், 5 மே, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில் யாளி, மயிலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் திருவாசி

#1 அனுமார் வாகனம்
பிரபல கணினி நிறுவனமொன்றில் கிராஃபிக் டிசைனராகப் பணியாற்றும் சரவணன், ஃபைன் ஆர்ட்ஸ் பட்டதாரி. கடந்த 4 வருடங்களாகச் சென்னையிலிருந்து வந்து பெங்களூர் சித்திரச் சந்தையில் கலந்து கொள்கிறார். ஒரே நாளில் பல ஓவிய ஆர்வலர்களைக் காண்பதும் அவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டும் தொடர்ந்து வரையும் உற்சாகத்தைத் தருவதாகச் சொல்கிறார்.

பள்ளி நாட்களில் இயல்பாக வரைந்த ஓவியங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள், ஓவியப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள், தன் ஆசிரியர் முரளிக்கிருஷ்ணனின் ஓவியத் திறமையின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு இவையே ஆர்வத்தை வளர்த்து சென்னை ஓவியக் கல்லூரியில் சேர வைத்திருக்கிறது.

கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து பதினேழு வருடங்களாக வரைகிற இவர் அதற்கு முன்பும் ஏழு வருடங்கள் எந்தப் பயிற்சியுமின்றி தன்னார்வத்தில் வரைந்து பழகியபடி இருந்திருக்கிறார். தன் ஆர்வம் சார்ந்த படிப்பையே தேர்வு செய்த இவருக்கு கல்லூரியில் ஓவியத்தின் வெவ்வேறு பரிமாணங்களும் அறிமுகமாகியிருக்கின்றன.

சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோவில் திருவிழாவின் போது ஆலயத்தில் அமர்ந்தே தீட்டிய அனுமார் வாகன ஓவியத்தை (படம்: 1) இவர் வரைந்த அனுபவத்தைதான் கல்கி கேலரிக்காக நம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார் இங்கே. எப்படி கருப்பு வெள்ளை கோவில் காட்சி ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டது என்பதையும் விளக்கியிருந்தார். சித்திரச் சந்தையில் இவர் காட்சிப்படுத்தியிருந்த மேலும் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக இங்கே:

#2 மயிலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் வரைந்த திருவாசி

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

நான் பார்த்த பூவை.. நீ பார்க்கவில்லை..

 Flickr தளத்தில் பகிர்ந்து வரும் மலர் படங்களிலிருந்து ஒரு பத்தின் தொகுப்பு:

#1 ஒரு செடியில் இரு மலர்கள்..

#2 தங்க மழை

#3 இயற்கையின் வண்ணங்களும் இரசிக்கும் சூரியனும்..

#4 கோழிக் கொண்டை

சனி, 26 ஏப்ரல், 2014

தூறல் 17- நாட்டின் தலையெழுத்து; ஈஜிபுரா; AID பெங்களூரு; ITHI கண்காட்சி; கல்கி கேலரி

2014 மார்ச் 15,16 ஆகிய தினங்களில் பெங்களூர் தளம் அரங்கில் நடைபெற்ற  AID ஒளிப்படக் கண்காட்சி குறித்த எனது முந்தைய பகிர்வுகள் இங்கும்.. இங்கும். போட்டியில் முதல் பரிசை வென்ற படம் இதுதான்:

#1

சேரி வாழ் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுத்தது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

எழுத்தாளர் பாவண்ணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உலகம்’ - 'குழந்தைமையின் கவித்துவம்' திண்ணை இதழில்..

மண்ணுலக வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம். இன்னொருவகையில் கலைஞனின் அக உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும் எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது. குழந்தைமையின் துடிப்போடு அவற்றை அடுக்கி அடுக்கிக் கலைத்து  எல்லையற்ற ஊக்கத்தையும் உவகையையும் அடைவதுகூட சாத்தியமாகிறது. தன் எண்ணங்களாலும்  கற்பனைகளாலும் தான் கண்டடைந்த அனுபவங்களாலும்  தன் அக உலகத்தை அடர்த்திமிக்கதாக கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ராமலக்‌ஷ்மி. அந்த உலகத்தின் ஈர மண்ணைக் குழைத்தெடுத்து அவர் வடித்துவைத்திருக்கும் சிற்பங்களை ’இலைகள் பழுக்காத உலகம்’ தொகுதி வழியாகப் பார்க்கவைத்திருக்கிறார். சிற்பங்களை வடிப்பதில் அவருக்குள்ள முனைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியவை. செய்நேர்த்தியோடு காணப்படும் பல சிற்பங்கள் அவருடைய சொல்லாற்றலுக்குச் சாட்சியாக உள்ளன.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

முரளிதரன் அழகர் - கல்கி கேலரியில்..

கடந்த நாலைந்து ஆண்டுகளாக முரளிதரன் அழகரின் ஃப்ளிக்கர் பக்கத்தைத் தொடர்ந்து வருகிறேன். ஒளிப்படக் கலை, ஓவியக் கலை இரண்டிலும் அசத்தி வருபவர். இன்று வெளியாகியுள்ள கல்கி இதழின், கேலரி பக்கத்திற்காக இரு துறைகளிலும் தனது திறனை வளர்த்துக் கொண்ட விதத்தையும், அனுபவங்களையும் அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்:

பொக்கிஷத்தைக் காப்பதுதான் வேலை!  

வியாழன், 17 ஏப்ரல், 2014

தன்னந்தனியே.., அன்னபெல் லீ - எட்கர் ஆலன் போ கவிதைகள் (1,2)

தன்னந்தனியே..

குழந்தைப் பிராயத்திலிருந்து
மற்றவர்களைப் போல் நான் இருந்ததில்லை;
மற்றவர்கள் பார்த்தது போல் பார்த்ததில்லை;
எல்லோரையும் போல் என் உணர்வுகளை
வெளிக் கொண்டு வர முடிந்ததில்லை;

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin