வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் !

#1 நண்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!


பெங்களூரில் இந்த வருடம் Eco friendly_ஆகப் பண்டிகையைப் கொண்டாட வேண்டி மேற்கொள்ளப்பட்டு வருகிற விழிப்புணர்வு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாக உள்ளன. நேற்று எடுத்த சிலவற்றோடு, பல்வேறு சமயங்களில் எடுத்த வினை தீர்க்கும் விநாயகரின் படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

#2 முழு முதற் கடவுள்

#3 சயனக் கோல கணபதி

#4 நர்த்தன கணபதி

 #5 பொற்பாதங்கள் சரணம்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

CWC (சென்னை வீக்என்ட் கிளிக்கர்ஸ்) - 5ஆம் ஆண்டு கண்காட்சியும் புத்தக வெளியீடும்

'சிலருக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு தொழில். எங்களுக்கோ பேரார்வம். நாங்கள்தாம்.. சென்னை வீக்என்ட் கிளிக்கர்ஸ்' எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் CWC தனது ஐந்தாம் ஆண்டு கண்காட்சியைக் கடந்த திங்கள் முதல் சென்னை லலித்கலா அகடமியில் நடத்தி வருகிறது.

31 ஆகஸ்ட் 2014 வரை நடக்கவிருக்கும் கண்காட்சியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள். 26, 29, 30, 31 தேதிகளில் இலவசப் பயிற்சிப்பட்டறைகளும் நடைபெற உள்ளன:


ஆர்வமிக்க இரண்டு மூன்று பேரின் சந்திப்பாகத் தொடங்கிய இந்தக் குழு இன்றைக்கு 1500_க்கும் அதிகமான உறுப்பினர்களோடு 350_க்கும் மேலான வாரயிறுதி ஃபோட்டோ வாக் ஆகியவற்றுடன் இருபதுக்கும் மேலான பயணங்களை முடித்திருப்பது பாராட்டுக்குரியது.


அர்ப்பணிப்புடன் தொடரும் அவர்களது வெற்றிக் கதையை அறிந்து கொள்ள சில கேள்விகளை முன் வைத்தேன்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

175_வது உலகப் புகைப்பட தினமும்.. சில ஆலோசனைகளும்..

175 வருட வரலாறு. உலகப் புகைப்பட தினம்.

இன்றைய நாளில் நாம் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய சில விஷயங்களை இங்கே பதிவது நன்றாக இருக்குமெனத் தோன்றியது:). வாழ்க்கையில் தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் நம் போன்ற கலைஞர்கள் சற்றே கவனம் எடுத்தால் தவிர்த்திட முடிகிற தவறுகள் என்னென்ன எனப் பார்ப்போமா?


* கோணம் முக்கியம். படத்தை க்ளிக் செய்யும் முன் உங்கள் ஃப்ரேமின் எல்லாப் பக்கங்களிலும் கண்களை ஓட்டுங்கள், சப்ஜெக்டுடன் காட்ட வேண்டிய ஏதாவது முக்கியமான விஷயத்தைக் கோட்டை விடுகிறோமா என. என்னதான் பிறகு சரி செய்து கொள்ளலாம் என்றாலும் கோணல் மாணலாக எடுப்பதைத் தவிருங்கள்.


* நாளை கேமராவுடன் கிளம்புகிறோம் என்றால் முந்தைய இரவே பேட்டரியை சார்ஜில் போடுங்கள். அவசியப்பட்டால் backup battery ஒன்றும் வைத்துக் கொள்ளலாம்.


* மோசமான சீதோஷ்ண நிலைகளிலிருந்து உங்கள் கேமராவைப் பாதுகாக்கத் தவறாதீர்கள். பூஞ்சனம் ஏற்படாமலிருக்க கேமரா பையில் சிலிகான் ஜெல் பாக்கெட் ஒன்றைப் போட்டு வையுங்கள். அடிக்கடி உபயோகிக்காத லென்சுகளை அவற்றிற்கான pouch_களில் போட்டு அதை ஜிப் லாக் பைகளில் பத்திரப் படுத்துங்கள்.

Stay Focused
* மெமரி கார்டை மறக்காதீர்கள்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கோகுலாஷ்டமியும் குட்டிக் கண்ணன்களும்..

#1 பாலக் கிருஷ்ணன்

#2 முகுந்தா முகுந்தா..

#3 வரம் தா வரம் தா

கேமராவில் நான் சிறைபிடித்தச் சின்னக் கண்ணன்கள் :)

#4 மாயவனோ தூயவனோ

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

2014 சுதந்திர தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக் - பாகம் 2 ; படங்கள் 30 ( Bangalore Lalbagh Independence Day Flower Show 2014 )

மூவண்ண வாழ்த்து
2014 சுதந்திர தினக் கண்காட்சி லால்பாக் தோட்டத்தின் 200_வது கண்காட்சியும் ஆதலால் முக்கியத்துவம் பெற்று, மைசூர் அரண்மனையை மலர்களால் உருவாக்கியிருந்ததைப் பாகம் ஒன்றில் பார்த்தோம் இங்கே:

மலர்களால் மைசூர் அரண்மனை - 
200_வது லால்பாக் சுதந்திர தின மலர்க் கண்காட்சி - படங்கள் 17
[பதிவைத் தவற விட்டவர்கள் பார்த்து விட்டு வந்து விடுங்கள்:).]

கூட்ட மிகுதியால் அதிக நேரம் நிற்க முடியாமல் வெளியேறி விட்டேன் க்ளாஸ் ஹவுஸிலிருந்து.
#2

ஆகஸ்ட் 8ஆம்தேதி கண்காட்சி ஆரம்பித்த தினத்தில் ஏழாயிரமாக இருந்த வருகையாளர் எண்ணிக்கை நான் சென்றிருந்த 9ஆம் தேதி சனிக்கிழமை 27 ஆயிரமாகி, மறு நாள் ஞாயிறு 50 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. வாரநாட்களுக்குப் பிறகு சுதந்திர தினமான இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு நிச்சயம் கூட்டம் ஜே ஜே என்றுதானிருக்கும் எள் விழ இடமில்லாமல் :)!  3 இலட்சம் ரோஜாக்களால் உருவான அரண்மனையில் வாடிவிட்டிருந்த ஒன்றரை இலட்சம் ரோஜாக்களை சென்ற ஞாயிறு அன்று இரவோடு இரவாக மாற்றி விட்டிருக்கிறார்கள். இந்த மூன்று நாட்களுக்காகவும் கூட அவ்வாறு செய்திருக்கக் கூடும்.  'திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகதான் இருக்கிறது' என ஒவ்வொரு வருடமும் எழுகிற முணுமுணுப்புகளைப் பின் தள்ளி விடுகிறது இது போல அவர்கள் எடுத்துக் கொள்கிற பிரயத்தனங்களும், பாராட்டுக்குரிய உழைப்பும்.
#3
பொன் விழா கொண்டாட்டத்தில் நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக புகைப்படக் கண்காட்சியும் இருந்தது ஒரு அரங்கில்.அங்கேயும் போய் வரலாம். மலர்களையும் சுற்றி வரலாம், வாருங்கள். படங்கள் திறக்க நேரம் எடுத்தால் ஏதேனும் ஒரு படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யுங்கள். வரிசையாக லைட் பாக்ஸில் பார்த்திடலாம்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

தினகரன் வசந்தத்தில்.. எனது தொடர்

'தினகரன்' நாளிதழுடன் வெளியாகும் 'தினகரன் வசந்தம்' இணைப்பிதழில், வருகிற ஞாயிறு (17.08.2014) அன்று ஆரம்பமாகிறது நான்
முதன் முறையாக எழுதும் தொடர், அதுவும் சரித்திரக் கதை. அது எதைப் பற்றிய கதை என்பதையும் இன்று அறிவித்திருக்கிறார் தினகரன் இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியர்:

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

மலர்களால் மைசூர் அரண்மனை - 200_வது லால்பாக் சுதந்திர தின மலர் கண்காட்சி - படங்கள் 17 - ( Bangalore Lalbagh Independence Day Flower Show 2014 )

#1
இருநூறு வருடங்களாக இடைவிடாமல் வருடத்துக்கு இருமுறையென நடைபெற்று வரும் லால்பாக் மலர்க் கண்காட்சியின் இந்த வருட சிறப்பு அம்சங்களாக மைசூர் அரண்மனை, தேவி சாமுண்டீஸ்வரியை அம்பாரியில் ஏற்றி வரும் தசரா யானைகள் ஊர்வலம் மற்றும் மைசூர் கே. ஆர். சர்கிளில் இருக்கும் மகராஜா கிருஷ்ணராஜ உடையாரின் உருவச்சிலையுடனான மணி மண்டபம்.

[படங்கள் திறக்கத் தாமதமானால் ஏதேனும் ஒரு படத்தின் மேல் க்ளிக் செய்து வரிசையாக லைட் பாக்ஸில் பார்க்கலாம்.]

#2

அரண்மனை 45 அடி நீளம், 12 அடி அகலம், 27 அடி உயரத்தில் மூன்று லட்சம் மஞ்சள், வெள்ளை, சிகப்பு ரோஜாக்களால் எழுந்து நின்றிருந்தது.

#3

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தூறல் 18: 2014 உலகப் புலிகள் தினம், லால்பாக் சுதந்திர தினக் கண்காட்சி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

புலிகள் பாதுகாப்பு தினக் கண்காட்சி:

வேகமாக அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றாகப் புலிகள் இருக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் தம் வாழ்விடத்தில் 93 சதவிதிதத்தை இழந்து ஒரு இலட்சமாக இருந்த எண்ணிக்கையும் குறைந்து இப்போது வெறும் 3000 புலிகள் மட்டுமே இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையும் கூடக் கடந்த ஆண்டை விட 200 குறைந்து, இன்னும் வருடங்கள் போகப் போக எவ்வளவு குறையுமோ எனும் அச்சத்தைக் கொடுப்பதாக உள்ளன.
#
பன்னெடுங்காலமாகத் தோலுக்காக வேட்டையாடப்பட்டு பெருமளவில் அழிந்து போன இனம் இப்போது குறைந்து வர சீதோஷ்ண மாற்றங்கள் ஒரு காரணி என்றால், தன் வாழ்விடத்தை மனிதன் விரித்துக் கொண்டே போவதால் சுருங்கிக் கொண்டே போகின்ற காடுகள் அடுத்த காரணி. மாறிவிட்ட எல்லைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் புலிகள் ஊருக்குள் உணவு தேடிவருவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அடிக்கடி நிகழுகின்றன. ‘புலிகள் இருந்தால்தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும்’ என்கிறார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு தலைவர் முகமது சலீம். புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தானே, காடுகளின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் மேய்ச்சல் விலங்குகள் எண்ணிக்கை மட்டுமே அதிகமாகி, காடுகளின் வளம் குறையும். இப்படிக் காடுகளின் காவலனாக இருக்கும் புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த சில வருடங்களாக ஜூலை 29ம் தேதி, உலக புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலக புலிகள் பாதுகாப்பு தினமான  ஜூலை 29 தேதி அன்று விழிப்புணர்வைக் கோரும் விதமாக விதம்விதமான புலி ஓவியங்களை பெங்களூர் எம்.ஜி ரோடின் ரங்கோலி மெட்ரோ ஆர்ட் சென்டரில் காட்சிப்படுத்தியிருந்தார் ஓவியர் சந்திரன்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

குழந்தைகளின் அழுகுரல் ( பாடல் 1) - எலிஸபெத் பேரட் பிரெளனிங்


1.
குழந்தைகள் அழுவது கேட்கிறதா, ஓ என் சகோதரர்களே,
வருடங்களோடு வரப்போகும் சோகங்களுக்கு முன்னதாகவே?
தாய் மடியில் தங்கள் பிஞ்சுத் தலைகளைச் சாய்த்துக் கொண்டாலும்,-
நிறுத்த முடியவில்லை வழிந்தோடும் கண்ணீரை.
ஆட்டுக்குட்டிகள் கூச்சலிட்டுத் திரிகின்றன புல்வெளியில்;

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin