புதன், 23 செப்டம்பர், 2015

உனக்கான நாள்

#1
ஆசையின் தீவிரம், கனவின் அளவு, போகிற போக்கில் ஏமாற்றங்களைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது, வெற்றியின் அளவு._ Robert Kiyosaki
#2
இதயத்தில் சற்றே இடம் வைத்திருங்கள், நினைத்தும் பார்த்திராத ஆச்சரியங்களுக்கு. _Mary Oliver
#3 

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

‘அடைமழை’ குறித்து திரு. அழகியசிங்கர்

மீபத்தில் சிறுகதைத் தொகுதியா கவிதைத் தொகுதியா எது விற்பனை ஆகிறது என்று கணக்கெடுக்கும்போது, இரண்டுமே பெரிதாக விற்பதில்லை என்பதைக் கண்டுகொண்டேன்.  பெரிய பத்திரிகைகள் சிறுகதைகளை நம்ப மறுத்ததால், சிறுகதைகள் வெளி வருவதே நின்றுவிட்டன.  அதுவும் இலக்கியத் தரமான கதைகளை கண்டு பிடிப்பதே பெரிய பாடாக இருக்கிறது. இந்தத் தருணத்தில்தான் ராமலக்ஷ்மி எழுதிய 'அடை மழை' என்ற சிறுகதைத் தொகுதி என் கண்ணில் பட்டது.

திங்கள், 21 செப்டம்பர், 2015

தேவதையின் தொடுகை - மாயா ஏஞ்சலோ (4)


துணியப் பழகிராத நாம்
மகிழ்ச்சியை விட்டு விலகி
தனிமை ஓட்டுக்குள் சுருண்டு வாழ்கிறோம்
நம்மை விடுவிக்க

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

சுவை, மணம், குணம்.. காஃபி, டீ.. கலக்கலாம் வாங்க !

தேநீர் (அ ) காஃபி

இதுதான் இம்மாத ‘தமிழில் புகைப்படக் கலை’ அறிவித்திருக்கும் போட்டி. சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#1


 “நம்மூர் சாயாக்கடைகளை காலை நேரத்தில் கேமராவுடன் முற்றுகையிடுங்கள். அற்புதமான, உயிரோட்டமுள்ள படம் கிடைப்பது நிச்சயம். வெறும் தேநீர் கோப்பையை மட்டும் எடுக்காமல், மக்கள் அதை குடிப்பது போல், கடைக்காரர் சாயா ஆற்றுவது போல் எடுத்துப் பாருங்கள் வித்தியாசம் தெரியும்.”  என்கிறார் நடுவர் நவ்ஃபல்.

#2
சுவரில் தெரியும் எழுத்துக்களை வைத்து இவரை எங்கே படமாக்கியிருப்பேன் என்று உங்களால் எளிதாகக் கணிக்க முடியும் என நம்புகிறேன் :)!

#3
க்ரீன் டீ = ஆரோக்கியம்


கடந்த மூன்று மாதப் போட்டிகளில் முறையே 60, 80, 40 பேர்கள் என்ற எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்த இடத்தில்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin