அறுபத்து ஆறு வயதில் என் அம்மா
சென்ற வெள்ளிக்கிழமை காலையில்,
என் பெற்றோர் இல்லத்திலிருந்து
கொச்சினுக்கு வண்டியில் செல்கிறேன்.
எனதருகே அமர்ந்திருக்கும்,
அம்மாவை நான் பார்க்கிறேன்,
அரைத் தூக்கத்தில், வாய் திறந்து,
அவளது முகம் சாம்பல் நிறத்தில் உயிரற்றதாக,
வலியுடன் உணருகிறேன்
எவ்வளவு வயதானவளாகத் தெரிகிறாளோ
அவ்வளவு வயதாகி விட்டது அவளுக்கு, ஆயின் விரைவில்
அந்த நினைப்பைத் தள்ளி வைக்கிறேன்,