ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)

#1
 “முடிவில் நான் கற்றுக் கொண்டதெல்லாம் 
தனிமையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டுமென்பதையே”

#2
“நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. 
பெரிய மனிதர்களையே வளர்க்கிறோம்.”

#3
குழந்தை சொல்லாததையும் புரிந்து கொள்பவள் தாய்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

திருப்தியான வாழ்க்கைக்கான திறவுகோல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 37

#1
“வாழ்க்கையின் குறிக்கோள், 
குறிக்கோளுடனான வாழ்க்கையே!" 
_ Robert Byrne

#2
“சீரான திருப்தியான வாழ்க்கைக்கான திறவுகோல், 
வாழ்வில் சாதிக்க நாம்  யாரென்பதே நமக்குப் போதுமானதென 
மனப்பூர்வமாக நம்புவது”
_Ellen Sue Stern

#3
“நம்முடைய உலகத்தில் மாற்றம் கொண்டு வர 
எந்த மாயஜாலமும் தேவையில்லை. 
அதற்குத் தேவையான அத்தனை சக்தியும் 
நம்முள் ஏற்கனவே இருக்கிறது.” 
_J. K. Rowling

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பண்பாட்டுத் தலைநகரம் - கொல்கத்தா (2)

நெடுங்காலமாக கொல்கத்தா அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. கொல்கத்தாவில் "சாத்ரா" எனும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. இந்தித் திரைப்படங்களோடு வங்காள மொழித் திரைப்படங்களையும், மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். டாலிகஞ்ச் எனும் இடமே வங்காளத் திரைப்படத் தயாரிப்பின் மையமாகத் திகழ்கிறது. இதனால் வங்காளத் திரைப்படத்துறை "டாலிவூட்" எனவும் அழைக்கப்படுகிறது. டாலீவூட் சத்யஜித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்ஹா, ரித்விக் காட்டக் மற்றும் அபர்ணா சென் போன்ற பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது.  இப்படிப் பல வித காரணங்களுக்காக இந்தியாவின் ‘பண்பாட்டுத் தலைநகரம்’ எனவும் கொல்கத்தா கொண்டாடப் படுகிறது.

ஆயினும் முந்தைய பதிவில் சொன்னது போல மக்கள் மற்றும் நகரம் சார்ந்த பல பிரச்சனைகள் தீர்வு காணப்படாது மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் உள்ளது, கொல்கத்தா. அவற்றில் ஒன்று கை ரிக்ஷா..

#1
மனிதரை மனிதர் இழுக்கும் அவலம்

மிழகத்தில் கலைஞரின் முயற்சியாலும், இந்தியாவின் மற்ற பெரும்பாலான இடங்களிலும் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா இங்கே பயன்பாட்டில் இருப்பதும், துருப்பிடித்தத் தகர டப்பாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்த தோற்றத்தில் ஓடும் மிகப் பழைய மஞ்சள் அம்பாஸிடர் டாக்ஸிகளும் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா எனும் சந்தேகத்தை வரவழைக்கின்றன. சாலைகளின் நடுவே ஓடுகின்ற ட்ராம், மற்றும் சைக்கிள் ரிக்ஷா, ஜட்கா ஆகிய வாகனங்கள் கொல்கத்தாவை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

#2
“அந்தக் காலம்... அது அது அது...”

புதன், 19 செப்டம்பர், 2018

ரவீந்திர சேது - கொல்கத்தா (1)

#1
ரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கொல்கத்தா. மக்கள் தொகையில் நான்காவது இடம். மேற்கு வங்கத்தின் தலைநகரம்.   உலக அளவிலும் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகத் திகழ்கின்றது.

கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், எப்படி வந்தது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், காளிகத்தா (காளி மாதாவின் இடம்) எனும் பொருளில் ஏற்பட்டதென்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.  வங்க மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்ததால் அதுவே அதிகாரபூர்வப் பெயராக இருந்து வந்தது. பிறகு 2001 ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரப்பூர்வப் பெயராக அறிவிப்பானது.

#2

இலங்கைப் பயணம் போல இதுவும் ஒரு குறுகிய காலப் பயணமே.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

மாயஜாலம்

#1
"புன்னகையை அணிந்திடு. 
நண்பர்களைப் பெற்றிடு" 
_ George Eliot

#2
"குழந்தைப் பருவம் என்பது 
களங்கமற்றதும் 
விளையாட்டுத்தனம் நிறைந்ததும் ஆகும். 
சுதந்திரமும் மகிழ்ச்சியும் கொண்டதாகும்"


#3
“குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுவோம்!”

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

கண்ணுக்குப் புலப்படாதவை

#1
“பணிவில் உயர்ந்து நிற்கையில் 
உயர்ந்த மனிதராகும் தகுதியை நாம் நெருங்கி விடுகிறோம்.” 
_Rabindranath Tagore

#2
சில நேரங்களில் 
ஒரு அறை வேண்டுவதெல்லாம் 
சாடி நிறைய அன்றலர்ந்த மலர்களையே.

#3
“அதிகாலை நடை பயிற்சி முழுநாளுக்குமான வரம்” 
- Henry David

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

உலகம் ஒரு நாடக மேடை - வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 36

#1
 “நாம் யாரென்பது நமக்குத் தெரியும், 
ஆனால் யாராகக் கூடுமென்பது நமக்குத் தெரிவதில்லை”


#2
 “இயற்கையினுடான ஒரு தொடுதல் 
மொத்த உலகையும் நமக்கு நெருக்கமானதாக ஆக்குகிறது.”

#3
 “உங்கள் ஆன்மாவுக்கேனும் 
நீங்கள் உண்மையாய் இருங்கள்” 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin