ஞாயிறு, 27 ஜனவரி, 2019

அளவற்ற ஆற்றல்

#1
"அளவற்ற உங்களது ஆற்றலுக்கு 
எல்லைகள் வகுத்து விடாதீர்கள்."

#2
"வாழ்க்கையோடு செல்லாதீர்கள். 
வாழ்க்கையோடு வளருங்கள்
_ Eric Butterworth

#3
நன்றியுணர்வு..

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

நான் சூரியன் - சார்ல்ஸ் காஸ்லே கவிதை - பதாகை மின்னிதழில்..

நான் சூரியன், ஆனால் என்னைக் கண்டு கொள்ள மாட்டாய் நீ,
நான் உனது கணவன், ஆனால் அதை ஒப்புக் கொள்ள மாட்டாய் நீ.
நான் கைதி, ஆனால் என்னை விடுவிக்க மாட்டாய் நீ,

செவ்வாய், 15 ஜனவரி, 2019

உழவர் திருநாள் வாழ்த்துகள்!

விளைச்சல் அமோகம்
#1

யற்கைக்கும் சூரியனுக்கும் உழவுக்கும் இன்னபிற உயிர்களுக்கும் நன்றி சொல்லி வழிபடும் பொங்கல் திருநாள் தமிழர்களைப் பொறுத்தவரை சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் ஒரு தேசிய விழாவாகவே இருந்து வருகிறது.

சனி, 12 ஜனவரி, 2019

முடிவற்ற நேரம் - இரவீந்திரநாத் தாகூர் கவிதை (2)

டவுளே, நேரம் உன் கரங்களில் முடிவற்றதாக இருக்கிறது.
உன்னுடைய நிமிடங்களை எண்ணிட எவரும் இல்லை.

பகல்களும் இரவுகளும் கடக்கின்றன, பூக்களைப் போல் யுகங்கள் மலர்ந்து வதங்குகின்றன.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

மணிப்புறா - பறவை பார்ப்போம் (பாகம்:36)

புறாக்களில் இரண்டு வகை. மணிப்புறாவும் மாடப்புறாவும். உருவத்தில் சிறியதாக இருக்கும் மணிப்புறா ஆங்கிலத்தில் "dove" என்றும், சற்றே பெரிய உருவத்தைக் கொண்ட மாடப்புறா "pigeon"  என்றும் அறியப்படுகின்றன. பெரிய கட்டிடங்கள், கோபுரங்கள், மசூதிகளில் வசிப்பதால் மாடப்புறா எனும் பெயர் வந்திருக்கக் கூடும்.

#1
ஆங்கிலப் பெயர்: Spotted dove
இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா பகுதிகளில் அதிகம் காணப்படுகிற மணிப்புறா, கூர்மையான கருப்பு நிற அலகுகளைக் கொண்டவை. கண்கள் செம்பழுப்பு நிறத்திலும் கால்கள் சிகப்பு நிறத்திலும் இருக்கும். மாடப்புறாவை விடச் சிறிதாக மெலிந்த உருவத்துடன், தவிட்டு நிறத்துடன், புள்ளிகள் கொண்ட கருநிறப் பின்கழுத்தைக் கொண்டிருக்கும்.  வாலின் முனை சதுர வடிவில் இருக்கும்.  30-33 செ.மீ நீளத்தில் சுமார் 160 கிராம் எடையில் இருக்கும். ஆயுட்காலம் 8 ஆண்டுகள் வரையிலும். ஆண், பெண் இரு பாலினப் பறவைகளும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை.

#2

பொதுவாகப் புறாக்கள் கூட்டம் கூட்டமாக வசித்திடும் பறவை வகை என்றாலும்

செவ்வாய், 1 ஜனவரி, 2019

தூறல்: 34 - முத்துச்சரம்.. ஃப்ளிக்கர் பக்கம்.. ஆல்பம்.. (2018)

குறிப்பிடும் படியாக எதுவும் செய்துவிடவில்லை என்பது தெரிந்தாலும் செய்தவற்றைத் திரும்பிப் பார்க்கையில் பரவாயில்லை என ஒரு ஆறுதல் ஏற்படுகிறது. அதிலேயே நிறைவு கண்டு விட்டால் அப்படியே நின்று விடக் கூடிய அபாயமும் உள்ளது. இருந்தாலும் “திரும்பிப் பார்த்தல்” என்பது தொடர்ந்து செயலாற்ற ஒரு உந்துதலைத் தரும் அல்லவா?
முத்துச் சரத்தில்.. மாதம் சராசரியாக ஐந்து அல்லது ஆறு பதிவுகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin