செவ்வாய், 21 ஜூலை, 2026

குரலால் உலகை அரவணைத்தவள் - அஞ்சலி - பண்புடன் மின்னிதழில்...

 

ண்பத்தெட்டு ஆண்டுகால மூச்சு
இருபது மொழிகளின் வழியே
தன் குரலை
உலகுக்கு வாரி வழங்கிய வாழ்வு

அவர் வாழ்ந்த ஆண்டுகளைவிட
அவரது குரல் தங்கிய இடங்கள் அதிகம்—
வானொலிகளில் கிராமபோன் தட்டுகளில்
ஒலிநாடாக்களில் குறுந்தகடுகளில்
இணையத்தின் இசைப்பட்டியல்களில்
தொலைக்காட்சி மாலைகளில்
கல்யாண மண்டபங்களில் 
கோயில் தெருக்களில்
தனிமையான மருத்துவமனை அறைகளில்
அவரது முகவரியே தெரியாத
எண்ணற்ற இதயங்களில்

அவர் எந்த வகுப்பறையிலும்
நின்று பாடம் நடத்தவில்லை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin