தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 அக்டோபர், 2018

காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)

விஜயதசமி வாழ்த்துகளுடன், இந்த நாளுக்குப் பொருத்தமாக, கொல்கத்தா தொடரின் இறுதிப் பதிவாக, காளிகாட் கோயில் குறித்த பதிவு 10 படங்களுடன்:

#1
கோவில் கோபுரம்

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட் காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.

#2
தோரணவாயில்
காட் என்பது தீர்த்தக் கட்டம் எனப்படும் நதியின் படித்துறையாகும்.

வியாழன், 11 அக்டோபர், 2018

பிர்லா மந்திர் - கொல்கத்தா (5)

#1

தொழிலதிபர் பிர்லாவின் குடும்பத்தினரால் நாட்டின் பல இடங்களில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களில் ஒன்று கொல்கத்தாவிலும் உள்ளது. பளிங்கினால் கட்டப்பட்ட இக்கோவில் அசுதோஷ் செளத்ரி அவென்யூவில் இருக்கிறது.

#2

இக்கோவிலைக் கட்டி முடிக்க 26 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

ஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2) - கொல்கத்தா (4)

#1

தாஜ்மஹாலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ‘மக்ரனா’ எனும் உயர் வகை சலவைக் கற்களைக் கொண்டே விக்டோரியா நினைவிடமும் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேல் மாடங்களும், இன்னும் பிற கட்டமைப்புகளுக் கூட தாஜ் மஹாலைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

#2

தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிற   விக்டோரியா நினைவிடத்தில் மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரிட்டிஷ் கால ஓவியங்கள் மற்றும் காட்சிப் பொருட்களாக ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் போன்றவை உள்ளன.

விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்பட ஓவியங்கள் பலவும் உள்ளன. அதில் மிகவும் குறிப்படத்தக்க ஓவியமாக போற்றப் படுகிறது,

சனி, 6 அக்டோபர், 2018

அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) - கொல்கத்தா (3)

#1

றுபத்து நான்கு ஏக்கர்கள் பரப்பளவில், பரந்து விரிந்த மலர்த் தோட்டங்களுடன் கூடிய விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial),
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஜவஹர்லால் நேரு சாலை அருகே, ஹூக்ளி நதிக்கரையோரத்தில் உள்ளது.

#2

1819–1901 வரை வாழ்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான இந்த பளிங்கு மாளிகை, 1906-1921 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 'வேல்ஸ் இளவரசர்' ஐந்தாம் ஜார்ஜினால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்நினைவிடம் பிரிட்டிஷ் அரசின் வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. விக்டோரியா மகராணி இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

#3

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பண்பாட்டுத் தலைநகரம் - கொல்கத்தா (2)

நெடுங்காலமாக கொல்கத்தா அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. கொல்கத்தாவில் "சாத்ரா" எனும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. இந்தித் திரைப்படங்களோடு வங்காள மொழித் திரைப்படங்களையும், மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். டாலிகஞ்ச் எனும் இடமே வங்காளத் திரைப்படத் தயாரிப்பின் மையமாகத் திகழ்கிறது. இதனால் வங்காளத் திரைப்படத்துறை "டாலிவூட்" எனவும் அழைக்கப்படுகிறது. டாலீவூட் சத்யஜித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்ஹா, ரித்விக் காட்டக் மற்றும் அபர்ணா சென் போன்ற பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது.  இப்படிப் பல வித காரணங்களுக்காக இந்தியாவின் ‘பண்பாட்டுத் தலைநகரம்’ எனவும் கொல்கத்தா கொண்டாடப் படுகிறது.

ஆயினும் முந்தைய பதிவில் சொன்னது போல மக்கள் மற்றும் நகரம் சார்ந்த பல பிரச்சனைகள் தீர்வு காணப்படாது மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் உள்ளது, கொல்கத்தா. அவற்றில் ஒன்று கை ரிக்ஷா..

#1
மனிதரை மனிதர் இழுக்கும் அவலம்

மிழகத்தில் கலைஞரின் முயற்சியாலும், இந்தியாவின் மற்ற பெரும்பாலான இடங்களிலும் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா இங்கே பயன்பாட்டில் இருப்பதும், துருப்பிடித்தத் தகர டப்பாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்த தோற்றத்தில் ஓடும் மிகப் பழைய மஞ்சள் அம்பாஸிடர் டாக்ஸிகளும் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா எனும் சந்தேகத்தை வரவழைக்கின்றன. சாலைகளின் நடுவே ஓடுகின்ற ட்ராம், மற்றும் சைக்கிள் ரிக்ஷா, ஜட்கா ஆகிய வாகனங்கள் கொல்கத்தாவை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

#2
“அந்தக் காலம்... அது அது அது...”

புதன், 19 செப்டம்பர், 2018

ரவீந்திர சேது - கொல்கத்தா (1)

#1
ரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கொல்கத்தா. மக்கள் தொகையில் நான்காவது இடம். மேற்கு வங்கத்தின் தலைநகரம்.   உலக அளவிலும் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகத் திகழ்கின்றது.

கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், எப்படி வந்தது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், காளிகத்தா (காளி மாதாவின் இடம்) எனும் பொருளில் ஏற்பட்டதென்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.  வங்க மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்ததால் அதுவே அதிகாரபூர்வப் பெயராக இருந்து வந்தது. பிறகு 2001 ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரப்பூர்வப் பெயராக அறிவிப்பானது.

#2

இலங்கைப் பயணம் போல இதுவும் ஒரு குறுகிய காலப் பயணமே.

சனி, 11 அக்டோபர், 2014

ஆறடி நிலம் (நிறைவுப் பாகம்) - நன்றி தினகரன் வசந்தம்!

பாகம் 1 ; பாகம் 2 . பாகம் 3.

புயலாக உள்ளே வந்தாள் ராணி ஜீனத் அவரது குழப்பங்களுக்குத் தீர்வு காண.  “முடிவு செய்து விட்டேன்.  நம் யாரையும் கொல்லக் கூடாதென  பிரிட்டிஷ்காரர்களுடன் பேரம் பேசப் போகிறேன். ஒப்புக் கொண்டால் சரணடைந்து விடுகிறோம் என்று சொல்லப் போகிறேன்” என்றாள். ஏதோ சொல்ல முற்பட்ட அகமதைப் பார்த்து “மகராஜாவின் அனுமதியையே நான் கேட்கவில்லை. கொட்டகையைக் கழுவும் முட்டாள்களின் பேச்சையா கேட்கப் போகிறேன்” சீறினாள் ஜீனத். குனிந்து வணங்கிய அகமது அமைதியாக வெளியேறி விட்டான்.

புதன், 8 அக்டோபர், 2014

தினகரன் வசந்தம் தொடர்: ஆறடி நிலம் (பாகம் 3)

பாகம் 1 இங்கே; பாகம் 2 இங்கே.

யோசிக்கிறீர்களா மன்னா? சரி. யோசித்து முடிவு சொல்லுங்கள். அதுவரை இங்கேயே நிற்கிறேன்” என்றான் மிர்ஸா பணிவாக.  தப்பிக்க வழியில்லை.

“முடிவா? எந்த மனிதனாலும் எந்த முடிவும் எடுக்க முடியாது. நானும் அப்படியே. நடக்க வேண்டியவை நடக்க வேண்டிய தருணத்தில் நடந்து விடுகின்றன.” இரண்டு கைகளையும் உயரத் தூக்கிச் சொன்னார். ‘என்ன அற்புதமான பதில்’ எழுந்த சந்தோஷத்தைக் காட்டிக் கொள்ளாமல் “மேலும் என்னைத் தலைவனாக்க விரும்பும் அந்த சிப்பாய்களோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லை” உதட்டைப் பிதுக்கி, தோள்களை உயர்த்திக் கைவிரித்தார் ஜாஃபர்.

சனி, 20 செப்டம்பர், 2014

‘ஆறடி நிலம்’ பாகம் 2 - ‘தினகரன் வசந்தம்’ தொடர்

பாகம் 1 இங்கே.

ராணி ஜீனத் மஹால் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பிரச்சனையைக் கொண்டு வரக் கூடிய எந்த விஷயத்தையும் பேசத் தயாராக இல்லை. பிரிட்டிஷ்காரர்களுக்கும் இது நன்றாகத் தெரிந்திருந்தது. அதனாலேயே யாரையாவது ராணியிடம் கதை சொல்ல அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புரட்சி எனப் புறப்பட்டவர்கள், தெற்கே தம்மை எதிர்த்தவர்கள் எல்லாம் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக விளக்க வைத்தார்கள். புத்திசாலிகள்.

இன்னொரு விஷயமும் ஜாஃபர் மனதை அலைக்கழித்தது. தன்னை ஒரு சுஃபி மகானாக உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார். எத்தனையோ பேரின் துயர்களை, நோய்களை தன் ஆசிர்வாதத்தால், பிரார்த்தனையால் குணப்படுத்த முடிந்திருக்கிறது. இப்படியொரு அசாதாரண சக்தியைத் தனக்கு அள்ளித் தந்த கடவுள் என்ன நினைப்பார்? ஜனங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதை விரும்புவாரா? அதே நேரம், ஒரு மகான் போரில் ஈடுபடலாமா? போரில் இறங்கி பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகலாமா? குழப்பமாக இருந்தது. தன் பிறப்பின் நோக்கம் என்ன? எது சரி? எது தப்பு? தன் மேல் விதிக்கப்பட்டதுதான் என்ன?

ராம் பாபாவைக் கேட்கலாமா?

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ஆறடி நிலம் - 'தினகரன் வசந்தம்' நான்கு வாரத் தொடர் - பாகம் 1

17 ஆகஸ்ட் தொடங்கி நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் தினகரன் வசந்தம் இதழில் வெளியான குறுந்தொடரை, பத்திரிகையில் வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே ஒவ்வொரு பாகமாக பகிருகிறேன்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin