செவ்வாய், 14 அக்டோபர், 2014

சனி, 11 அக்டோபர், 2014

ஆறடி நிலம் (நிறைவுப் பாகம்) - நன்றி தினகரன் வசந்தம்!

பாகம் 1 ; பாகம் 2 . பாகம் 3.

புயலாக உள்ளே வந்தாள் ராணி ஜீனத் அவரது குழப்பங்களுக்குத் தீர்வு காண.  “முடிவு செய்து விட்டேன்.  நம் யாரையும் கொல்லக் கூடாதென  பிரிட்டிஷ்காரர்களுடன் பேரம் பேசப் போகிறேன். ஒப்புக் கொண்டால் சரணடைந்து விடுகிறோம் என்று சொல்லப் போகிறேன்” என்றாள். ஏதோ சொல்ல முற்பட்ட அகமதைப் பார்த்து “மகராஜாவின் அனுமதியையே நான் கேட்கவில்லை. கொட்டகையைக் கழுவும் முட்டாள்களின் பேச்சையா கேட்கப் போகிறேன்” சீறினாள் ஜீனத். குனிந்து வணங்கிய அகமது அமைதியாக வெளியேறி விட்டான்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசுகள் 2014 - திருப்பூரில் விழா

'இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்புக்கு மு.ஜீவானந்தம் இலக்கியப்பரிசு அறிவிப்பாகியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நிரல், பங்கேற்பாளர்கள், நடுவர்கள், பரிசு பெறும் படைப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய விழா அழைப்பிதழையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

# திருப்பூரில்..


# நிகழ்ச்சி நிரல்

கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை ஆகிய பிரிவுகளில் பரிசு பெற்ற படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள்..

# கவிதை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு

வியாழன், 9 அக்டோபர், 2014

உந்தன் சிரிப்பு - பாப்லோ நெருடா (4)

ன்னிடமிருந்து ரொட்டியை எடுத்துக் கொள்,
உனக்கு விருப்பமானால்
காற்றையும் கூட எடுத்துக் கொள், ஆனால்
உந்தன் சிரிப்பை மட்டும் என்னிடமிருந்து பிரிக்காதே.

புதன், 8 அக்டோபர், 2014

தினகரன் வசந்தம் தொடர்: ஆறடி நிலம் (பாகம் 3)

பாகம் 1 இங்கே; பாகம் 2 இங்கே.

யோசிக்கிறீர்களா மன்னா? சரி. யோசித்து முடிவு சொல்லுங்கள். அதுவரை இங்கேயே நிற்கிறேன்” என்றான் மிர்ஸா பணிவாக.  தப்பிக்க வழியில்லை.

“முடிவா? எந்த மனிதனாலும் எந்த முடிவும் எடுக்க முடியாது. நானும் அப்படியே. நடக்க வேண்டியவை நடக்க வேண்டிய தருணத்தில் நடந்து விடுகின்றன.” இரண்டு கைகளையும் உயரத் தூக்கிச் சொன்னார். ‘என்ன அற்புதமான பதில்’ எழுந்த சந்தோஷத்தைக் காட்டிக் கொள்ளாமல் “மேலும் என்னைத் தலைவனாக்க விரும்பும் அந்த சிப்பாய்களோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லை” உதட்டைப் பிதுக்கி, தோள்களை உயர்த்திக் கைவிரித்தார் ஜாஃபர்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இலக்கியப் போட்டி 2014_ல் பரிசு

“இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்கு மற்றுமொரு விருது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2014-ல்!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும்  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும், தேர்வுக் குழுவினருக்கும், வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்!

பல பிரிவுகளில் நடைபெற்றப் போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும், விழா நிகழ்வு குறித்தத் தகவல்களும்...

வியாழன், 25 செப்டம்பர், 2014

தூறல் 20: முத்துக்கள் 600; தமிழ் ஃபெமினாவில் ‘அடை மழை’; மதுரை மாநாடு

#1

 முத்துச்சரத்தில் 600 முத்துக்கள் கோத்தாகி விட்டது!

இப்போதெல்லாம் எந்தத் திட்டமிடலும் இல்லை. கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகவும் கோக்கின்ற பயணம் இங்கே சற்று தேக்கம் கண்டாலும் ஃப்ளிக்கர் தளத்தில் தினம் ஒன்று என்கிற கணக்கில் தடையில்லாமல் தொடருகிறது. ஆனால் வாரம் இரண்டு என்ற அளவில் கூட பதிவுகள் இட இயலவில்லை, இந்த வருடத்தின் சில மாதங்களில்.

வாசித்த நூல்கள், பார்த்த இடங்கள், கேட்ட விஷயங்கள் எனப் பகிர நினைத்துத் தள்ளிப் போட்டிருப்பவை நிறையவே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin