ஞாயிறு, 14 ஜூன், 2026

வலியறிதல்

 #1

“நேர்மறை எண்ணங்கள் வழிநடத்தும் போது, 
தடைகள் தம் வலிமையை இழக்கின்றன.”
[மணிப்புறா]

#2
“நீங்கள் யாராக ஆக வேண்டுமோ, 
அவ்வாறக மாற முடியும் என்று நம்புங்கள்.”
[செம்மீசைச் சின்னான்]

#3
“யாரும் காணாத தருணங்களில்தான்

செவ்வாய், 9 ஜூன், 2026

நரிகளுக்காக - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (28) - பண்புடன் இணைய இதழில்..

 

னக்காக வருந்தாதீர்கள்.
நான் திறமையான,
திருப்தியான மனிதன்.

மற்றவர்களுக்காக வருந்துங்கள்
அமைதியின்றி நெளிபவர்கள்,
குறை சொல்பவர்கள்

தங்கள் வாழ்க்கையை
மேசை நாற்காலிகளை அடிக்கடி
இடம் மாற்றுவதைப் போல
மறுசீரமைத்தபடி இருப்பவர்கள்.

ஞாயிறு, 7 ஜூன், 2026

வெகு தூரம் செல்லத் துணிந்தவர்

 #1. "சில நேரங்களில் நாம் திட்டமிட்ட வாழ்க்கையை விட்டுவிட வேண்டியிருக்கிறது, நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதற்காக."


#2.  "இதயத்திடம் அழகான, கவித்துவமான விஷயங்களைப் பேசுவதற்கான ஒரு தெய்வீக வழி, இசை." _ Pablo Casals 


3. "நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்கள் என்பதை விட,

செவ்வாய், 2 ஜூன், 2026

பேரன்பின் சாட்சியங்கள் - அமுதவல்லி நாராயணனின் ‘என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து...

ன்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பு ஒரு உயிர்ப்புள்ள நாட்குறிப்பைத் திறந்து வைப்பது போல் உணர வைக்கிறது. கவிதை என்பது, அமைதியில் நினைவு கூர்ந்திடும் உணர்வுகளிடமிருந்து ஆரம்பமாவது எனும் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் எண்ணத்தையும்; மிகச் சிறந்த மனங்களின் மிக மகிழ்ச்சியான தருணங்களின் பதிவாகும் எனும் P.B. ஷெல்லியின் கூற்றினையும்; கற்பனை மற்றும் உணர்ச்சிகளின் மொழி எனும் வில்லியம் ஹாஸ்லிட்டின் பார்வையையும் மெய்ப்பிக்கும் விதமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. வலைப்பூக்களின் வசந்தகாலத்தில் ‘என் வானம்’ வலை தளத்தில் இருபது ஆண்டுகளாக எழுதி வரும் அமுதா என்ற அமுதவல்லி நாராயணனின் இந்த நெடும்பயணத்தில் நானும் உடன் இருந்திருக்கிறேன் என்பதையும், தொகுப்பாக அவரது கவிதைகளை வாசிக்கக் காத்திருந்தேன் என்பதையும் மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.


108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற பாசம்.. இவை அனைத்தும் கவிஞரின் உள்ளத்திலிருந்து தீட்டப்பட்ட ஓவியங்களாக உயிர்பெற்றுள்ளன. எதைக் குறிப்பிடுவது, எதைத் தவிர்ப்பது எனும் திகைப்பை ஏற்படுத்தும் கவிதைகள்.

என்ன பிடிக்கும் என கேட்காமலே
பிடித்ததை செய்வாள் அம்மா

என்ன பிடிக்கும் என நான்
எல்லோரையும் கேட்டு செய்வேன்

என்ன பிடிக்கும் எனக்கு என
எவரும் கேட்கவில்லை என்றுணர்ந்து

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என
கேட்டபொழுது...

ஞாயிறு, 31 மே, 2026

தன்னை மறக்கும் தருணம்

 #1. 

'கனிவோடு பார்க்கும் கண்களுக்கு, 
ஆசீர்வாதங்கள் எங்கும் புலப்படும்.'


#2.
'வலிமை குறையும் போது, 
நம்பிக்கை நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் 
ஒரு அமைதியான பிரார்த்தனையாக மாறுகிறது.'

#3.
'படைப்பில் ஆன்மா தன்னை மறக்கும் போது,

புதன், 27 மே, 2026

சிரிக்கும் இதயம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (27) - பண்புடன் இணைய இதழில்..

  

சிரிக்கும் இதயம்


உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-
இருண்ட அடிமைத்தனத்திற்குள்
அதை நசுங்க விடாதீர்கள்.

விழிப்புடன் இருங்கள்.
வெளியேற வழிகள் உள்ளன.
எங்கோ ஒரு ஒளி உள்ளது.
அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.
ஆயினும் அது
இருளை வென்று கொண்டேயிருக்கும்.

விழிப்புடன் இருங்கள்.

ஞாயிறு, 24 மே, 2026

அக்னி நட்சத்திரம் - கோடைச் சித்திரங்கள் 15 - பண்புடன் மின்னிதழில்..

 

1. 
எங்கும் வெயில்
வெப்பச் சாலைகளில் நிசப்தம்
நீளும் மதியம்.

2. 
சுருங்கி மறையும் நிழல்கள்
தலைக்கு மேல் நண்பகல்
கனக்கும் அமைதி.

3.
சுழலும் மின்விசிறி
சோம்பல் முறிக்கும் வட்டங்கள் 
கரைகிறது நேரம்.

4.
பொன்னாக மாம்பழங்கள்
பிசுபிசுக்கும் கைகள்
ஒளியாக வழிகிறது இனிப்பு.

5.
சூடான நிலம்

புதன், 20 மே, 2026

என்னவோர் எழுத்தாளர்! - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (26) - பண்புடன் இணைய இதழில்..

 

என்னவோர் எழுத்தாளர்!

இ. இ. கம்மிங்ஸிடம் 
எனக்குப் பிடித்தது என்னவென்றால்-
அவர் சொல்லின் புனிதத் திரையைக்
கிழிந்தெறிந்து,
தனது வசீகரத்தாலும் 
துணிச்சலான சாதுர்யத்தாலும்
அழுகிய போலித்தனத்தை
வெட்டிக் கடந்து செல்லும்
கட்டுக்கோப்பற்ற வரிகளை
நமக்கு அளித்தார்.

எவ்வளவு தேவையாக இருந்தது அது!
எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்

ஞாயிறு, 17 மே, 2026

ஒரே காடு

#1. 

"ஒரு உறுதியான முடிவு அச்சத்தின் குரலை அமைதிப்படுத்தும்."


#2. 
ஒன்றிணைந்தால் அளவற்ற வளமாக மலரலாம்.

#3. 
இயற்கை ஒரு அமைதியான ஓவியர், ரசிப்பவர் பற்றிய எண்ணம் இன்றி

வெள்ளி, 15 மே, 2026

புனித ஃபிலோமினா தேவாலயம் - மைசூர்

ஆசியாவின் மிக உயரமான மற்றும் பெரிய தேவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மைசூரிலுள்ள புனித ஃபிலோமினா தேவாலயம் (St. Philomena’s Cathedral). 1936-ல், ஜெர்மனியில் உள்ள 'கொலோன்' தேவாலயத்தின்  'நியோ கோதிக்' எனும் கட்டிடக்கலை பாணியைத் தழுவிக் கட்டப்பட்டது.

இதன் முழுப் பெயர், புனித ஜோசப் மற்றும் புனித ஃபிலோமினா தேவாலயம். இது புனித செயின்ட் ஜோசப் தேவாலயம் என்றும் அறியப்படுகிறது. 

#2
புனித ஜோசஃப் குழந்தை ஏசுவுடன்:

#3


#4
புனித ஃபிலோமினா

புனித ஃபிலோமினா 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்க இளவரசி. 

ஞாயிறு, 10 மே, 2026

ஏறுதலும் இறங்குதலும்

#1
'தயாரான மனங்கள், தருணம் வரும்போது வேகமாகச் செயல்படும்.'


#2. 
'நயம் என்பது சுதந்திரமாக இயங்குவதில் மட்டுமல்ல, எதைப் பற்றிக் கொள்கிறோம் என்பதிலும் உள்ளது.'


#3.
'பயத்தை வெல்ல ஒரே வழி, அதன் வழியாக ஏறிச் செல்வதே.'


#4. 
'உலகத்தைப் பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள், அதன் புயல்களையும் இலகுவாகக் கடந்து செல்கிறார்கள்.'

வியாழன், 7 மே, 2026

வெயில் ஆடும் சுவர் - பண்புடன் மின்னிதழில்..

 


பாயின் மேல் 
தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.
முதலில் டெடி, அருகே 
ஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி, 
மர ரயில், சிவப்பு ஜீப், 
தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி, 
துடிக்கும் மீசையுடன் பூனை,

ஞாயிறு, 3 மே, 2026

பயத்தின் எதிரொலி

 1.

‘உங்கள் கனவுகள் தேய்வதில்லை, 
அவை உங்களுடன் சேர்ந்து
பொறுமையைக் கற்றுக் கொள்கின்றன.’


2.
‘அழகு என்பது இதழ்களை விட 
ஆழமானது என்பதை 
ரோஜாக்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. 
அது ஒன்றையொன்று தாங்கும் வேர்களில் 
தொடங்குகிறது.’


3.
‘இந்த உலகம் 
கனவு காண்பதற்குப் போதுமான அளவு 
விசாலமானது,

வெள்ளி, 1 மே, 2026

கவிதை வாசிப்புகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (25) - பண்புடன் இணைய இதழில்..


விதை வாசிப்புகள்
எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடான 
விஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்
ஆண்களும் பெண்களுமாக,
வாரம் தோறும், மாதம் தோறும், 
வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,
சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டு
தங்கள் மேதைமை என்றாவது ஒருநாள் 
கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக் கொண்டு

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

கூர்மையான உலகம்

 1.

நாம் முடிவெடுக்கும் தருணத்தில், 
தயக்கம் முடிவுக்கு வருகிறது.
(தேன் பருந்து)

2.
"உலகத்தைப் பார்த்து நீங்கள் 
சிரிக்கத் தொடங்கும் அந்த நொடியில், 
அது உங்கள் மீதான தன் அதிகாரத்தை 
இழந்து விடுகிறது."
(கரும்பருந்து)

3.
அமைதியான மனங்களிலேயே 
ஆழ்ந்த வலிமை குடிகொள்கிறது.

வியாழன், 23 ஏப்ரல், 2026

தொலைவிலிருந்து கேட்கும் பாடல் - பண்புடன் இணைய இதழில்..

வீடு பழகிக் கொண்டது 
மெல்லிய சத்தங்களில் பேச-
ஒரு நாற்காலி நகர்வது, 
தொண்டையைச் செருமும் கடிகாரம்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

நந்தவனத்தின் அழைப்பு..

 1.

"இறக்கைகள் வெறும் எடையை மட்டும் சுமப்பதில்லை, 
அவை அடுத்த நந்தவனத்தின் அழைப்பையும்
 நம்பிக்கையுடன் ஏந்திச் செல்கின்றன."

2.
"உங்கள் கனவுகள் 
உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை, 
துணிச்சல் துளிர்விடும் இடத்தில் 
அவை உங்களுக்காகக் காத்திருக்கின்றன."

3.
"மெளனமான நேரங்கள் வெறுமையானவை அல்ல,

புதன், 15 ஏப்ரல், 2026

போர் ரதங்களின் பாடல்; வெண்மதி இரவு - டு ஃபு சீனக் கவிதைகள் (7,8) - 'பண்புடன்' மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில்..

 போர் ரதங்களின் பாடல்


தங்கள் உருளுகின்றன, 
கடகடவென அதிர்கின்றன.
குதிரைகள் கனைக்கின்றன, 
சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.
படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டி 
அணிவகுத்துச் செல்கின்றனர்.
தந்தைமார், தாய்மார், 
மனைவியர் மற்றும் குழந்தைகள்
அவர்களை வழியனுப்ப ஓடி வருகின்றனர்.
அவர்களால் கிளம்பிய தூசியில்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

மாயக் கோடுகள் - பண்புடன் இணைய இதழில்..

சுவர்கள் எப்போதும் 
செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,
சில நேரங்களில் அவை எண்ணங்களை 
சுவாசித்தும் எழுகின்றன.
இயலாதெனும் தயக்கமும் 
வேண்டாமெனும் எச்சரிக்கையும்

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

தென்றலோடு கண்ணாமூச்சி.. - பூனையின் பொழுதுகள் [பண்புடன் இதழ்: 10]

  


1. 
தரையில் வெயில்
சூட்டில் சுருளும் பூனை
ஓய்வெடுக்கும் நண்பகல்.

2. 
நடுநிசி சன்னல் ஓரம்
நிலவொளியில் பதியும் பாதம்
களவு போகும் இரவு.

3. 
சருகுகள் நகரும் ஒலி
தீயாகத் துடிக்கும் வால் 
வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று.

4. 
தீண்டப்படாத பால் கிண்ணம், 

ஞாயிறு, 29 மார்ச், 2026

காத்திருக்கும் காற்று

 #1

'இறக்கைகளை விரிக்கும் போதுதான், 
காற்று எப்போதும் நமக்காகக் காத்திருந்தது 
தெரிய வரும்.'


#2
எது நடந்தாலும், 
முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


#3
உங்களுக்கான பாதை பிறரால் எழுதப்படுவதில்லை, 

ஞாயிறு, 22 மார்ச், 2026

அன்பில் வேரூன்றி..

 #1

பொறுமை நிலைத்திருக்கும் இடத்தில்
வல்லமை குடிகொள்ளும்.

2.
“மகிழ்ச்சி நம்மை நன்றியுடையவர்களாக ஆக்குவதில்லை. நன்றியுணர்வே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.”

3.
“அன்பில் வேரூன்றி, 

ஞாயிறு, 15 மார்ச், 2026

உலகை அறிதல்

 1

“ உலகை அறிதல், 
அதை வியப்புடன் காணக் கற்றுக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது.”

2. 

“அமைதியைத் தேர்ந்தெடுக்கும் இடைவெளிகளில்தாம் 
நம் வலிமை வாழ்கிறது.”


3. 
"அனுமானிக்கும் முன் சிந்திக்க வேண்டும். 
புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது."

சனி, 14 மார்ச், 2026

தூறல்: 49 - ஒரு கணம் காக்கும் பொறுமை

ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random)  சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன். 

பயணங்களில் எடுத்த படங்கள் சில..:

சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:

#1


#2 
கடலும் வானும் வரவேற்கும் சுவர்சித்திரம்

[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]

#3 
முத்து நகரத்திற்குப் பொருத்தமாக,

புதன், 11 மார்ச், 2026

பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி தகவல் மையம் - ரங்கனதிட்டு சரணாலயம் (2)

ர்நாடகாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயம் ரங்கனதிட்டு. 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு 3 கிமீ தொலைவில் மாண்டியா மாவட்டத்திலுள்ளது. காவேரி நதிக் கரையில் அமைந்த  இதன் ஆறு தீவுகளுக்கும் விதம் விதமான பறவைகள் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்த பறவையியலாளரான டாக்டர் சலீம் அலி, மைசூர் மன்னரிடம் பரிந்துரைத்ததன் பேரில் 1940_ஆம் ஆண்டு இந்த சரணாலயம் உருவானது என்பது குறித்து ‘பக்ஷி காசி - பாகம் 1_ல் குறிப்பிட்டிருந்தேன். அவரைக் கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே  "டாக்டர் சலீம் அலி தகவல் மையம் ( Dr. Salim Ali Information Centre )".

#1

சரணாலய நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வரும் இத்தகவல் மையம் சரணாலத்தின் நுழைவாயில் பகுதியிலேயே அமைந்துள்ளது. 

ரங்கனதிட்டுவின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பின் மீது இந்த மையம் ஆழமான மதிப்பை ஏற்படுத்துகிறது. பறவைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக டாக்டர் சலீம் அலியின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

#2


#3


#4

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த மையத்தில்,  ரங்கனதிட்டு சரணாலயம் முழுமையாக அறிந்து கொள்ள, சுற்றிப் பார்க்க உதவும் வகையில் தெளிவான வரைபடம் உள்ளது. பறவைகளின் குரல்களைக் கேட்டு அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் மற்றும் ஆடியோ-விஷுவல் வசதிகள்  சேர்க்கப்பட்டுள்ளன. மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான ‘விநாடி வினாப் பலகை’ அமைக்கப்பட்டுள்ளது.

#5


பலவகைப் பறவை இனங்கள், அவற்றின் கூடுகட்டும் முறைகள் மற்றும் உடல் பண்புகள் பற்றிய விரிவான தகவல்களை இந்த மையம் வழங்குகிறது. 

#6 அலகு அமைப்புகள், இறகு வடிவங்கள் மற்றும் நிறங்கள், அவற்றின் பல்வேறு வகையான கால்கள் மற்றும் கால்களின் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. 

ஒளியூட்டப்பட்டத் தகவல் பலகைகள்:

உரிய படங்களுடன், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில், எளிதாக வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்களுடன், சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி நிற்கும் ஒளியூட்டப்பட்ட பலகைகள் இந்த மையத்தின் சிறப்பு. கூடுமானவரையில் மற்ற மின் விளக்குகளின் ஒளி அவற்றின் மேல் பிரதிபலிக்காமல் படமாக்கியுள்ளேன் ஆயினும், தமிழிலும் அத்தகவல்களைத் தந்துள்ளேன்.

#7 கர்நாடகாவின் “பக்ஷி காஷி”க்கு வரவேற்கிறோம்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin