வெள்ளி, 17 ஜனவரி, 2025

வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள் - ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா, மைசூரு

 #1  ராஜ கம்பீரம்

[சிங்கம்]

கானகத்துக்குள் சென்று சந்தித்திராத, சித்திரங்களிலும் படங்களிலும் மட்டுமே அறிமுகமாகி இருந்த, உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த பல விலங்குகளை மக்கள் நேருக்கு நேர் காணும் தனித்துவமான வாய்ப்பை வழங்குபவை உயிரியல் பூங்காக்கள். 

#2

அவற்றுள் 157 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, 168_க்கும் மேற்பட்ட இனங்களைப் பராமரித்து வருகிற மைசூர் உயிரியல் பூங்கா, இந்தியாவின் மிகப் பழமையான, ஏன் உலகிலேயே மிகப் பழமையான உயிரியல் பூங்காக்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. 

#3 வனத்தின் கழுத்து

[ஒட்டகச் சிவிங்கி]

மைசூருக்குப் பலமுறைகள் சென்றிருக்கிறேன்.  2012_ஆம் ஆண்டு இந்த மிருகக் காட்சி சாலையில் எடுத்தப் படங்களைப் பல பதிவுகளாக “தெரிஞ்சுக்கலாம் வாங்க” பகுப்பின் கீழ் ஒவ்வொரு விலங்கை பற்றியும் விரிவான தகவல்களுடன் முத்துச்சரத்தில் கோத்திருக்கிறேன். இந்தப் பதிவில் கடந்த நவம்பரில் சென்ற போது எடுத்த படங்கள் அணிவகுக்கின்றன. 

#3 உள்ளத்தில் சாது, உருவத்தில் பூதம்

[கொரில்லா]

சுதந்திரமாக வனத்தில் உலவ வேண்டிய விலங்குகளைப் பிடித்து வந்து காட்சிப் படுத்துவது சரியற்றது எனும் தார்மீக உண்மை ஒருபக்கம் இருப்பினும் அதை மனதில் இருத்தி தற்கால உயிரியல் பூங்காக்கள் விலங்குகளின் வாழ்விடத்தை ஒத்த பரந்த அடைப்புகளை உருவாக்கி அவற்றை உலவ விடுவதிலும், அக்கறையுடன் கவனிப்பதிலும் அதீத கவனம் செலுத்துகின்றன.

#4 ராஜ நடை

[சிறுத்தைப்புலி]

#5 கொம்பன்

[காண்டா மிருகம்]

#6 நேர்த்தியான புள்ளிகள் 

[சிறுத்தை ஜோடி]

#7 சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது..

[சிம்பன்ஸி]

#8 பொடி நடை

[லங்கூர்]

பருவநிலை மாற்றங்களாலும், மனிதர்களால் காடுகளும் மரங்களும் அழிக்கப்பட்டு வருவதாலும் பல விலங்கினங்கள் முற்றிலுமாக அழிந்து விடுமோ எனும் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் அவற்றுக்குப் புகலிடமாக, அந்த இனங்களைப் பாதுகாப்பவையாக உள்ளன இப்பூங்காக்கள். குறிப்பாகப் புலிகள், வெள்ளைப் புலிகள்..

#9 ஓய்வில் பெரிய பூனை

[புலி]

#10 தந்த வண்ண வேட்டையன்

[வெண் புலி]

இந்தியாவிலும் பல வனங்களில் சஃபாரி வசதி உள்ளன என்றாலும் சாமான்ய மனிதர்களுக்கு வனவிலங்குகளைக் கண்டு வியந்து போற்றும் வாய்ப்பு இத்தகைய பூங்காக்களினால் மட்டுமே கிடைக்கின்றது. வியக்க வைக்கும் விலங்கு வகைகளைக் காண்கின்ற வருங்கால சந்ததியருக்கு இயற்கையை மதித்து வனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்கிற உந்துதலையும் விழிப்புணர்வையும் கூட இவை தரக் கூடும்.

#11 இயற்கையின் நீண்ட நெட்டிமுறித்தல்

[உயிரியல் பூங்கா பதிவுகள் மேலும் சில பாகங்கள் வரும்.]

14 கருத்துகள்:

  1. தாய்லாந்தில் சஃபாரி போய் வன விலங்குகளை பார்த்து வந்தேன், பதிவு ஆக்க வேண்டும்.
    நீங்கள் வனவிலங்குகளை மிக அழகாய் படம் எடுத்து இருக்கிறீர்கள்.
    அனைத்தும் அழகு. ஒவ்வொரு படமும் பேசுவது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. சஃபாரியில் இயற்கையான சூழலில் விலங்குகளைக் காண்பது சிறந்த அனுபவம். தங்கள் படங்களைக் காணக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. சுவாரஸ்யமான பதிவு.

    படங்களை ரசித்தேன்.

    சிரிக்கும் நண்பர்.. அந்தப் புன்னகை.. 'உன்னையும் உன் உள்ளத்தையும் நான் அறிவேன்' என்று சொல்லும் ஒரு தந்தைமை சிரிப்பு...

    பதிலளிநீக்கு
  3. முன்பு போல பத்தடிக்கு பத்தடி கூண்டில் அடைத்து அவற்றை சித்திரவதை செய்யாமல் பரந்த நிலப்பரப்பில் உலவ விட்டிருப்பது நிம்மதி.  அவைகளும் சுதந்திரமாக உலவும். 

    நான் இதுபோன்ற எந்த உயிரியல் பூங்காவும் பார்த்ததில்லை - வண்டலூர் ஜூ உட்பட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு உயிரியல் பூங்காவும் பார்த்ததில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆர்வம் இருந்தால் வண்டலூர் சென்று வரலாமே?

      நீக்கு
  4. நான் பண்டொரு காலத்தில் என்று சொல்ல வேண்டும்!!!!மைசூர் உயிரியல் பூங்கா பார்த்திருக்கிறேன். இப்ப சமீபத்தில் போகவில்லை. ஆசை உண்டு. மைசூர் சென்றால் அங்கும் அருகிலும் நிறைய இடங்கள் இருக்கின்றன. குடகு, அப்பே அருவி, புத்தர் monastery, நிசர்கதாமா தீவு காவிரி நதியில் அழகான இயற்கை எழிலுடன்...என்று லிஸ்டில் இருக்கு ஆனால்...வாய்ப்பு இப்ப கிடைப்பது சிரமம்.

    ரொம்ப அழகா இருக்கு படங்கள். மைசூர் உயிரியல் பூங்கா எப்போதுமே விலங்குகள் இயற்கையாகச் சுற்றி வரும்படிதான் அமைச்சிருக்காங்க. தில்லியிலும் புலி, சிங்கத்த்ற்கு அப்படித்தான் அமைச்சிருக்காங்க. இப்ப வண்டலூர்லயும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடங்களுக்குப் பல வருடங்கள் முன்னர் சென்றிருக்கிறேன். அனைத்தும் பார்க்க வேண்டிய இடங்கள். வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு சென்று வாருங்கள் கீதா.

      நீக்கு
  5. மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் பகுதிதான் இந்த உயிரியல் பூங்கா இருக்கும் இடம் அதனால் இப்படிக் காடுகளும் பரந்த நிலப்பரப்பும் வேலிகளை போட்டு வைச்சிருக்காங்க. அருகில்தானே Nagarahole நாகர்ஹோல் சரணாலயம் இருக்கு. ஒரு வேளை வேலி தாண்டினாலும் காடுதான்! இங்க பன்னேருகட்டாவிலிருந்த் வேலி தாண்டினா பெங்களூர் நகருக்குள் உலா வருமே புலி, சிறுத்தை!!!

    சிரிக்கும் சிம்பன்ஸி!!! கொம்பன், தலைப்புகள் எல்லாம் ரசித்தேன் உங்கக் கருத்துகளையும் ....ரசித்துப் பார்த்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், காடுகளை ஒட்டியே பெரும்பாலும் அமைகின்றன இத்தகைய பூங்காக்கள்!

      நீக்கு
  6. நீங்க எடுத்த விதம் அட்டகாசம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. படங்கள் வழமைபோல வெகு நேர்த்தி ..

    10 வருடங்களுக்கு முன் சென்றது இங்கு உள்ள ஒட்டகச்சிவிங்கியை எப்பொழுதும் வியப்புடன் பார்ப்பேன். ஏனென்றால் நான் 8வது படிக்கும் பொழுது இதை சிலை என கண்டு ஏமாந்த தருணங்கள் நினைவில் வரும்.

    வெள்ளை புலியும், சிறுத்தையும் மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அனு.

      அசையாமல் நின்றிருந்த சிவிங்கிகள் சில சிலை போன்றுதான் தோற்றமளித்தன :).

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin