ஞாயிறு, 26 ஜூலை, 2020
வெள்ளி, 24 ஜூலை, 2020
க. அம்சப்ரியாவின் ‘தனிமையில் அலையும் தனிமை’ - ஒரு பார்வை (கீற்று மின்னிதழில்..)
“ஒரு மேகத்தைப் போலத் தனிமையில் அலைந்தேன்” வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் எழுதிய இந்த ஆங்கிலக் கவிதை புகழ் பெற்றதும், மிக விரும்பப் பட்டதும் ஆகும். தனித்த மேகம், மலைகள் மற்றும் பெருவெளிகளின் மேல், வானத்தில் மிதப்பதைப் போலத் தான் தனித்து நடப்பதாகச் சொல்லியிருப்பார். ஜான் கீட்ஸ் ‘தனிமைக்கு’ என்ற கவிதையில் மகிழ்ச்சியற்ற நகர வாழ்வைப் பற்றிக் குறிப்பிட்டு,
ஞாயிறு, 19 ஜூலை, 2020
செவ்வாய், 14 ஜூலை, 2020
சூரியத் துளிகள் ( Yellow Alder ) - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (75)
#1
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் இந்தச் செடியின் சின்னஞ்சிறு மஞ்சள் மலர்களைப் பலமுறைகள் பலவித கோணங்களில் எனது புகைப்படத் தொகுப்புகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
#2
இந்தச் செடியைப் பற்றிய சில ஆச்சரிமானத் தகவல்களையும் பகிர்ந்திட வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். சமீபத்தில் அவ்வப்போது அதற்காகப் புகைப்படங்களும் எடுத்து வைத்தேன்.
யெல்லோ ஆல்டர் (yellow alder) எனப்படும் இந்த மலர்ச்செடியின் தாவரவியல் பெயர் Turnera ulmifolia. இது Passifloraceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. புதராக விரிந்து வளரும் இச்செடி ஆண்டு முழுவதும் வாடாமல் வாழும் ( perennial ) வகையைச் சேர்ந்தது. இதற்கு ‘ஸன் ட்ராப்ஸ் (Sun Drops)’ எனும் பெயரும் உண்டு. அது ஏன் மிகப் பொருத்தமானப் பெயர் என்பதையும் பார்ப்போம்.
#3
இச்செடியின் சிறப்பு,
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் இந்தச் செடியின் சின்னஞ்சிறு மஞ்சள் மலர்களைப் பலமுறைகள் பலவித கோணங்களில் எனது புகைப்படத் தொகுப்புகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
#2
இந்தச் செடியைப் பற்றிய சில ஆச்சரிமானத் தகவல்களையும் பகிர்ந்திட வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். சமீபத்தில் அவ்வப்போது அதற்காகப் புகைப்படங்களும் எடுத்து வைத்தேன்.
யெல்லோ ஆல்டர் (yellow alder) எனப்படும் இந்த மலர்ச்செடியின் தாவரவியல் பெயர் Turnera ulmifolia. இது Passifloraceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. புதராக விரிந்து வளரும் இச்செடி ஆண்டு முழுவதும் வாடாமல் வாழும் ( perennial ) வகையைச் சேர்ந்தது. இதற்கு ‘ஸன் ட்ராப்ஸ் (Sun Drops)’ எனும் பெயரும் உண்டு. அது ஏன் மிகப் பொருத்தமானப் பெயர் என்பதையும் பார்ப்போம்.
#3
இச்செடியின் சிறப்பு,
ஞாயிறு, 5 ஜூலை, 2020
நிலாரசிகனின் 'கடலில் வசிக்கும் பறவை' - ஒரு பார்வை (கீற்று மின்னிதழில்..)
“அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட, எந்தவொரு திட்டமிடலும் இல்லாத கலை.” இது கவிதையின் பிரவாகத்தைப் பற்றியப் பேச்சு வருகையில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி தனது ‘ஸ்கைலார்க்’ (வானம்பாடி) கவிதையையே எடுத்துக்காட்டாகக் கொண்டு குறிப்பிட்டது. ஷெல்லியின் இக்கூற்று நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் “கடலில் வசிக்கும் பறவை” நூலில் இருக்கும் 60 கவிதைகளுக்கும் பொருந்தும். ஒருவர் தனது ஆன்மாவின் அடி ஆழத்தை உணர்ந்தால் மட்டுமே இத்தகுக் கவிதைகளை வடிக்க இயலும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)