கவிதை வாசிப்புகள்
எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடான
விஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்
ஆண்களும் பெண்களுமாக,
வாரம் தோறும், மாதம் தோறும்,
வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,
சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டு
தங்கள் மேதைமை என்றாவது ஒருநாள்
கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக் கொண்டு
