செவ்வாய், 2 ஜூன், 2026

பேரன்பின் சாட்சியங்கள் - அமுதவல்லி நாராயணனின் ‘என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து...

ன்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பு ஒரு உயிர்ப்புள்ள நாட்குறிப்பைத் திறந்து வைப்பது போல் உணர வைக்கிறது. கவிதை என்பது, அமைதியில் நினைவு கூர்ந்திடும் உணர்வுகளிடமிருந்து ஆரம்பமாவது எனும் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் எண்ணத்தையும்; மிகச் சிறந்த மனங்களின் மிக மகிழ்ச்சியான தருணங்களின் பதிவாகும் எனும் P.B. ஷெல்லியின் கூற்றினையும்; கற்பனை மற்றும் உணர்ச்சிகளின் மொழி எனும் வில்லியம் ஹாஸ்லிட்டின் பார்வையையும் மெய்ப்பிக்கும் விதமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. வலைப்பூக்களின் வசந்தகாலத்தில் ‘என் வானம்’ வலை தளத்தில் இருபது ஆண்டுகளாக எழுதி வரும் அமுதா என்ற அமுதவல்லி நாராயணனின் இந்த நெடும்பயணத்தில் நானும் உடன் இருந்திருக்கிறேன் என்பதையும், தொகுப்பாக அவரது கவிதைகளை வாசிக்கக் காத்திருந்தேன் என்பதையும் மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.


108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற பாசம்.. இவை அனைத்தும் கவிஞரின் உள்ளத்திலிருந்து தீட்டப்பட்ட ஓவியங்களாக உயிர்பெற்றுள்ளன. எதைக் குறிப்பிடுவது, எதைத் தவிர்ப்பது எனும் திகைப்பை ஏற்படுத்தும் கவிதைகள்.

என்ன பிடிக்கும் என கேட்காமலே
பிடித்ததை செய்வாள் அம்மா

என்ன பிடிக்கும் என நான்
எல்லோரையும் கேட்டு செய்வேன்

என்ன பிடிக்கும் எனக்கு என
எவரும் கேட்கவில்லை என்றுணர்ந்து

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என
கேட்டபொழுது...

ஞாயிறு, 31 மே, 2026

தன்னை மறக்கும் தருணம்

 #1. 

'கனிவோடு பார்க்கும் கண்களுக்கு, 
ஆசீர்வாதங்கள் எங்கும் புலப்படும்.'


#2.
'வலிமை குறையும் போது, 
நம்பிக்கை நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் 
ஒரு அமைதியான பிரார்த்தனையாக மாறுகிறது.'

#3.
'படைப்பில் ஆன்மா தன்னை மறக்கும் போது,

புதன், 27 மே, 2026

சிரிக்கும் இதயம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (27) - பண்புடன் இணைய இதழில்..

  

சிரிக்கும் இதயம்


உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-
இருண்ட அடிமைத்தனத்திற்குள்
அதை நசுங்க விடாதீர்கள்.

விழிப்புடன் இருங்கள்.
வெளியேற வழிகள் உள்ளன.
எங்கோ ஒரு ஒளி உள்ளது.
அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.
ஆயினும் அது
இருளை வென்று கொண்டேயிருக்கும்.

விழிப்புடன் இருங்கள்.

ஞாயிறு, 24 மே, 2026

அக்னி நட்சத்திரம் - குறுங்கவிதைகள் 15 - பண்புடன் மின்னிதழில்..

 

1. 
எங்கும் வெயில்
வெப்பச் சாலைகளில் நிசப்தம்
நீளும் மதியம்.

2. 
சுருங்கி மறையும் நிழல்கள்
தலைக்கு மேல் நண்பகல்
கனக்கும் அமைதி.

3.
சுழலும் மின்விசிறி
சோம்பல் முறிக்கும் வட்டங்கள் 
கரைகிறது நேரம்.

4.
பொன்னாக மாம்பழங்கள்
பிசுபிசுக்கும் கைகள்
ஒளியாக வழிகிறது இனிப்பு.

5.
சூடான நிலம்

புதன், 20 மே, 2026

என்னவோர் எழுத்தாளர்! - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (26) - பண்புடன் இணைய இதழில்..

 

என்னவோர் எழுத்தாளர்!

இ. இ. கம்மிங்ஸிடம் 
எனக்குப் பிடித்தது என்னவென்றால்-
அவர் சொல்லின் புனிதத் திரையைக்
கிழிந்தெறிந்து,
தனது வசீகரத்தாலும் 
துணிச்சலான சாதுர்யத்தாலும்
அழுகிய போலித்தனத்தை
வெட்டிக் கடந்து செல்லும்
கட்டுக்கோப்பற்ற வரிகளை
நமக்கு அளித்தார்.

எவ்வளவு தேவையாக இருந்தது அது!
எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்

ஞாயிறு, 17 மே, 2026

ஒரே காடு

#1. 

"ஒரு உறுதியான முடிவு அச்சத்தின் குரலை அமைதிப்படுத்தும்."


#2. 
ஒன்றிணைந்தால் அளவற்ற வளமாக மலரலாம்.

#3. 
இயற்கை ஒரு அமைதியான ஓவியர், ரசிப்பவர் பற்றிய எண்ணம் இன்றி

வெள்ளி, 15 மே, 2026

புனித ஃபிலோமினா தேவாலயம் - மைசூர்

ஆசியாவின் மிக உயரமான மற்றும் பெரிய தேவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மைசூரிலுள்ள புனித ஃபிலோமினா தேவாலயம் (St. Philomena’s Cathedral). 1936-ல், ஜெர்மனியில் உள்ள 'கொலோன்' தேவாலயத்தின்  'நியோ கோதிக்' எனும் கட்டிடக்கலை பாணியைத் தழுவிக் கட்டப்பட்டது.

இதன் முழுப் பெயர், புனித ஜோசப் மற்றும் புனித ஃபிலோமினா தேவாலயம். இது புனித செயின்ட் ஜோசப் தேவாலயம் என்றும் அறியப்படுகிறது. 

#2
புனித ஜோசஃப் குழந்தை ஏசுவுடன்:

#3


#4
புனித ஃபிலோமினா

புனித ஃபிலோமினா 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்க இளவரசி. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin