என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 50
எங்கள் குடியிருப்பில் இருக்கும் வீட்டுத் தோட்டங்களுக்கு பலவிதமான பறவைகள் வந்தபடி இருப்பதையும், அவற்றைப் படமாக்கி நான் பகிர்ந்து வருவதையும் அறிவீர்கள். சமீபத்திய வரவு ’இந்திய சாம்பல் இருவாச்சி'. குடியிருப்பின் கடைசி வீட்டையொட்டிய மரத்தில் கூடமைத்திருந்த ஒரு ஜோடி, மற்றும் அதன் இளம் பறவைகள் அவ்வப்போது ஒவ்வொருவர் தோட்டத்திற்கு வந்தமர்ந்து தரிசனம் தந்து போகலாயின. ‘இன்று நான் பார்த்தேன்.. இதோ இன்று எங்கள் தோட்டத்தில்..’ என அவரவர் படங்களை வாட்ஸ் அப் குழுமத்தில் பகிர்ந்து வந்தனர். #2
தாய்ப் பறவை
வளர்ந்த பறவைகள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வு கொண்டவை. பலமுறை அதிகாலை வேளையில் முருங்கை மரத்தில் அமர்ந்து பருந்தினைப் போலப் பெரும் குரலெழுப்பிப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அறைக்குள் நின்று படம் எடுக்க முயன்றிடும் என்னை எப்படியோ கவனித்து உடனே பறந்து போய் விடும். ஆனால் இளம் பறவை கண்டு கொள்ளாமல் நேற்று படம் எடுக்க விட்டது. அதன் தாய், தந்தையைப் படமாக்கும் வேளைக்காகக் காத்திருந்தேன். இன்று அதிகாலை, தோட்டத்துச் சுற்றுச் சுவருக்கு அந்தப் பக்கம் சற்று தொலைவில் இருக்கும் உயர்ந்த மரத்தில் ஒன்றாக அமர்ந்திருந்த அதன் பெற்றோரையும் இன்று படமாக்கி விட்டேன்:). வாட்ஸ் அப் குழுமத்திலும் பகிர்ந்து கொண்டாயிற்று:).
#3
ஜோடியாக பெண் பறவையும் ஆண் பறவையும்..
இப்போது உங்களுடன்.. இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த சுவாரஸ்யமான தகவல்களுடன்..
#4