** அதீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
** அதீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 அக்டோபர், 2015

அலங்கார பலூன்களும் விபரீத விளைவுகளும்..


லுவலக விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இவற்றை A to Z கவனித்து  நடத்தித் தருகிறோம்’ என வாக்குத் தருகிற, இவெண்ட் ஆர்கனைசர் எனப்படுகிற விழா ஏற்பாட்டளர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் மக்கள். தவறில்லை. ஆனால் ஒப்படைக்கும் பொறுப்பை நேர்மையாகச் செயல்படுத்துவார்களா என்பதைத் தீர விசாரிப்பது மிக மிக அவசியம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

தேவதையின் தொடுகை - மாயா ஏஞ்சலோ (4)


துணியப் பழகிராத நாம்
மகிழ்ச்சியை விட்டு விலகி
தனிமை ஓட்டுக்குள் சுருண்டு வாழ்கிறோம்
நம்மை விடுவிக்க

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

“குழந்தைகளின் அழுகுரல்” - பாடல்கள் 12 & 13 (நிறைவுப் பாகம்)


ங்கள் முன்னே நன்றாக அழட்டும் குழந்தைகள்;
இதிலிருந்து ஓட முடியாமல் அவர்கள் களைத்து விட்டார்கள்
அவர்கள் சூரியனின் பிரகாசத்தை கண்டதில்லை,
சூரியனை விடப் பிரகாசமான எந்தப் பிரமாதத்தையும்.
மனித குலத்தின் பெருந்துயரை அறிந்திருக்கிறார்கள்,
அதன் விளைவான ஞானத்தை அடையாமல்;

வெள்ளி, 13 மார்ச், 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 10 & 11)


ரண்டு வார்த்தைகள், “எம் தந்தையே”
நிஜத்தில் இவைதாம் நினைவில் நிற்கும் எங்கள் பிரார்த்தனை.
அச்சுறுத்தும் நள்ளிரவு வேளையில், எங்கள் கூடத்தில்,
அண்ணாந்து பார்த்து மென்மையாக வசீகரமாக நாங்கள் சொல்பவை
எங்களுக்கு வேறெந்த வார்த்தைகளும் தெரியாது

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 8 & 9)


இயந்திரங்களே! சற்றேஅமைதியாக இருங்கள்!
குழந்தைகள் தங்கள் சுவாசத்தின் ஒலியை,
கண நேரமேனும் கேட்கட்டும் -
அன்றலர்ந்த இளந்தளிர்கள் மலர்வளையம் போல நின்று
ஒருவரின் கரங்களை மற்றவர் தொட்டுப் பார்க்கட்டும்!
கடவுள் தங்களுக்கு விதித்த, அளித்த வாழ்க்கை
இரக்கமற்ற இந்த உலோகச் சத்தம் மட்டுமே அல்ல
என்பதை உணரட்டும் -

வியாழன், 8 ஜனவரி, 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 6 & 7)


சொல்கிறார்கள் குழந்தைகள் “ஓ! களைப்பாய் இருக்கிறோம் நாங்கள்.
எங்களால் ஓடிடவோ தாவிடவோ இயலாது __
எப்போதேனும் புல்வெளியை நாங்கள் நாடினால், அது
அதிலே விழுந்து உறங்க மட்டுமே.

செவ்வாய், 2 டிசம்பர், 2014

குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 4 & 5) - எலிஸபெத் பேரட் பிரெளனிங்

"நிஜம்,” என்றார்கள் குழந்தைகள், “எங்களுக்கான
காலம் வரும் முன்னரே நாங்கள் மரணிப்பது நடக்கிறது!
சென்ற வருடம் இறந்து போனாள் சின்னஞ்சிறு ஆலிஸ்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

தூறல் 22: ‘அதீதம்’ புதிய பொலிவுடன்; திருச்சியில் 26_வது இலக்கிய விழா; திறமைகள் 70+, 5+; பட்டாணி விலை

ருமாத இடைவெளிக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் வெளிவந்து விட்டுள்ளது அதீதம்.


2011_ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் சில நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதீதம் மின்னிதழ், ஜூலை 2011_ல் எங்கள் குழுவின் வசம் வந்தது.
அதே பாதையில் மூன்று வருடங்களாகப் பல சுவாரஸ்யமான கட்டுரைகள், வித்தியாசமான தொடர்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், கதை, கவிதை, நூல் மற்றும் திரை விமர்சனங்கள், ஃபோட்டோ கார்னர், இ_புத்தகங்கள், வலைப்பூ-எழுத்தாளர் அறிமுகங்கள் என செப்டம்பர் 2014 வரை எடுத்துச் சென்றோம். Domain தளத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட இரு மாத இடைவெளியோடு, பழைய படைப்புகளை உடனடியாக புதிய தளத்துக்குக் கொண்டு வர முடியாத சூழல். இருப்பினும் இதழின் இயக்கம் நின்று போக வேண்டாமென்கிற முடிவுடன் சுவைபடச் சொல்லும் பணியைத் துவங்கி விட்டுள்ளது அதீதம். முந்தைய வெளியீடுகள் விரைவில் வேறுதளத்திலோ அல்லது அதீதத்திலேயே   “2011-2014 படைப்புகள்” எனும் பகுப்பின் (லேபிள்) கீழோ கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றிடும் எண்ணம் உள்ளது.


னி அதீதம் ஒவ்வொரு மாதமும் ‘முதலாம், இரண்டாம்’ இதழ்களாக வெளிவரும்.  தொடர்கள் தருகிறவர்கள் வசதிக்காகவும், வகைப்படுத்தும் வசதிக்காகவும் மாதமிருமுறை என்பது பின்பற்றப் பட்டாலும், வருகிற படைப்புகள் உடனுக்குடன் அப்போதைய இதழுடன் இணைக்கப்பட்டு வெளியாகும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை articlesatheetham@gmail.com எனும் வழக்கமான மின்னஞ்சல் முகவரிக்கே தொடர்ந்து அனுப்பிடலாம்.


மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இணைந்து நடத்திய 26_வது இலக்கியப் போட்டியில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்குக் கிடைத்த விருதினைப் பற்றி இங்கே பகிர்ந்திருந்தேன். 12 அக்டோபர்  2014 அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற விழாவில் எனக்காக வழங்கப்பட்ட விருதினை அனுப்பி வைத்திருந்தார் மன்றத்தின் மாநிலச் செயலாளர், முனைவர். திரு. நா. இராமச்சந்திரன். அவருக்கு என் நன்றி.


#  போட்டியில் பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

 விழா அமைப்பாளர்களுக்கு நன்றி! 


வெள்ளி, 21 நவம்பர், 2014

தூறல் 21: திருப்பூர் விழா, இணைப்பது எழுத்து, மது அரக்கன், ஹெல்மட் ப்ளீஸ்

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசளிப்பு விழா, 12 அக்டோபர் 2014 அன்று திருப்பூரில்  நடைபெற்றது. விழா அமைப்பாளர் திரு. ஜீவானந்தம் அவர்கள் பரிசுத் தொகையோடு கேடயம், சான்றிதழ்களை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.  அவருக்கும் என் நன்றி.  சேமிப்புக்காக விருதுகளை இங்கும் பதிந்து வைக்கிறேன்:). [தொடர்புடைய முந்தைய பதிவுகள் இங்கும், இங்கும்.]

#1

#2
#3

விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்றைக்குப் பலரையும் முதன்முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும், நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது குறித்தும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக திருமதி. தனலெக்ஷ்மி நான் வராதது ஏமாற்றமாக இருந்ததென்றும், சந்திக்கும் ஆசை நிறைவேறுமென நம்புவதாயும் சொல்லியிருந்தார். நானும் அவ்வாறே நம்புகிறேன். அவரது அன்புக்கு நன்றி:).
***

துளசிதளம். 2008_ல் பதிவுலகம் நுழைந்ததிலிருந்து தொடருகிற தளம்.  அன்றிலிருந்து இன்று வரை இங்கிருந்து நிறையக் கற்றுக் கொண்டேயிருக்கிறேன். என்னென்ன கற்றேன் என்பதையும் பல்வேறு சமயங்களில் பலபதிவுகளில் சொல்லி வந்துள்ளேன். சமீபத்தில் நேரடியாக அவரிடமே சொல்லும் வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி:).

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

குழந்தைகளின் அழுகுரல் ( பாடல் 1) - எலிஸபெத் பேரட் பிரெளனிங்


1.
குழந்தைகள் அழுவது கேட்கிறதா, ஓ என் சகோதரர்களே,
வருடங்களோடு வரப்போகும் சோகங்களுக்கு முன்னதாகவே?
தாய் மடியில் தங்கள் பிஞ்சுத் தலைகளைச் சாய்த்துக் கொண்டாலும்,-
நிறுத்த முடியவில்லை வழிந்தோடும் கண்ணீரை.
ஆட்டுக்குட்டிகள் கூச்சலிட்டுத் திரிகின்றன புல்வெளியில்;

புதன், 5 மார்ச், 2014

பாதுகாப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (2)

என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது அடுத்த வீடு.
அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்லும்
கணவனும் மனைவியும் வெகு சீக்கிரமாக
சாயும்பொழுதில் வீடு திரும்பி விடுகிறார்கள்.
இளம் மகனும் மகளும் கொண்ட அவர்களது
வீட்டின் விளக்குகள் அனைத்தும்
இரவு ஒன்பது மணிக்குள் அணைக்கப்பட்டு விடும்.

புதன், 5 பிப்ரவரி, 2014

நினைத்துப் பார்க்க ஒரு புன்னகை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை

ங்களிடம் தங்கமீன்கள் இருந்தன 
சித்திரங்கள் கொண்ட சன்னலை மறைத்த 
கனமான திரைச்சீலைகள் அருகே
மேசையின் மேலிருந்த குடுவைக்குள்
சுற்றிச் சுற்றி வந்தபடி
என் அம்மா, எப்போதும் புன்னகைப்பவள், நாங்கள் எல்லோரும் 
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென விரும்புகிறவள்
சொல்வாள் என்னிடம் “சந்தோஷமாய் இரு ஹென்ரி” என.
சரியாகதான் சொன்னாள். சந்தோஷமாக இருக்கலாம்தான்
நம்மால் முடியுமானால்..

செவ்வாய், 17 டிசம்பர், 2013

பெண் பணி - மாயா ஏஞ்சலோ கவிதை (2)

எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் பராமரிக்க
துணிகள் உள்ளன துவைக்க
தரை உள்ளது துடைக்க
கடைக்குச் செல்ல வேண்டும் மளிகை வாங்க
அடுத்து உள்ளது கோழிக்குஞ்சு பொறிக்க
குழந்தை காத்திருக்கிறது குளிக்க வைக்க
துணை இருக்கிறது உணவளிக்க
தோட்டத்துக்கும் நான் தேவை, களை பிடுங்க

திங்கள், 2 டிசம்பர், 2013

மீன்களின் கண்ணீர் - மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் ( பத்து )



1.
கழுவ விரும்புகிறேன்
இவ்வுலகின் புழுதியை
பனியின் துளிகளால்.

2.
நிலவற்ற இரவு
பலமான காற்று தழுவுகிறது
ஆதிகாலத்தைய தேவதருவை.

வியாழன், 17 அக்டோபர், 2013

குழந்தைப் பருவம் - ஆங்கிலக் கவிதை



எப்போது தொலைந்தது என் குழந்தைப் பருவம்?
பதினொரு வயது முடிந்த தினத்திலா,
நரகமும் சொர்க்கமும் பூகோள வரைபடத்தில்
கிடைக்காது என உணர்ந்த தருணத்திலா,
ஆகையால் அவை இருக்க வாய்ப்பில்லை எனும்
முடிவுக்கு வந்த நாளிலா!

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பெயரற்றவன் - ரிச்சர்ட் ரைட் ஆங்கிலக் கவித்துளிகள்


1.
ஏனிந்த வசந்தகாலத்து வனம்
மெளனத்துள் ஒளிகிறது நான் வருகையில்?
என்னதான் நடக்கிறது?

2.
நகரின் எல்லா மணிகளும்
ஓங்கி ஒலிக்கின்றன நள்ளிரவில்
புது வருடத்தை பயமுறுத்தி!

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

உன்னை நேசிக்கிறேன் மனிதாபிமானமே.. – இ. இ. கமிங்ஸ் ஆங்கிலக் கவிதை

மனிதாபிமானமே உன்னை நேசிக்கிறேன்
ஏனெனில், வெற்றியாளனின் காலணிகளைப் பளபளப்பாக்குவதையே
அதிகம் விரும்புகிற நீ, அவனது கடிகாரச் சங்கலியில் ஊசலாடும்
ஆன்மாக்கள் குறித்துக் கவலை கொள்வதில்லை.
இதைச் சொல்ல முற்பட்டால் தர்மசங்கடம் இருவருக்குமே.

கொண்டாட்டங்கள்,  ஏனெனில்
பலமாகப் புகழப்படுகிறாய்
பெரும் அரங்கில் இசைக்கப்படும் பாடல்களில்
தேசம், தாயகம், அன்னை ஆகிய வார்த்தைகளைக் கொண்டு.

செவ்வாய், 2 ஜூலை, 2013

ஒரு நிழற்படம் - ஷிர்லி டெளல்ஸன் ஆங்கிலக் கவிதை - அதீதத்தில்..


அந்த நிழற்படம் காண்பித்தது எப்படி இருந்ததென
மாமன் மகள்கள் இருவரின் அலைகளுடனான விளையாட்டை.
ஆளுக்கொன்றாகப் பற்றிக் கொண்டிருந்தார்கள்
என் அம்மாவின் கைகளை,
அவர்களில் பெரிய சிறுமியான அவளுக்கு
இருக்கலாம் ஒரு பனிரெண்டு வயது.
மூன்று பேரும் அசையாது நின்றிருந்தார்கள்
தங்கள் நீண்ட கூந்தலின் வழியே சிரித்தபடி,
மாமாவின் நிழற்படக் கருவி முன்.

வெள்ளி, 21 ஜூன், 2013

தேவ கானம் – மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் (பத்து)


1.
குருவியே, விட்டுவிடேன்
பூக்களோடு ஆடிப்பாடும்
சிறு ஈயை.

2.
மாலைக் குருவிகள்
உத்திரத்தில் எலிகள்
தேவ கானம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin