ஞாயிறு, 3 மே, 2026

பயத்தின் எதிரொலி

 1.

‘உங்கள் கனவுகள் தேய்வதில்லை, 
அவை உங்களுடன் சேர்ந்து
பொறுமையைக் கற்றுக் கொள்கின்றன.’


2.
‘அழகு என்பது இதழ்களை விட 
ஆழமானது என்பதை 
ரோஜாக்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. 
அது ஒன்றையொன்று தாங்கும் வேர்களில் 
தொடங்குகிறது.’


3.
‘இந்த உலகம் 
கனவு காண்பதற்குப் போதுமான அளவு 
விசாலமானது,

வெள்ளி, 1 மே, 2026

கவிதை வாசிப்புகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (25) - பண்புடன் இணைய இதழில்..


விதை வாசிப்புகள்
எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடான 
விஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்
ஆண்களும் பெண்களுமாக,
வாரம் தோறும், மாதம் தோறும், 
வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,
சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டு
தங்கள் மேதைமை என்றாவது ஒருநாள் 
கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக் கொண்டு

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

கூர்மையான உலகம்

 1.

நாம் முடிவெடுக்கும் தருணத்தில், 
தயக்கம் முடிவுக்கு வருகிறது.
(தேன் பருந்து)

2.
"உலகத்தைப் பார்த்து நீங்கள் 
சிரிக்கத் தொடங்கும் அந்த நொடியில், 
அது உங்கள் மீதான தன் அதிகாரத்தை 
இழந்து விடுகிறது."
(கரும்பருந்து)

3.
அமைதியான மனங்களிலேயே 
ஆழ்ந்த வலிமை குடிகொள்கிறது.

வியாழன், 23 ஏப்ரல், 2026

தொலைவிலிருந்து கேட்கும் பாடல் - பண்புடன் இணைய இதழில்..

வீடு பழகிக் கொண்டது 
மெல்லிய சத்தங்களில் பேச-
ஒரு நாற்காலி நகர்வது, 
தொண்டையைச் செருமும் கடிகாரம்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

நந்தவனத்தின் அழைப்பு..

 1.

"இறக்கைகள் வெறும் எடையை மட்டும் சுமப்பதில்லை, 
அவை அடுத்த நந்தவனத்தின் அழைப்பையும்
 நம்பிக்கையுடன் ஏந்திச் செல்கின்றன."

2.
"உங்கள் கனவுகள் 
உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை, 
துணிச்சல் துளிர்விடும் இடத்தில் 
அவை உங்களுக்காகக் காத்திருக்கின்றன."

3.
"மெளனமான நேரங்கள் வெறுமையானவை அல்ல,

புதன், 15 ஏப்ரல், 2026

போர் ரதங்களின் பாடல்; வெண்மதி இரவு - டு ஃபு சீனக் கவிதைகள் (7,8) - 'பண்புடன்' மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில்..

 போர் ரதங்களின் பாடல்


தங்கள் உருளுகின்றன, 
கடகடவென அதிர்கின்றன.
குதிரைகள் கனைக்கின்றன, 
சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.
படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டி 
அணிவகுத்துச் செல்கின்றனர்.
தந்தைமார், தாய்மார், 
மனைவியர் மற்றும் குழந்தைகள்
அவர்களை வழியனுப்ப ஓடி வருகின்றனர்.
அவர்களால் கிளம்பிய தூசியில்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

மாயக் கோடுகள் - பண்புடன் இணைய இதழில்..

சுவர்கள் எப்போதும் 
செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,
சில நேரங்களில் அவை எண்ணங்களை 
சுவாசித்தும் எழுகின்றன.
இயலாதெனும் தயக்கமும் 
வேண்டாமெனும் எச்சரிக்கையும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin