வெள்ளி, 17 ஜனவரி, 2025

வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள் - ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா, மைசூரு

 #1  ராஜ கம்பீரம்

[சிங்கம்]

கானகத்துக்குள் சென்று சந்தித்திராத, சித்திரங்களிலும் படங்களிலும் மட்டுமே அறிமுகமாகி இருந்த, உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த பல விலங்குகளை மக்கள் நேருக்கு நேர் காணும் தனித்துவமான வாய்ப்பை வழங்குபவை உயிரியல் பூங்காக்கள். 

#2

அவற்றுள் 157 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, 168_க்கும் மேற்பட்ட இனங்களைப் பராமரித்து வருகிற மைசூர் உயிரியல் பூங்கா, இந்தியாவின் மிகப் பழமையான, ஏன் உலகிலேயே மிகப் பழமையான உயிரியல் பூங்காக்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. 

#3 வனத்தின் கழுத்து

[ஒட்டகச் சிவிங்கி]

மைசூருக்குப் பலமுறைகள் சென்றிருக்கிறேன்.  2012_ஆம் ஆண்டு இந்த மிருகக் காட்சி சாலையில் எடுத்தப் படங்களைப் பல பதிவுகளாக “தெரிஞ்சுக்கலாம் வாங்க” பகுப்பின் கீழ் ஒவ்வொரு விலங்கை பற்றியும் விரிவான தகவல்களுடன் முத்துச்சரத்தில் கோத்திருக்கிறேன். இந்தப் பதிவில் கடந்த நவம்பரில் சென்ற போது எடுத்த படங்கள் அணிவகுக்கின்றன. 

#3 உள்ளத்தில் சாது, உருவத்தில் பூதம்

புதன், 1 ஜனவரி, 2025

ஃப்ளிக்கர் 5000 - 2024 குறிப்பேடு - தூறல்: 45

இந்த வருடம் சராசரியாக வாரம் ஒரு பதிவு.. 

வாழ்வியல் சிந்தனைகளுடனான ஞாயிறு படத் தொகுப்புகள் 30; மொழிபெயர்ப்பு கவிதைகள் 5; நூல் மதிப்புரை 1; பயணங்கள் குறித்த பதிவுகள்.. என.

2008_ல் ஆரம்பித்த ஃப்ளிக்கர் தளத்தின் பட ஓடை (photostream) 5000 படங்களைக் கடந்தது இவ்வருடம் நவம்பர் மாதத்தில்.. 

5000 படங்களைக் கடந்து விட்டதை சில தினங்கள் கழித்தே கவனித்தேன். பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்த திருமலை நாயக்கர் மகாலின் இந்தப் படமே அந்த இடத்தைப் பிடித்திருந்தது.

டிசம்பர் முதல் வாரத்தில் “எனது ஃப்ளிக்கர் வருடம் 2024” என ஃப்ளிக்கர் தளம் அனுப்பி வைத்தத் தகவல் குறிப்பு:

திங்கள், 23 டிசம்பர், 2024

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை - சாந்தி மாரியப்பனின் "நிரம்பும் வெளியின் ருசி"

  

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை 

வாழ்வின் ஒவ்வொரு காலக் கட்டமும் சொல்லப்படக் காத்திருக்கும் ஓர் அனுபவக் கதை. அப்படியான தனித்துவமான சொந்த அனுபவங்களின் மூலமாக வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் சமூகம் குறித்த தனது பார்வைகளை சிந்தனையைத் தூண்டும் வகையில் முன் வைத்துள்ளார் ஆசிரியர். 'தமிழ் மணம்' திரட்டி சிறப்பாக இயங்கி வந்த வலைப் பதிவர்களின் பொற்காலத்தில், மெல்லிய அங்கதம் இழையோடும் தன் அழகிய எழுத்து நடை மூலமாகப் பரவலாக அறியப்பட்டவர் தோழி சாந்தி மாரியப்பன். அவரது மூன்றாவது நூலாகிய இத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவரது ‘அமைதிச்சாரல்’ வலைப்பூவில் வெளியாகி நல்ல வரவேற்பையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பெற்றவை. ‘நிரம்பும் வெளியின் ருசி’யாக அவை மீண்டும் சுவைக்கக் கிடைத்திருப்பது நற்பேறு. 

வெள்ளி, 20 டிசம்பர், 2024

காரைக்குடி: கானாடுகாத்தான் அரண்மனை வெளிப்புறத் தோற்றம் மற்றும் அருகாமை இடங்கள்

 #1


தமிழ்நாட்டில் காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி மற்றும் கொத்தமங்கலம் போன்ற பல இடங்களில் செட்டிநாட்டு வீடுகள் உள்ளன என்றாலும் ‘செட்டிநாட்டு அரண்மனை’ என அழைக்கப்படும் கானாடுகாத்தான் அரண்மனை அவற்றுள் புகழ் பெற்றதாகத் திகழ்கிறது. இது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் கானாடுகாத்தான் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 

#2

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

வெவ்வேறு உலகம்

  #1

"கையிலிருக்கும் வேலையின் மேல் 
உங்கள் அத்தனை கவனத்தையும் குவித்திடுங்கள். 
மையத்தில் குவியாமல் 
சூரியனின் கதிர்கள் எரியூட்டுவதில்லை."
_ Alexander Graham Bell

#2
"வலுவான கனவுகளுக்கும் தேவை 
அடங்காத உற்சாகம் என்பதை உறுதிப்படுத்துகிறது, 
வான் நோக்கிய இருவாச்சிப் பறவையின் 
மூர்க்கமான முழக்கம்."

#3
"எதையும் கற்றிட மிகப் பெரிய தேடலாக இருப்பது ஆர்வமே. 
எதைப் பற்றியேனும் அறிந்திட ஆவல் கொண்டால்,

செவ்வாய், 10 டிசம்பர், 2024

ஸ்ரீ லெட்சுமி விலாஸ் - ஆத்தங்குடி அரண்மனை - பாகம் 2

 பாகம் 1: “இங்கே.”

அரண்மனையின் உட்பகுதியில் அழகிய பெரிய  முற்றம் உள்ளது. 

#1 பிரதான அறையிலிருந்து முற்றுத்துக்குள் நுழையும் வழி:

#2 நீல வானும் சூரிய ஒளிக் கம்பளமும்..:

(உட்புறத்திலிருந்து வெளிவாயில் நோக்கி எடுக்கப்பட்ட படம்)

#3 அகன்ற பார்வையில்..


#4 உப்பரிகை

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

ஆத்தங்குடி அரண்மனை லெட்சுமி விலாஸ் - பாகம் 1

 பிள்ளையார்பட்டி வரை வந்ததும், பயணத் திட்டத்தில் இல்லாத காரைக்குடி, ஆத்தங்குடி ஆகியனவும் திடீரெனப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. காரைக்குடி கானாடுகாத்தான் அரண்மனையைப் படம் எடுக்க நான் விரும்பிய போது, அங்கு உள்ளே செல்ல முன் அனுமதி இல்லை பெற்றிருக்க வேண்டுமெனத் தெரிய வர,  அதே போன்ற மற்றொரு அரண்மனையான  ஆத்தங்குடி லெட்சுமி விலாஸ் சென்று வந்தோம். 

ஆத்தங்குடி (டைல்ஸ்) தரைக் கற்களுக்கும் பெயர் பெற்ற ஊர். சுற்றி வர ஊரின் பல இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை நாம்  சென்று பார்க்கலாம். அடுத்து காரைக்குடி செல்ல வேண்டியிருந்த அவசரத்தினால் தவறவிட வேண்டியதாயிற்று. அடுத்த முறை செல்ல வாய்த்தால் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சேர்த்தாயிற்று. ஆத்தங்குடி அரண்மனையின் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்தப் பட்டிருக்கும் வெவ்வேறு விதமான தரைக் கற்களைக் குறிப்பாகக் கவனித்தால் இங்குள்ள இத்தொழிலின் சிறப்பு புரிய வரும். படங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இரண்டு பாகங்களாக பகிருகிறேன்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து சுமார் 24 கிமீ தொலைவில் உள்ள ஆத்தங்குடி எனும் செட்டிநாட்டுச் சிற்றூரில் உள்ளது  ஆத்தங்குடி அரண்மனை. லெட்சுமி விலாஸ் மற்றும் பெரிய வீடு என்றும் இது அழைக்கப்படுகிறது. 

#1

தெருவின் தொடக்கத்தில் பரந்து விரிந்து நிற்கும் இந்த அரண்மனை சிறிய நுழை வாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. 

#2 இடப்புறம்:


#3 வலப்புறம்:


நுழை வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டவையாகும். உள்ளே படிகளில் ஏறும்போது இரு பக்கங்களிலும் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து இரு புறங்களிலும் பெரிய திண்ணைகள் காணப்படுகின்றன. தேக்கு மரத்தால் ஆன பெரிய கதவுகள் உள்ளன. கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

#4 தேக்கு மர நிலைக்கதவுகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin