* தினகரன் வசந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
* தினகரன் வசந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நன்றி தினகரன் வசந்தம்!

உங்கள் அன்பு, ஆதரவுடன் தொடருகிற இந்த ஒளிப்படப் பயணம்...
#

நேற்றைய தினகரன் வசந்தத்திலும்.. அனைவருக்கும் நன்றி!

#

நன்றி ப்ரியா!
#

வியாழன், 12 பிப்ரவரி, 2015

தூறல் 24 - நவீன விருட்சம் 96 ; கலிஃபோர்னியா ‘தென்றல்’; தினகரன் வசந்தம்



டந்த 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் காலாண்டுப் பத்திரிகை ‘நவீன விருட்சம்’.  டிசம்பர் 2014 வெளியான அதன் 96_வது இதழில் எனது தமிழாக்கக் கவிதைகள் இரண்டு இடம் பெற்றுள்ளன.

சனி, 11 அக்டோபர், 2014

ஆறடி நிலம் (நிறைவுப் பாகம்) - நன்றி தினகரன் வசந்தம்!

பாகம் 1 ; பாகம் 2 . பாகம் 3.

புயலாக உள்ளே வந்தாள் ராணி ஜீனத் அவரது குழப்பங்களுக்குத் தீர்வு காண.  “முடிவு செய்து விட்டேன்.  நம் யாரையும் கொல்லக் கூடாதென  பிரிட்டிஷ்காரர்களுடன் பேரம் பேசப் போகிறேன். ஒப்புக் கொண்டால் சரணடைந்து விடுகிறோம் என்று சொல்லப் போகிறேன்” என்றாள். ஏதோ சொல்ல முற்பட்ட அகமதைப் பார்த்து “மகராஜாவின் அனுமதியையே நான் கேட்கவில்லை. கொட்டகையைக் கழுவும் முட்டாள்களின் பேச்சையா கேட்கப் போகிறேன்” சீறினாள் ஜீனத். குனிந்து வணங்கிய அகமது அமைதியாக வெளியேறி விட்டான்.

புதன், 8 அக்டோபர், 2014

தினகரன் வசந்தம் தொடர்: ஆறடி நிலம் (பாகம் 3)

பாகம் 1 இங்கே; பாகம் 2 இங்கே.

யோசிக்கிறீர்களா மன்னா? சரி. யோசித்து முடிவு சொல்லுங்கள். அதுவரை இங்கேயே நிற்கிறேன்” என்றான் மிர்ஸா பணிவாக.  தப்பிக்க வழியில்லை.

“முடிவா? எந்த மனிதனாலும் எந்த முடிவும் எடுக்க முடியாது. நானும் அப்படியே. நடக்க வேண்டியவை நடக்க வேண்டிய தருணத்தில் நடந்து விடுகின்றன.” இரண்டு கைகளையும் உயரத் தூக்கிச் சொன்னார். ‘என்ன அற்புதமான பதில்’ எழுந்த சந்தோஷத்தைக் காட்டிக் கொள்ளாமல் “மேலும் என்னைத் தலைவனாக்க விரும்பும் அந்த சிப்பாய்களோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லை” உதட்டைப் பிதுக்கி, தோள்களை உயர்த்திக் கைவிரித்தார் ஜாஃபர்.

சனி, 20 செப்டம்பர், 2014

‘ஆறடி நிலம்’ பாகம் 2 - ‘தினகரன் வசந்தம்’ தொடர்

பாகம் 1 இங்கே.

ராணி ஜீனத் மஹால் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பிரச்சனையைக் கொண்டு வரக் கூடிய எந்த விஷயத்தையும் பேசத் தயாராக இல்லை. பிரிட்டிஷ்காரர்களுக்கும் இது நன்றாகத் தெரிந்திருந்தது. அதனாலேயே யாரையாவது ராணியிடம் கதை சொல்ல அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புரட்சி எனப் புறப்பட்டவர்கள், தெற்கே தம்மை எதிர்த்தவர்கள் எல்லாம் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக விளக்க வைத்தார்கள். புத்திசாலிகள்.

இன்னொரு விஷயமும் ஜாஃபர் மனதை அலைக்கழித்தது. தன்னை ஒரு சுஃபி மகானாக உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார். எத்தனையோ பேரின் துயர்களை, நோய்களை தன் ஆசிர்வாதத்தால், பிரார்த்தனையால் குணப்படுத்த முடிந்திருக்கிறது. இப்படியொரு அசாதாரண சக்தியைத் தனக்கு அள்ளித் தந்த கடவுள் என்ன நினைப்பார்? ஜனங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதை விரும்புவாரா? அதே நேரம், ஒரு மகான் போரில் ஈடுபடலாமா? போரில் இறங்கி பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகலாமா? குழப்பமாக இருந்தது. தன் பிறப்பின் நோக்கம் என்ன? எது சரி? எது தப்பு? தன் மேல் விதிக்கப்பட்டதுதான் என்ன?

ராம் பாபாவைக் கேட்கலாமா?

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ஆறடி நிலம் - 'தினகரன் வசந்தம்' நான்கு வாரத் தொடர் - பாகம் 1

17 ஆகஸ்ட் தொடங்கி நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் தினகரன் வசந்தம் இதழில் வெளியான குறுந்தொடரை, பத்திரிகையில் வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே ஒவ்வொரு பாகமாக பகிருகிறேன்.


புதன், 13 ஆகஸ்ட், 2014

தினகரன் வசந்தத்தில்.. எனது தொடர்

'தினகரன்' நாளிதழுடன் வெளியாகும் 'தினகரன் வசந்தம்' இணைப்பிதழில், வருகிற ஞாயிறு (17.08.2014) அன்று ஆரம்பமாகிறது நான்
முதன் முறையாக எழுதும் தொடர், அதுவும் சரித்திரக் கதை. அது எதைப் பற்றிய கதை என்பதையும் இன்று அறிவித்திருக்கிறார் தினகரன் இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியர்:

செவ்வாய், 5 மார்ச், 2013

‘தினகரன் வசந்தம்’ பெண்கள் தின ஸ்பெஷலில்..- இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்


பெண்கள் தின ஸ்பெஷலாக வெளிவந்திருக்கும் 3 மார்ச் 2013 தினகரன் வசந்தம் இதழில், பெண் பதிவர்கள் பலரின் வலைப்பூக்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடையாளமாகிப் போய்விட்ட கேமரா படத்துடன் www.tamilamudam.blogspot.com :)! துளசி டீச்சர், சந்தனமுல்லை, அமிர்தவர்ஷினி அம்மா, தேனம்மை, தீபா, ஹுஸைனம்மா, சுசி, சக்திசெல்வி, மேனகா, கவிதா, விக்னேஷ்வரி, இயற்கை ராஜி, புவனா, விதூஷ், ரம்யா, காயத்ரி, தாரணிப் பிரியா, வித்யா, மயில் விஜி...... என

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தினகரன் வசந்தத்தில்.. 'புகைப்படப் பிரியன்' மெர்வின் ஆன்டோ பேட்டி

மொபைல் போன் இருந்தால் ஹீரோ ஆகலாம்! :
அட்டைப்படக் கட்டுரையாக..

நன்றி தினகரன் வசந்தம்:)! 
 ***

மூன்றாவது கண்ணாகவேக் கேமராவைப் பாவித்து, தான் ரசித்த விஷயங்களை உலகோடு பகிரும் புகைப்படப் பிரியன் - மெர்வின் ஆன்டோ. நாகர்கோவில் தொழில் நுட்பக் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் படித்த கையோடு மனதுக்குப் பிடித்தப் புகைப்படத் தொழிலில் இறங்கியவர்.

உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று கேட்பதை போல் என்னிடம் சிலர் கேட்பதுண்டு... ‘நிக்கான் கேமரா சிறந்ததா? கானன் காமெரா சிறந்ததா?’ என்று. நம் பார்வையில் இரண்டும் ஒன்றே. ஆனால், நாம் பழகும் விதத்தில்தான் இருக்கிறது வித்தை. நமக்குள்ளே புதைந்து கிடக்கும் க்ரியேடிவிட்டிக்கு எந்தக் கேமரா என்பது முக்கியமே இல்லை.

_ மேலும் வாசியுங்கள்,  மெர்வின் எனக்கு அளித்த பேட்டியை..

அவர் எடுத்த அற்புதமான படங்களை ரசித்தபடி:)!

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தினகரன் வசந்தத்தில்..- தமிழில் புகைப்படக்கலை (PiT) - உலக ஒளிப்பட தினத்தில்..

19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினமாகிய இன்று ஃபோட்டோகிராஃபி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள தினகரன் வசந்தத்தில்.. ‘தமிழில் புகைப்படக்கலை’.
பிரகதீஸ்வரர் ஆலயம் - சர்வேசன்; புறா - நவ்ஃபல்; சிலந்தி - ஆன்டன்; பிரஷ், ஆரஞ்சு - ஆனந்த் விநாயகம். உறுப்பினர் எடுத்த இப்படங்களுடன் PiT-ல் வெளியான ஆகச் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பெற்றவை நந்து f/o நிலாவின் கருப்பு வெள்ளைப் படமும், அமலின் ஸ்ட்ராபெர்ரி படமும். இருவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி தினகரன் வசந்தம்!
***

  • இதே இதழில் வெளியாகியுள்ள, புகைப்படக்கலைஞர் திரு. கல்பட்டு நடராஜன் அவர்களுடனான எனது நேர்காணல் முந்தைய பதிவாக இங்கே.

  • இரண்டும் ஒரே இதழில் இடம் பெற்றுள்ள காரணத்தால், PiT குறித்த கட்டுரையை எனது இன்னொரு பெயரில் வெளியிட்டுள்ளார்கள்.
***

ஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் - 'தினகரன் வசந்தம்' போட்டோகிராபி ஸ்பெஷலில்.. திரு. நடராஜன் கல்பட்டு

பெரியவர் திரு. நடராஜன் கல்பட்டு அவர்களுடனான எனது நேர்காணல் இன்றைய தினகரன் வசந்தம் இதழில்.., நன்றி வசந்தம்!

எட்டுவார முயற்சியில் எடுத்த படம்:

இவரது புகைப்பட அனுபவங்கள் தற்போது பாடப் பதிவுகளாக, ‘Legend Talks' எனும் கெளரவத்துடன் தொடராக ‘தமிழில் புகைப்படக்கலை-PiT' தளத்தில் வெளியாகி வருகின்றன. புகைப்பட ஆர்வலர்களுக்கு முன் உதாரணமாகத் திகழும் அவருக்கு நம் வணக்கங்கள்!
***


இதே இதழில் வெளியாகியுள்ள எனது இன்னொரு கட்டுரையை வாசிக்க:
தமிழில் புகைப்படக்கலை (PiT) - உலக ஒளிப்பட தினத்தில்..
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin