1.
2.
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
1.
2.
ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random) சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன்.
பயணங்களில் எடுத்த படங்கள் சில..:
சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:
#1
[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]
கர்நாடகாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயம் ரங்கனதிட்டு. 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு 3 கிமீ தொலைவில் மாண்டியா மாவட்டத்திலுள்ளது. காவேரி நதிக் கரையில் அமைந்த இதன் ஆறு தீவுகளுக்கும் விதம் விதமான பறவைகள் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்த பறவையியலாளரான டாக்டர் சலீம் அலி, மைசூர் மன்னரிடம் பரிந்துரைத்ததன் பேரில் 1940_ஆம் ஆண்டு இந்த சரணாலயம் உருவானது என்பது குறித்து ‘பக்ஷி காசி - பாகம் 1’_ல் குறிப்பிட்டிருந்தேன். அவரைக் கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே "டாக்டர் சலீம் அலி தகவல் மையம் ( Dr. Salim Ali Information Centre )".
சரணாலய நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வரும் இத்தகவல் மையம் சரணாலத்தின் நுழைவாயில் பகுதியிலேயே அமைந்துள்ளது.
ரங்கனதிட்டுவின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பின் மீது இந்த மையம் ஆழமான மதிப்பை ஏற்படுத்துகிறது. பறவைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக டாக்டர் சலீம் அலியின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
#2
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த மையத்தில், ரங்கனதிட்டு சரணாலயம் முழுமையாக அறிந்து கொள்ள, சுற்றிப் பார்க்க உதவும் வகையில் தெளிவான வரைபடம் உள்ளது. பறவைகளின் குரல்களைக் கேட்டு அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் மற்றும் ஆடியோ-விஷுவல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான ‘விநாடி வினாப் பலகை’ அமைக்கப்பட்டுள்ளது.
#5
ஒளியூட்டப்பட்டத் தகவல் பலகைகள்:
உரிய படங்களுடன், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில், எளிதாக வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்களுடன், சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி நிற்கும் ஒளியூட்டப்பட்ட பலகைகள் இந்த மையத்தின் சிறப்பு. கூடுமானவரையில் மற்ற மின் விளக்குகளின் ஒளி அவற்றின் மேல் பிரதிபலிக்காமல் படமாக்கியுள்ளேன் ஆயினும், தமிழிலும் அத்தகவல்களைத் தந்துள்ளேன்.
பெங்களூர் கோயில்கள் சிலவற்றில் பெற்ற தரிசனக் காட்சிகள்..
#1 சிவசக்தி
மைசூர் விலங்கியல் பூங்காவில் எடுத்தப் படங்களைத் தொகுப்பாக “வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள்” எனவும், தனித் தனி விலங்குகளின் படங்களைத் தகவல்களுடனுமாகப் பல பதிவுகள் பதிந்திருந்தேன். அந்த வரிசையில் தொடர்ந்து மேலும் ஃப்ளிக்கரில் பதிந்து வந்த படங்களின் தொகுப்பு.