ஞாயிறு, 13 ஜூலை, 2025

மெளனத்தின் கனம்

உருவப் படங்களும், தன்னியல்புப் படங்களும் (portraits and candids) மனிதர்களின் உணர்வுகளையும் கதைகளையும் சொல்லும் சாளரங்கள்.  காலத்தைப் பதிவு செய்யும் அத்தகு சாட்சியங்களின் மற்றுமோர் தொகுப்பு.. படங்கள் ஒன்பதுடன்..


#1
மெளனத்தின் கனம்


#2 
பயணியின் கதைகள்: 
வரைபடங்கள், சேமிக்கும் நினைவுகள் மற்றும் 
அலைபேசித் திரைகள்

#3 
தேடுபவரின் அமைதி

ஞாயிறு, 6 ஜூலை, 2025

செல்வாக்கின் சின்னம்.. சௌமஹல்லா மாளிகை ( i ) - ஹைதராபாத் (6)

 சௌமஹல்லா மாளிகை:

#1

ஹைதராபாத் நகரில் சார்மினாருக்கு மிக அருகில் உள்ள சௌமஹல்லா அரண்மனை அல்லது சௌமஹல்லாத் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகைகளில் ஒன்று. செல்வம், வலிமை மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக

#2

ஹைதராபாத் நிஜாம், அசாஃப் உத்-தௌலா மீர் சலாபத் ஜங் என்பவரால் இந்த அரண்மனைகள் 1750-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டன.  அப்சல் உத்-தௌலா மற்றும் ஐந்தாம் அசப் ஜா ஆட்சிக் காலத்தில் முறையே 1857 மற்றும் 1869-ஆம் ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இவை நிஜாம் அரசர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்துள்ளன. 

#3

#4

ஞாயிறு, 29 ஜூன், 2025

அன்பெனப்படுவது யாதெனில்..

  #1

"சத்தம் மிகுந்த உலகில், 
உங்கள் சகிப்புத் தன்மைதான் 
உண்மையான வலிமை."

#2
"சில நேரங்களில், 
கடந்த காலத்தை விட்டு வெளிவர, 
முன்னோக்கிப் பார்ப்பதுவே ஒரே வழி."


#3
"வாழ்க்கை என்பது பல பாதைகளால் நிரம்பிய பயணம்; 
அதில் எந்தப் பாதையைத் தேர்வு செய்வது என்பது கடினமானது, 
ஆயினும்

வெள்ளி, 27 ஜூன், 2025

பிளைத் நாணல் கதிர்க்குருவி ( Blyth's Reed Warbler )

 

ஆங்கிலப் பெயர்:  Blyth's Reed Warbler
உயிரியல் பெயர்: Acrocephalus dumetorum 
வேறு பெயர்: பிளைத்தின் நாணல் வார்ப்ளர்

#2
பிளைத் நாணல் கதிர்குருவி ஒரு சிறிய பழுப்பு நிற பறவை ஆகும். முதன்முதலில் இப்பறவை 1849 ஆம் ஆண்டு ஆங்கில விலங்கியல் நிபுணர் எட்வர்ட் ப்ளைத்தால் முறையாக விவரிக்கப்பட்டது. அதனாலேயே  எட்வர்ட் பிளைத்தின் நினைவாக பெயரிடப்பட்டது. 

#3

ஞாயிறு, 22 ஜூன், 2025

ஆரோக்கியமான உணர்வு

 #1
“மனித உணர்வுகளிலேயே மிக ஆரோக்கியமானது, 
நன்றியுணர்வு.”
_ Zig Ziglar 

#2
“உங்கள் இலக்குகளை நீங்கள் அடையும் போது, 
புதிய இலக்குகளை நிர்ணயுங்கள். 
அதுவே நீங்கள் வளர்வதற்கான வழி.”


#3
“முழுமையான மலர்ச்சியிலும், 

செவ்வாய், 17 ஜூன், 2025

கோல்கொண்டா கோட்டை ( ii ) - ஹைதராபாத் (5)

காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - “இங்கே

நான்கு நூற்றாண்டுகளைக் கடந்து விட்டிருந்த போதிலும், ஆங்காங்கே சிதைந்து போயிருப்பினும், கட்டுமானக் கலையின் அற்புதமான அழகும் பழங்காலத்தைய பொறியியல் திறனும்  ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படவே செய்கிறது. 

#1

வெற்றி நுழைவாயிலின் வெளிப்புறம்..

#2

இடப்புறச் சுவர்..

#3

வலப்புறச் சுவர்

#4 
கோட்டையின் சுற்றுச் சுவர்

#5
கோட்டையை நோக்கி..

ஞாயிறு, 15 ஜூன், 2025

நம்பிக்கையின் நிறங்கள்

 'கனவுடன் விரியக் காத்திருக்கும் ஒரு சிறிய ரோஜாவால், உலகை நம்பிக்கையின் நிறங்களால் வண்ணமயமாக்கிட முடியும்.'


#2
'ஒருவருக்கு களையாகத் தோன்றுவது மற்றொருவருக்கு அழகிய காட்டுப்பூவாகக் காட்சி தரும்.'

#3
'இயற்கையின் நம்பிக்கை மிகத் தெளிவாக வெளிப்படுகிறது

வெள்ளி, 13 ஜூன், 2025

காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - ஹைதராபாத் (4)

 கோல்கொண்டா கோட்டை:

#1


#2

கோல்கொண்டா கோட்டை, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்திற்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோட்டை. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா என்பது கவனத்திற்குரியது.

#3

பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராக இருந்தது கோல்கொண்டா. இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்டமான கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது.

ஞாயிறு, 8 ஜூன், 2025

இன்றைய தெய்வீக விருந்தினர் - பிரம்மக் கமலங்கள்

 

பூர்வமாக பூக்கும் பிரம்மக் கமல மலர்களைப் பற்றித் தகவல்களுடன் முன்னரும் பலமுறை பகிர்ந்திருக்கிறேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில்..

ந்த முறை முழுதாக மூன்றாண்டு காலக் காத்திருப்பிற்குப் பிறகு தோட்டத்தின் ஒருபக்கச் செடியில் இரண்டும் மறுபக்கத்தில் நாலுமாக ஆறு மொட்டுகளைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி :).

#2

#3 இரட்டையர்:

திங்கள், 2 ஜூன், 2025

அருகி வரும் மிருகம் - சிறுத்தை

உயிரியல் பெயர்:  Panthera pardus
ஆங்கிலப் பெயர்: Leopard
வேறு பெயர்: சிறுத்தைப் புலி

பூனைப் பேரினத்தைச் சேர்ந்த, புலி குடும்ப வகைகளில் சிறிய வகை விலங்காக உள்ளது சிறுத்தை. புலி, வேங்கை (சீட்டா), தென் அமெரிக்கச் சிறுத்தையான ஜாகுவார் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இவற்றின் உடல் மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். ஆகையாலேயே இவற்றால் வேகமாக மணிக்கு சுமார் 58 கி.மீ வேகத்தில் ஓட முடியும். ஒரு சிறுத்தை ஒரே தாவலில் 6 மீட்டர் தொலைவை அடைய முடியும்.

#2

ஞாயிறு, 25 மே, 2025

நகரின் பெருமை.. சார்மினார்.. - ஹைதராபாத் (3)

 சார்மினார்:

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாதின் முக்கிய இடங்களில் முதலிடமாக, நகரின் பெருமையாகவும் அடையாளச் சின்னமாகவும் விளங்குவது சார்மினார். இந்தியாவின் பிரசித்தி பெற்ற கலை நயம் மிக்கக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று.

#1

[பிரபல லாட் பஜாரை நோக்கி அமைந்த கிழக்குப் புற நுழைவாயில்.]

1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக,  அதனை கொண்டாடும் நோக்கத்துடன் முகம்மது குலி குட்ப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கின்ற சாலையில் அமைந்துள்ளது. சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு என்றும் கூறப்படுகிறது.

சார்மினார் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட முதல் பல மாடிக் கட்டிடம். இதனை மையமாக வைத்தே பழமை வாய்ந்த நகரமான ஹைதராபாத் உருவாக்கப்பட்டது. இது மேல் மாடிப் பகுதியில் சிறிய பள்ளிவாசல் உள்ளது.

#2

[வடக்குப் புற நுழைவாயில்.]

உருது வார்த்தைகளான “சார் - நான்கு”, “மினார் - கோபுரம்” ஆக, “நான்கு கோபுரங்கள்” எனப் பொருள் படும்படி சார்மினார் என அழைக்கப்படுகிறது. நான்கு கோபுரங்களும் (அல்லது தூண்களும்) நான்கு வளைவுகளால் இணைக்கப்பட்டு சதுர வடிவ கட்டிடமாகத் திகழ்கிறது.

#3

புதன், 21 மே, 2025

அலெக்ஸாண்ட்ரியா கிளி ( Alexandrine Parakeet )

 பெரிய பச்சைக்கிளி:

ஆங்கிலப் பெயர்கள்: 
Alexandrine Parakeet ; 
Great-Ringed Parakeet; 
Ring-necked Parakeet

#2


உயிரியல் பெயர்: Psittacula eupatria
வேறு பெயர்கள்: ராஜ வளையக் கிளி

'பெரிய பச்சைக்கிளி' எனக் குறிப்பிடப்படும் 'அலெக்ஸாண்ட்ரியா கிளி' (Psittacula eupatria) இனம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர், வங்க தேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.

#3

மாவீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவில் பஞ்சாபிலிருந்து ஐரோப்பா வரைக்கும்

புதன், 14 மே, 2025

காட்டுக் கோழி ( Junglefowl )

ஆங்கிலப் பெயர்: Junglefowl 
உயிரியல் பெயர்: Gallus gallus 
வேறு பெயர்: சிகப்புக் காட்டுக் கோழி

சியாவைச் சேர்ந்த, காடுகளில் வாழும் கோழி இனப் பறவை.  இந்த இனத்தில் சிகப்புக் காட்டுக்கோழி, சாம்பல் காட்டுக் கோழிகள், இலங்கை காட்டுக்கோழி, பச்சைக் காட்டுக்கோழி என பல வகைகள் உள்ளன. 

பெரும்பாலும் இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் வாழ்கின்றன. சாதாரண வீட்டுக் கோழிகளை விட அளவில் சற்று பெரிய பறவைகளாகவும் இருக்கும். 

#2

இந்தியாவில் காணப்படும் இந்த சிகப்புக் காட்டுக்கோழி இனமே தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என சிலரும்,

செவ்வாய், 6 மே, 2025

கருப்பு அன்னம் ( Black Swan )

 கருப்பு அன்னம்:

ஆங்கிலப் பெயர்: Black Swan
உயிரியல் பெயர்: Cygnus atratus
வேறு பெயர்: காரோதிமம் 

பிரதானமாக ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற, அளவில் பெரிதான நீர்ப் பறவை.

நியூசிலாந்தில் இந்த இனப் பறவைகள் ஒரு காலக் கட்டத்தில் முற்றிலுமாக அழியும் அளவிற்கு வேட்டையாடப்பட்டாலும் பின்னாளில் மீண்டும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து (வலசை) செல்கின்ற உயிரினம். 

புதன், 30 ஏப்ரல், 2025

பிர்லா மந்திர் - ஹைதராபாத் (2)

 பிர்லா மந்திர்:

#1

பிர்லா மந்திர் 280 அடி உயர நௌபத் பஹாட் எனும் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. சட்ட மன்றக் கட்டிடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த குன்று சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1976 -ஆம் ஆண்டு பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோயில். கட்டி முடிக்க சுமார் 10 ஆண்டு காலம் ஆகியுள்ளது. ராமகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுவாமி ரங்கநாதானந்தாவால் திறந்து வைக்கப்பட்டது.

#2

திங்கள், 28 ஏப்ரல், 2025

சில Landmarks - ஹைதராபாத் (1)

 பழமையும் புதுமையும் கலந்த பெருநகரம் ஹைதராபாத். ஒருபக்கம் புராதான முக்கியத்துவம் கொண்ட இடங்கள், மாளிகைகள், கலை நயம் மிக்கக் கட்டிடங்கள். இன்னொரு பக்கம் அசுர வளர்ச்சியில் ஐடி துறை, அதன் மிகப் பிரமாண்டமான அலுவலகக் கட்டிடங்கள். இந்நகரத்திற்கு பிப்ரவரி மாதத்தில் ஒரு வேலை நிமித்தமாக இரண்டரை நாட்கள் சென்றிருந்தோம். கிடைத்த நேரத்தில் சுற்றிப் பார்த்த இடங்கள் தொடராக வரும். சில பிரசித்தி பெற்ற முக்கிய இடங்கள் இந்தப் பதிவில்..! 

ஹைதராபாத் தலைமைச் செயலகம் - சட்டமன்றக் கட்டிடம்:

#1

1913_ஆம் ஆண்டு பாரசீக மற்றும் ராஜஸ்தானி பாணியில் கட்டப்பட்டக் கட்டிடம். முழுவதும் வெள்ளை நிறத்தில், குவிமாடங்கள் மற்றும் அழகிய வளைவுகளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆறாவது நிஜாமான, மிர் மஹபூப் அலிகானின் நாற்பதாவது பிறந்தநாளை நினைவு கூர்ந்திடும் வகையில் எழுப்பப்பட்ட கட்டிடம். தற்போது தெலுங்கானா சட்டமன்றம் கூடும் இடமாக உள்ளது. 

#2

ஹூஸைன் சாகர் ஏரியைச் சுற்றி அமைந்த லும்பினி தோட்டத்திற்கு எதிரில் உள்ள பொதுத் தோட்டங்களுக்கு மத்தியில் உள்ளது. 

#3

பிர்லா மந்திர் குன்றின் மேலிருந்து பார்க்கும் போது தோட்டங்கள் நீருற்றுகளுக்கு மத்தியில் இரவு மின் விளக்குகளில் ஒளியில் கம்பீரமாகக் காட்சி அளித்தது.

ஹுஸைன் சாகர் ஏரி:

சனி, 26 ஏப்ரல், 2025

நம்பிக்கை கீதம்

 #1

“மிகச் சிறிய பறவை கூட வானத்தைப் பற்றி கனவு காணலாம்.”

#2
“தேர்வு செய்ய எல்லா சுதந்திரமும் உங்களுக்கு உள்ளது, 
ஆனால் உங்கள் தேர்வின் விளைவுகளிலிருந்து 
உங்களுக்கு சுதந்திரம் இருப்பதில்லை.”


#3
“இரவுக் கோட்டான் இருளைக் கண்டு அஞ்சுவதில்லை,

திங்கள், 21 ஏப்ரல், 2025

அறச் சீற்றம் - கீற்று மின்னிதழில்..


உன்னைக் கூர்ந்து நோக்கி சுட்டிக் காட்டி 
உன் பெயரைப் பேசுபொருளாக்குகின்றனர்
ஆயிரம் தூற்றல்கள், புனையப்பட்ட பொய்கள்,
ஆதாரங்களற்ற கசப்பான புகார்கள்.
நிரூபிக்க எந்த வழியும் இல்லாத நிலையிலும்

திங்கள், 14 ஏப்ரல், 2025

கவிதைகள் மாதம் - கற்பனைத் தோட்டம் - சொல்வனம் இதழ்: 340


1 ஏப்ரல் செவ்வாய் கிழமை, கவிதைகள் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது, அமெரிக்க தேசத்தில். புனித மாதமாக ஏப்ரல் மாதம் அனுசரிக்கப்பட ஆரம்பித்தது 1996_ஆம் ஆண்டில். அமெரிக்க கவிஞர்கள் கழகம்பதிப்பாளர்கள் மற்றும் கவிதை நேசர்களைக் ஒன்று கூட்டி இதை முன்னெடுத்தனர். அதன் துவக்கமாக அப்போது ஒரு இலட்சம் கவிதைப் புத்தகங்களை நூலகங்கள், பள்ளிகள் மற்றும் புத்தகக் கடைகளுக்கு வழங்கினார்கள்.

கவிதைகள் மாதத்தில், கவிதைகள் குறித்து கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொல்லிச் சென்றவை, நமக்கு கவிதை மேலான நேசத்தை மேலும் பலப்படுத்தும், கவிதைகள் ஒரு எழுத்து வகை என்பதைத் தாண்டி, கவிதைகள் ஒரு அனுபவம், ஒரு உணர்வு, மொழிகளைக் கடந்த ஒரு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் எனக் கருதி, 27 கவிஞர்களின் கூற்றுகள்:

டி. எஸ். எலியட் [T.S. Eliot] :

உண்மையான கவிதை புரிந்து கொள்ளப்படும் முன்னரே சொல்ல வந்ததைச் சொல்லி விடும்.”

முதிர்ச்சியற்ற கவிஞர்கள் மற்றவர்களைப் பின்பற்றுவார்கள்; முதிர்ச்சியுள்ள கவிஞர்கள் நம்மைக் களவாடி விடுவார்கள்.”

உணர்ச்சிகளைத் தளர விடுவதன்று கவிதை, உணர்ச்சிகளிலிருந்து தப்பிப்பது; ஆளுமையின் வெளிப்பாடு அல்ல, ஆளுமையிடமிருந்து தப்பிப்பது.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

சொந்தப் பயணத்தை அரவணைப்பவர்கள்

 #1 

“காட்டு மலர்களைப் போல, 
உங்களை நீங்கள் வளர அனுமதியுங்கள், 
மற்றவர் நீங்கள் வளர முடியாது என 
நினைத்த இடங்களிலும் கூட.”

#2
“நன்றி உணர்வில் 
அமைதியைப் பெறுகிறோம்; 
நம்பிக்கையில், 

திங்கள், 31 மார்ச், 2025

ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )

 #1


வாலில்லா மனிதக் குரங்கு, சிம்பன்ஸி. சிம்பன்சிகள் மனிதர்களுடன் 98% டி.என்.ஏ (DNA) ஒற்றுமை பெற்றவை. மனிதர்களைப் போன்ற கை, கால், மற்றும் முக அமைப்பைக் கொண்டுள்ளது. இவை மனிதர்களை ஒத்திருந்தாலும்,

திங்கள், 24 மார்ச், 2025

ஞானபீட விருதைப் பெறுவிருக்கும், வினோத்குமார் சுக்லா - 6 கவிதைகள் - சொல்வனம் இதழ்: 339

வினோத்குமார் சுக்லா கவிதைகள்

ஞானபீட விருதைப் பெறுவிருக்கும், வினோத்குமார் சுக்லா: 
2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் பெயர் பெற்றவர். அன்றாட வாழ்வின் சிக்கல்களை துணிச்சலான குரலில் இணக்கமாகவும் நீடித்தும் பதிவு செய்து தனித்துவமாக விளங்கியவர். நேற்று, 22 மார்ச் 2025 அன்று, இவருக்கு 59_ஆவது ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தி இலக்கியத்தில் இந்த கௌரவத்தை பெறும் 12_ஆவது எழுத்தாளர் இவர். 


பல இலக்கிய விருதுகளை பெற்ற இவர் ‘தீவார் மே ஏக் கிடுகீ ரஹதி தி’  (சுவரில் இருந்த ஒரு சன்னல்)  நாவலுக்காக, 1999_ஆண்டின் சிறந்த இந்தி படைப்பிற்கான சாகித்ய அகாடமி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் எனும் இடத்தில் பிறந்தவர். விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்று வேளாண் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவரது எழுத்துகளில் பெரும்பாலும் கிராமப்புற வாழ்க்கை, சாதாரண மனிதர்களின் அனுபவங்கள், சமூகத்தைக் குறித்த அவதானிப்புகள் ஆகியன கருப் பொருளாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். எளிய, நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் இவரது எழுத்துகள் உண்மையாகப் பிரதிபலிப்பதாகக் கொண்டாடப்பட்டு வந்தன. இதையே தற்போது பாரதீய ஞானபீட அமைப்பு செய்தியாளர்களுக்கான அறிவிப்பிலும் குறிப்பிட்டுள்ளது: ‘இவரது எழுத்துகள் அவற்றின் எளிமை, உணர்வுப்பூர்வம், தனித்துவம் ஆகியவற்றுக்காகப் பெயர் பெற்றவை. நவீன இந்தி இலக்கியத்தில் சோதனை ஆய்வுகளை மேற்கொண்டு, புகழ் பெற்றவை.”
**

1.

ஒருவர் தனது சொந்த வீட்டினை தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்

ஒருவர் தனது சொந்த வீட்டினை 
தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்.
ஒருவர் தனது வீட்டினைப் பார்ப்பதற்கு 
ஏழு கடல்களையும் தாண்ட வேண்டும்,
நிராதரவான நிலையிலும் 
கடக்க இயலாத தொலைவாயினும்

திங்கள், 17 மார்ச், 2025

ஆதி ரங்கம் - ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம்

#1


கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியமான வைஷ்ணவத் தலங்களில் ஒன்று.மைசூரிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள  மாண்டியா மாவட்டத்தில் காவேரி நதியின் தீவான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்.  

#2


#3

வைஷ்ணவர்களின் முக்கிய தீர்த்த ஸ்தலமாகவும், ஆழ்வார் பக்தி இயக்கத்துடன் தொடர்புடையதுமாக உள்ளது. குறிப்பாக காவேரி நதி ஓரத்தில் அமைந்துள்ள  ‘பஞ்சரங்க க்ஷேத்திரங்கள்’ என அழைக்கப்படும் ஐந்து முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.  காவேரி நதி ஆரம்பமான இடத்திலிருந்து  முதலில் அமைந்துள்ள கோயில் இதுவே ஆகையால் இது ‘ஆதி ரங்கம்’ என்றும் அறியப்படுகிறது.  ஸ்ரீரங்கபட்டண நகரம் இந்த கோயிலின் பெயரைக் கொண்டே உருவாகியுள்ளது.

#4

வியாழன், 13 மார்ச், 2025

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்... - வாத்துகள் ( Geese )

 #1

அனாடிடாய் (Anatidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை இனம் வாத்து. உருவத்தில்  சிறிய அளவிலான வாத்துகள் ducks எனவும் அளவில் பெரியதாக நீண்ட கழுத்துடன் காணப்படுபவை Geese (பன்மை) எனவும் விளிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் பெண் வாத்து goose எனவும் ஆண் வாத்து gander எனவும் குறிப்பிடப்படுகின்றன. 

இதே அனாடிடாய் குடும்பத்தின் தொலைதூர உறுப்பினராக இருக்கும் அன்னப் பறவைகள் geese வகை வாத்துகளை விடவும் பெரிதாக வளைந்த கழுத்துகளுடன் காணப்படும்.

#2

Geese வகை வாத்துகளில் 3 விதமான பிரிவுகள் உள்ளன. அன்செர் (Anser) பேரினத்தைச் சேர்ந்த சாம்பல் வாத்துகள், பிரன்டா (Branta) பேரினம் (கருப்பு வாத்துகள்) மற்றும் சென் (Chen) பேரினத்தைச் சேர்ந்த வெள்ளை வாத்துகள். 

இவை gregarious எனப்படும், கூட்டமாக வாழும் வழக்கம் கொண்டவை. இணை சேருதல் போன்றன தாண்டி நட்புறவுடன் ஒரு குடும்பமாக மந்தையாக வசிக்கும். 

#3

ஞாயிறு, 9 மார்ச், 2025

மயில் வனம்: மைசூர் கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்கா (1)

யிரியல் பூங்காக்களைப் போலவே பறவைப் பண்ணைகளும்  பறவைகளைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அழிந்து வரும் அரிய இனங்கள் பெருகி வளர வழிவகுக்கின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பறவைப் பண்ணைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்கா. இருவாச்சி, கிளிகள், கருப்பு அன்னப் பறவைகள் உட்பட்டப் பல வகைப் பறவைகளின் புகலிடமாக உள்ளது. முக்கியமாக மயில்கள்.

#2

இந்தப் பூங்காவுக்கு செல்வது மூன்றாவது முறை. கடந்த முறை சென்று வந்து படங்களை 3 பதிவுகளாகப் பகிர்ந்திருந்தேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில் உள்ளன. 

உள்ளே நுழையும் போது இரு வரிசையிலும் இருந்த பாக்கு மரங்கள் முன்னை விடவும் நன்கு வளர்ந்து வானை முட்டி நின்று வரவேற்றன.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin