புதன், 11 மார்ச், 2026

பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி தகவல் மையம் - ரங்கனதிட்டு சரணாலயம் (2)

ர்நாடகாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயம் ரங்கனதிட்டு. 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு 3 கிமீ தொலைவில் மாண்டியா மாவட்டத்திலுள்ளது. காவேரி நதிக் கரையில் அமைந்த  இதன் ஆறு தீவுகளுக்கும் விதம் விதமான பறவைகள் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்த பறவையியலாளரான டாக்டர் சலீம் அலி, மைசூர் மன்னரிடம் பரிந்துரைத்ததன் பேரில் 1940_ஆம் ஆண்டு இந்த சரணாலயம் உருவானது என்பது குறித்து ‘பக்ஷி காசி - பாகம் 1_ல் குறிப்பிட்டிருந்தேன். அவரைக் கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே  "டாக்டர் சலீம் அலி தகவல் மையம் ( Dr. Salim Ali Information Centre )".

#1

சரணாலய நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வரும் இத்தகவல் மையம் சரணாலத்தின் நுழைவாயில் பகுதியிலேயே அமைந்துள்ளது. 

ரங்கனதிட்டுவின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பின் மீது இந்த மையம் ஆழமான மதிப்பை ஏற்படுத்துகிறது. பறவைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக டாக்டர் சலீம் அலியின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

#2


#3


#4

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த மையத்தில்,  ரங்கனதிட்டு சரணாலயம் முழுமையாக அறிந்து கொள்ள, சுற்றிப் பார்க்க உதவும் வகையில் தெளிவான வரைபடம் உள்ளது. பறவைகளின் குரல்களைக் கேட்டு அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் மற்றும் ஆடியோ-விஷுவல் வசதிகள்  சேர்க்கப்பட்டுள்ளன. மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான ‘விநாடி வினாப் பலகை’ அமைக்கப்பட்டுள்ளது.

#5


பலவகைப் பறவை இனங்கள், அவற்றின் கூடுகட்டும் முறைகள் மற்றும் உடல் பண்புகள் பற்றிய விரிவான தகவல்களை இந்த மையம் வழங்குகிறது. 

#6 அலகு அமைப்புகள், இறகு வடிவங்கள் மற்றும் நிறங்கள், அவற்றின் பல்வேறு வகையான கால்கள் மற்றும் கால்களின் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. 

ஒளியூட்டப்பட்டத் தகவல் பலகைகள்:

உரிய படங்களுடன், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில், எளிதாக வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்களுடன், சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி நிற்கும் ஒளியூட்டப்பட்ட பலகைகள் இந்த மையத்தின் சிறப்பு. கூடுமானவரையில் மற்ற மின் விளக்குகளின் ஒளி அவற்றின் மேல் பிரதிபலிக்காமல் படமாக்கியுள்ளேன் ஆயினும், தமிழிலும் அத்தகவல்களைத் தந்துள்ளேன்.

#7 கர்நாடகாவின் “பக்ஷி காஷி”க்கு வரவேற்கிறோம்:

ஞாயிறு, 8 மார்ச், 2026

அவள் நடக்கிறாள் - பண்புடன் மின்னிதழின் மகளிர் தின சிறப்பிதழில்..

 

வள் எழுகிறாள், அதிகாலையில்
ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்ல
அவளது ஆழ்ந்த வலிமையை நம்பி 
தோள்களில் சாயும் உலகத்தை 
தாங்கிப் பிடிப்பதற்காக.

கண்ணாடி அறைக் கூட்டங்களில்,
கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,
கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்
அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,

வெள்ளி, 6 மார்ச், 2026

அருள்மிகு சன்னதிகள்

பெங்களூர் கோயில்கள் சிலவற்றில் பெற்ற தரிசனக் காட்சிகள்..

#1 சிவசக்தி 


#2 சோமேஸ்வரர்


#4 அயிகிரி நந்தினி..

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

உப்புக் காற்று - பண்புடன் மின்னிதழில்..

  


உப்புக் காற்று

பொழுது விடியும் முன்பே 
அவர்கள் புறப்பட்டனர்.
அவர்களது வலைகள் 
நம்பிக்கையால் கனத்திருந்தன.
அமைதியாக இருந்தது 
அடிவானம்.
நீல நிறத்தைப் பரப்ப 
ஆயத்தமாகிக் கொண்டிருந்தது 
ஆகாயம்.

அவர்களது தோலில் 
நினைவுகளைப் போல் 
ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

எல்லைகளுக்குள் சுருங்கிய சக்தி.. - மைசூர் விலங்கியல் பூங்கா

மைசூர் விலங்கியல் பூங்காவில் எடுத்தப் படங்களைத் தொகுப்பாக “வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள்” எனவும், தனித் தனி விலங்குகளின் படங்களைத் தகவல்களுடனுமாகப் பல பதிவுகள் பதிந்திருந்தேன். அந்த வரிசையில் தொடர்ந்து மேலும் ஃப்ளிக்கரில் பதிந்து வந்த படங்களின் தொகுப்பு.  

கழுத்தை உயர்த்தியும் தாழ்த்தியுமாக உலவிக் கொண்டிருந்த பல ஒட்டகச் சிவிங்கிகளை விடாது நானும் கழுத்தை உயர்த்தி, வளைத்து வளைத்து எடுத்த படங்கள் முதலில்:

#1  
உயரம் என்பது கர்வம் அல்ல,
அது உலகை அமைதியாகப் பார்க்கும் ஒரு பார்வை.


#2

இயற்கையின் சித்திரம்


#3

பசுமை வேட்டை

வியாழன், 5 பிப்ரவரி, 2026

தாமிரபரணி மண்ணின் மகுடம் | நெல்லையப்பர் திருக்கோயில் | 2026

2026:
[நெல்லையப்பர் கோபுரம்]

யுகங்கள் கடந்தும் கம்பீரம் குறையாத கோபுரங்களின் தரிசனம், சொர்ண புஷ்கரணியின் அமைதி, பிரகாரங்களிலும் மண்டபங்களிலும் சூரியக் கதிராக ஊடுருவி நிற்கும் இறையருள்! அண்மையில் எடுத்த 15,  +4 படங்களுடன் ஒரு பகிர்வு.


#2 காந்திமதி தாயார் கோபுரம்


#3 அம்மன் சன்னதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்)

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

உணராத ஆற்றல்

#1
"அமைதியைத் தேர்ந்தெடுங்கள்; அதுவே உங்கள் சிறந்த எண்ணங்கள் வாழும் இடம்."

#2
"மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், அவர்கள் உங்களைப் பற்றி அரிதாகவே நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால்." 
- எலினோர் ரூஸ்வெல்ட்


#3 
"அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin