#1
'எதிர்காலத்தை உருவாக்கக்
கனவைப் போல் ஆகச் சிறந்தது
வேறெதுவுமில்லை.'
_ Victor Hugo
#2
‘ஒவ்வொரு மலரும்
அதற்குரிய நேரத்தில் மலரும்.’
_Ken Petti
பிரம்மக் கமலம்
[18 ஆகஸ்ட் நடுஇரவில் மலர்ந்தவை. அதே நாளில் பல்வேறு இடங்களில் மலர்ந்திருந்ததைப் பலரும் பகிர்ந்திருந்தார்கள். மகா மொக்கு.. மதிய நேரத்தில் படமாக்கியது.]
#3
'நீங்கள் உங்களைத் தனிமைப் படுத்திக் கொள்வதால்
தனித்து விடப்படுவதில்லை,
ஏனெனில் உலகமே உங்களுடன் இருக்கிறது.'
_ Ken Poirot
#4
'நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைத்து விடாது.
நீங்கள் எதற்காக உழைக்கிறீர்களோ
அதுவே கிடைக்கும்.'
#5
“ஆன்மாவுக்கு எப்போதும் தெரியும்
தன்னை எப்படி ஆற்றுப் படுத்திக் கொள்வதென.
மனதை எப்படி அமைதிப் படுத்துவதென்பதே
சவால்.”
_ Caroline Myss
#6
"சிலநேரங்களில் விழிகளுக்குப் புலப்படாதவற்றை
இதயம் கண்டு கொள்கிறது."
_ H. Jackson Brown
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 181
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***