வெள்ளி, 20 டிசம்பர், 2013

மறு வாசல்


1. ஏதேனும் ஒரு புள்ளியத் தொடும் போது முதலில் எடுக்க வேண்டிய தீர்மானம் அதிக நேரம் அங்கே தங்கக் கூடாதென்பதே.

2. பலசாலியாய் இருக்கத் தேவையில்லை. பலசாலியாய் உணர்ந்தால் போதும்.

3. ஆரவாரம் வலுவானது அமைதி பலவீனமானது எனத்  தவறாகக் கணித்து விட வேண்டாம்.

4. முடிவில் எல்லாம் சரியாகும். சரியாகவில்லையென்றால் அதுவல்ல முடிவு.

5. மற்றவர் மூலமாகக் கடவுள் காட்டுகிற தனிச்சிறப்பான அன்பு.. நட்பு!

6. செயலோடு சேராத கூர்நோக்குப் பார்வை பகற்கனவாய் முடிந்து போகும்.

7.  சிறுபறவை கிளை ஒடிந்திடுமோவென அஞ்சாதிருப்பது கிளையின் மீதான நம்பிக்கையால் அல்ல, தன் இறக்கைகள் மீதான நம்பிக்கையால்.

8. முடியவில்லை என விட்டு விடத் தீர்மானிக்கும் முன் ஒரு கணம் ஆராயலாம் ஏன் இதுகாலமும் விடவில்லை என்பதற்கான காரணத்தை.

9. கடந்து விட்டவற்றை மீண்டும் புதிதாகத் தொடங்க முடியாது. ஆனால் இன்றைய தினத்தைத் தொடங்கி புதிய முடிவைத் தர முடியும்.

10. நிராகரிப்புகளைக் கண்டு வருந்தத் தேவையில்லை. இன்னும் சிறப்பான பாதைக்கான கதவுகளைத் திறந்து விடுபவை அவைதாம்.

*

தொகுப்பது தொடர்கிறது..
எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..
**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

27 கருத்துகள்:

  1. தனிச்சிறப்பான அன்பு - நட்பு... உட்பட அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. முத்துக்கள் பத்தும் அருமை.
    நட்பு முத்து மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. 5. மற்றவர் மூலமாகக் கடவுள் காட்டுகிற தனிச் சிறப்பான அன்பு.. நட்பு !

    ;)))))

    பதிலளிநீக்கு
  5. வாழ்வுக்குகந்த நற் சிந்தனைகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா !

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொகுப்பு அக்கா...
    உங்களுக்கான சேமிப்பாகவும் எங்களுக்கான பகிர்வாகவும் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே அருமை. நான்காவது ரொம்பவும் பிடித்தது....

    பதிலளிநீக்கு
  8. அனைத்துமே அருமை...9வது ரொம்ப பிடித்தது..

    பதிலளிநீக்கு
  9. @துரை. ந. உ,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @R.Amudha HariHaran,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin