பழமையும் புதுமையும் கலந்த பெருநகரம் ஹைதராபாத். ஒருபக்கம் புராதான முக்கியத்துவம் கொண்ட இடங்கள், மாளிகைகள், கலை நயம் மிக்கக் கட்டிடங்கள். இன்னொரு பக்கம் அசுர வளர்ச்சியில் ஐடி துறை, அதன் மிகப் பிரமாண்டமான அலுவலகக் கட்டிடங்கள். இந்நகரத்திற்கு பிப்ரவரி மாதத்தில் ஒரு வேலை நிமித்தமாக இரண்டரை நாட்கள் சென்றிருந்தோம். கிடைத்த நேரத்தில் சுற்றிப் பார்த்த இடங்கள் தொடராக வரும். சில பிரசித்தி பெற்ற முக்கிய இடங்கள் இந்தப் பதிவில்..!
ஹைதராபாத் தலைமைச் செயலகம் - சட்டமன்றக் கட்டிடம்:
#1
1913_ஆம் ஆண்டு பாரசீக மற்றும் ராஜஸ்தானி பாணியில் கட்டப்பட்டக் கட்டிடம். முழுவதும் வெள்ளை நிறத்தில், குவிமாடங்கள் மற்றும் அழகிய வளைவுகளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆறாவது நிஜாமான, மிர் மஹபூப் அலிகானின் நாற்பதாவது பிறந்தநாளை நினைவு கூர்ந்திடும் வகையில் எழுப்பப்பட்ட கட்டிடம். தற்போது தெலுங்கானா சட்டமன்றம் கூடும் இடமாக உள்ளது.
#2
ஹூஸைன் சாகர் ஏரியைச் சுற்றி அமைந்த லும்பினி தோட்டத்திற்கு எதிரில் உள்ள பொதுத் தோட்டங்களுக்கு மத்தியில் உள்ளது.
#3
பிர்லா மந்திர் குன்றின் மேலிருந்து பார்க்கும் போது தோட்டங்கள் நீருற்றுகளுக்கு மத்தியில் இரவு மின் விளக்குகளில் ஒளியில் கம்பீரமாகக் காட்சி அளித்தது.
ஹுஸைன் சாகர் ஏரி:
#4
சட்டமன்றக் கட்டிடத்திற்கு எதிரில் இருக்கும் ஹுஸைன் சாகர் ஏரியும், அதன் நடுவே எழுந்து நிற்கும் 58 அடி உயர, ஒரே பாறையில் செதுக்கப்பட்ட (monolithic) புத்தர் சிலையும் பிரபலமானவை. புத்தர் சிலையை அருகே பார்க்க வேண்டுமெனில் வேறுபக்கமாகச் செல்ல வேண்டும். தியாகிகள் நினைவிடத்தை அடுத்து இருக்கும் நுழைவாயில் வழியாக சென்ற போது கிடைத்த காட்சி. ஏரிக்கு நடுவில் புத்தர் வெகுதொலைவில் புள்ளியாக ஒளிருகிறார்.
தெலுங்கானா தியாகிகள் நினைவிடம் [தெலுங்கானா அமர ஜோதி] :
#6
தெலுங்கானா மாநிலத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவாகக் கட்டப்பட்ட 136 அடி உயரத்திலான, ஆறு மாடிகளைக் கொண்ட, விளக்கு வடிவிலான நினைவுச் சின்னம் (Telangana Martyrs Memorial). “தெலுங்கானா அமர ஜோதி” என்றும் அறியப்படுகிறது. ஹுசைன் சாகர் ஏரிக்கரையில் உள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டது. பளிங்காக ஒளிரும் வெள்ளை நிற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தூய்மையையும் மஞ்சள் நிற தீபம் தியாகத்தையும் குறிக்கிறது.
#7
1969_ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல மாணவர்கள், போராளிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் உட்பட 369 போராளிகள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக 1972ல் ஆரம்பித்து 1975ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நினைவுச் சின்னம், பின்னர் 2014-ல் தெலுங்கானா மாநிலம் உருவானதும், புதிதாக வடிவமைக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது. தற்போது இது மாநிலத்தின் மக்களுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக மாறியுள்ளது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பகுதி கண்ணாடியைப் போல் கட்டிடங்களையும் சாலைகளையும் பிரதிபலிப்பது நேரில் பார்க்கையில் மிக அழகாகவும் பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது.
#8
இந்த நினைவிட வளாகத்தினுள் அவரது வாழ்க்கை, சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் அருங்காட்சியகம், நூலகம், மாநாடுகள் நடப்பதற்கான மண்டபம் ஆகியன உள்ளன. மேலும் இந்திய அரசியலமைப்பின் முதன்மை வடிவமைப்பாளர் என்ற வகையில் அவரை நினைவு கூர்ந்திட இந்திய பாராளுமன்றத்தை நகல் எடுத்தாற் போலக் கட்டப்பட்ட கட்டிடமும் உள்ளது. இவை அனைத்தும் 11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக புகழ் பெற்றுத் திகழ்கிறது.
ஹைதை விமான நிலயம்:
#10
நேரம் கிடைக்கும் போது சார்மினார், சௌமஹல்லா மாளிகை, கோல்கொண்டா கோட்டை மற்றும் பிர்லா மந்திர் ஆகிய பிரசித்தி பெற்ற இடங்களைப் பற்றித் தனிப் பதிவுகளாக பகிர்ந்திடுகிறேன். திட்டமிட்டபடி, சமீபத்திய மைசூர் பயணப் பதிவுகளை இன்னும் பகிர்ந்து முடிக்காத நிலையில், ஹைதராபாத் பயணத்தின் முன்னோட்டமாக இருக்கட்டும் என இந்தப் பதிவு..!
***
[இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்].
தலைமைச்செயகாகக் கட்டிடம் மிக அழகாக இருக்கிறது. அழகிய ஒரு மானுமென்ட் போல இருக்கிறது. ஹுசைன் சாகர் ஏரி என்றதுமே புத்தர்தான் நினைவுக்கு வருகிறார். சந்திரபாபு நாயுடு நிர்மாணித்தது இல்லையா? முழு உருவம் அடுத்த பதிவிலா?
பதிலளிநீக்குபாபா சாஹேப் சிலை மிக கம்பீரமாக இருக்கிறது. பொருத்தமான மரியாதை.
புத்தரின் முழு உருவம் வராது :). அதற்கு வேறொரு பக்கமாக செல்ல வேண்டும். நேரம் இருக்கவில்லை.
நீக்குலும்பினி பூங்கா 1994_ல் ஹைதராபாத் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தினால் உருவாக்கப்பட்டது. சந்திரபாபு நாயுடு 1995-ல் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் ஏரி, பூங்கா உட்பட சுற்றியுள்ள பல பகுதிகளை விரிவாக்கம் செய்து மேம்படுத்தியிருக்கிறார். பூங்காவை மட்டுமா, ஹைதராபாத்தின் ஐடி துறை, விமான நிலையம் என நகரின் வளர்ச்சியில் அவரது பங்கு மிக அதிகம்.
நன்றி ஸ்ரீராம்.
சட்டமன்றம் செயலகம் ரொம்ப அழகாக இருக்கிறது அதுவும் இரவில் மினுமினுக்கிறது.
பதிலளிநீக்குஹுசைன் சாகர் ஏரி பெரிய ஏரி ஆம் இரண்டு நகரங்களுக்கும் இடையில். புத்தர் சிலை தூரத்தில் தெரிகிறார். அழகா இருக்கும் ஏரி. பல வருடங்களுக்கு முன் பார்த்தது.
அம்பேத்கார் - வண்டியிலிருந்தே எடுத்த படம் சூப்பரா வ ந்திருக்கு.
படங்களும் விவரங்களும் அருமை
கீதா
கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்குமிக அருமையான படங்கள்.
பதிலளிநீக்குதெலுங்கான அமரஜோதி மிக அருமை.
அம்பேத்கார் சிலை கம்பீரமாக இருக்கிறது.
ஏரியும் , ஆலமரமும், தூரத்தில் தெரியும் புத்தர் சிலையும் அழகு.
விமான நிலையமும் பார்க்க அழகு.
அமரஜோதியின் கீழ்பாகத்திலிருந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பகுதி கண்ணாடி போல முன்னிருக்கும் கட்டிடங்களை சாலைகளை பிரதிபலித்தது கண் கொள்ளாக் காட்சி. அது பற்றிய குறிப்பையும் பதிவில் தற்போது சேர்த்து விட்டேன். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
பதிலளிநீக்கு