வெள்ளி, 7 நவம்பர், 2014

‘நான்கு பெண்கள்’ தளத்தில் நேர்காணல் - இந்த மாத நூலாக ‘இலைகள் பழுக்காத உலகம்’


நான்கு பெண்கள் தளத்தில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பை இம்மாத நூலாக அறிமுகம் செய்திருப்பதோடு நேர்காணலுக்காகப் பல கேள்விகளையும் முன் வைத்திருந்தார் மு.வி. நந்தினி:

* சமீபத்தில் தினகரன் வசந்தம் இதழில் தொடர்கதை எழுதிய அனுபவம் பற்றி... குறிப்பாக வாசகர்களிடம் எவ்வகையான எதிர்வினைகளைப் பெற்றீர்கள்?

செவ்வாய், 4 நவம்பர், 2014

சிறுகதை: சின்னஞ்சிறு கிளியே.. - ‘சொல்வனம்’ பெண்கள் சிறப்பிதழில்..


ன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கணுமோ, தெரியலையே’ சலிப்பாக இருந்தது பூமாவுக்கு.

மணி அடித்து எல்லோரும் உள்ளே போய் விட்டிருந்தார்கள். “இந்த பெஞ்சுலயே இரு. சன்னல் பக்கம் அப்பப்ப வந்து பாத்துட்டிருப்பேன். மேனேஜர் வந்ததுமா சூப்பர்வைஸரை சொல்லச் சொல்லிருக்கேன். நானே கூட்டிட்டுப் போறேன். தெரிஞ்சுதா” தேவகியக்கா கண்டிப்பான குரலில் சொல்லி விட்டுப் போய் ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டது. ஒரே இடத்தில் ஒன்றுமே செய்யாமல் எவ்வளவு நேரம்தான் இருக்கிறதாம்?

வலது உள்ளங்கையை இடது கையால் மெல்லத் தடவிக் கொடுத்தாள். ‘காயம் ஆறிட்டுதான். ஆனாலும் இப்பத்தானே கட்டுப் பிரிச்சிருக்கு. கூட ரெண்டு நாளு ரெஸ்ட் எடுக்க விட்டிருக்கலாம். அம்மாக்குதான் எம்மேலேத் துளிக்கூடப் பாசம் கெடயாதே. தம்பிங்கள மாதிரி நல்லாப் படிச்சிருந்தா என்னயும் தாங்கியிருப்பா. எவ்ளோ முட்டுனாலும் மண்டையில ஏறலன்னு அடம் புடிச்சுப் படிப்ப விட்டது தப்போ?’ அடிக்கடி தோன்றுகிறது இப்போதெல்லாம்.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

இந்த மனுஷங்களே இப்படித்தான்.. - பெங்களூர் பெரிய ஆலமரம்

3 ஏக்கர் பரப்பில் விரிந்து நிற்கும் 400 வயதான இந்த ஆலமரம் கர்நாடாகத்தில் ரமோஹள்ளி எனுமிடத்தில் உள்ளது.

#1

250 மீட்டர் சுற்றளவிலான இதன் அடிமரம் வியாதி வந்து அரிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.  ஆனால் ஆயிரத்துக்கும் மேலான விழுதுகள் தாங்கி நிற்கின்றன மரத்தை. போகவும்கிளைகளின் முனைகள் நிலத்தில் வீழ்ந்து விடாதபடி தாங்குக் கட்டைகளை வைத்திருப்பதைக் கீழ்வரும் படத்தில் காணலாம்.

#2

ஒருநாள் சுற்றுலாவுக்கு பெங்களூர் மக்கள் நாடும் இந்த ஆலமரத்தைத் தேடி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

#3

இந்த இடத்தை அடைய பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 28 கி.மீ பயணப்பட்டு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

சிறந்த ஆசிரியர்கள்

 1. தீவிரமான நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது.

2. இணைந்து செயலாற்றினால் அதிகம் சாதிக்கலாம்.

3. ஒரு விஷயத்தை நாம் பார்க்கிற விதத்தை மாற்றிக் கொண்டால், பார்க்கின்ற விஷயங்களும் மாறத் தொடங்கும்.


4. ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் கூறித் திரியாமல்,

செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஒளிப்படங்கள் இரண்டு.. 2014 கல்கி தீபாவளி மலரில்..

300 பக்கங்களுடன், கோகுலம் மற்றும் மங்கையர் மலர் பக்கங்களையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கி தீபாவளி மலரில்.. எனது ஒளிப் படங்கள் இரண்டு..

நன்றி கல்கி!

பக்கம் #194_ல்..

திங்கள், 20 அக்டோபர், 2014

செடிகொடியில் காய்கனிகள்.. - PiT Oct 2014

#1
ஒரு கல்லில் எத்தன மாங்கா..?
இந்த மாத PiT போட்டிக்குப் படங்கள் அனுப்ப இன்றே கடைசித் தினம் ஆகையால், நினைவூட்டிடும் விதமாக இங்கும் ஒரு பதிவு. 

நீங்கள் கேமராவுடன் தோட்டத்துக்கோ, தோப்புக்கோ, சோலைக்கோச் செல்ல வேண்டும். இயற்கை அன்னையின் மடியில் உறங்குபவற்றைத் தொந்திரவு செய்யாமல் படமாக்க வேண்டும். இலை தளைகளுக்குள் ஒளிந்து கொண்டு சிரிப்பவற்றைக் குனிந்து நிமிர்ந்து கண்டு பிடிக்க வேண்டும். சூரியக் குளியலில் ஆனந்தித்திருப்பவற்றை கண்டு ரசித்துக்  காட்சியாக்க வேண்டும்.

தலைப்பு: கொய்யாத காய்கனிகள்” என அறிவிப்புப் பதிவில் சொல்லியிருந்ததென்னவோ நிஜம்தான். ஆனால் அடித்துப் பெய்கிற மழைக்கு நடுவில் எப்படித் தோப்புத் துரவுக்குள் போகட்டும் என்கிறீர்களா? மழை விடும் நேரத்தில் முயன்று பாருங்களேன். காய்கனிகளும் மழையில் நனைந்து பளிச்சென போஸ் கொடுக்கும்:)!

ஒவ்வொரு மாதமும் தலைப்புக்காகப் புதுப்படங்கள் பதிகிற வழக்கத்தில் இந்தப் பதிவிலும் முதல் ஐந்து புதியவை. மற்றவை முன்னர் பல பதிவுகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

#2
இவை என்ன காய் :)?
#3 குட்டைச் செடியில்..


#4 ஒற்றைக் கத்திரி..

வெள்ளி, 17 அக்டோபர், 2014

இம்மாத தமிழ் ஃபெமினாவில்.. எஸ். செந்தில் குமார் பார்வையில்.. “அடைமழை”


சென்ற மாத ஃபெமினாவில் வெளியான அறிமுகத்தைத் தொடர்ந்து இம்மாதம், அக்டோபர் 2014 தமிழ் ஃபெமினாவில்.. அடை மழை நூலுக்கான மதிப்புரையை வழங்கியிருக்கிறார், இதழின் ஆசிரியரான எஸ். செந்தில்குமார்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin