புதன், 15 ஏப்ரல், 2026

போர் ரதங்களின் பாடல்; வெண்மதி இரவு - டு ஃபு சீனக் கவிதைகள் - 'பண்புடன்' மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில்..

 போர் ரதங்களின் பாடல்


தங்கள் உருளுகின்றன, 
கடகடவென அதிர்கின்றன.
குதிரைகள் கனைக்கின்றன, 
சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.
படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டி 
அணிவகுத்துச் செல்கின்றனர்.
தந்தைமார், தாய்மார், 
மனைவியர் மற்றும் குழந்தைகள்
அவர்களை வழியனுப்ப ஓடி வருகின்றனர்.
அவர்களால் கிளம்பிய தூசியில்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

மாயக் கோடுகள் - பண்புடன் இணைய இதழில்..

சுவர்கள் எப்போதும் 
செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,
சில நேரங்களில் அவை எண்ணங்களை 
சுவாசித்தும் எழுகின்றன.
இயலாதெனும் தயக்கமும் 
வேண்டாமெனும் எச்சரிக்கையும்

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

தென்றலோடு கண்ணாமூச்சி.. - பூனையின் பொழுதுகள் [பண்புடன் இதழ்: 10]

  


1. 
தரையில் வெயில்
சூட்டில் சுருளும் பூனை
ஓய்வெடுக்கும் நண்பகல்.

2. 
நடுநிசி சன்னல் ஓரம்
நிலவொளியில் பதியும் பாதம்
களவு போகும் இரவு.

3. 
சருகுகள் நகரும் ஒலி
தீயாகத் துடிக்கும் வால் 
வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று.

4. 
தீண்டப்படாத பால் கிண்ணம், 

ஞாயிறு, 29 மார்ச், 2026

காத்திருக்கும் காற்று

 #1

'இறக்கைகளை விரிக்கும் போதுதான், 
காற்று எப்போதும் நமக்காகக் காத்திருந்தது 
தெரிய வரும்.'


#2
எது நடந்தாலும், 
முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


#3
உங்களுக்கான பாதை பிறரால் எழுதப்படுவதில்லை, 

ஞாயிறு, 22 மார்ச், 2026

அன்பில் வேரூன்றி..

 #1

பொறுமை நிலைத்திருக்கும் இடத்தில்
வல்லமை குடிகொள்ளும்.

2.
“மகிழ்ச்சி நம்மை நன்றியுடையவர்களாக ஆக்குவதில்லை. நன்றியுணர்வே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.”

3.
“அன்பில் வேரூன்றி, 

ஞாயிறு, 15 மார்ச், 2026

உலகை அறிதல்

 1

“ உலகை அறிதல், 
அதை வியப்புடன் காணக் கற்றுக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது.”

2. 

“அமைதியைத் தேர்ந்தெடுக்கும் இடைவெளிகளில்தாம் 
நம் வலிமை வாழ்கிறது.”


3. 
"அனுமானிக்கும் முன் சிந்திக்க வேண்டும். 
புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது."

சனி, 14 மார்ச், 2026

தூறல்: 49 - ஒரு கணம் காக்கும் பொறுமை

ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random)  சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன். 

பயணங்களில் எடுத்த படங்கள் சில..:

சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:

#1


#2 
கடலும் வானும் வரவேற்கும் சுவர்சித்திரம்

[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]

#3 
முத்து நகரத்திற்குப் பொருத்தமாக,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin