வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஜினியா - இரட்டை வர்ணங்களில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

ஆகஸ்ட் லால்பாக் கண்காட்சியில் எடுத்த படங்களில் மலர் அலங்காரங்களையும், சிட்டுக் குருவிகள் போல் அங்குமிங்கும் தத்தித் திரிந்த மழலைகளையும் தொகுப்பாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  மேலும் எடுத்த வகை வகையான மலர்களை... ஃப்ளிக்கரில் வரிசையாகப் பகிர்ந்தவற்றை.. சில தொகுப்புகளாக இங்கு பதிந்திட எண்ணியுள்ளேன்.

இன்று ஜினியா. அதுவும் Bicolor  என அறியப்படும் இரட்டை வர்ண ஜினியாக்கள். இதழ்களில் ஏதேனும் இரண்டு வர்ணங்களைப் பிரதானமாகக் கொண்டவை.

விதைகள் பாகத்தில் தெரியும் வர்ணங்களும், சிலவற்றின் இதழ்களில் மூன்றாவதாக ஊடுருவப் பார்க்கும் வர்ணமும் கணக்கில் வரா என்பதை சொல்லிக் கொள்கிறேன்:)!

சில வகைகள் சட்டெனப் பார்வையை ஓட விடுகையில் ஒரே மாதிரியானவையோ எனத் தோன்ற வைத்தாலும் உற்றுப் பார்க்கையில் தெரிந்திடும் இறைவனின் தூரிகை எடுத்துக் கொண்ட கவனம்.

வாருங்கள் இரசிக்கலாம் அழகின் கொண்டாட்டத்தை.. அழுத்தமான வண்ணங்களிலும் மென்மையான நிறங்களிலும்...

#1 வெள்ளை - மஞ்சள்


#2 மஞ்சள் - பழுப்பு

வியாழன், 26 டிசம்பர், 2013

நாளினை நனைத்த சொற்கள் - இந்த வாரக் கல்கியில்..

இந்த வாரக் கல்கியியின்..  27 ஆம் பக்கம், கவிதை கஃபேயில்..
நாளினை நனைத்த சொற்கள்

‘இது மேலத்தெருதானே?
குத்தாலிங்கம் வாத்தியார் வீடு
எங்கிருக்கு?’

வடக்குத்தெருவில் நின்று
நடுங்கும் குரலில்
போவோர் வருவோரைக்
கேட்டுக் கொண்டிருந்த
வயதானவரின்
கைப்பிடித்து அழைத்துச் சென்று

வெள்ளி, 20 டிசம்பர், 2013

மறு வாசல்


1. ஏதேனும் ஒரு புள்ளியத் தொடும் போது முதலில் எடுக்க வேண்டிய தீர்மானம் அதிக நேரம் அங்கே தங்கக் கூடாதென்பதே.

2. பலசாலியாய் இருக்கத் தேவையில்லை. பலசாலியாய் உணர்ந்தால் போதும்.

3. ஆரவாரம் வலுவானது அமைதி பலவீனமானது எனத்  தவறாகக் கணித்து விட வேண்டாம்.

புதன், 18 டிசம்பர், 2013

அம்மாவும் நானும் அம்மாவும் - மாயா ஏஞ்சலோ (3)


உண்மை
நான் உன்னில் உருவானேன்
இதுவும் உண்மை
நீ எனக்காக உருவாக்கப் பட்டாய்.
உன் குரலைச் சொந்தமாக்கிக் கொண்டேன்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

பெண் பணி - மாயா ஏஞ்சலோ கவிதை (2)

எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் பராமரிக்க
துணிகள் உள்ளன துவைக்க
தரை உள்ளது துடைக்க
கடைக்குச் செல்ல வேண்டும் மளிகை வாங்க
அடுத்து உள்ளது கோழிக்குஞ்சு பொறிக்க
குழந்தை காத்திருக்கிறது குளிக்க வைக்க
துணை இருக்கிறது உணவளிக்க
தோட்டத்துக்கும் நான் தேவை, களை பிடுங்க

சனி, 14 டிசம்பர், 2013

பூக்குட்டி - இந்த வார ஆனந்த விகடன் சொல்வனத்தில்..


இந்த வார ஆனந்த விகடன் (பக்கம் 24) சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ‘பூக்குட்டி’ கவிதையை எனக்களித்தப் பூக்குட்டி:)!

ன்னல்கள் மட்டுமே கொண்ட
வீட்டைக் கட்டி முடித்த
இரண்டே நிமிடங்களில்
திமுதிமுவென வளர்ந்து நின்றன
வாசலில் நான்கு தென்னைகள்.

திங்கள், 9 டிசம்பர், 2013

பொகே அல்லது பொகா (Bokeh) - ஒரு அறிமுகம்; மூடிய கதவுகள் - டிசம்பர் PiT போட்டி

 #1
பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும்.
ந்த மாத PiT போட்டி இரண்டு தலைப்புகளில். DSLR பயன்படுத்துகிறவர்களுக்காக சவாலான தலைப்பு ஒன்றும், பொதுத் தலைப்பாக இன்னொன்றும்.

விரிவான விவரங்களை போட்டி அறிவிப்பு பதிவில் காணலாம்.

கிறுஸ்துமஸைக்  கொண்டாட, புதுவருடத்தை வரவேற்க நகரங்கள் ஒளிக்கோலம் பூணுகிற இந்நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் தலைப்பு.

போட்டி 1: பொகே

பொகே அல்லது பொகா குறித்து அறியாதவர்களுக்காக இன்று PiT-ல் நான் அளித்திருக்கும் விளக்கப் பதிவு http://photography-in-tamil.blogspot.com/2013/12/bokeh.html உங்களுக்கும் பயனாகக் கூடுமென இங்கேயும் பகிர்ந்துள்ளேன். ஒளிப்படக்கலையில் ‘பொகே’ அல்லது ‘பொகா’ என்றால் என்னவெனப் பார்ப்போம்.

Bokeh எனும் சொல் ஜப்பானிய மொழியில் ‘மங்கிய’ (blurred) எனும் அர்த்தம் கொண்டதாகும். ஆங்கிலத்துக்கு வந்த விட்ட இச்சொல் பொகே, பொகா, போக்கி எனப் பலவிதமான உச்சரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது. நாம் பொகே எனப் பார்ப்போம்:).

வியாழன், 5 டிசம்பர், 2013

குமரியில்.. FB புகைப்படப் பிரியனின் இரண்டாவது ஒளிப்படக்கலை கருத்துப்பட்டறை

ந்தக் கலையானாலும் சரி, கற்றக் கொண்டே செல்வதில்தான் நம் திறன் மெருகேருகிறது. ‘கற்றலுக்கு முடிவே இல்லை. வாருங்கள் பகிர்ந்து கொள்வோம் அவரவர் அறிந்ததை’ என அழைக்கிறது குமரி முனைக்கு உலகத் தமிழ் புகைப்படப் பிரியர்களை, புகைப்படப் பிரியனின் "இரண்டாவது ஒளிப்படக்கலை கருத்துப் பட்டறை."!


இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒளிப்படக் கலைஞர் மெர்வின் ஆன்டோவினால் ஆரம்பிக்கப்பட்டது புகைப்படப் பிரியன் குழுமம். அது குறித்த அறிமுகமாக எனது அப்போதைய பகிர்வு இங்கே. மெர்வினின் வியக்க வைக்கும் கலைத் திறன் குறித்த எனது ‘தினகரன் வசந்தம்’ கட்டுரை இங்கே. அதிலே முதல் கருத்துப் பட்டறையில் அவர் நிகழ்த்திக் காட்டிய ‘உன்னைப் போல் ஒருவன்’ பற்றிய குறிப்பும் உள்ளது.

அழைப்பின் பேரில் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஒளிப்பட ஆர்வலர்களுக்கு தன் அனுபவத்திலிருந்து ஆலோசனைகள் வழங்கியும், அறிந்த பல வித்தைகளைக் கற்றுத் தந்தும் வருகிறார் மெர்வின் ஆன்டோ. சமீபத்தில் தூத்துக்குடியிலும், பாளையங்கோட்டையிலும் இவர் வரவால் பயன்பெற்றிருக்கின்றனர் பல தொழில் சார்ந்த புகைப்படக் கலைஞர்கள்.

ஒவ்வொரு நாளும் FB ‘புகைப்படப் பிரியன்’ குழுமத்தில் ஆர்வத்துடன் பலர் இணைந்தபடி இருக்க 7300-க்கும் அதிகமான உறுப்பினர்களோடு எட்டி நிற்கும் அதன் உறுப்பினர்களுக்காக இதோ அவரது முயற்சியில் இரண்டாவது கருத்துப் பட்டறை, 2014 ஜனவரி 25, 26 தேதிகளில்..

திங்கள், 2 டிசம்பர், 2013

மீன்களின் கண்ணீர் - மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் ( பத்து )



1.
கழுவ விரும்புகிறேன்
இவ்வுலகின் புழுதியை
பனியின் துளிகளால்.

2.
நிலவற்ற இரவு
பலமான காற்று தழுவுகிறது
ஆதிகாலத்தைய தேவதருவை.

செவ்வாய், 26 நவம்பர், 2013

எண்ணெழுத்து.. - ஐநூறாவது பதிவு

ஐந்தரை வருடங்கள்.. 500 பதிவுகள்..

மூன்று இலட்சத்து இருபத்து மூன்றாயிரத்து அறுநூறு+ பக்கப் பார்வைகளை எட்டி நிற்கும் முத்துச்சரத்தின் ஐநூறாவது முத்து!

எண்ணிக்கை, கணக்கு அவசியம்தானா என்கிற கேள்வியைப் பின்னுக்குத் தள்ளுகிறது இங்கே பெறுகிற ஊக்கம். தொடர்ந்து இயங்க உரமாக இருப்பதும் அதுவே.  சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி!

***

தினமொழிகள் பத்து.. தொகுப்பது தொடர்கிறது..
எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..

1. நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போல. எல்லா நேரமும் காணக் கிடைக்காவிட்டாலும், இருக்கிறார்கள் நமக்காக எப்போதும்.

வியாழன், 21 நவம்பர், 2013

நோயல்ல.. குறைபாடே..! - "ஆட்டிசம் சில புரிதல்கள்" புத்தக விமர்சனம் - கல்கியில்..

யெஸ் பாலபாரதியின் "ஆட்டிசம் சில புரிதல்கள்" நூல் குறித்த எனது விமர்சனம் 24 நவம்பர் 2013 கல்கியில்..
 நன்றி கல்கி!
சற்றே விரிவாகப் பார்ப்போம் இங்கே...

டப்பு ஆண்டில் 88-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள நம் நாட்டில் பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலே நிலவுகிறது.

‘மனநிலை பாதிப்பு வேறு, ஆட்டிசம் வேறு என்கிற தெளிவுகூட நம்மவர்கள் மத்தியில் இல்லை’ என வருத்தபடுகிற, எழுத்தாளரும் ஊடகவியலாளருமான நூலாசிரியர் யெஸ். பாலபாரதி, ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அவர்தம் பெற்றோர்கள் நலன் கருதி விரிவாக அலசியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே “ஆட்டிசம் சில புரிதல்கள்”!

பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரிவரப் பயன்படுத்த முடியாததால் இயல்பான நடவடிக்கைகளில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் ஆட்டிசம், ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல எனத் தெளிவு படுத்துகிறது நூல். ஐந்து வயதை எட்டினால்தான் இக்குறைப்பாட்டை அடையாளம் காணவே முடியும் என்று சொன்ன அதே மருத்துவ உலகம் விரைவாக அடையாளம் காண்பதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்திருக்கிறது. எவ்வளவு சீக்கிரமாக பாதிப்பைக் கண்டு கொள்கிறோமோ அத்தனை சீக்கிரத்தில் சரியான பயிற்சிகளைத் தொடங்குவதன் மூலமாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிவதோடு, முற்றிலுமாகவே ஒழுங்குபடுத்திடும் வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

ம்மைச் சுற்றியிருக்கும் எந்த குழந்தையானாலும் அவர்களிடம் ஆட்டிசம் இருக்கிறதா என அடையாளம் காண்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குகிறோம். இதை நூலின் முக்கிய நோக்கமாகவே கருதி, இருபது வழிகளையும் படங்களுடன் வாசிப்பவர் மனதில் நிறுத்துகிறது நூல். அவற்றில் சில: ஒதுங்கி இருப்பது; பொருத்தமின்றி பொருட்களைப் பற்றுவது; கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது; மற்ற குழந்தைகளுடன் பழக ஆர்வம் காட்டாமை; தொடப்படுவதை, அணைக்கப்படுவதை விரும்பாமலிருப்பது; அச்சம் ஆபத்தை உணராதிருப்பது; ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது; சில செயல்களைச் சரியாகச் செய்தாலும் சமூகப் புரிதலற்று இருப்பது; மாற்றங்களை அசெளகரியமாய் உணருவது; வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாதிருப்பது; தேவைகளை உணர்த்தப் பெரியவர்களைக் கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுவது; அதீதப் பதட்டம்; காரணமற்ற அழுகை, சிரிப்பு; குதிப்பது, கைகளைத் தட்டுவது; வலியை உணராதிருப்பது, சுழலும் பொருட்களை இரசிப்பது, அதிலேயே ஆழ்ந்து போவது; சுட்டுவிரலால் சுட்டிக்காட்டத் தெரியாதது; பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பாராமல், காது கேளாதது போலிருப்பது போன்றன.

ஆட்டிசத்தின் வரலாறு, ஸ்பெக்ட்ரம் டிஸார்டர், எது சரி எது தவறு, சென்சரி பிரச்சனைகள், சிகிச்சை முறைகள், குழந்தைகளைக் கையாளும் முறை, பெற்றோர்/கவனிப்போரின் பங்கு, பத்தியங்கள்,ஒவ்வாமைகள் எனப் பல தகவல்களை ஆங்கில நூல்களிலிருந்தும், இணையத்திலிருந்தும் ஆய்வு செய்து மட்டுமேயன்றி நேரடியாக மருத்துவர்களையும், தெரபிஸ்டுகளையும், பாதிப்புக்குள்ளான பெற்றோரையும் சந்தித்துப் பேசி அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் தயாரித்திருக்கிறார் யெஸ்.பாலபாரதி கட்டுரைகளை.

ங்கள் குழந்தைகள் குறித்து பெருமையடையுங்கள், நாட்கள் ஓடுவதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள், தேவையற்ற குற்றவுணர்வைத் தவிர்த்திடுங்கள், உங்களை நீங்களே நம்புங்கள், வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்’ போன்ற ஆலோசனைகள் உட்பட ஜீன் அவிரம் (Jene Aviram) எனும் மேலை நாட்டவர், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தையின் பெற்றோருக்குத் தந்திருக்கும் பத்துகட்டளைகளையும் தமிழில் தந்திருப்பது  நம்பிக்கையை விதைக்கிறது. அத்துடன் நின்றிடாமல், தங்கள் குழந்தையின் எதிர்காலம்  குறித்துக் கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கிற பெற்றோரின் நிலை குறித்து சங்கடப்படுகிற ஆசிரியர்  அப்படி சோர்ந்து போகத் தேவையில்லை என்பதற்காக ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொண்டாலும் உலகின் பார்வைத் தம் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றிச் சொல்லி மேலும் நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

இந்நூல், தங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிப்புக்குள்ளானதையே உணராமலிருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்கேனும் மட்டுமின்றி, சாதாரணக் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஆட்டிசக் குழந்தைகளைப் புரிந்து கொள்ள, ஒதுக்காமல் இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்ய, அவர்களது உரிமைக்காக வாதிட..,  துணை நிற்குமானால் உள்ளபடி மகிழ்வேன் என்கிறார் நூலாசிரியர்.
*

ஆட்டிசம் சில புரிதல்கள்
பக்கங்கள்:80 விலை.ரூ.50
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் (அனைத்து கிளைகளிலும்).

தொலைபேசி எண்கள்: 044 24332424, 24332924, 24339024.
**

திங்கள், 18 நவம்பர், 2013

இரண்டு வர்ணங்கள் - நவம்பர் PiT

எளிதான அதே நேரம் சவாலான ஒரு தலைப்பைத் தந்திருக்கிறார், இம்மாதப் போட்டி நடுவரான நித்தி ஆனந்த்.

இரண்டு வர்ணங்கள். போட்டி அறிவிப்பு இங்கே.

படமாக்க சுலபமான தலைப்பே. ஆயினும் எடுக்கிற படங்களில் ஆதிக்கம் செலுத்தப் போகும் அந்த இரண்டே இரண்டு வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி இடும் வகையிலோ அல்லது ஒன்றை மற்றொன்று மெருகேற்றும் விதத்திலோ அமைவதில்தான் சுவாரஸ்யம் கூடுகிறது. சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாம்.

#1 வெள்ளை ரோஜாவின் மென்மைக்கு மெருகூட்டும் இளஞ்சிவப்பு

#2 காமதேனு

வெள்ளி, 15 நவம்பர், 2013

பல பூக்களும் ஒரு சூரியனும் சில மனிதர்களும் - குங்குமம் தோழியில்.. வனிலா பாலாஜியின் ஒளிப்பட அனுபவங்கள்

ஒளியையும் நிழலையும் அழகாகக் கையாண்டு தன் படங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர் வனிலா பாலாஜி. 16 நவம்பர் 2013 குங்குமம் தோழியின் “கண்கள்” பகுதிக்காக அவர் எனக்களித்த நேர்காணல்..

நன்றி குங்குமம் தோழி:)!

பல பூக்களும் ஒரு சூரியனும் சில மனிதர்களும்

# பக்கம் 56

வியாழன், 14 நவம்பர், 2013

நம்பிக்கை நட்சத்திரங்கள் - குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

#1 நாளையத் தலைவர்கள்.. நம்பிக்கை நட்சத்திரங்கள்..

#2  வேர்களைக் காட்டித் தருவோம். சிறகுகளைச் சரியாக விரிப்பார்கள்.

#3 சந்தோஷத்தை நாடுகிறார்கள். அதே போல அன்பையும்.

#4  ஊக்கம் கொடுங்கள். குழந்தைகள் எதிலே சிறந்தவர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விட முடியாது.

செவ்வாய், 12 நவம்பர், 2013

காட்டுத் தீ - கமலா தாஸ் கவிதை (4) - மலைகளில்..

சமீபமாக, எனக்குள் ஒரு பசியை உணருகிறேன்
காட்டுத் தீயின் பேராசையுடன்
காண்பதையெல்லாம் கபளீகரம் செய்கிற அது
ஒவ்வொன்றை அழிக்கையிலும்
அதிக வெறியுடன் அதிக பிரகாசத்துடன்
கனன்று எரிகிறது.
தள்ளு வண்டியில் அமர்ந்திருக்கும்
தலையில் முடி முளைக்காத குழந்தையை
நான் மட்டும்தான் பார்ப்பதாய் நினைக்கிறீர்கள்,
ஆனால் நீங்களும்தான்,
மரத்துக்குப் பின்னாலிருக்கும் ஒடிசலான காதலர்களே,
நீவிரும்தான்..
சூரிய ஒளியில் தலை முடிகள் மின்ன
கையில் செய்தித்தாளுடன் நிற்கும் வயதானவரே,
நீவிரும்தான்..

வியாழன், 7 நவம்பர், 2013

கதை நேரங்கள் - தினமணி தீபாவளி சிறப்புப் பக்கத்தில்..

சுவாரஸ்யங்களுக்குக் குறைவில்லாமல்
தத்தமது அனுபவங்களைக் கலந்து
சொல்லி வந்தார்கள் கதைகளை
உற்சாகமாய் உறவுகள்
உச்சுக் கொட்டும் குழந்தைக்கு.

மாமா அத்தைகளின் கதைகளில்
சாகசங்களும் திரும்பங்களும்
அதிகமாய் இருந்தன.

அன்பாலும் பரிவாலும்
நெய்யப்பட்டப் பாசவலைகளாகப்
பாட்டிகளின் கதைகள்.

குடும்பத்தின், நாட்டின், உலகின்
வரலாற்றுக்கு முக்கியத்துவம் தந்த
தாத்தாக்களின் கதைகளில்
அவர்கள் ஆற்றிய பங்கும்
அவசியம் இடம் பெற்றிருந்தன.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

அடை மழை (சிறுகதை) - ‘தி இந்து’ தீபாவளி சிறப்புப் பக்கத்தில்..

க்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.

“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.

“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா குட்டி?” புன்னகைத்த செல்லம் “இதையும் சேத்துக்க” என ஒரு காலிஃப்ளவரை தூக்கிக் கூடையில் போட்டார்.

கிடுகிடுவெனெ இருபது சாமான்களுக்கும் விலையைப் போட்டுக் கூட்டி, ‘சரக்’ எனக் கிழித்து ஆறுமுகம் நீட்டிய துண்டுக் காகிதத்தை ‘வெடுக்’ எனப் பிடுங்கினார் பின்னாலேயே வந்து நின்ற செல்லத்தின் கணவர் சுந்தரம்.


“கம்ப்யூட்டரை விடல்லா வேகமாப் போடுத பில்ல? இரு.. இரு கூட்டிப் பாக்குறேன்” என்றபடி எண்கள் மேல் குறும்பாகக் கண்களை ஓட்டத் தொடங்கினார்.

திங்கள், 28 அக்டோபர், 2013

கல்கி தீபாவளி மலர் 2013-ல்.. - ‘நீங்கதான் என்னோட ஃப்ரெண்ட்ஸ்..’

330 பக்கங்களுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள
2013 கல்கி தீபாவளி மலரில் எனது ஒளிப்படங்கள் இரண்டு:)! 
நன்றி கல்கி!

பக்கம் 227-ல்..

சனி, 26 அக்டோபர், 2013

யுகமாய் நீ - நவீன விருட்சத்தில்..

கூட்டை உடைத்துக் கொண்டு நீ
வெளியில் வரக் கேட்டுக் கொண்டது
வரலாற்றின் ஒரு காலக் கட்டம்

தயக்கங்கள் உதறிச் சிறகுகள் விரித்து
பெண்ணே நீ
உயர உயரப் பறந்து பொழுது
செம்பிழம்புச் சூரியன்
வெம்மை உனைத் தாக்கிடுமோவென
முகில்களுக்குப் பின் ஒளிந்து கொண்டது

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்.. - அக்டோபர் PiT

நிகழ்வுகள். 

இதுதான் இம்மாதத் தலைப்பு. மக்கள், நட்புகள், உறவுகள் கூடுகிற நிகழ்வுகள் எதுவானாலும் இருக்கலாம்.

#1 இன்று உலக செஃப் தினம் :)!

எந்த நிகழ்வானாலும் நினைவுகளை காலத்துக்கும் நிறுத்தி வைப்பதில் நிழற்படங்களின் பங்கு பிரதானமானது. அதை மனதில் கொண்டு சற்று கூடுதல் கவனத்துடன் மைய நிகழ்வை மட்டுமின்றி சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்துப் படமாக்குவது பலநாட்கள் கழித்தும் பார்க்கும் போது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையை நமக்குச் சொல்வதாக அமையும்.

#2

அலங்காரங்கள், தோரணங்கள், விருந்தினர்கள், மகிழ்வுடன் அளவளாவும் தருணங்கள், குழந்தைகள், அவர்களது ஆட்டபாட்டங்கள், தயாராகும் உணவு, பரிமாறப்பட்ட பந்தி, மேஜையில் வரிசைப்படுத்தப்பட்ட பதார்த்தங்கள், கேக் என சொல்லிக் கொண்டே போகலாம். [நடுவர் சுரேஷ்பாபு (கருவாயன்) அறிவிப்புப் பதிவில் காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் சிறந்த உதாரணங்கள்.] முக்கிய தருணங்களில் continous mode போடுவது ஒரு நொடியின் பாதியில் ஓர் அரிய உணர்வை சிறைப்படுத்தும் வாய்ப்பைத் தரலாம். இங்கே ஒரு பிறந்தநாள் நிகழ்வின் சில படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றாலும் உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை:)!

#3

வெள்ளி, 18 அக்டோபர், 2013

"மறக்கவே முடியாத ஜெயிண்ட் வீல்..." - சுகா

நெல்லை பொருட்காட்சி குறித்த எனது பதிவில்.. மலரும் நினைவுகளாக சுகா அவர்கள் பகிர்ந்து கொண்டது, நீங்களும் இரசிக்க இங்கே:

பொருட்காட்சி சீஸனும், குற்றால சீஸனும் ஒண்ணு போல வர்றதால காத்துல தலைமுடி கலையும். நம்ம ஊரு பாஷைல ஒலையும்.அதனால எப்பவுமே கைவசம் சீப்பு இருக்கும்.

‘தலைய சீவுல. இன்னைக்கு நெறய பிள்ளேள் வந்திருக்கு’.

உள்ளே நுழையும் போதே குஞ்சு சொல்லுவான்.

வியாழன், 17 அக்டோபர், 2013

குழந்தைப் பருவம் - ஆங்கிலக் கவிதை



எப்போது தொலைந்தது என் குழந்தைப் பருவம்?
பதினொரு வயது முடிந்த தினத்திலா,
நரகமும் சொர்க்கமும் பூகோள வரைபடத்தில்
கிடைக்காது என உணர்ந்த தருணத்திலா,
ஆகையால் அவை இருக்க வாய்ப்பில்லை எனும்
முடிவுக்கு வந்த நாளிலா!

வியாழன், 10 அக்டோபர், 2013

நெல்லை ‘அரசுப் பொருட்காட்சி’ - படங்கள் 25



#1. சொக்குதே மனம்

அதே வளையல், பிளாஸ்டிக், தட்டுமுட்டுச் சாமான் கடைகள்; விளையாட்டுப் பொருட்கள்; கலை நிகழ்ச்சிகள், ரெகார்ட் டான்ஸ்; மெகா அப்பளம், பானி பூரி, மெளகா பஜ்ஜி.., ஜீப், ஹெலிகாப்டர், டிராகன் சீசா, குதிரை சவாரி, கப் அண்ட் சாஸர் ரைட்; அதே பேய் உலகம், அதே ஜெயண்ட் வீல்...

#2. போலாம் வாங்க..

வருடா வருடம் எல்லாம் அதே அதேதான், என்றாலும் அலுப்பதில்லை சலிப்பதில்லை நெல்லை மக்களுக்குப் பொருட்காட்சி. ‘என்னத்த புதுசா....’ என இழுத்தபடியே, கிளம்பி விடுவார்கள்:)! ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டத்தையொட்டி ஜூன் மூன்றாம் வாரத்தில் தொடங்கி 45 நாட்களுக்கு நடக்கிறது நெல்லை அரசுப் பொருட்காட்சி.

‘ஏல ஓடாத..’
‘ஏட்டி கையப் பிடிச்சிட்டுக்கிட்டு நடன்னு சொல்லுதன்ல..’
எனக் குழந்தைகள் பின்னால் ஓடும் பெற்றோர்கள்..

‘எப்ப வந்திய ஊர்லருந்து?’
‘என்ன மயினி சவுக்கியமா? அண்ணாச்சி வரலியா’
‘என்னல, இப்படித் துரும்பா எளச்சிட்ட?’
 நிறைந்து வழிகின்றன மைதானமெங்கும் குசல விசாரிப்புகள். எங்கெங்கு திரும்பினாலும் வெள்ளந்தி மனிதர்கள்.

பொருட்காட்சி நடக்கும் சமயத்தில் ஊர் போக வாய்க்காதவர்களுக்காகவும், அப்படியே சென்றிருந்தாலும் போக நேரமில்லாது போனவர்களுக்காகவும், வேறு நகரங்கள், நாடுகள் என இடம் பெயர்ந்து விட்டாலும் ஊருடனான நினைவுகளை நெஞ்சோடு சுமந்து கொண்டிருப்பவர்களுக்காகவும்... இந்தப் பதிவு!

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மகிழ்ச்சியும் துயரமும் - கலீல் ஜிப்ரான் (1)

உங்கள் மகிழ்ச்சி, முகமூடியைக் கழற்றிய உங்கள் வருத்தமே.
உங்கள் சிரிப்பு கிளம்பிய அதே கிணறுதான் நிரப்பப்படுகிறது அடிக்கடி உங்கள் கண்ணீராலும்.
வேறெந்த விதமாய் இருக்க முடியும்?
எத்தனை ஆழமாக அந்தத் துயரால் நீங்கள் செதுக்கப்படுகிறீர்களோ, அத்தனை அதிகமாய் மகிழ்ச்சி உங்களுள் நிறைகிறது.

உங்கள் திராட்சை இரசத்தை ஏந்தும் அதே கோப்பை, குயவனின் அடுப்பில் சுட்டெடுக்கப் படவில்லை?
உங்கள் ஆன்மாவை வருடி ஆறுதலளிக்கும் யாழ்.. அதன் மரம், கத்திகளால் குடையப்படவில்லை?

நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கும்போது, உங்கள் இதயத்தை உற்று நோக்குங்கள், உங்களுக்குத் துயரைக் கொடுத்த இதயமே இப்போது மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என அறிய வருவீர்கள்.
நீங்கள் வருத்தமாக இருக்கும்போது மீண்டும் இதயத்தைப் பாருங்கள், உங்களுக்குக் குதூகலத்தைத் தந்த ஒன்றிற்காகவே இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறீர்கள் எனும் உண்மை புரியவரும்.

உங்களில் சிலர் சொல்வீர்கள், “துயரை விட மகிழ்ச்சி உயர்ந்தது,” என, மற்ற சிலர், “இல்லை, துயரே உயர்ந்தது” என.
ஆனால் நான் உங்களுக்கு சொல்வேன், அவை பிரிக்க இயலாதவை.
சேர்ந்தே அவை வரும், ஒன்று தனியாக உங்கள் அருகே இருக்கையில் அமரும் போது, இன்னொன்று உங்கள் படுக்கை மேல் உறங்கிக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சொல்லப்போனால் ஒரு தராசாகத் தொங்குகின்றீர்கள் உங்கள் மகிழ்ச்சிக்கும் உங்கள் துயருக்கும் மத்தியில்.
காலியாக இருக்கும் போது மட்டுமே நிலையாகவும் சமனாகவும் இருக்கிறீர்கள்.
பொக்கிஷ அதிகாரி தன் தங்கத்தையும் வெள்ளியையும் அளக்க உங்களைத் தூக்கும் போது, நிகழ்ந்தே தீருகிறது உங்கள் மகிழ்ச்சியோ வருத்தமோ உயர்வதும் தாழ்வதும்.
***

மூலம்: On Joy and Sorrow from “The Prophet
By Kahlil Gibran (1883 – 1931)

லெபனானில் பிறந்தவர். குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர, அங்கே கலைப்பிரிவில் சேர்ந்து பயின்று எழுத்தாளராகவே வாழ்க்கையைத் தொடங்கினார்.  ஆங்கிலம், அரபு இரண்டு மொழிகளிலும் எழுதி வந்தார்.  அரபு நாடுகளில் இவர் எழுத்தாளராக மட்டுமின்றி ஆட்சி எதிர்ப்பாளராகவும் அறியப்பட்டார். லெபனானில் இவரையே தலைசிறந்த இலக்கியவாதியென இன்றளவிலும் கொண்டாடுகிறார்கள்.

1923-ல் ஆங்கிலத்தில் வசன கவிதையாக இவர் எழுதிய “The Prophet” புனைவு
உலகை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே விற்பனையிலும் சாதனை படைத்தது. ஷேக்ஸ்பியர், Laozi ஆகியோருக்குப் பிறகு மூன்றாம் இடத்தில் இருக்கின்றன உலகளாவிய விற்பனையில் இவரது புத்தகங்கள். கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி மட்டுமின்றி சிறந்த சிற்பியும் ஓவியருமாவார் கலீல் ஜிப்ரான்.
***


வியாழன், 3 அக்டோபர், 2013

நூற்றுக்கு நூறு

சமீபத்திய தினமொழிகள் பத்து, எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..

1. வானம்தான் எல்லையா? வரவேற்கும் சாலைகளில் சென்று பார்க்கலாம். மைல் கணக்கில் நடக்கலாம். கற்றுத் தரக் காத்திருக்கும் உலகம் மிகப் பெரிது.

2.
100%
நம்மால் முடியும் என மனதளவில் தயாராகி விட்டோமா? நமது எண்ணம் நூறு சதவிகிதம் சரி.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு விழா - இன்று சென்னையில்..



நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியா படிக்கப்படும் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்து ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகப் பல நாடுகளைச் சேர்ந்த இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் சென்னையில் ஒன்றுகூட இருக்கிறார்கள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமாக மனித அறிவு முழுமையடைய எந்த இலாப நோக்கமுமின்றி கூட்டு முயற்சியில் இயங்கி வரும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பு 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பத்தாண்டு நிறைவுவிழா இன்று காலை 09.00 மணி முதல் 05.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், டாக் (TAG) அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

நிறைவுவிழாஅறிக்கையிலிருந்து மேலும் சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு:

சனி, 28 செப்டம்பர், 2013

வார்த்தைகளற்றக் கவிதைகளும் வடித்த பிரம்மாக்களும் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 6)

"வார்த்தைகளால் சொல்ல முடியுமாயிருந்தால் நான் ஓவியம் தீட்ட வேண்டிய அவசியமே இல்லை” என்றவர் அமெரிக்க ஓவியர் எட்வர்ட் ஹாப்பர். “படம் என்பது வார்த்தைகளற்ற கவிதை” எனக் கொண்டாடியவர் ரோமானியக் கவிஞர் ஹொராஸ். மறுக்க முடியுமா? வாருங்கள், அப்படியான கவிதைகள் சிலவற்றோடு அவற்றைப் படைத்தவர்களையும் பார்க்கலாம்:

#1 ஞாபகம் வருதே..

#2 ஜல் ஜல்..

 சந்தையிலிருந்து கருக்கலில் வீடு திரும்பும் காட்சி.
படங்கள் 1,2-ல் சக்கரங்கள் கிளப்பும் புழுதியை அருமையாக வரைந்திருக்கிறார்.

#3 ஏர் உழவன்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

புலி வருது.. புலி வருது..

நான் எடுத்த படங்கள் ஏழு, புலி பற்றிய சிறு குறிப்புகளுடன்...

#1

புலி, ‘பாந்தெரா தீகிரிஸ்’ (Panthera tigris) எனும் பூனையினத்தைச் சேர்ந்தது. பாந்தெரா இனத்தின் நான்கு "பெரிய பூனையினங்களில்" இதுவே மிகப் பெரியது.

பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா.

இந்தியா, பாக்கிஸ்த்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், மியன்மர் பகுதிகளில் காணப்படுபவை வங்காளப் புலி அல்லது இராயல் பெங்கால் புலி (Panthera tigris tigris).

#2
உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானவை.

பழம் புராணங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ளன.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வலி - நவீன விருட்சத்தில்..

தேநீர் விருந்தொன்றில் சந்தித்தேன்
அந்த இளைஞர்களையும் யுவதிகளையும்.

இன்முகத்தோடு வேலைகளை
இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.
வேடிக்கைப் பேச்சால்
விருந்தினர்களைக் கவர்ந்தார்கள்.

“பக்கத்தில் குடிவந்திருக்கிறார்கள்
புலம் பெயர்ந்தவர்கள்”

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நடனம், நாட்டியம், நாட்டுப்புற ஆடற் கலைகள்

தாளத்துக்கும் இசைக்கும் தொடர்புடைய ஒரு கலையை உங்கள் ரசனையில், பார்வையில் காண விரும்புகிறது இம்மாத PiT போட்டி.

ஆம். ‘நடனம்’தான் தலைப்பு.

ஒரு சமூகத்தின் பண்பாட்டைச் சார்ந்து ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையான நெறிமுறைகளையும் நுணுக்கங்களையும் கொண்டிருக்கின்றன. நாம் கண்டு இரசித்துக் காட்சிப் படுத்தியவற்றிலிருந்தோ அல்லது புதிதாக களமிறங்கிப் படமெடுத்தோ பகிர்ந்திட ஒரு வாய்ப்பு.
#1
(இவை யாவும் P&S கேமராவில் படமாக்கிய இரவுக் காட்சிகள்)

திங்கள், 9 செப்டம்பர், 2013

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! - பெங்களூர் சித்திரச்சந்தை 2013 (பாகம் 5)

ஓவியக் கலைஞர்கள் கைவண்ணத்தில் வினை தீர்க்கும் விநாயகரின் சித்திரங்கள் ஏழு:

#1. சர்வ பூஜ்யர்

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.
#2.தரணிதரன்

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சனி, 7 செப்டம்பர், 2013

தங்க மீன்கள்

#1. அன்புப் பிடி

பத்திரிகைகள் பாராட்ட, பார்த்தவர்கள் பரிந்துரைக்க வெற்றி நடை போட்டு வருகிறது ‘தங்க மீன்கள்’ திரைப்படம். இயக்குநர் ராம் இத்திரைப்படத்தின் தலைப்புக்காக ஒரு ஒளிப்படப் போட்டி அறிவித்திருந்தார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்களின் தேர்வில் போட்டி முடிவு சமீபத்தில் அறிவிப்பானது. வெற்றி பெற்றவர் நாமெல்லாம் நன்கறிந்த நண்பரும், புகழ் பெற்றப் புகைப்படக் கலைஞருமான..

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பெயரற்றவன் - ரிச்சர்ட் ரைட் ஆங்கிலக் கவித்துளிகள்


1.
ஏனிந்த வசந்தகாலத்து வனம்
மெளனத்துள் ஒளிகிறது நான் வருகையில்?
என்னதான் நடக்கிறது?

2.
நகரின் எல்லா மணிகளும்
ஓங்கி ஒலிக்கின்றன நள்ளிரவில்
புது வருடத்தை பயமுறுத்தி!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin