மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன.
ஆனந்த விகடனில் வெளியான சமயத்தில் பரவலாகக் கவனத்தை ஈர்த்தக் கதை 'சின்னக்கிளி குட்டியப்பன்'. வளர்ப்பு தாய்மையின் உணர்வுப் போராட்டங்களை ஆழமாகச் சித்தரிக்கிறது.



