ஞாயிறு, 30 நவம்பர், 2014

தூறல் 22: ‘அதீதம்’ புதிய பொலிவுடன்; திருச்சியில் 26_வது இலக்கிய விழா; திறமைகள் 70+, 5+; பட்டாணி விலை

ருமாத இடைவெளிக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் வெளிவந்து விட்டுள்ளது அதீதம்.


2011_ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் சில நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதீதம் மின்னிதழ், ஜூலை 2011_ல் எங்கள் குழுவின் வசம் வந்தது.
அதே பாதையில் மூன்று வருடங்களாகப் பல சுவாரஸ்யமான கட்டுரைகள், வித்தியாசமான தொடர்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், கதை, கவிதை, நூல் மற்றும் திரை விமர்சனங்கள், ஃபோட்டோ கார்னர், இ_புத்தகங்கள், வலைப்பூ-எழுத்தாளர் அறிமுகங்கள் என செப்டம்பர் 2014 வரை எடுத்துச் சென்றோம். Domain தளத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட இரு மாத இடைவெளியோடு, பழைய படைப்புகளை உடனடியாக புதிய தளத்துக்குக் கொண்டு வர முடியாத சூழல். இருப்பினும் இதழின் இயக்கம் நின்று போக வேண்டாமென்கிற முடிவுடன் சுவைபடச் சொல்லும் பணியைத் துவங்கி விட்டுள்ளது அதீதம். முந்தைய வெளியீடுகள் விரைவில் வேறுதளத்திலோ அல்லது அதீதத்திலேயே   “2011-2014 படைப்புகள்” எனும் பகுப்பின் (லேபிள்) கீழோ கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றிடும் எண்ணம் உள்ளது.


னி அதீதம் ஒவ்வொரு மாதமும் ‘முதலாம், இரண்டாம்’ இதழ்களாக வெளிவரும்.  தொடர்கள் தருகிறவர்கள் வசதிக்காகவும், வகைப்படுத்தும் வசதிக்காகவும் மாதமிருமுறை என்பது பின்பற்றப் பட்டாலும், வருகிற படைப்புகள் உடனுக்குடன் அப்போதைய இதழுடன் இணைக்கப்பட்டு வெளியாகும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை articlesatheetham@gmail.com எனும் வழக்கமான மின்னஞ்சல் முகவரிக்கே தொடர்ந்து அனுப்பிடலாம்.


மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இணைந்து நடத்திய 26_வது இலக்கியப் போட்டியில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்குக் கிடைத்த விருதினைப் பற்றி இங்கே பகிர்ந்திருந்தேன். 12 அக்டோபர்  2014 அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற விழாவில் எனக்காக வழங்கப்பட்ட விருதினை அனுப்பி வைத்திருந்தார் மன்றத்தின் மாநிலச் செயலாளர், முனைவர். திரு. நா. இராமச்சந்திரன். அவருக்கு என் நன்றி.


#  போட்டியில் பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

 விழா அமைப்பாளர்களுக்கு நன்றி! 


திங்கள், 24 நவம்பர், 2014

யன்னல் நிலவு - ‘சொல்வனம் 115’, பெண்கள் சிறப்பிதழில்..

சுற்றி வளரும் புற்றினை உணராது 
தியானத்திலிருக்கும் துறவியின் தலையில்
விழுகிறது இலையொன்று.
காற்றில் பறந்து நதியில் விழுந்து 
கப்பலாகிறது 
தத்தளிக்கும் கட்டெறும்புக்கு.

சனி, 22 நவம்பர், 2014

“நம்பிக்கை மனுஷிகள்” - குறும்பட வெளியீடு


வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி மலர்ந்த முகம், உதவும் உள்ளம், உற்சாகமான பேச்சு, உறுதியான நம்பிக்கை, தெளிவான சிந்தனை கொண்ட சகோதரிகள் .Muscular dystrophy-தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட இவர்கள் கடந்த வந்த பாதை, வலிகளை வலிமையாக்கிக் கொண்ட விதம், தளராத போராட்ட குணம் இவற்றால் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறார்கள்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

தூறல் 21: திருப்பூர் விழா, இணைப்பது எழுத்து, மது அரக்கன், ஹெல்மட் ப்ளீஸ்

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசளிப்பு விழா, 12 அக்டோபர் 2014 அன்று திருப்பூரில்  நடைபெற்றது. விழா அமைப்பாளர் திரு. ஜீவானந்தம் அவர்கள் பரிசுத் தொகையோடு கேடயம், சான்றிதழ்களை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.  அவருக்கும் என் நன்றி.  சேமிப்புக்காக விருதுகளை இங்கும் பதிந்து வைக்கிறேன்:). [தொடர்புடைய முந்தைய பதிவுகள் இங்கும், இங்கும்.]

#1

#2
#3

விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்றைக்குப் பலரையும் முதன்முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும், நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது குறித்தும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக திருமதி. தனலெக்ஷ்மி நான் வராதது ஏமாற்றமாக இருந்ததென்றும், சந்திக்கும் ஆசை நிறைவேறுமென நம்புவதாயும் சொல்லியிருந்தார். நானும் அவ்வாறே நம்புகிறேன். அவரது அன்புக்கு நன்றி:).
***

துளசிதளம். 2008_ல் பதிவுலகம் நுழைந்ததிலிருந்து தொடருகிற தளம்.  அன்றிலிருந்து இன்று வரை இங்கிருந்து நிறையக் கற்றுக் கொண்டேயிருக்கிறேன். என்னென்ன கற்றேன் என்பதையும் பல்வேறு சமயங்களில் பலபதிவுகளில் சொல்லி வந்துள்ளேன். சமீபத்தில் நேரடியாக அவரிடமே சொல்லும் வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி:).

வியாழன், 20 நவம்பர், 2014

மனிதனும் பிரம்மனே..

இந்த மாத PiT போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பைக் கொடுத்து, சப்ஜெக்டைத் தெரிவு செய்யும் வாய்ப்புக்கான கதவுகளையும் விரியத் திறந்து விட்டிருக்கிறார் நடுவர். மனிதனின் கைவண்ணத்தில் உருவான எந்தப் பொருளையும் ஒளிப்படமாக்கி அனுப்பலாம். சின்னஞ்சிறு குண்டூசி முதல் கலைநயமிக்கச் சிலைகள், பிரமாண்டமானக் கப்பல்கள் வரை இரசனையுடன் படமாக்கி அனுப்பிடலாம். மாதிரிப் படங்களுடனான அறிவிப்புப் பதிவு இங்கே.

படங்களை அனுப்ப இன்றே கடைசித் தேதி ஆகையால் உங்களுக்கு நினைவு படுத்திட 10 மாதிரிப் படங்களுடன் ஒரு பகிர்வு. 5,6 தவிர்த்து மற்றன யாவும் புதிது.

#1 கலைவாணி கலையழகுடன்..


#2 ஆயர்ப்பாடி மாளிகையில்..

#3 புத்தம் சரணம்
#4 Made for each other

திங்கள், 17 நவம்பர், 2014

காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. - ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’



ருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. கட்டுரைகள் ஒரு நேர்கோட்டில் விளக்கங்களுடன் நகர்ந்து செல்பவை.  அவற்றையே கற்பனை கலந்து காட்சி விவரிப்போடு புனைவாக வடிப்பது ஒரு எழுத்தாளனின் திறமைக்கான சவால் என்றே சொல்லலாம்.

பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம். சறுக்கி விடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை  எந்த சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். எழுத்து நடை நம்மைக் களத்தில் கொண்டு நிறுத்துவதற்கும், கதாபாத்திரங்களின் தன்மை எந்தப் பாதிப்பும் அடையாததற்கும் காரணம், ஆசிரியர் மனதால் அந்தக் காலக்கட்டத்துக்குள் பயணப்பட்டிருப்பதும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி உணர்ந்து எழுதியிருப்பதுமே.

புதன், 12 நவம்பர், 2014

நாம் நாமாக..

1. கண்கள் இருளைப் பார்க்கும் போது நம்பிக்கை நிறைந்த இதயம் ஒளியைப் பார்க்கிறது. 



2. வாழ்க்கை எளிதாவதில்லை. எதிர்கொள்ளும் திறனே வலுப்பெறுகிறது.

Bokeh Photography - இதுவும் கீழ் வருகிற மூன்று மற்றும் படம் 10...

3. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதுதான் சகலமும்.
சொல்கிறாள் Dolly

4. குறைகளில்லாத மனிதர்கள் இல்லை. சந்திக்க விரும்பும் ஆதர்ச மனிதராக நாம் இருக்கிறோமா முதலில்?

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்..

#1 அப்பாவின் அரவணைப்பில்..

#2 அம்மாவின் நிழலில்..

#3 அக்காவின் அன்பில்..

#4 ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்..’ - கற்றுத் தரும் அன்னை

வெள்ளி, 7 நவம்பர், 2014

‘நான்கு பெண்கள்’ தளத்தில் நேர்காணல் - இந்த மாத நூலாக ‘இலைகள் பழுக்காத உலகம்’


நான்கு பெண்கள் தளத்தில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பை இம்மாத நூலாக அறிமுகம் செய்திருப்பதோடு நேர்காணலுக்காகப் பல கேள்விகளையும் முன் வைத்திருந்தார் மு.வி. நந்தினி:

* சமீபத்தில் தினகரன் வசந்தம் இதழில் தொடர்கதை எழுதிய அனுபவம் பற்றி... குறிப்பாக வாசகர்களிடம் எவ்வகையான எதிர்வினைகளைப் பெற்றீர்கள்?

செவ்வாய், 4 நவம்பர், 2014

சிறுகதை: சின்னஞ்சிறு கிளியே.. - ‘சொல்வனம்’ பெண்கள் சிறப்பிதழில்..


ன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கணுமோ, தெரியலையே’ சலிப்பாக இருந்தது பூமாவுக்கு.

மணி அடித்து எல்லோரும் உள்ளே போய் விட்டிருந்தார்கள். “இந்த பெஞ்சுலயே இரு. சன்னல் பக்கம் அப்பப்ப வந்து பாத்துட்டிருப்பேன். மேனேஜர் வந்ததுமா சூப்பர்வைஸரை சொல்லச் சொல்லிருக்கேன். நானே கூட்டிட்டுப் போறேன். தெரிஞ்சுதா” தேவகியக்கா கண்டிப்பான குரலில் சொல்லி விட்டுப் போய் ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டது. ஒரே இடத்தில் ஒன்றுமே செய்யாமல் எவ்வளவு நேரம்தான் இருக்கிறதாம்?

வலது உள்ளங்கையை இடது கையால் மெல்லத் தடவிக் கொடுத்தாள். ‘காயம் ஆறிட்டுதான். ஆனாலும் இப்பத்தானே கட்டுப் பிரிச்சிருக்கு. கூட ரெண்டு நாளு ரெஸ்ட் எடுக்க விட்டிருக்கலாம். அம்மாக்குதான் எம்மேலேத் துளிக்கூடப் பாசம் கெடயாதே. தம்பிங்கள மாதிரி நல்லாப் படிச்சிருந்தா என்னயும் தாங்கியிருப்பா. எவ்ளோ முட்டுனாலும் மண்டையில ஏறலன்னு அடம் புடிச்சுப் படிப்ப விட்டது தப்போ?’ அடிக்கடி தோன்றுகிறது இப்போதெல்லாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin