வியாழன், 5 பிப்ரவரி, 2026

தாமிரபரணி மண்ணின் மகுடம் | நெல்லையப்பர் திருக்கோயில் | 2026

2026:
[நெல்லையப்பர் கோபுரம்]

யுகங்கள் கடந்தும் கம்பீரம் குறையாத கோபுரங்களின் தரிசனம், சொர்ண புஷ்கரணியின் அமைதி, பிரகாரங்களிலும் மண்டபங்களிலும் சூரியக் கதிராக ஊடுருவி நிற்கும் இறையருள்! அண்மையில் எடுத்த 15 + படங்களுடன் ஒரு பகிர்வு.


#2 காந்திமதி தாயார் கோபுரம்


#3 அம்மன் சன்னதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்)

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

உணராத ஆற்றல்

#1
"அமைதியைத் தேர்ந்தெடுங்கள்; அதுவே உங்கள் சிறந்த எண்ணங்கள் வாழும் இடம்."

#2
"மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், அவர்கள் உங்களைப் பற்றி அரிதாகவே நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால்." 
- எலினோர் ரூஸ்வெல்ட்


#3 
"அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்.

வியாழன், 29 ஜனவரி, 2026

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்] - பண்புடன் மின்னிதழில்..

 பேசும் வானம்


​1. 
இருள் தளர
நீலத்தில் தேயும் விண்மீன்கள்
விரியும் காலை!

2.
வெண்மேகம் விலக
ஒளி சிந்தும் சூரியன்
பேசும் பகல்!

3.
மேக நிழல்கள்
மண்ணில் வரையும் சித்திரங்கள்
வானமெனும் குழந்தை!

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

சரியான நேரம், சரியான இடம், சரியான நீங்கள்.

 #1. “உங்களுக்கேயான நேரத்தை முழுமையாக ஏற்றிடுங்கள்.”

[செம்பருந்து]

#2. "மென்மையைப் போல வலிமையானது எதுவுமில்லை, உண்மையான வலிமையைப் போல மென்மையானது எதுவுமில்லை." 
__ Saint Francis de Sales
[கரும்பருந்து]

#3. “உள்ளுக்குள் உறுதியாக நிற்பவர்களுக்கே
ஒளி தன்னை வெளிப்படுத்துகிறது.”
[வல்லூறு]

#4.  “சிறிய பறவை கூட தன் கண்களில் அடிவானத்தைத் தாங்க முடியும்.”

வியாழன், 22 ஜனவரி, 2026

சமூகத்தின் முகம் - முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்

 


ழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் ‘மண்வாசம்’ இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 64_வது நூல் ‘சமூகத்தின் முகம்’. இந்நூல் சமூகத்தின் சக்தி வாய்ந்த குரலாகவும், அதன் ஆழமான பிரதிபலிப்பாகவும் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், கவனிக்கப்படாத போன உண்மைகளை நேர்மையுடனும் கருணையுடனும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. வாசகர்களை இடை நிறுத்தி சிந்திக்க வைக்கின்றன.

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

முழு மலர்ச்சி

 #1

'இயற்கையின் வாக்குறுதி இதழ்களில் வரையப்படுகிறது, 
மென்மையாக, பிரகாசமாக, அழகாக.'


#2
'முழு மலர்ச்சி 
தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல, 
வளர்ச்சி முழுவதும் வெளிப்படும் தருணமே அது.'

#3
'அமைதியாக உழைத்திடுங்கள், 
உங்கள் உயர்வு பேசப்படட்டும்.'

புதன், 7 ஜனவரி, 2026

தர்பார் மண்டபங்கள்; கூரை ஓவியங்கள் - மைசூர் அம்பா விலாஸ் அரண்மனை

 

மைசூர் அரண்மனை பற்றிய விரிவான தகவல்களுடனும் 27 படங்களுடனும் ஆன எனது 2017_ஆண்டுப் பதிவு ஒன்று இங்கே: “அம்பா விலாஸ்”.

முன்னரெல்லாம் அரண்மனையை வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதி இருந்தது. உள்ளே செல்லும் முன் மீண்டும் நுழைவாயிலுக்குச் சென்று கேமரா, மொபைல் அனைத்தையும் லாக்கரில் ஒப்படைத்து விட்டே செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறைகள் சென்ற போதும் இதுதான் விதிமுறையாக இருந்ததால் ‘அதில் என்ன மாற்றம் வந்து விட்டிருக்கப் போகிறது’ என்று சற்றே அலட்சியமாக இருந்து விட்டேன் இந்த முறை. அரண்மனைக்குச் செல்வது பயணத் திட்டத்திலும் இருக்கவில்லை. ஆனால் உயிரியல் பூங்காவுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில் நேரம் இருந்ததால், அரண்மனைக்கு வெளியே மட்டும் சுற்றி விட்டு வரலாம் என்கிற முடிவுடன் சென்றேன். 

#2


#3


அந்தியில் மின்னிய அரண்மனையின் வெளித் தோற்றத்தை ஓரிரு படங்கள் எடுப்போம் என ஆரம்பித்த போதுதான் கவனித்தேன், முதல் தளத்தில் பலபேர் கையில் அலைபேசிகளுடன் செல்ஃபி எடுத்தபடி நின்றிருந்ததை. வியப்பாகி அங்கிருந்த காவலரிடம் கேட்ட போது, ‘உள்ளே ஃபோட்டோகிராஃபி அலவ்ட்’ என்றார். “ நீங்கள் போக வேண்டுமா? ஐந்தரை மணி வரையிலும்தான் அரண்மனைக்குள் நுழைய முடியும், ஆறு மணிக்கு வெளியேற்றி விடுவார்களே. வேகமாகப் போங்கள்” என்றார். இன்னும் 5 நிமிடங்களே இருக்க அரக்கப் பரக்க விரைந்து ஒருவாறாக நுழைந்து விட்டோம்.

#4

அரை மணி நேர அவகாசமே இருந்ததாலும், உள்ளே இருந்த கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே மக்களை அவசரப்படுத்தியபடி இருந்ததாலும், ஆற அமர படமாக்க முடியவில்லை. கிடைத்த நொடிகளில் ரசித்து எடுத்தவற்றின் அணிவகுப்பு கீழே.. 

ரண்மனையில் முதல் தளத்தில் அமைந்துள்ளன இரண்டு தர்பார் மண்டபங்கள். தெற்கு பார்க்க அமைந்திருப்பது மன்னர் பார்வையாளர்களைச் சந்திக்கும் பொது தர்பார் மண்டபம்.  

கிழக்குப் பார்க்க அமைந்திருப்பது மகராஜா தனிப்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கும் அம்பா விலாஸா எனப்படும், தனிப்பட்ட தர்பார் மண்டபம். 

னிப்பட்ட (private) தர்பார் மண்டபம் ‘அம்பா விலாஸா’ என அழைக்கப்படுவதுடன் அதன் பெயரே அரண்மனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

#5

இது இந்தோ-சரசெனிக் (Indo-Saracenic) கட்டடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin