சார்மினார்:
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாதின் முக்கிய இடங்களில் முதலிடமாக, நகரின் பெருமையாகவும் அடையாளச் சின்னமாகவும் விளங்குவது சார்மினார். இந்தியாவின் பிரசித்தி பெற்ற கலை நயம் மிக்கக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று.
#1
[பிரபல லாட் பஜாரை நோக்கி அமைந்த கிழக்குப் புற நுழைவாயில்.]
1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் நோக்கத்துடன் முகம்மது குலி குட்ப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கின்ற சாலையில் அமைந்துள்ளது. சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு என்றும் கூறப்படுகிறது.
சார்மினார் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட முதல் பல மாடிக் கட்டிடம். இதனை மையமாக வைத்தே பழமை வாய்ந்த நகரமான ஹைதராபாத் உருவாக்கப்பட்டது. இது மேல் மாடிப் பகுதியில் சிறிய பள்ளிவாசல் உள்ளது.
[வடக்குப் புற நுழைவாயில்.]
உருது வார்த்தைகளான “சார் - நான்கு”, “மினார் - கோபுரம்” ஆக, “நான்கு கோபுரங்கள்” எனப் பொருள் படும்படி சார்மினார் என அழைக்கப்படுகிறது. நான்கு கோபுரங்களும் (அல்லது தூண்களும்) நான்கு வளைவுகளால் இணைக்கப்பட்டு சதுர வடிவ கட்டிடமாகத் திகழ்கிறது.