ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

உன்னுள் ஓடும் நதி

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (79)

#1
“அழகென்பது குறைகள் அற்றதன்று. 
அது உங்கள் குறைகளையும் தாண்டி மிளிர்வது.”

#2
“போட்டி இல்லையேல், 
வளர்ச்சி இல்லை.”
_Bela Karolyi

புதன், 26 ஆகஸ்ட், 2020

இருவாச்சி விருந்து - நவீன விருட்சம் 113_வது இதழில்..

இருவாச்சி விருந்து



பூனை சாமர்த்தியமானது.
உயிர்த் தொகையைக் குறைப்பதில்
பெரும்பங்கு வகிப்பது.
பூனை வேகமாகப் பாயும் போது
இரையும் நொடியில் மாண்டு போகிறது.
பூனைக்கு அதிகமாய் பசியெடுக்கும் போது
இரைகளுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.

புதன், 19 ஆகஸ்ட், 2020

181_வது உலக ஒளிப்பட தினம்

ஆகஸ்ட் 19, இன்று 181_வது உலக ஒளிப்படதினம். 
#1
லக ஒளிப்பட தினம் ஒளிப்படக்கலையின் வரலாற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், நிகழ்காலத்தில் கலையைக் கொண்டாடவும், வருங்காலத்திற்கு ஒரு வழித்தடமாக அமையவும் 1839_ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் லூயி டகர் என்பவரின் கண்டுபிடிப்பான டகரியோடைப் எனும் ஒளிப்படக்கலைக்கான வழிமுறையை 9 ஜனவரி 1836 அன்று ஃப்ரெஞ்ச் அகடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டது. சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் அரசாங்கம் அந்தக் கண்டுபிடிப்பை உலகிற்கு இலவசப் பரிசாக வழங்கியது. அந்த நாளே கடந்த 181 வருடங்களாக உலக ஒளிப்பட தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ன்றைய தினத்திற்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படங்கள்:

#2
“உங்களது மிக முக்கியமான ஒளிப்படக் கருவி 
உங்களது கண், இதயம் மற்றும் ஆன்மா!”

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ஒற்றை நூலிழை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (78)
#1
"மழையின் துளிகள் 
மண்ணுக்கு மட்டுமல்ல 
மனதுக்கும் ஆறுதல்"
_ Moulima Chatterjee


#2
உங்கள் இதயம் சொல்லும் வழியில் செல்லாதிருக்க 
எந்த ஒரு காரணமும் இல்லை.

_Steve Jobs 

#3
"உண்மையில் எந்த வார்த்தைகளை விடவும் 
உரக்கப் பேசும் சக்தி வாய்ந்தது

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

நீயொன்றும் மரமில்லை..

#1
புதுத் தளிர்களை எதிர் நோக்கி நிற்கும் மரங்கள் 
கற்பிக்கின்றன 
இறந்த காலத்தை எப்படிக் கடந்து வருவதென்பதை.. 

#2
“உறுதியான வேர்களைக் கொண்ட மரங்கள்
புயல்களைப் புன்னகையோடு எதிர்கொள்கின்றன!”

புதன், 5 ஆகஸ்ட், 2020

முதல் கனி.. கன மழை.. அதிசய மலர்..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77)
#1

நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் பப்பாளி. இந்த முறை அருகருகே இரண்டு மரங்கள் ஆறடி உயரம் தாண்டி வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு மரம் குடை போல விரிந்து பரந்து, காயும் கனியும் பூவுமாக. முதல் விளைச்சலின் முதல் கனி.. வெட்டிய பிறகு தெரிய வந்தது விதையற்ற வகை (Parthenocarpic) என்பது. சுவை அபாரம்!

#2



ப்போது பெங்களூரின் சீதோஷணம் பிரமாதமாக உள்ளது, மழையும் சாரலும் குளிர்ந்த காற்றுமாக. 

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

கனிகள்.. இயற்கையின் கற்கண்டுகள்..

ர் முடக்கமாகியுள்ள இந்த வேளையில் புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே அவ்வப்போது மேற்கொள்ளும் சிறு பயணங்கள் (ஃபோட்டோ வாக்) இப்போது சாத்தியப்படவில்லை. இயற்கையும், தோட்டமும், தேடி வரும் பறவைகளும் தொய்வின்றிப் புகைப்படத் தொகுப்புக்கு உதவி வருகின்றன என்றாலும் ஒரே விதமாகச் செல்ல வேண்டாமென நினைத்த போது கோடை சீசனில் கிடைத்த பழங்கள் கை கொடுத்தன. ‘டேபிள் டாப்’ புகைப்படங்களாக ஃப்ளிக்கரில் பகிர்ந்தவை உங்கள் பார்வைக்கு.. 


ரம்புட்டான்
#1

#2
நாவல் பழம்


#3
மங்குஸ்தான்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin