வெள்ளி, 14 மார்ச், 2014

தூறல் 16 - AID பெங்களூர் கண்காட்சியும் எனது படங்களும்; மல்லிகை மகள்; சிறு வியாபாரிகள்

AID பெங்களூர், விழிப்புணர்வுக்காக நடத்திய ஒளிப்படப் போட்டி குறித்த அறிவிப்பு விரிவாக இங்கே. கலந்து கொண்ட படங்களில் கண்காட்சிக்குத் தேர்வான படங்கள் 15 குறித்த விவரங்கள் இங்கே. அவற்றில் எனது படங்கள் இரண்டு தேர்வாகியுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இவற்றோடு பெங்களூர் குறித்த மேலும் பல ஒளிப்படங்களுடன், மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில், பெங்களூரின் தொம்லூர் பகுதியிலிருக்கும் தளம் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் வாய்ப்புக் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

கண்காட்சியில் இடம் பெறவிருக்கும் எனது படங்கள்:

புதன், 12 மார்ச், 2014

வீடு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (3)

அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
அரை பர்லாங்கு தள்ளி
இங்கு  நான் நிழலில் அமர்ந்து
கவனித்துக் கொண்டிருக்கிறேன்
ஆணிகளில் சுத்தியல்
தக்தக் தக்தக் என இறங்கும் ஒலியை,
அடுத்ததாய் தக் தக் தக் எனும்
பறவைகளின் ஒலியை,
பின் படுக்கச் செல்கிறேன்
போர்வையை என் கழுத்துவரை
இழுத்து மூடிக் கொள்கிறேன்;
கடந்த ஒரு மாதமாக இந்த வீட்டைக்
கட்டிக் கொண்டிருக்கிறார்கள்,
சீக்கிரமே அதில் ஆட்கள்
குடிவந்து விடுவார்கள், தூங்கி,
சாப்பிட்டு, நேசித்து, சுற்றி வந்து,
ஆனால் ஏதோ ஒன்று சரியில்லை,
பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது,

சனி, 8 மார்ச், 2014

ITHI மகளிர் அமைப்பின் FEMME VUE ஒளிப்படப் போட்டி

ஐடி துறையில் பணியில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் பெங்களூரில் இயங்கி வரும் அமைப்பு ITHI. அவ்வப்போது உழைக்கும் மகளிரின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த கருத்தரங்கங்கள், விவாதங்கள், கூட்டங்களை மகளிருக்காகவும், பொதுமக்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இன்று மகளிர் தினம்:

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் இந்த மார்ச் மாதத்தில் ITHI விழிப்புணர்வுக்காக அறிவித்திருக்கும் ஒளிப்படப் போட்டிதான் FEMME VUE:

வியாழன், 6 மார்ச், 2014

குங்குமம் இதழில்.. - பிடித்த 'பெண் மொழிக் கவிதை'..

 மகளிர் தினத்தையொட்டி ‘பெண்கள் ஸ்பெஷலாக’ வெளிவந்துள்ள (10.03.2014) இந்த வாரக் குங்குமம் வார இதழில்...

பிடித்த பெண்மொழிக் கவிதையாக..

‘சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’:

புதன், 5 மார்ச், 2014

பாதுகாப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (2)

என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது அடுத்த வீடு.
அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்லும்
கணவனும் மனைவியும் வெகு சீக்கிரமாக
சாயும்பொழுதில் வீடு திரும்பி விடுகிறார்கள்.
இளம் மகனும் மகளும் கொண்ட அவர்களது
வீட்டின் விளக்குகள் அனைத்தும்
இரவு ஒன்பது மணிக்குள் அணைக்கப்பட்டு விடும்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

ரெண்டு ரூவாய்க்கு.. - நம்மைச் சுற்றி உலகம்

#1 சிற்றருவியின் சங்கீதம்

#2 எந்தப் பூவிலும் வாசமுண்டு

#3 பூப் போலே உன் புன்னகையில்..

 #4 பூவும் தளிரும்..

சனி, 1 மார்ச், 2014

தூறல் 15 - ரியாத் தமிழ்ச் சங்கம்; பெங்களூரின் ஆன்மா; குங்குமம் தோழி fb; Flickr 1500

நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்!

சென்ற வருடம் ரியாத் தமிழ் சங்கம் நடத்திய . ‘கல்யாண் நினைவு’ உலகளாவிய கவிதைப் போட்டியில் எனது கவிதை ‘நட்சத்திரக் கனவு’ சிறப்புப் பரிசு பெற்றிருந்ததைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன் அதற்கான சான்றிதழ் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது:
#
இதைத் தொடர்ந்து,  இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு ஹம்துன் மூலமாகத் தற்போது பரிசுத் தொகையையும் கேடயத்தையும் அனுப்பி வைத்துள்ளார்கள்.
#
#
ரியாத் தமிழ்ச் சங்கத்தினருக்கும், நடுவர்களுக்கும் என் நன்றி. பரிசு பெற்றக் கவிதை இங்கே.
***

பெங்களூரின் ஆன்மா - வெளி - சமூகம்:

AID நடத்தும் பெங்களூர் உங்கள் பார்வையில்.. போட்டிக்குப் படங்களை அனுப்பும் கடைசித் தேதி 1 மார்ச் ஆக நீட்டிக்கப் பட்டுள்ளது:
படங்களை அனுப்ப விரும்புகிறவர்கள் இன்று இரவு வரைக்கும் இங்கே சமர்ப்பிக்கலாம். பெங்களூர்வாசிகள் இன்றைய நாளைப் பயன்படுத்திக் கொண்டு பொருத்தமாக 5 படங்களைப் புதிதாக எடுத்தும் அனுப்பலாம்.  மார்ச் 8,9 தேதிகளில் நடைபெறவிருந்த ஒளிப்படக் கண்காட்சியும் 15,16 தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் இந்தப் பதிவில்

மாதிரிக்கு.. கலந்து கொள்ளும் எனது ஐந்தாவது படம்:

# சுமையைக் குறைக்க அன்றி தோளின் வலிமைக்காகப் பிரார்த்திக்கும் சாதாரண மனிதர்கள்.. (கமர்ஷியல் தெரு, பெங்களூருவில்..)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin