மகளிர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 மார்ச், 2026

அவள் நடக்கிறாள் - பண்புடன் மின்னிதழின் மகளிர் தின சிறப்பிதழில்..

 

வள் எழுகிறாள், அதிகாலையில்
ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்ல
அவளது ஆழ்ந்த வலிமையை நம்பி 
தோள்களில் சாயும் உலகத்தை 
தாங்கிப் பிடிப்பதற்காக.

கண்ணாடி அறைக் கூட்டங்களில்,
கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,
கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்
அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,

வெள்ளி, 8 மார்ச், 2024

விழித்துக் கொள்கிற கனவு - சர்வதேச மகளிர் தினம் 2024


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  பெண்களின் உரிமைகள், பெண் கல்வி, பாலின சமத்துவம்,  அவர்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தைப் பற்றியும்  விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் பயன்பட்டு வருகிறது.  2024_ஆம் ஆண்டின் மகளிர் தினக் கருப்பொருளாக பெண்களில் முதலீடு: முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்.  இந்த ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது: ‘பெண்களிடத்தில் முதலீடு - முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துதல்’! பெண்களின் வளர்ச்சி மற்றும் அவர்களது தலைமைத்துவதிற்கு முக்கியம் அளித்தல் இக்கருப்பொருளின் நோக்கமாக உள்ளது.

#1
“பெண்களாக நாம் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு 
எல்லையே இல்லை.”
__  Michelle Obama

#2
பெண்களின் அணிகலன்களில் மிக அழகியது

ஞாயிறு, 13 மார்ச், 2022

ஆதி சக்தி - மார்ச்.. மகளிர் தின மாதம்..

 #1

பெண்ணாக இருப்பதே ஓர் உயர்ந்த சக்தி. 
அதைக் கொண்டாடுங்கள்!

#2
ஒவ்வொரு வலிமை வாய்ந்த பெண்ணுக்குப் பின்னும் 
அவளுக்கு வேறு வாய்ப்புகளைத் தராத கதையொன்று இருக்கிறது.
_ Nakeia Homer.
#3
சற்று அவகாசம் எடுத்துக் கொண்டாலும் கூட, 
உனது ஒவ்வொரு பொறுப்பையும் 
புன்னகையுடன் கையாளுகிறாய்!

திங்கள், 8 மார்ச், 2021

மகளிர் தினம் 2021



ரு நூற்றாண்டுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது ‘சர்வதேச மகளிர் தினம்’. பெரும்பாலான மக்கள் இதைப் பெண் உரிமைகளை வலியுறுத்தும் தினமாக நினைக்கின்றனர். ஆனால் இதன் வேர், உழைக்கும் மகளிரின் இயக்கமாகவே ஆரம்பமானது. 1911_ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்க்ஸிய சித்தாந்தத்திலும்  கம்யூனிஸ கொள்கையிலும் பற்று கொண்டவரும், வக்கீலும் ஆன ஜெர்மனியைச் சேர்ந்த க்ளாரா ஜெட்கின் இதைத் தொடங்கி வைத்தார். அப்போதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

உலகெங்கிலும் பெண்கள் தம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் பயணத்தின் அடையாளமாக மகளிர் தினம் பார்க்கப்படுகிறது. எவ்வளவோ சாதிக்கப்பட்டிருந்தாலும் இப்பயணம் எவ்வளவு நீண்டது, இன்னும் எவ்வளவு செய்து முடிக்கப்பட வேண்டியுள்ளது என்பதற்கான நினைவூட்டலாகவும் இத்தினம் திகழ்கின்றது.

இந்த வருட மகளிர் தினத்திற்கான கரு, ‘சவால் விடுவோம்’ (#ChooseToChallenge)! சவால் விடப்படும் உலகம், எச்சரிக்கை உணர்வோடு இருப்பதோடு, சவால்களில் இருந்தே மாற்றங்களும் நிகழும் என்பதே இந்தக் கருவின் குறிக்கோளாகும். வரும் வருடம் மகளிர் தம்மைப் பின்னடைய வைப்பது எதுவாக இருப்பினும் அதை நோக்கிச் சவால் விட்டு வென்று காட்ட வேண்டும்.

போராட்டமான வாழ்க்கையை மன உறுதியுடன் எதிர்கொண்டு பயணிக்கும் மகளிரின் படங்கள் பத்தின் தொகுப்பு...

பெண் ஒரு முழுமையான வளையம். அவளுக்குள் இருக்கிறது உருவாக்கவும், பேணி வளர்க்கவும், உருமாற்றவும் முடிகின்ற ஆற்றல். 

#1


#2




#3

ஞாயிறு, 8 மார்ச், 2020

பெண்மொழி - உடைபடும் மெளனங்கள் - மகளிர் தின வாழ்த்துகள்!


த்திராஜ் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் இரா பிரேமா அவர்கள் தொகுத்துள்ள இந்நூலில் கடந்த அரைநூற்றாண்டில் பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட பெண்களின் வலியைப் பேசும் 30 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நான் எழுதிய ‘அவளும் நோக்கினாள்’ கதையும் இடம் பெற்றுள்ளது:

‘பாரதி புத்தகாலயம்’ வெளியீடான இந்நூலின் அணிந்துரையிலிருந்து முனைவர் இரா பிரேமாவின் வரிகள் சிலவற்றையும் மகளிர் தினமான இன்று இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

*ந்தத் தொகுதியில் உள்ள கதைகளை எழுதிய ஒவ்வொரு எழுத்தாளர்களுமே பெண்களின் வாழ்க்கையின் மீதும், சமூக இருத்தலின் மீதும், ஆழ்ந்த சிந்தனையும், கவலையும் பொறுப்புணர்வும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இந்தக் கதைகளை ஒட்டு மொத்தமாக அலசி ஆராய்ந்த பொழுது,

செவ்வாய், 13 மார்ச், 2018

கேட்காத பாடல்.. - வளரி - பெண் கவிஞர்கள் சிறப்பிதழில்..

களிர் தின மாதத்தையொட்டி, வளரி கவிதை சிற்றிதழின் பங்குனி இதழ், பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வெளி வந்துள்ளது:
#

எனது ‘கேட்காத பாடல்’ கவிதையும்....

சனி, 25 மார்ச், 2017

புன்னகையால் புரிய வைப்போம்! - பெண் சக்தி

ங்கள் சக்தி, அறிவு, திறமையை உலகுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்த பெண்களில் சிலருக்கு அங்கீகாரங்களும் மரியாதைகளும் தேடி வர, சிலருக்கு அவை மறுக்கப்படுகின்றன. இன்னும் பலருக்கோ அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்காமலே போகின்றன. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன் வழியில் பல போராட்டங்களைச் சமாளித்து, தோல்விகளில் கற்று, வெற்றிகளில் களித்து நின்றிடாமல் இயல்பாகக் கடந்து, மேலும் வேகத்தோடு முயன்று, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் மார்ச் மாதத்தில் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அப்படியான பல அசாதாரணப் பெண்மணிகளின் படங்களை ஃப்ளிக்கரில் பகிர்ந்து பின்னர் இங்கே தொகுப்பாக்கி வருகிறேன், கடந்த சில வருடங்களாக.  இந்த வருடத் தொகுப்பாக.. கருப்பு வெள்ளைப் படங்கள் பத்து.. பொன்மொழிகளுடன்..

#1
‘நம்மால் இதற்கு மேல் முடியாது என நினைத்து, ஆனாலும் தொடர்ந்து பயணிக்கையில் அதிகரிக்கிறது பலம்’
__Karen Salmansohn
#2
‘வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் நம்பிக்கை இருப்பதை
புன்னகை மூலமாகப் புரிய வையுங்கள் உலகுக்கு’


#3
‘தன்னம்பிக்கை என்பது மற்ற எவரும் உங்களை நம்பாத போது, உங்களை நீங்களே நம்புவது’

புதன், 8 மார்ச், 2017

மாறி வரும் பணி உலகில் மகளிர் - பெண்கள் தின வாழ்த்துகள்!

#1

சர்வதேச மகளிர் தினத்தின் இந்த வருடக் கரு: 

Be Bold for Change
#2
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகின் பல பாகங்களிலும் ஒன்றாக இந்நாளை மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். இதற்கான வித்தாக இருந்தது..

ஞாயிறு, 8 மார்ச், 2015

'பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்..'

8 மார்ச். வருடத்தில் ஓர் நாள் சர்வதேச மகளிர் தினம். கொண்டாட்டங்கள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் இவற்றைத் தாண்டி.., ‘கருவறையில் உயிர் கொடுத்து,  குடும்பத்தைக் கட்டிக் காத்து, திறன்மிகு அறிவுடன் சாதனைகள் பல புரிந்து, நாட்டையும் அகிலத்தையும் தாங்கி நிற்பவள் பெண்’ என்கிற உணர்வைத் தட்டி எழுப்ப இந்நாள் பயன்பட்டால் அதன் நோக்கம் நிறைவேறும். பெண்ணுக்கு எதிரான உடல், மனரீதியான வன்முறைகள் அற்ற சமுதாயமே முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். பெண்ணும் பெண்ணின் உணர்வுகளும் மதிக்கப்பட்டாலே பிரச்சனைகள் தீரும். மாற்றங்கள் மலரும்.

#1
உறுதி கொண்டவள் பெண்


#2
தன் சிந்தனை, செயல், பிரார்த்தனைகளில் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலன் ஒன்றையே நாடி நிற்கிறவள் பெண். 



#3
தன் அடையாளங்களைத் தொலைத்து விடாமல், திறமைகளை வளர்த்துக் கொண்டு மிளிருபவள் பெண்
ஓவியக் கலைஞர்: செல்வி லக்ஷ்மணன்

#4 எண்ணியன முடிப்பவள் பெண்

சனி, 8 மார்ச், 2014

ITHI மகளிர் அமைப்பின் FEMME VUE ஒளிப்படப் போட்டி

ஐடி துறையில் பணியில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் பெங்களூரில் இயங்கி வரும் அமைப்பு ITHI. அவ்வப்போது உழைக்கும் மகளிரின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த கருத்தரங்கங்கள், விவாதங்கள், கூட்டங்களை மகளிருக்காகவும், பொதுமக்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இன்று மகளிர் தினம்:

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் இந்த மார்ச் மாதத்தில் ITHI விழிப்புணர்வுக்காக அறிவித்திருக்கும் ஒளிப்படப் போட்டிதான் FEMME VUE:

வியாழன், 6 மார்ச், 2014

குங்குமம் இதழில்.. - பிடித்த 'பெண் மொழிக் கவிதை'..

 மகளிர் தினத்தையொட்டி ‘பெண்கள் ஸ்பெஷலாக’ வெளிவந்துள்ள (10.03.2014) இந்த வாரக் குங்குமம் வார இதழில்...

பிடித்த பெண்மொழிக் கவிதையாக..

‘சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’:

வியாழன், 7 மார்ச், 2013

இயற்கையின் வண்ணங்கள் - மார்ச் PiT போட்டி - மகளிர் தின வாழ்த்துகள்!


நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வண்ணங்களால் உலகை அலங்கரித்திருக்கிறது இயற்கை. அந்த வண்ணங்களைதான் சட்டமிடப் போகிறீர்கள் இந்த மாதப் போட்டிக்கு.

[பெரிதாகக் காட்டியிருக்கும் படங்கள் ஆறும், முன்னர் முத்துச்சரத்தில் பகிராதவை.   கிளிகள் தவிர்த்து மற்றவை கபினியில் எடுத்தவை. சிறிய அளவுப் படங்கள் மேலும் மாதிரிக்காக.]

 #1 புல்லும் பூமியும் நீரும்


வியாழன், 8 மார்ச், 2012

‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை - வல்லமையில்..


ன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்து கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. மருத்துவம், மதம், அரசியல், அறிவியல், விஞ்ஞானம், கலை என சத்தமில்லாமல் சாதித்து எந்தக் குறிப்புகளிலும் இடம்பெறாமல் மறைந்து போன பெண்கள் ஏராளமானவர்கள். ‘சரித்திரத்தின் அடிக்குறிப்புகளாகவே பெண்கள் இருந்தார்கள்’ என்பதை மறுதலித்துச் சொல்லுகிறார் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் சான்ட்ரா சிஸ்னெரோஸ் “அடிக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளாக இருந்தார்கள்” என்று. சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்துவதில் அக்கறையின்மையும் அலட்சியமும் தொடரவே செய்கிறது. அந்த வகையில் தன் சொந்த முயற்சியில் சரித்திரத்தில் பதினேழு சாதனை அரசிகளை இடம்பெறச் செய்திருக்கிறார் தேனம்மை.

சமகாலத்தில் நம்மிடையே வாழும் உதாரணப் பெண்மணிகளைத் தேடிச்சென்று அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையில் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வந்த தொடரின் தொகுப்பே ‘சாதனை அரசிகள்’. இந்த வாய்ப்பைத் தான் வழங்கிய போது “நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். அதற்கு மேல் முடியுமா தெரியவில்லை” என ஆரம்பத்தில் தயங்கியதாகவும் பின்னர் அடுத்தடுத்து பலரைக் கண்டு பிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டதாகவும் நூலின் முன்னுரையில் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் பத்திரிகையின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள். ஒவ்வொருவரையும் பேட்டி காணத் தேனம்மை எடுத்துக் கொண்ட சிரமங்களும், உழைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது எனில் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் நூலைத் தந்த வகையில் தானும் ஒரு சாதனை அரசியாக உயருகிறார் தேனம்மை.

களிர் தினத்தில் தேனம்மை கொண்டாடிய மகளிரில் சிலரைப் பற்றிய என் சுருக்கமான பகிர்வு உங்களுக்கு நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

  • பதிமூன்று வயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு நெருப்புக்காயத்தினால் சென்ற வருட டிசம்பர் வரையிலும் 42 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் சந்தித்தவர் ரம்யா தேவி. எம் சி ஏ படித்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் ப்ராஜெக்ட் மேனஜராகப் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கும் இவர் தன் தோழி காயத்ரியுடன் சேர்ந்து ஆற்றி வரும் சமூக சேவைகள் எண்ணிலடங்கா. “தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டு என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்” என்கிறார் நூல் ஆசிரியர்.

  • ‘சுயம்புவாக உருவான பெண்’ என ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனா சுந்தரம் அவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். வசதிகளற்ற ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பது உட்பட வீட்டுவேலைகளை செய்தவிட்டு பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்புப் படிக்க குடும்பத்தினருடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இதையொட்டி குடும்பமே இவருக்கு விஷம் வைத்துக் கொல்லவும் பார்த்திருக்கிறது. விலங்கியல் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, பொறுப்பு முதல்வராக ஓய்வு பெற்றவர். ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தன்னைத் தாக்கிய புற்று நோயிலிருந்தும் போராடி மீண்டு வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

  • சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார் தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை. நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரருடன் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கைச் சுற்றி அமர்ந்து படிப்பதாக இருந்திருக்கிறது பள்ளிப் பருவம். கல்லூரியில் சேரக் கட்டணம் செலுத்தும் வரிசையில் நின்றபோது ‘இவங்க எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறாங்க’ என ஒருவர் கேட்ட கேள்வியே தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாகக் கூறியிருக்கிறார். பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை உருவாக்கி பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு உதவுவதுடன் சங்கங்களின் மூலமாக இலவச மருத்துவ முகாம்களையும் நடத்துகிறார்.

  • சென்ற வருடம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஜனாதிபதியிடம் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர் லூர்து ராணி. 31 வருடங்களாக சிகப்பு அணுக்குறைவுக்காக ஸ்டிராய்ட் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனால் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகளை மனபலத்துடன் சமாளித்தபடி மற்ற பலரையும் விடத் தன் பணியைச் சிறப்புற ஆற்றியவர். படிக்க வசதியற்ற மாணவர் பலருக்கு உதவியும் வருகிறார்.

  • மலைகளில் தேன் எடுத்து வாழும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வசந்தி. ஆறாவது குழந்தையாகப் பிறந்து, சொந்தத்தில் தத்து கொடுக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு முடித்திருக்கையில் மணம் ஆக அதன் பிறகு எம் ஏ வரை படித்திருக்கிறார். தம் இன மக்களுக்கு மாலை நேர வகுப்பாசிரியராகவும், கிராம முன்னேற்ற அதிகாரியாகவும் பணியாற்றி இன்று ‘வானவில் பெண்கள் நலச் சங்கம்’ உட்பட பல கூட்டமைப்புகளை உருவாக்கிப் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அவற்றின் மூலமாக பயனடையக் காரணமாக இருந்து வருகிறார்.

சாலையோரங்களில் அநாதரவாக விடப்பட்டவர்களைக் காப்பாற்றி சரியான புகலிடங்களில் சேர்ப்பிக்கும் சாருமதி; மாங்குரோ காடுகளில் இறால் வளர்ப்புக் கேடுகளையும், அவற்றின் கழிவுகளினால் உண்டாகும் கேடுகளையும் கண்டுபிடித்த டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி; இந்திய தொழிற்சங்கத்தின் மாநில உறுப்பினராக செயலாற்றும் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி உட்பட மேலும் பல பெண்களின் சாதனைகளைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

நூலின் முக்கிய அம்சமே இப்பெண்கள் அனைவரையும் ஆசிரியர் நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழித்து, நட்புடன் அளவளாவி, மனம் திறந்து அவர்கள் சொன்ன கதைகளோடு ஒன்றி, வியந்து போற்றி எழுதியிருக்கிறார்.

தடைகளாகவும் எதிர்ப்புகளாகவும் சுற்றிச் சூழும் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டெழுந்து புடம் போட்டப் பொன்னாக மிளிரும் பெண்மையை உயிர்ப்புடன் சித்தரித்திருக்கும் ஜீவாநந்தனின் அட்டைப்பட ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களும், செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு அவர்களும் வாழ்த்துரையும் நட்புரையும் வழங்கியுள்ளார்கள்.

நூலில் இடம் பெற்ற பதினேழு பேரும் இலட்சக் கணக்கான பெண்களின் பிரதிநிதிகளாகவே எனக்குத் தோன்றுகிறார்கள். இன்னல்களையும், இடறுகளையும் கடந்து இவர்போலத் தன்னம்பிக்கையுடன் போராடி, தம்மோடு தம்மைச் சுற்றியிருப்பவரையும் உயர்த்திக் கொண்டே செல்லும் பெண்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்!

மகளிருக்கு மட்டுமின்றி எவருக்கும் தன்னம்பிக்கை தரும் ‘சாதனை அரசிகள்’ சரித்திரத்தின் ஒரு பக்கம். காலம் தேனம்மைக்கு நன்றி சொல்லும்.

**

சாதனை அரசிகள்
பக்கங்கள்:80; விலை:ரூ.50
பதிப்பகம்: முத்துசபா
கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
தொலைபேசி எண்கள் : 9940446650

*****


8 மார்ச் 2012 வல்லமை (மகளிர் வாரம்) இதழில்.., நன்றி வல்லமை!

18 மார்ச் 2012 திண்ணை இணைய இதழிலும்,நன்றி திண்ணை!

செவ்வாய், 8 மார்ச், 2011

பிரதமர், கால் தொட்டு வணங்கிய பெண்மணி

1. “துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும் பெண்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

சொன்னவர் யார்?

முன்னாள் பிரதமர் நாட்டின் சார்பாகப் போற்றி வணங்கி

ஸ்த்ரீ ஷக்தி விருது வழங்கியது யாருக்கு?

2. “
ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்?

கேட்பது யார்?


3. “அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.


ஆதங்கப்படுபவர் யார்?

4. “சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் பெண்களுக்குமிருக்கிறது.

மறுக்க முடியுமா?

வாருங்கள் வலைச்சரத்துக்கு, ஸ்த்ரீ ஷக்தி சிறப்புச்சரம்-செவ்வாய் காண!

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
***



பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:




இன்று மகளிர் தினம்.

அறிவு, திறமை மட்டுமில்லாமல் வாய்ப்பும் வசதியும் இருக்கும் பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து முன்னணியில் இருப்பது பெரிய விஷயமில்லை.

மேற்சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லாமல் துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும் பெண்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!


வாழ்த்துகிறார் ‘ninewest’ நானானி. பிரதம மந்திரி வாஜ்பாய் அவர்களிடம் 'ஸ்த்ரீ ஷக்தி’ விருது வாங்கிய திருமதி சின்னப்பிள்ளை பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள் இங்கே.. ‘பெண்ணே! உலகின் கண்ணே!!
***



பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)....பெண் பலவீனமானவள் என்று சித்திரிக்கப்பட்டதை உடைத்து, பெண் என்பவள் வீரம், தீரம், செறிந்தவள், திடமனம் உடையவள், மனபலத்தால் உடல் பலம் பெற்றவள் என்பதை உணர்த்த வேண்டும்.” கேட்டுக் கொள்கிறார் ‘திருமதிப் பக்கங்கள்’ கோமதி அரசுஉன்னையே நீ உணர்’என.

“நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்கவில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை” இப்படிச் சொல்பவர் கண்டு வருந்துகிறார் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா, ‘பெண்கள் வேலைக்குச் செல்வது கேவலமா?

ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்? பெண்ணே பெண்ணின் சுதந்திரத்தை தடுப்பதிலா பெண் சுதந்திரம்? இல்லை சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது....பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் அதே நிலைதான்...

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண்..” சொன்னபடியே வாழ்ந்தும் காட்டும் Will To Live ரம்யா தேவி முன் வைக்கிறார் வாதங்களை, மகளிர் தினத்துக்காக தன் நண்பரின் வலைப்பூவில், ‘பெண்கள் தினம்’ குறித்து.
எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்.
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி.
என் அம்மா ஜயலக்ஷ்மி.
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' இது பாடல். மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.
” கொண்டாடுகிறார்‘நாச்சியார்’ வல்லிசிம்ஹன்மகளிர் சக்தி’யை.
கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.

இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.
” என்கிறார் அருமையாக, அழுத்தம் திருத்தமாக சித்திரக் கூடம் சந்தனைமுல்லை , X X & X Y in IT.
சக பெண்பதிவர்களின் முன் அருமையான கேள்விகளை முன் வைத்து, சிந்திக்க வைக்கும் பதில்களைப் பெற்று, அவர்களுக்கு ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமி தானே வடிவமைத்து வழங்கிய வியல்*விருதுகள், பெற்றது வெள்ளிப் பதக்கத்தை தமிழ் மணம் விருது 2010 பெண்கள் பிரிவில். அச்சிறப்புக் கட்டுரையில் “இணையத்தில் வியத்தலுக்குரிய செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வரையும் பெருமைப்படுத்தி இப்பொன் விருதினை வழங்குகிறேன். இங்கு பதிலளித்தவர்களுக்கும் எனக்கு பதிவுகளில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் என் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இவ் “ வியல் ’* விருதினை வழங்குகிறேன். நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்துகிறேன்.” என மகிழ்ந்து வாழ்த்துகிறார்.
* கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..

* முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்.
....

* நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..

* ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..


‘சும்மா’ தேனம்மையின் முழக்கமாகிய ‘என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை’யுடன் நிறைவு செய்கிறேன் இன்றைய ஸ்த்ரீ ஷக்தி சிறப்புச் சரத்தை.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin