செவ்வாய், 27 டிசம்பர், 2016

இந்த வார ‘குங்குமம்’ கவிதைக்காரர்கள் வீதியில்..

# 23 டிசம்பர் 2016, குங்குமம் வார இதழில்..


எனது கவிதைகள்.. இரண்டு..

உடைந்த சிறகுகள்

வியாழன், 22 டிசம்பர், 2016

பாடும் பறவை.. புல்புல்.. - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (6)

கொண்டைக்குருவி புல்புல்..
#

12 டிசம்பர் தினமலர் பட்டம் இதழின் அட்டையிலும்..
#

“நம்மைச் சுற்றி - நம்மைப் பற்றி” பக்கத்திலும்... 

செவ்வாய், 20 டிசம்பர், 2016

மங்கையின் உள்ளம்.. மாதுளம்

மாதுளையின்  தாவரவியல் பெயர் Punica Grantum. தமிழில் ஏன் மாதுளை என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் சுவாரஸ்யமானது. மங்கையின் உள்ளம் (மாது + உளம்), அதாவது எப்படி ஒரு பெண்ணின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை எளிதாக அறிந்திட இயலாதோ அதே போல பழத்தின் தோலை உரிக்காமல் அதன் முத்துக்களைக் கண்டறிய முடியாது. அதனால்தான் மாதுளங்கனி எனப் பெயர் பெற்றதாம். மாது உளம் கனி என்று பிரித்துச் சொல்கிறார்கள் கவிஞர்கள்.

மாதுளங்கனியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக முன்னோர்கள் சொல்லிச் சென்றதும் பரவலாக நம்பப் படுகிறது.
#1

ஏற்கனவே கடந்த தோட்டத்துப் பதிவுகளில் சில மாதுளை மலர்களின் படங்களைப் பகிர்ந்திருப்பினும் மேலும் சில இங்கே.. தகவல்களுடன்..

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தை மாதுளை மாதமாகக் கொண்டாடுகிறார்கள். கலிஃபோர்னியா, அரிசோனா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

செவ்வாய், 13 டிசம்பர், 2016

எமிலி டிக்கின்சன்: தோட்டத்துக்கு வந்த பறவை

https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/28475486316/
தோட்டத்துக்கு வந்திருந்தது அந்தப் பறவை
நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது
தூண்டிற்புழுவைப் பாதியாகக் கடிக்கிறான்
அப்படியே பச்சையாக அதை விழுங்குகிறான்

பிறகு வசதியாக ஒரு புல்லில் இருந்த
பனித்துளியைக் குடிக்கிறான்,
வண்டொன்றுக்கு வழி விட
சுவர் ஓரமாகப் பக்கவாட்டில் தத்தித் தாவுகிறான்

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

தூறல்: 28 -பட்டம், வல்லமை, சாரல்

தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (5)

22 நவம்பர் 2016 இதழில்..

சூப்பர் நிலாக்களைப் படமாக்கிப் பகிர்ந்த போது சேகரித்த தகவல்கள்...

அருகில் வந்த அழகு நிலா..

சென்ற மாதம் எடுத்த சூப்பர் மூன் இங்கே.  வெறொரு அபெச்சர் அளவில் (f/9) எடுத்த படம் பார்வைக்கு:

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

கறுப்பு அங்கி உடுத்திய விலங்கு - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (4)

21 நவம்பர் இதழில்..

...வெகு தொலைவுக்கு கேட்கும் வகையில், வெவ்வேறு சூழல்களில், 25 விதமான ஒலிகளை எழுப்பக் கூடியவை. தண்ணீரில் விளையாடவும் நீச்சலடிக்கவும் விரும்பும். ...


 கறுப்பு அங்கி உடுத்திய விலங்கு

சனி, 26 நவம்பர், 2016

மீண்டும் துளிர்க்கும்

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 6 )

#1 கொய்யாப் பூக்கள்

#2 முருங்கைப் பூக்கள்

#3 அரும்பும் அடுக்குச் செம்பருத்தி மொட்டு

#4 மலர்ந்தபின்..

செவ்வாய், 22 நவம்பர், 2016

பிறந்த உடனே எழுந்து ஓடும் விலங்கினம் - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (3)


தினமலரின் 14 நவம்பர் 2016, மாணவர் பதிப்பான பட்டம் இதழில்..


மைசூர் விலங்கியல் பூங்காவில் முன்னர் எடுத்த படங்களுக்காக இங்கே நான் சேகரித்த தகவல்கள்..

வெள்ளி, 18 நவம்பர், 2016

நங்கூரம்

#1
மகிழ்ச்சியாய் இருங்கள். நீங்கள் நீங்களாய் இருங்கள். மற்றவர்களுக்கு அது பிடிக்காவிட்டால் போகட்டும். மகிழ்ச்சி ஒரு விருப்பத் தேர்வு. ஒவ்வொருவரையும் திருப்திப் படுத்திக் கொண்டிருப்பதற்காக அல்ல நமது வாழ்வு.

#2
உங்கள் அனுமதியின்றி யாராலும் உங்களைத் தாழ்வாக உணர வைக்க முடியாது. _ Eleanor Roosevelt 

#3

‘மகிழ்ச்சி கொள்வோம். எல்லாமே நன்றாக நடப்பதற்காக அல்ல,
எல்லாவற்றிலும் நல்ல பக்கத்தை நம்மால் பார்க்க முடிவதற்காக.’

திங்கள், 14 நவம்பர், 2016

ஸூப்பர் நிலா - SUPER MOON 2016

வழக்கத்தை விடவும் 14% பெரிதாகவும், 30% கூடுதல் வெளிச்சத்துடனும் காட்சி தந்து கொண்டிருக்கும் இன்றைய முழு நிலவு...

Exif: 1/60s,f/13, ISO400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
14-11-2016 19:31:40

68 வருடங்கள் கழித்து, அதாவது 26 ஜனவரி 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு

வெள்ளி, 11 நவம்பர், 2016

வியாழன், 20 அக்டோபர், 2016

தூறல்: 27 - புன்னகை; வளரி; வலம்; நவீனவிருட்சம் 100

கேட்பினும் பெரிதுகேள் “புன்னகை” ஜூலை 2016, கவிதை இதழ் 76_ல்  நான் தமிழாக்கம் செய்த ஜப்பானிய கவித்துளிகள்..

#
மூலம்: மட்சுவோ பஷோ

நன்றி புன்னகை!
_____________________________________
புதிய ஆரம்பம்
"சிறுநூல் வரிசை"

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

உங்கள் சொந்தத் தீர்மானங்கள்... - ஆப்ரகாம் லிங்கன் பொன்மொழிகள்

#1
மற்றவருக்கு சுதந்திரத்தைத் தர மறுப்பவர் தாம் சுதந்திரத்தை அனுபவிக்கத் தகுதியற்றவர்.

2.
எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால் அவை ஒவ்வொரு தினமாகவே நம்மை வந்தடையும்.

3.
எப்போதும் நினைவிருக்கட்டும்,

சனி, 1 அக்டோபர், 2016

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு.. - அனைத்துலக முதியோர் தினம்

#1
ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாகக் காணப்படுகிறது:

#2
கண்ணில் தெரிவது பாதி..
  ‘நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி..
உள்ளம் என்பது ஆமை’

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.

புதன், 21 செப்டம்பர், 2016

உலக அமைதி தினம் 2016

# ‘நமக்குள் இருந்து வருகிறது அமைதி..’
-புத்தர்

# அமைதி என்றும் அழகு..
_ Walt Whitman

#அமைதிக்காக எவ்வளவு உரத்து குரல் கொடுத்தாலும், எங்கு சகோதரத்துவம் இல்லையோ அங்கு அமைதி கிடைக்காது. 
Max Lerner

வியாழன், 1 செப்டம்பர், 2016

சாதீயம் - நவீன விருட்சத்தில்..

வ்வொரு வேட்டைக்குப் பிறகும்
விருந்துகள் நிகழ்கின்றன.
வேலி தாண்டி வந்து விட்டதாக
அறைந்து இழுத்து செல்லப்பட்ட
வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தனித்திரு விழித்திரு

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 5)
#1 தும்பி
 Dragonfly
இவரின் உயிரியல் பெயர் Anisoptera . விர் விர்ரெனப் பறந்து விடுகிற இவரைப் படம் பிடிப்பது எளிதுதான். சில வாரங்களுக்கு முன் வீட்டுக்கு அருகேயிருக்கும் கே.ஆர்.புரம் ஏரிக்குச் சென்றிருந்தேன் பறவைகள் கண்ணில் அகப்படுமா எனப் பார்க்க.  நுழைவுச்சீட்டு வாங்கி பூங்கா வழியாக ஏரிக்கரையோரம் வெகுதூரம் நடந்தும் பறவைகள் கண்ணில் சிக்கவில்லை. ஆனால் வழியெங்கும் தட்டான்களின் ரீங்காரம். கவனித்ததில் ஒரு குச்சியின் மேல் வந்தமருகிற தட்டான் சில நொடிகளில் கிளம்பி ஹெலிகாப்டர் போல அந்தப் பகுதியிலேயே சற்று வட்டமடித்துவிட்டு, திரும்பவும் அதே குச்சிக்கே வந்து ஓய்வெடுக்கின்றன. தயாராகக் காத்திருந்து வேண்டிய கோணங்களில் எடுத்துக் கொண்டேன். அந்தப் பகிர்வு தனியாகப் பிறகு வரும்:).

வீட்டில் ஒருநாள் கணினியிலிருந்து கண்ணை அகற்றிய கணத்தில் சன்னல் வழியே தெரிந்தது மாமரக்கிளையின் குச்சி மேல் அமர்ந்திருந்த இந்த வண்ணத் தட்டான். பிற ஜந்துக்களைப் பார்த்தால் அவசரமாகக் கேமராவை எடுக்கச் செல்வேன். ஆனால் இது நிச்சயமாய் அதே இடத்தில் மீண்டும் வந்தமரும் என எண்ணியபடி நிதானமாக கேமராவை எடுத்து, மாங்குச்சியின் மஞ்சள் நிறத்துக்குப் பச்சைப் பின்னணி இருக்கட்டும் என, சன்னல் வழியாகவே ஜூம் எடுத்த படம்.


#2 மர வண்ண வெட்டுக்கிளி
Wood-colored Short-wing Grasshopper
#3
துள்ளி வேறிடம் நகர்ந்ததும் இன்னொரு க்ளிக்..


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

உலக ஒளிப்பட தினம் 2016 - கருப்பு வெள்ளையில் ஏன் படங்கள்?

ளிப்படக் கலையின் 177_வது வருடம். 19 ஆகஸ்ட், இன்று உலக ஒளிப்பட தினம். தத்தமது உலகத்தை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளும் அத்தனை ஒளிப்படக் கலைஞர்களுக்கும் நல்வாழ்த்துகள்!
என் முதல் கேமரா
நீங்கள் மட்டுமல்ல, பொதுவாகவே ஏன் பல ஒளிப்படக் கலைஞர்களுக்கும் சரி, ஓவியர்களுக்கும் சரி கருப்பு வெள்ளைப் படங்கள் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு..?” சமீபத்திய பதிவொன்றில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி. வர்ணங்கள் அழகு. வர்ண மயமானது வாழ்க்கை.


இருப்பினும் அதை அப்படியே பதிவு செய்வதை விடுத்து ஏன் கருப்பு வெள்ளையில் காட்ட வேண்டும்?

இதற்குப் பல காரணங்கள். வண்ணப் படங்கள் எடுக்கும் வசதி இல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைக்கும் ஏன் நம் மனதை விட்டு அகலாமல் நிற்பதை மறுக்க முடியாது. கருப்பு வெள்ளைப் படங்களில்
வண்ணங்களால் ஏற்படும் கவனச் சிதறல் தவிர்க்கப்பட்டு கருப்பொருளின் மேல் கவனம் குவிகிறது. ஒளியும் நிழலும் சிறப்பாக வெளிப்படுகிறது. கருப்பு வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணங்களின் கலவையை சரி வரக் கொண்டு வருவதிலிருக்கும் சவால் பிடித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட இரசனையின் வெளிப்பாடாகவும் அமைந்து போகின்றன கருப்பு வெள்ளைப் படங்கள்.

குறிப்பாக மனிதர்களின் உணர்ச்சிகளைத் துல்லியமாகக் காட்டுவதிலும் வல்லமை வாய்ந்தவை கருப்பு வெள்ளை portrait படங்கள். ‘இல்லையென சொல்லமுடியுமா?’ கேட்கிறார்கள் இவர்கள்:

#1
‘எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும்..’

#2
‘இரவானால் பகலொன்று வந்திடுமே..’

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

தூக்கணாங்குருவிகளும் செம்மீசைச் சின்னான்களும்..

சில வாரங்களுக்கு முன் வீட்டுத் தோட்டத்தில் தினசரி மணிக்கணக்கில் தூக்கணாங்குருவிகளின் உற்சாகக் கச்சேரி. முருங்கை மரத்தில் கூடு கட்டத் துவங்கின. மளமளவென ஒன்றல்ல மூன்று கூடுகள் ஒருசில தினங்களுக்குள் முழுமை பெற்றன. எந்நேரமும் அதில் ஊஞ்சலாடிக் கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டு பாட்டுப் பாடியபடி இருந்தன. கேமராவுடன் பால்கனி பக்கம் சென்றால் விர்ரென அடுத்த வீட்டு மரங்களுக்கு விரைந்தன. கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்து கண்ணாமூச்சி ஆடின. சரி இனி தொந்திரவு செய்ய வேண்டாமெனக் கேமராவைக் கையில் எடுக்காமல் அவற்றின் விளையாட்டுகளை நாளும் பொழுதும் இரசித்தபடி இருக்கையில் திடீரென அவற்றைக் காணவில்லை. ஐந்தாறு நாட்களாக நடந்து வந்த இசைத் திருவிழா நின்று போய் மரத்தில் பேரமைதி. குருவிகளின் சங்கீதத்தைக் கேட்க முடியாத வருத்தத்தில் கிளைகளும் இலைகளும் கூட அசையாதிருந்தன. 
#3

எங்கே சென்றிருக்கும் அவை? எங்கெங்கிருந்தோ குச்சிகளை, புற்களைச் சேகரித்து வந்து இத்தனை பொறுமையாக, இத்தனை அழகாக தேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்களைப் போல கட்டிய கூடுகளை அத்தனை எளிதாக ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய் விட்டனவா? தங்கையிடம் சொன்ன போது, ஒருவேளை உள்ளே முட்டைகள் இட்டிருக்கும், திரும்பி வருமென்றாள். அப்படியும் நடக்கவில்லை. அதன் பின் சென்ற மாத இறுதியில் அடைமழையில் கூடுகள் பேய்க்காற்றில் அலைபாய்ந்தபோது ‘முட்டைகள் இருக்குமோ.. அவை என்னாகுமோ..’ எனக் கவலையுடன் கவனித்தேன். எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் குருவிகள் நிச்சயம் அவற்றை நிர்க்கதியாய் விட்டுப் போயிருக்காதே? அவற்றின் வாழ்க்கை முறை பற்றி இணையத்தில் தேடினேன்.

சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்தன.

புதன், 10 ஆகஸ்ட், 2016

'மகிழ்ச்சி!' - கல்கி பவள விழா மலர் 2016_ல்.. என்னைக் கவர்ந்த என் புகைப்படம்..

ல்கி குழுமத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா 6 ஆகஸ்ட் 2016 அன்று சென்னையில் நடைபெற்றது.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியால் வெளியிடப்பட்ட பவளவிழா மலரில்...
என்னைக் கவர்ந்த என் புகைப்படம்..

புதன், 27 ஜூலை, 2016

வெற்றி நிச்சயம் - டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் (பாகம் 2)

டாக்டர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது பொன்மொழிகள் சிலவற்றின் தமிழாக்கம், எடுத்த படங்களுடன்..

1. வெற்றிக் கதைகளை மட்டுமே படிக்காதீர்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு செய்தி மட்டுமே கிடைக்கும். தோல்விக் கதைகளை வாசியுங்கள். வெற்றி பெற சில யோசனைகள் உதிக்கும்.  



2. ஒருவரை தோற்கடிப்பது மிக எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகக் கடினமானது.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

புதன், 20 ஜூலை, 2016

பவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்!

#1
பிரம்மக் கமலம் ( Epiphyllum oxypetalum) மலரைக் குறித்து ஏற்கனவே 2012 ஆம் ஆண்டில் விரிவாக இங்கே.. “பத்து பிரம்மக் கமலங்கள் -  அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்” பகிர்ந்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து சில வாரங்களில் என் வீட்டிலும் ஒரு தொட்டியில் ஓர் இலையை நட்டு வைத்தேன். இலையின் விளிம்புகளிலிருந்து மேலும் இலைகளும், தண்டுகளுமாய் துளிர்த்தன. அதில் ஒரு தண்டு மட்டும் சற்று தடிமனாக, மெல்ல மெல்ல உயரமாக, சுமார் எட்டடி அடி உயரத்துக்கு வளர்ந்து, வளைந்து வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்து  ‘நான் இங்கு நலமே.. நீ அங்கு நலமா..’ என விசாரித்தபடியே இருந்ததே தவிர ஒரு மொட்டு கூட விடவில்லை நான்கு வருடங்களாக. இரு மாதம் முன்னர் வீடு மாறி வந்த போது மற்ற தொட்டிச் செடிகளை அங்கிருந்த நண்பர்களுக்கு கொடுத்து விட்டாலும் இதை மட்டும் கொண்டு வந்து இங்குள்ள தோட்ட மண்ணில் நட்டு வைத்தேன். கொடி போல் வளைந்தபடி இருந்த செடியை ஒரு முருங்கை மரக் கம்பை நட்டு அதில் கட்டியும் வைத்தேன்.

நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின், அட, இரண்டு மொக்குகள் விட்டிருந்தது செடி, புதிய இடத்தில்.. புதிய மண்ணில்..

 மலர் விரியும் அழகு பனிரெண்டு படங்களாக உங்கள் பார்வைக்கு..

மொக்கு, நான்கைந்து நாட்கள் முன்னர்..
#2


இன்று காலையில்..
#3
#4

ஞாயிறு, 17 ஜூலை, 2016

சும்மா கரடி விடாதே..

#1
ப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள்  வாழ்வதற்கான சூழல் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. ஆங்கிலத்தில் Sloth bear எனப்படும், Melursus ursinus எனும் உயிரியல் பெயரைக் கொண்ட, பாலூட்டி விலங்கான கருங்கரடி இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒரு சில விவரங்களைத் தெரிஞ்சுக்கலாமா?

#2
மற்ற வகைக் கரடிகளோடு ஒப்பிடுகையில் பெயருக்கேற்ப இவை சற்றே மந்தமானவை.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

நிற்க அதற்குத் தக

மழலைப் பூக்கள்.. (பாகம் 9)

#1 ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’
Flickr explore பக்கத்தில் தேர்வாகி
5700+ பார்வையாளர்களையும், 147 விருப்பங்களையும்
பெற்றிருக்கும் படம்:)!

https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/26883492464/

#2 ‘கற்க கசடற கற்றபின்
 நிற்க அதற்குத் தக'
#3 கண்ணுக்கு மை அழகு..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin