1 ஏப்ரல் செவ்வாய் கிழமை, கவிதைகள் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது, அமெரிக்க தேசத்தில். புனித மாதமாக ஏப்ரல் மாதம் அனுசரிக்கப்பட ஆரம்பித்தது 1996_ஆம் ஆண்டில். அமெரிக்க கவிஞர்கள் கழகம், பதிப்பாளர்கள் மற்றும் கவிதை நேசர்களைக் ஒன்று கூட்டி இதை முன்னெடுத்தனர். அதன் துவக்கமாக அப்போது ஒரு இலட்சம் கவிதைப் புத்தகங்களை நூலகங்கள், பள்ளிகள் மற்றும் புத்தகக் கடைகளுக்கு வழங்கினார்கள்.
கவிதைகள் மாதத்தில், கவிதைகள் குறித்து கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொல்லிச் சென்றவை, நமக்கு கவிதை மேலான நேசத்தை மேலும் பலப்படுத்தும், கவிதைகள் ஒரு எழுத்து வகை என்பதைத் தாண்டி, கவிதைகள் ஒரு அனுபவம், ஒரு உணர்வு, மொழிகளைக் கடந்த ஒரு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் எனக் கருதி, 27 கவிஞர்களின் கூற்றுகள்:
டி. எஸ். எலியட் [T.S. Eliot] :
“உண்மையான கவிதை புரிந்து கொள்ளப்படும் முன்னரே சொல்ல வந்ததைச் சொல்லி விடும்.”
“முதிர்ச்சியற்ற கவிஞர்கள் மற்றவர்களைப் பின்பற்றுவார்கள்; முதிர்ச்சியுள்ள கவிஞர்கள் நம்மைக் களவாடி விடுவார்கள்.”
“உணர்ச்சிகளைத் தளர விடுவதன்று கவிதை, உணர்ச்சிகளிலிருந்து தப்பிப்பது; ஆளுமையின் வெளிப்பாடு அல்ல, ஆளுமையிடமிருந்து தப்பிப்பது.