செவ்வாய், 29 மே, 2018

ஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம் - ஸ்ரீலங்கா (3)

மூன்று நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது, இலங்கையின் தலைநகரான கொழும்பு மாநகரில் இருக்கும் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். பதினேழாம் நூற்றாண்டின் காலப் பகுதிகளில் தென்னிந்தியாவின் திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்குக் குடியேறிய சிந்து பாடிகள் எனும் இனத்தவர்களால் ஸ்தாபிக்கப் பட்டது. ‘சிந்துபாடிகள் வாழும் பட்டி’ என்பதே மருவி ஜிந்துப்பிட்டி என அழைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் பூர்வீகத் தொழில் பூக்கட்டுதல், காவடிக் கட்டுதல் மற்றும் சிந்து பாடி முருகப் பெருமானைத் தொழுதல்.

#1
பிரகாரத்தில் இருந்த சன்னதி ஒன்றில் 
அருள்பாலித்திருந்த வேலவர்
Flickr தளத்தின் EXPLORE பக்கத்தில் தேர்வாகி 
11500++ பக்கப் பார்வைகளைப் பெற்ற படம்.

அறுபடை வீடுகளில் ஒன்றான, அருணகிரியாரால் திருச்சீரலைவாய் எனப் புகழ்ந்து பாடப்பட்ட, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரைப் போலவே இலங்கையின் வடமேற்குக் கடலோரமாக கொழும்பு நகரில் அமைந்திருக்கிறது இந்த அழகிய முருகக்ஷேத்திரம்.

#2

திங்கள், 7 மே, 2018

கரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)

கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். சமீபத்தில் வால் முளைக்காத இளம் கரிச்சான் குருவியைப் படமாக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

#1
என் பகிர்வில் சொல்லப்படாத சில சுவாரஸ்யமான தகவல்கள் காலம் சென்ற திரு. கல்பட்டு நடராஜன் அவர்களின் பதிவில் வாசிக்கக் கிடைத்தன. அதில் ஒரு பகுதி..

*“கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin