செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

இலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)

#1

சென்ற வருடம் நவம்பர் மாதத் தொடக்கத்தில் இரு நாள் பயணமாக இலங்கை சென்று வந்தேன். என் அம்மா வளர்ந்தது இலங்கையில். தாத்தாவுக்கு அப்போது அங்கே தேயிலை வியாபாரம். ஆரம்பப் பள்ளி வயதிலிருந்து திருமணத்துக்கு முன் வரை அங்கேதான் இருந்தார்கள். தாத்தாவுக்கு ஆறு மகள்கள், இரண்டு மகன்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் தொடக்கத்தில் இந்தியாவுக்குத் திரும்பி விட்டார்கள்.

யு.எஸ்ஸில் இருக்கும் என் சின்னத் தங்கைக்கு அம்மாவை இலங்கைக்கு அழைத்துச் சென்று அவர்கள் வாழ்ந்த இடங்களைக் காட்ட வேண்டுமென விருப்பம் வர, ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வரும்போதும் சொல்லியபடி இருப்பார்.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

ஒரேயொரு பரிசு

#1
‘ஒரு சிலரே உணருகின்றனர், 
அதிர்ஷ்டம் என்பது உருவாக்கப்படுவது என்பதை.’
 - Robert Kiyosaki

#2
“சில நேரங்களில் விலகிச் செல்வதென்பது பலகீனத்தைக் குறிப்பதாகாது, 
எல்லா வகையிலும் பலத்தைப் பறைசாற்றி நிற்கும்."


#3
 ‘உங்கள் கவனம், உங்களுக்கு எரிச்சலைத் தருபவர்கள் மேல் அன்றி,

புதன், 14 பிப்ரவரி, 2018

பிப்ரவரி 14 - அன்பிற்கும் உண்டோ..

முதலில், இரண்டாம் மாடி  ஜன்னலில் வந்தமர்ந்த கிளிகளைத் தோட்டத்திலிருந்து ஜூம் செய்த படங்கள் சில.. திரைப்பாடல் வரிகளுடன்..

#1
‘சந்திப்போமா..’



#2
‘தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா..’

‘உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்..’

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அதன் பெயர் நாளை

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 27)

#1
உங்கள் கவனத்தை ஈர்க்கப் பிரபஞ்சம் மேற்கொள்ளும் முயற்சியே,
உங்களுக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கும் அந்தக் கிசுகிசுப்பு!
_Oprah Winfrey


#2
“உங்கள் ஆன்மாவை எது ஒளிரச் செய்யுமோ..
அதைச் செய்யுங்கள்!”

#3
"அடுத்தவரை அடித்து உண்பவர்களாலும், மற்றவருக்கு இரையாகிப் போகிறவர்களாலும் நிரம்பிக் கிடக்கிறது உலகம். ஒன்று இதில்  நீங்கள் வேட்டையாடிக் கொண்டிருப்பீர்கள் அல்லது தப்பிக்க ஓடிக் கொண்டிருப்பீர்கள்." 
_ Charlene Weir

#4
"புத்தியின் சக்தியே வாழ்வின் சாரம்." 
_Aristotle

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin