வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 நவம்பர், 2023

தித்திக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தித்திப்புகளின் தொகுப்புடன் 

நண்பர்கள் அனைவருக்கும் 

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் :) ! 

#1


#2


#3

புதன், 19 ஆகஸ்ட், 2020

181_வது உலக ஒளிப்பட தினம்

ஆகஸ்ட் 19, இன்று 181_வது உலக ஒளிப்படதினம். 
#1
லக ஒளிப்பட தினம் ஒளிப்படக்கலையின் வரலாற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், நிகழ்காலத்தில் கலையைக் கொண்டாடவும், வருங்காலத்திற்கு ஒரு வழித்தடமாக அமையவும் 1839_ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் லூயி டகர் என்பவரின் கண்டுபிடிப்பான டகரியோடைப் எனும் ஒளிப்படக்கலைக்கான வழிமுறையை 9 ஜனவரி 1836 அன்று ஃப்ரெஞ்ச் அகடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டது. சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் அரசாங்கம் அந்தக் கண்டுபிடிப்பை உலகிற்கு இலவசப் பரிசாக வழங்கியது. அந்த நாளே கடந்த 181 வருடங்களாக உலக ஒளிப்பட தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ன்றைய தினத்திற்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படங்கள்:

#2
“உங்களது மிக முக்கியமான ஒளிப்படக் கருவி 
உங்களது கண், இதயம் மற்றும் ஆன்மா!”

புதன், 15 ஜனவரி, 2020

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!

#1
நண்பர்கள் அனைவருக்கும் 
தித்திக்கும் 
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

புதன், 1 ஜனவரி, 2020

2019 கணக்கு வழக்கு + புத்தாண்டு வாழ்த்துகள் - தூறல்: 38

பிறந்து விட்டது 2020. வழக்கம் போலவே சென்ற ஆண்டைச் சற்றேத் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன்:).

முத்துச்சரத்தில் சராசரியாக மாதம் ஆறு பதிவுகள்! 

மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளதோ இல்லையோ ஃப்ளிக்கரில் பதியும் படங்களை இங்கும் பகிரும் எண்ணத்துடன் வழங்கும் புகைப்படத் தொகுப்புகளான, தமிழாக்கத்துடன் கூடிய வாழ்வியல் சிந்தனைகள்  (17 பதிவுகள்); பறவை பார்ப்போம் கட்டுரைகள் (11 பதிவுகள்), இவ்விரண்டு தொகுப்புகளும் உள்ளடங்கிய ‘என் வீட்டுத் தோட்டத்தில்..’ (19 பதிவுகள்);

இயற்கையோடு பயணிப்பதாக அமைந்த ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ தொகுப்புகள் என் மனதுக்கு நிறைவானவை. விதம் விதமான கோணங்களில் பல வகைப் பறவைகளைப் படமாக்கிய பின் அவற்றோடு பதிவதற்காகச் சேகரித்த தகவல்கள் சுவாரஸ்யத்தையும் வியப்பையும் அளித்தன. 

த்திரிகை வெளியீடுகளாக,

கல்கி தீபாவளி மலரில், 

தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக எனது ஒளிப்படம்.. இந்த முறை முழுப்பக்க அளவில் :)



கல்கி தீபம் இதழில் மூன்று கட்டுரைகள் நான் எடுத்த படங்களோடு:


&


&


டெகன் ஹெரால்ட் ஞாயிறு பதிப்புகளில் இருமுறைகள்:

&

சென்ற வருடம் போல அல்லாமல் கவிதைகளைப் பொருத்தவரையில் திருப்தி அளித்த வருடம். ஏனெனில் வருட ஆரம்பத்தில் தமிழாக்கமும் சேர்த்து மாதம் ஒன்றேனும் எழுத வேண்டும் என நினைத்ததை ஓரளவு செயல்படுத்தியிருக்கிறேன்.

கல்கியில்..

தி இந்துவின் காமதேனு வாரயிதழில்..


&


அமெரிக்க மாத இதழான தென்றலில், இரண்டு கவிதைகள்:


மல்லிகை மகளில்,


‘சொல்வனம்’ இருநூறாவது இதழில்..


வளரி இதழில்..

மொழிபெயர்ப்பு இலக்கியங்களாக தமிழாக்கம் செய்த கவிதைகள்:

பதாகை மின்னிதழில்.. சார்ல்ஸ் காஸ்லே கவிதைகள்.. இரண்டு

சொல்வனம் மின்னிதழில்.. சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி கவிதை.. ஒன்று

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.. இரண்டு

மற்றும்
தாகூர் கவிதை.. ஒன்று


சென்ற வருடத்தில் எந்தக் கவிதைகளும் தமிழாக்கம் செய்திருக்கவில்லை. ஆனால் சென்ற ஜனவரி ஒன்றில் நான் எடுத்தப் புத்தாண்டு தீர்மானம் கவிதைகளில் கவனம் செலுத்த வைத்தது:).

கவிதைகளுக்கான அங்கீகாரமாக, FB வாசகசாலை கவிதை இரவில்.. என் கவிதைகள் வாசிக்கப்பட்டன..




நூல் மதிப்புரை:

கீற்று மின்னிதழில்..




சிறுகதைகள்:

ஒன்று கூட எழுதவில்லை :(. ஸ்ரீராம், மன்னிக்கவும். அவருடைய எங்கள் ப்ளாக் வலைப்பூவுக்குத் தருவதாகச் சொன்ன கதையை இன்னும் தரவில்லை. ஆனால் அவருக்கு நான் கீழ் வரும் செய்திக்காக என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். 

2018_ல் ‘சீதை ராமனை மன்னித்தாள்.’  எனும் கருவுக்காக அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதிய ‘அவளும் நோக்கினாள்’ சிறுகதை,  எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியரான முனைவர் இரா பிரேமா அவர்கள் தொகுத்து, இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ‘உடைபடும் மெளனங்கள்’ நூலில் இடம் பெறுகிறது.

எழுத்தாளர் ஆர். சூடாமணியில் ஆரம்பித்து இந்நாளைய எழுத்தாளர்கள் வரை 30 பெண் எழுத்தாளர்கள் எழுதிய பெண் மையக் கதைகளைக் கொண்டது இத்தொகுப்பு, பாரதி புத்தகாலயம் வெளியீடு.

நன்றி எங்கள் ப்ளாக்! நன்றி ஸ்ரீராம்:)!
முனைவர் இரா. பிரேமா அவர்களுக்கும் என் நன்றி. 


யணத் தொடர்களாக..

ஜம்ஜெட்பூர் - பதிவுகள் (4)

பேகல் மற்றும் அனந்தபுரம் கோயில்.. கேரளம் - பதிவுகள் (5)

முக்கூடல் ஆனித்திருவிழா - பதிவுகள் (2)

பசவனகுடி, ஹொஸ்கொட்டே ஏரி மற்றும் திப்பு சுல்தான் அரண்மனை, பெங்களூர் - பதிவுகள் (3)

ளிப்படங்களுக்கான அங்கீகாரமாக..,

கல்கி தீபாவளி மலர், டெகன் ஹெரால்ட் வெளியீடுகளுடன்..,

வல்லமை மின்னிதழில் படக் கவிதைப் போட்டிக்காக ஒன்பது மற்றும் பத்தாவது முறையாக இரு படங்கள் தேர்வாகியிருந்தன சென்ற ஆண்டில்:
&

ஃப்ளிக்கர் பக்கத்தில் பெரிய இடைவெளிகள் இன்றி, தங்கு தடையற்று தினமொரு படம் பதிந்து வந்திருக்கிறேன் :)! இரசித்து இரசித்துப் படமாக்கியவற்றில் அதிகம் பிடித்தவை எவை எனக் கேட்டால் பட்டியல் சற்றே நீண்டு போவதால் ஃப்ளிக்கரின் “எக்ஸ்ப்ளோர்” பக்கத்தில் சென்ற வருடம் தேர்வான 5 படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதில் நடராஜர் சிலையின் படம் ஒரு இலட்சத்திற்கும் மேலான பக்கப் பார்வைகளைப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.



நண்பர்கள் அனைவருக்கும்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
***

செவ்வாய், 10 டிசம்பர், 2019

புதன், 1 மே, 2019

மே தினம் - இவர்கள் இல்லையேல்..

ழைப்பென்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. கனவு மெய்ப்படவும்,  வாழ்வுக்கான ஒரு அர்த்தத்தைத் தேடவும் அதில் மனநிறைவு கொள்ளவும் கொடுக்கிற விலை. அர்ப்பணிப்புடன் கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கும் பாட்டாளி மக்கள் தம் உழைப்பில் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களின் தேவைகள் நிறைவேறவும் உரிய அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துவோம்.


சிறு வியாபாரிகள்

#1
குழந்தைகளைக் குதூகலப்படுத்த
பெங்களூர் லால்பாக் தோட்டத்தில்..

#2
கோடைத் தாகம் தணிக்க
பெங்களூரு உயர்நீதி மன்ற வளாகத்தில்..

செவ்வாய், 15 ஜனவரி, 2019

உழவர் திருநாள் வாழ்த்துகள்!

விளைச்சல் அமோகம்
#1

யற்கைக்கும் சூரியனுக்கும் உழவுக்கும் இன்னபிற உயிர்களுக்கும் நன்றி சொல்லி வழிபடும் பொங்கல் திருநாள் தமிழர்களைப் பொறுத்தவரை சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் ஒரு தேசிய விழாவாகவே இருந்து வருகிறது.

செவ்வாய், 1 ஜனவரி, 2019

தூறல்: 34 - முத்துச்சரம்.. ஃப்ளிக்கர் பக்கம்.. ஆல்பம்.. (2018)

குறிப்பிடும் படியாக எதுவும் செய்துவிடவில்லை என்பது தெரிந்தாலும் செய்தவற்றைத் திரும்பிப் பார்க்கையில் பரவாயில்லை என ஒரு ஆறுதல் ஏற்படுகிறது. அதிலேயே நிறைவு கண்டு விட்டால் அப்படியே நின்று விடக் கூடிய அபாயமும் உள்ளது. இருந்தாலும் “திரும்பிப் பார்த்தல்” என்பது தொடர்ந்து செயலாற்ற ஒரு உந்துதலைத் தரும் அல்லவா?
முத்துச் சரத்தில்.. மாதம் சராசரியாக ஐந்து அல்லது ஆறு பதிவுகள்.

வெள்ளி, 12 ஜனவரி, 2018

கோபுர தரிசனம் - மயிலை கபாலீஸ்வரர்

#1
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில்  அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும் பழைமை வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும். அந்நாளைய கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டிருக்கிறது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் புகழ் பெற்றத் தலமாகத் திகழ்ந்திருக்கிறது.

#2

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை ஒட்டிய பல்லவர் காலத்தில் சைவ சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளி விட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டதாகத் தெரிகிறது. பின்னர் பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

#3

ஞாயிறு, 14 மே, 2017

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஹேமலம்ப சம்வத்சரம்

இன்று தொடங்குகிறது 'ஹேவிளம்பி' (அ)  'ஹேமலம்ப சம்வத்சரம்'.

#1

சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.

‘ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப் பார்க்கும்போது இந்த வருடப் பெயரின் அர்த்தம் விளங்கும்.
எல்லா வகையிலும் 'செழிப்பான' ஆண்டாக இருக்கும்’ என்கிறார்கள்.

#2

அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.

இறையருளால் வெற்றி விநாயகரின் திருவருளால்
 எல்லோருக்கும் இனிதாகட்டும் ‘ஹேவிளம்பி’!

#3
கணேஷ சரணம் சரணம் கணேஷ

புதன், 8 மார்ச், 2017

மாறி வரும் பணி உலகில் மகளிர் - பெண்கள் தின வாழ்த்துகள்!

#1

சர்வதேச மகளிர் தினத்தின் இந்த வருடக் கரு: 

Be Bold for Change
#2
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகின் பல பாகங்களிலும் ஒன்றாக இந்நாளை மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். இதற்கான வித்தாக இருந்தது..

திங்கள், 2 ஜனவரி, 2017

சென்ற வருடமும் சில சிந்தனைகளும்

விடை பெற்ற வருடத்தில்.. 
முத்துச்சரம் + எனது ஃப்ளிக்கர் பக்கம்
ஒரு பார்வை..

பதிவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும் கூட, வீடு மாற்றம், பல சொந்த வேலைகளுக்கு நடுவே இந்த அளவு முடிந்ததே திருப்தியாக உள்ளது.

ஒளிப்படங்கள்:

எழுத்து மிகவும் குறைந்து போன வருடம். ஆனாலும் ஃப்ளிக்கரில் ஒளிப்படப் பதிவுகளை விடாமல் தொடர்ந்ததும் இந்த ஆண்டில் 2500 படங்களை நிறைவு செய்ததும் நிறைவாக உணர வைத்தது.

# இரு தினங்களுக்கு முன்.. ஃப்ளிக்கர் பக்கத்தில் எனது 2500 வது பதிவு
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஆல்பம் 2015 - புத்தாண்டு வாழ்த்துகள்!

திவுலகில் ஏழாம் ஆண்டையும் எழுநூறு++ பதிவுகளையும் கடந்த இவ்வருடத்தில் என்ன செய்தேன் என எப்போதும் போல ஒரு பார்வை. பல மாதங்களில் பதிவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. சொந்த வேலைகள் மற்றும் பல காரணங்களால் எழுத்திலும் தேக்கம் என்றாலும் ஓரளவுக்கு முடிந்ததைச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது, வேகமாகப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்ததில்..!

விதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் பத்திரிகைகளிலும், சொல்வனம், நவீன விருட்சம், வளரி உள்ளிட்ட இதழ்களிலும், முத்துச்சரத்திலுமாகத் தொடருகின்றன.  கட்டுரைகள், நூல் விமர்சனங்களும்

வெள்ளி, 25 டிசம்பர், 2015

கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!

#1 Jingle Bells
ண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துகள் :)! விழாக்காலப் படங்கள் மேலும் சில..

JINGLE BELLS

#3 நட்சத்திரங்கள் மின்னும் கிறுஸ்துமஸ் மரம்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சித்திரைத் திருமகள்

# புலர்ந்தது 'மன்மத' புது வருடம்..


# அனைவருக்கும்..

# நானிலம் செழிக்கப் பாடுகிறாரோ நந்தி தேவனை வேண்டி..

திங்கள், 26 ஜனவரி, 2015

பட்டொளி வீசி.. இந்திய தேசியக்கொடி.. 207 அடி உயரக் கம்பத்தில்..- குடியரசு தின வாழ்த்துகள்!

இந்தியாவின் பெரிய அளவிலான மூவர்ணக் கொடி, கர்நாடகத்தின் அதி உயரக் கம்பத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் காட்சிகள்:

#1

72 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இக்கொடியின் எடை 31 கிலோ. இது மழை, வெயிலினால் பாதிக்கப்படாத வகையில் பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்டதாகும். இருநூற்றேழு அடி உயரம் கொண்ட இக்கம்பம் நாட்டின் பதினோராவது இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுக் கொடிக் கம்பமாகும்.

#2

வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கப்படி

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!



பொங்கப்படி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin