கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 டிசம்பர், 2024

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை - சாந்தி மாரியப்பனின் "நிரம்பும் வெளியின் ருசி"

  

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை 

வாழ்வின் ஒவ்வொரு காலக் கட்டமும் சொல்லப்படக் காத்திருக்கும் ஓர் அனுபவக் கதை. அப்படியான தனித்துவமான சொந்த அனுபவங்களின் மூலமாக வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் சமூகம் குறித்த தனது பார்வைகளை சிந்தனையைத் தூண்டும் வகையில் முன் வைத்துள்ளார் ஆசிரியர். 'தமிழ் மணம்' திரட்டி சிறப்பாக இயங்கி வந்த வலைப் பதிவர்களின் பொற்காலத்தில், மெல்லிய அங்கதம் இழையோடும் தன் அழகிய எழுத்து நடை மூலமாகப் பரவலாக அறியப்பட்டவர் தோழி சாந்தி மாரியப்பன். அவரது மூன்றாவது நூலாகிய இத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவரது ‘அமைதிச்சாரல்’ வலைப்பூவில் வெளியாகி நல்ல வரவேற்பையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பெற்றவை. ‘நிரம்பும் வெளியின் ருசி’யாக அவை மீண்டும் சுவைக்கக் கிடைத்திருப்பது நற்பேறு. 

சனி, 17 ஆகஸ்ட், 2024

கிண்ணலா பொம்மைக் கலையும்.. நூறு வயது சிலையும்..

 #1

மிகப் பழமையானதும் அதிகம் அறியப்படாததும் ஆன கிண்ணலா பொம்மைக் கலை  15-16_ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடகாவின் கோபல் மாவட்டத்திலுள்ள கிண்ணல் எனும் இடத்தில் தோன்றியிருக்கிறது. இந்தக் காலக் கட்டமானது விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த மன்னர்கள் இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சிற்பிகள், கலைஞர்கள், கைவினைப் பொருள் வல்லுநர்களை தம் தலைநகரமாகிய ஹம்பிக்கு வர வழைத்தபடி இருந்த நேரம்.

வியாழன், 31 டிசம்பர், 2020

அள்ளித் தந்த பூமியும் சொல்லித் தந்த வானமும்.. 2020 - தூறல்: 39

லகத்தையே ஸ்தம்பிக்க வைத்து எல்லோருக்கும் நிறைய பாடங்களைச் சொல்லித் தந்து செல்கிறது 2020. நம் வாழ்நாளிலே இப்படியொரு ஆண்டை நாம் சந்தித்ததேயில்லை. அறிந்தவர், அறியாதவர், உறவுகள், நட்புகள் எனப் பலரும் பொருளாதாரம், உடல் நலம், நெருங்கியவர்களின் உயிரிழப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் துயரங்களிலும் மாட்டிக் கொண்ட காலக் கட்டம். இனி வரும் நாட்களிலேனும் இக்கட்டான இச்சூழல் மாறுமெனும் நம்பிக்கையோடு 2021_ல் அடி எடுத்து வைப்போமாக.

வலைப் படவும் கவனமாக இருக்கவும் அன்றாட வாழ்வில் நம் நேரத்தையும் முக்கியத்துவத்தையும் பிற விஷயங்கள் ஆக்ரமித்துக் கொண்டு விட்ட சூழலில் அதிகமாக வலைப்பதிவுகளில் (blog posts), ஈடுபாடு காட்ட முடியா விட்டாலும்  பத்திரிகை - மின்னிதழ்களில் சில கவிதைகள், நூல் மதிப்புரைகள், ஃப்ளிக்கரில் தொடர்ச்சியாக ஒளிப்படப் பதிவுகள் என எதைச் செய்ய முடிந்ததோ அதைச் செய்த வரையில் திருப்தியே.

வேகமாகப் பின்னோக்கி ஒரு பார்வை:

புதன், 19 ஆகஸ்ட், 2020

181_வது உலக ஒளிப்பட தினம்

ஆகஸ்ட் 19, இன்று 181_வது உலக ஒளிப்படதினம். 
#1
லக ஒளிப்பட தினம் ஒளிப்படக்கலையின் வரலாற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், நிகழ்காலத்தில் கலையைக் கொண்டாடவும், வருங்காலத்திற்கு ஒரு வழித்தடமாக அமையவும் 1839_ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் லூயி டகர் என்பவரின் கண்டுபிடிப்பான டகரியோடைப் எனும் ஒளிப்படக்கலைக்கான வழிமுறையை 9 ஜனவரி 1836 அன்று ஃப்ரெஞ்ச் அகடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டது. சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் அரசாங்கம் அந்தக் கண்டுபிடிப்பை உலகிற்கு இலவசப் பரிசாக வழங்கியது. அந்த நாளே கடந்த 181 வருடங்களாக உலக ஒளிப்பட தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ன்றைய தினத்திற்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படங்கள்:

#2
“உங்களது மிக முக்கியமான ஒளிப்படக் கருவி 
உங்களது கண், இதயம் மற்றும் ஆன்மா!”

வியாழன், 6 பிப்ரவரி, 2020

கோட்டை ஸ்ரீ பிரஸன்ன வெங்கடரமணா கோயில், பெங்களூரு

கோட்டே (கோட்டை) வெங்கடரமணா கோயில்

#1

ழமை வாய்ந்த இந்தப் பதினேழாம் நூற்றாண்டுக் கோயில் பெங்களூரின் சிட்டி மார்க்கெட் அல்லது கே.ஆர் மார்க்கெட் அருகில் கிருஷ்ண ராஜேந்திரா சாலையில், பெங்களூரின் பழைய கோட்டை எல்லைக்குள், திப்பு சுல்தான் கோடைக்கால அரண்மனைக்கு அடுத்து உள்ளது.  

#2

சுவாமி வெங்கடேஸ்வரர்,  ஸ்ரீ வெங்கட ரமணாவாக இங்கே அருள் பாலிக்கிறார்.
கி.பி 1689_ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் ராஜாவாகிய சிக்க (சின்ன) தேவராஜ உடையார் கட்டிய கோயில். 

#3

புதன், 29 ஜனவரி, 2020

பெங்களூர் கோட்டை

#1
பெங்களூர் கோட்டை

'திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை'யிலிருந்து ஐந்து நிமிட நடையில் சென்றடையும் தூரத்தில், பெங்களூர் கிருஷ்ண ராஜேந்திர சாலையில் இருக்கிறது பெங்களூர் கோட்டையின் 'டெல்லி பாகிலு' (நுழைவாயில்). 

#2

பெங்களூரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முதன்மையானது. இதன் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

#3


#4

வியாழன், 7 நவம்பர், 2019

ஹொஸ்கொடே ஏரி, பெங்களூரு

#1
பெங்களூரிலிருந்து 21 கி.மீ தொலைவில், (ஓல்ட் மெட்ராஸ் ரோட்) பழைய சென்னை  சாலையில் இருக்கிறது ஹொஸ்கொடே எனும் தொழில் நகரம். இந்நகரின் நடுவே ஓடுகிற தக்ஷிண பினகினி நதியின் நீர்பிடிப்புப் பரப்பாக இருக்கிறது ஹொஸ்கொடே ஏரி.  

#2

கடும் குளிர் காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் உலகின் வட பகுதிகளிலிருந்து குறிப்பாக சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவை நோக்கி வருகின்றன.  தென்னிந்தியாவில் பல பெரிய ஏரிகளைக் கொண்டிருப்பதால்  பெங்களூரை நாடி வரும் பறவைகள் அதிகம்.   மிகப் பெரிய ஏரியான ஹொஸ்கொடே ஏரியைப் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கிறார்கள். ஏனெனில் பெலந்தூர் மற்றும் வர்த்தூர் ஏரிகளைப் போல் ஆலை மற்றும் சுற்றுச்சூழல் கழிவுகள் கலக்காமல் சுத்தமான நீருடன் விரிந்து பரந்து இருக்கிறது இந்த ஏரி.  பறவைகளின் புலம்பெயர் பருவத்தில் சுமார் 70 வகைப் பறவைகளை இங்கே பார்க்க முடியும் என்கிறார்கள்.

#3

வியாழன், 6 ஜூன், 2019

மாநில மைய நூலகம், தொங்கு பாலம், அசோகா தூண் - பெங்களூர்.. சில Landmarks.. (3)

மாநில மைய நூலகம்:
#1

திவுலகம் நுழைந்த 2008_ஆம் ஆண்டிலிருந்து ஏழெட்டு முறைகளேனும் பதிவர், எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்களுடனான சந்திப்புகள் கப்பன் பூங்காவில் இந்த நூலகத்தைச் சுற்றி இருக்கும் சிறு தோட்டங்கள், மரத்தடிகளில் நடந்திருக்கின்றன :). அப்படிச் சென்ற பல சமயங்களில் எடுத்த படங்களுடன், தகவல்கள்:

மாநில மைய நூலகம் இயங்கி வரும் சேஷாத்ரி ஐயர் நினைவுக் கூடம் அதனது தனித்துவம் வாய்ந்த கட்டுமானத்திற்காக புகழ் பெற்றிருப்பதோடு, பெங்களூரில் பார்க்க வேண்டிய இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது. 

#2
பின் பக்கத்தின் அழகிய தோற்றம்

புதன், 15 மே, 2019

அட்டர கச்சேரி, KGID, GPO - பெங்களூர்.. சில Landmarks.. (2)

கர்நாடக உயர் நீதி மன்றம்:

#1

ர்நாடகாவின் சட்ட சபை இயங்கி வரும் விதான செளதாவுக்கு நேர் எதிரே உள்ளது கர்நாடக உயர் நீதி மன்றம். ஒரு காலத்தில் மைசூர் உயர் நீதி மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்திருக்கிறது. இக் கட்டிடத்திற்கு ‘அட்டர கச்சேரி’ (பதினெட்டு அலுவலகங்கள்) என்ற பெயரும் உண்டு.  கற்களாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டு, முழுவதும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டது. ராவ் பகதூர் ஆர்காட் நாராயணசாமி முதலியார் என்பவரின் மேற்பார்வையில் கிரேக்க மற்றும் ரோம கட்டிடக்கலைப் பாணியைப் பின்பற்றி 1868_ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘பழைய பொது அலுவலகங்கள்’ என அழைக்கப்பட்டது. 

#2


திப்பு சுல்தானின் கோடைக் கால அரண்மனையிலிருந்து இடமின்மையால் மைசூர் அரசாங்கம் 18 பொதுத்துறை அலுவலகங்களை இந்தக் கட்டிடத்திற்கு மாற்றிய போது ‘அட்டர கச்சேரி’ என்ற பெயர் வந்திருக்கிறது.

வெள்ளி, 3 மே, 2019

அனந்தபுரம் ஏரிக் கோயில் - சைவ முதலையும்.. கடு சர்க்கரை யோகமும்.. - கேரளம் (5)

#1

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா கிராமத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கிறது “அனந்தபுரம் ஏரிக் கோவில்”.  கேரள மாநிலத்தில் ஏரிக்குள் அமைந்திருப்பது இந்தக் கோவில் மட்டுமேயாகும். கும்பாலா எனும் இடத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது. நாங்கள் பேகலில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

நண்பகல் ஒரு மணி ஆகிவிட்டபடியால் கோவிலின் மூலஸ்தானம் மூடி விட்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அமைந்த கோவில். ஆலயம் எழும்பி நிற்கும் ஏரியானது சுமார் 302 சதுர அடி அளவிலானது.

#2

#3
 #4

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் குடிகொண்டுள்ள அனந்த பத்மநாபசுவாமியின் மூலம் இதுவே என்கிறார்கள்.  புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இது என நம்பப் படுகிறது. இதை அங்கிருந்த பெரியவர் ஒருவரும் கூறினார்.

வெள்ளி, 19 அக்டோபர், 2018

காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)

விஜயதசமி வாழ்த்துகளுடன், இந்த நாளுக்குப் பொருத்தமாக, கொல்கத்தா தொடரின் இறுதிப் பதிவாக, காளிகாட் கோயில் குறித்த பதிவு 10 படங்களுடன்:

#1
கோவில் கோபுரம்

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட் காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.

#2
தோரணவாயில்
காட் என்பது தீர்த்தக் கட்டம் எனப்படும் நதியின் படித்துறையாகும்.

வியாழன், 11 அக்டோபர், 2018

பிர்லா மந்திர் - கொல்கத்தா (5)

#1

தொழிலதிபர் பிர்லாவின் குடும்பத்தினரால் நாட்டின் பல இடங்களில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களில் ஒன்று கொல்கத்தாவிலும் உள்ளது. பளிங்கினால் கட்டப்பட்ட இக்கோவில் அசுதோஷ் செளத்ரி அவென்யூவில் இருக்கிறது.

#2

இக்கோவிலைக் கட்டி முடிக்க 26 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

ஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2) - கொல்கத்தா (4)

#1

தாஜ்மஹாலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ‘மக்ரனா’ எனும் உயர் வகை சலவைக் கற்களைக் கொண்டே விக்டோரியா நினைவிடமும் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேல் மாடங்களும், இன்னும் பிற கட்டமைப்புகளுக் கூட தாஜ் மஹாலைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

#2

தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிற   விக்டோரியா நினைவிடத்தில் மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரிட்டிஷ் கால ஓவியங்கள் மற்றும் காட்சிப் பொருட்களாக ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் போன்றவை உள்ளன.

விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்பட ஓவியங்கள் பலவும் உள்ளன. அதில் மிகவும் குறிப்படத்தக்க ஓவியமாக போற்றப் படுகிறது,

சனி, 6 அக்டோபர், 2018

அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) - கொல்கத்தா (3)

#1

றுபத்து நான்கு ஏக்கர்கள் பரப்பளவில், பரந்து விரிந்த மலர்த் தோட்டங்களுடன் கூடிய விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial),
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஜவஹர்லால் நேரு சாலை அருகே, ஹூக்ளி நதிக்கரையோரத்தில் உள்ளது.

#2

1819–1901 வரை வாழ்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான இந்த பளிங்கு மாளிகை, 1906-1921 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 'வேல்ஸ் இளவரசர்' ஐந்தாம் ஜார்ஜினால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்நினைவிடம் பிரிட்டிஷ் அரசின் வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. விக்டோரியா மகராணி இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

#3

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பண்பாட்டுத் தலைநகரம் - கொல்கத்தா (2)

நெடுங்காலமாக கொல்கத்தா அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. கொல்கத்தாவில் "சாத்ரா" எனும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. இந்தித் திரைப்படங்களோடு வங்காள மொழித் திரைப்படங்களையும், மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். டாலிகஞ்ச் எனும் இடமே வங்காளத் திரைப்படத் தயாரிப்பின் மையமாகத் திகழ்கிறது. இதனால் வங்காளத் திரைப்படத்துறை "டாலிவூட்" எனவும் அழைக்கப்படுகிறது. டாலீவூட் சத்யஜித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்ஹா, ரித்விக் காட்டக் மற்றும் அபர்ணா சென் போன்ற பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது.  இப்படிப் பல வித காரணங்களுக்காக இந்தியாவின் ‘பண்பாட்டுத் தலைநகரம்’ எனவும் கொல்கத்தா கொண்டாடப் படுகிறது.

ஆயினும் முந்தைய பதிவில் சொன்னது போல மக்கள் மற்றும் நகரம் சார்ந்த பல பிரச்சனைகள் தீர்வு காணப்படாது மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் உள்ளது, கொல்கத்தா. அவற்றில் ஒன்று கை ரிக்ஷா..

#1
மனிதரை மனிதர் இழுக்கும் அவலம்

மிழகத்தில் கலைஞரின் முயற்சியாலும், இந்தியாவின் மற்ற பெரும்பாலான இடங்களிலும் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா இங்கே பயன்பாட்டில் இருப்பதும், துருப்பிடித்தத் தகர டப்பாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்த தோற்றத்தில் ஓடும் மிகப் பழைய மஞ்சள் அம்பாஸிடர் டாக்ஸிகளும் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா எனும் சந்தேகத்தை வரவழைக்கின்றன. சாலைகளின் நடுவே ஓடுகின்ற ட்ராம், மற்றும் சைக்கிள் ரிக்ஷா, ஜட்கா ஆகிய வாகனங்கள் கொல்கத்தாவை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

#2
“அந்தக் காலம்... அது அது அது...”

புதன், 19 செப்டம்பர், 2018

ரவீந்திர சேது - கொல்கத்தா (1)

#1
ரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கொல்கத்தா. மக்கள் தொகையில் நான்காவது இடம். மேற்கு வங்கத்தின் தலைநகரம்.   உலக அளவிலும் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகத் திகழ்கின்றது.

கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், எப்படி வந்தது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், காளிகத்தா (காளி மாதாவின் இடம்) எனும் பொருளில் ஏற்பட்டதென்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.  வங்க மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்ததால் அதுவே அதிகாரபூர்வப் பெயராக இருந்து வந்தது. பிறகு 2001 ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரப்பூர்வப் பெயராக அறிவிப்பானது.

#2

இலங்கைப் பயணம் போல இதுவும் ஒரு குறுகிய காலப் பயணமே.

ஞாயிறு, 15 ஜூலை, 2018

கடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)

#1
கடலோரம் வாங்கிய காற்று..

#2
கால் பந்தாட்டம்.. அலையோரம் களியாட்டம்.. 

#3
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..

புதன், 11 ஜூலை, 2018

பாரம்பரிய முகமூடிகளும் சில குறியீடுகளும் - ஸ்ரீலங்கா (8)

லங்கையில் முகமூடிகளின் பயன்பாடு என்பது மிகப் பழமை வாய்ந்த சரித்திரத்தைக் கொண்டது.

#1

1800 ஆம் ஆண்டுகளில் அவை நாட்டுப்புற நாட்டியங்களில் பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரிக்கவும், பேய் நடனங்களுக்காகவும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

#2

முகமூடி நடனங்களும் அவற்றின் தயாரிப்புப் பாரம்பரியமும் கேரளா மற்றும் மலபாரிலிருந்து இலங்கைக்குப் பரவியதாகக் கருதப்பட்டாலும், தற்போதைய இலங்கைக் கைவினைக் கலைஞர்கள் அதில் அதீத தேர்ச்சி பெற்றிருப்பதோடு நுட்பமான வடிவமைப்பு மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தித் தனித்துவமான அழகியலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

#3

புதன், 13 ஜூன், 2018

கலைமகளில்.. அட்டைப்படமும் கட்டுரையும்.. - இலங்கையின் கலாச்சார உடைகள் - (ஸ்ரீலங்கா 5)

கலைமகள் மாதப் பத்திரிகையின் ஜூன் இதழில்..
 அட்டைப்படமாக நான் எடுத்த படமும்..

மேலும் இரண்டு படங்களுடன்
அட்டைப் படக் கட்டுரையும்..

லங்கையின் அதிகாரப்பூர்வமான பாரம்பரிய உடை என அறிவிக்கப்படாவிட்டாலும் பெண்கள் அணியும் சேலையும், ஆண்கள் அணியும் சாரமும் கலாச்சார முக்கியத்துவம் மிக்கவையாகக் கருதப்படுகின்றன. இலங்கையில் உள்ள தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் ஆகியோரின் கலாச்சார உடைகளாகத் திகழ்பவை ஆண்களுக்கு மேற்சட்டையுடன் சாரமும் (தமிழரின் வேட்டி), பெண்களுக்கு சேலையும். 
# பக்கம் 15

ஞாயிறு, 10 ஜூன், 2018

கொழும்பு வூல்ஃப்வெண்டால் தேவாலயம் (ஸ்ரீலங்கா 4)

ட்டுப்பட்டித்தெரு ஒல்லாந்தது தேவாவயம், ஆட்டுப்பட்டித்தெரு இடச்சு தேவாவயம், ஆட்டுப்பட்டித்தெரு சீர்திருத்த சபை என்றெல்லாமும் அறியப்படுகிற வூல்ஃப்வெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இலங்கையின் கொழும்பு மாநகரில் உள்ளது.
ஆட்டுப்பட்டித்தெரு என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வந்தது. இப்பகுதியில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதால் அப்படியொரு பெயர் உருவானது. ஆனால் தேவாலயம் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. ஹாலந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் குடியேற்ற காலத்தைய கட்டிடங்களில் மிக முக்கியமான ஒன்றாகிய இந்தத் தேவாலயத்தின் பெயர்க் காரணம் சுவாரஸ்யமானது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin