ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

வேலி

#1

“பிரபஞ்சமே உனதென்பதாகப் பிரகாசித்திடு.” 

_ Rumi


#2 

“பெரும் பலன்களுக்குப் பெரும் குறிக்கோள்கள் தேவை.” 

_ Heraclitus.


#3

'மற்றவர்களை  வெளியே தடுத்து நிறுத்தும் வேலி 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

காஜி நசருல் இஸ்லாம் கவிதை - சொல்வனம் வங்காளச் சிறப்பிதழில்..

 

வங்காள இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது சொல்வனம் இதழ் 240அதில், நான் தமிழாக்கம் செய்த கவிதையும் கவிஞரைப் பற்றிய குறிப்பும் ..! நன்றி சொல்வனம்!

திருடரும் கொள்ளையரும் 


யார் உன்னைக் கொள்ளைக்காரன் என அழைத்தது, ஓ நண்பா?
யார் உன்னைத் திருடன் என விளித்தது?
சுற்றிச் சூழ, கொள்ளையர் தம் முரசுகளை முழக்க
திருடர்கள் ராஜ்ஜிய பரிபாலனம் செய்கிறார்கள்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

மகத்துவத்தின் விதை

  என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (93)  

#1

“மென்மையான ரோஜா, 

இதயத்தால் மட்டுமே அறிய முடிகிற, 

அதீத மகிழ்ச்சியை அளிக்கிறது.”


#2

“துணிந்து செயல்படுங்கள், 

அது உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக் கூடும்.”

#3

நம்புங்கள், 

நடக்கும்!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

இதயம் பேசுகிறது.. - பிப்ரவரி 14

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (92) 

பறவை பார்ப்போம் - பாகம்: (60)

#1

“உலகின் சிறந்த மற்றும் அழகிய விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது. இதயத்தால் மட்டுமே அவற்றை உணர முடியும்.”

– Helen Keller

#2

"அச்சம் வேண்டாம்,

நான் இருக்கிறேன் உன்னோடு!"

(Isaiah 41:10)


#3

"மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர் ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆனால்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ஃப்ளிக்கர் - ஐம்பது இலட்சம்

 https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/

இப்போதுதான் கவனிக்கிறேன். "ஐம்பது லட்சம்" பக்கப் பார்வைகளைத் தாண்டி எனது ஃப்ளிக்கர் ஒளிப்பட ஓடை. 2008_ஆம் ஆண்டு தொடங்கிய பயணம். தவம் போல் தொடருகிறேன். நான் நேசிக்கும்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

நாளை நமதே

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (91) 

பறவை பார்ப்போம் - பாகம்: (59)

#1
"நேற்று என்பது நமதல்ல திரும்பப் பெறுவதற்கு, 
ஆனால் போராடிப் பெறவோ தோற்கவோ 
நாளை என்றும் நமதே!" 
-Lyndon B. Johnson



#2
"உங்கள் எல்லைக்கோடினை வரையறுப்பது 
உங்கள் மனம் மட்டுமே."


#3
"எவ்வளவுக்கு எவ்வளவு 
உங்கள் விருப்பங்களை விட்டு விடுகிறீர்களோ,

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

யாரைத் தேடும் குரல்? - நன்றி க. அம்சப்ரியா!


கவிஞர் க. அம்சப்ரியா அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்  “சூழலியல் கவிதைகளில் ஒரு பசுமைப்பயணம்” எனும் தலைப்பில் ஒரு தொடரை ஆரம்பித்துள்ளார். பாகம் நான்கில் எனது கவிதையை முன் வைத்து இன்று அவர் எழுதியிருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்:


சூழலியல் கவிதைகளில் ஒரு பசுமைப்பயணம் - 04

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு
துயர் உறுத்தும்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"
    (சிலப்பதிகாரம்- காடுகாண் காதை) 

    செழிப்பு, தன் நிலையிலிருந்து திரிந்து பாலைவனமாக மாறுகிறதென்றால் யார் காரணமாக முடியும்? 

  சூழலியல் என்கிற பதத்தின் அரிச்சுவடியும் அறியாத ஆள்கிறவர்கள், அதிகார வட்டங்கள், பொதுவெளி மக்கள் எல்லாரும்தான்.

  மரங்களை, செடிகளை, கொடிகளை வெறுமனே கிளைகளாக, இலைகளாக, வேர்களாக மட்டுமே பார்ப்பவர்கள் ஒரு வகையென்றால், எல்லாவற்றிலும் பொருளீட்டுகிற உத்தி அறிந்தவர்கள் இன்னொரு வகை. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin