இந்த வருடம் பார்த்த கொலுக்களின் தொகுப்பு..
சனி, 12 அக்டோபர், 2024
நவராத்திரியில் நான் பார்த்த கொலுக்கள் 6 - விஜய தசமி வாழ்த்துகள்!
வெள்ளி, 27 செப்டம்பர், 2024
வளரொளி நாதர் திருக்கோயில் - வைரவன் பட்டி - பாகம்: 2
பாகம் 1: இங்கே
கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், கொடி மரம், அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம் மற்றும் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளைக் கொண்டுள்ளது.
விநாயகருக்கு சிறிய கோபுரத்துடன் தனி மண்டபம் உள்ளது. மேலும் யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
திங்கள், 23 செப்டம்பர், 2024
வைரவன்பட்டி வைரவர் திருக்கோயில் - கோபுர தரிசனம் - வைரவர் தீர்த்தம்
#1
மதுரையிலிருந்து பிள்ளையார்ப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ளது வைரவன்பட்டி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் மற்றும் வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது இத்தலத்திற்கு வடுகநாதபுரி , வடுகநாதபுரம் , வைரவர் நகர் , வைரவமாபுரம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.
இடப்பக்கம் சிறிய கோபுரத்துடன் காணப்படுவது விநாயகர் மண்டபம்
இக்கோயிலின் மூலவராக வளர் ஒளி நாதர் எனப்படும் வைரவர் சுவாமி உள்ளார். தாயார் வடிவுடையம்பாள். தலவிருட்சம் ஏறழிஞ்சில் மரம். தல தீர்த்தம் வைரவர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
#3
செவ்வாய், 17 செப்டம்பர், 2024
அறுபடை வீடுகளில் முதல்படை வீடு - திருப்பரங்குன்றம் - கோபுர தரிசனம்
#1
திருப்பரங்குன்றத்தின் திருக்கோபுரத்தை முன்னர் 2015_ல் மதுரை சென்றிருந்த போது வெளியிலிருந்து எடுத்து 'இந்தப் பதிவில்..' பகிர்ந்திருந்தாலும் அப்போது கோயிலுக்குள் செல்ல வாய்க்கவில்லை. இந்த முறை கோபுர தரிசனத்துடன் கோயிலுக்கு உள்ளேயும் சிறந்த தரிசனம் கிடைத்தது.
#2
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே!
நான் எடுத்த படங்களுடன், தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து சேகரித்த தகவல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளேன்:
ஞாயிறு, 15 செப்டம்பர், 2024
ஞாயிறு, 8 செப்டம்பர், 2024
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் - கோபுர தரிசனம்.. உற்சவ மூர்த்தி திருவீதி உலா..
#1
இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு இரு தினங்கள் முன்னதாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது. ஓரளவுக்குக் கூட்டம் இருந்தாலும் கூட பக்தர்களை நிதானமாக தரிசிக்க அனுமதித்தது மனதுக்கு நிறைவைத் தந்தது. கோயிலுக்குள்ளே படங்கள் அனுமதியில்லை ஆதலால் கோபுர தரிசனமும், உற்சவ மூர்த்தியின் பவனியும் படங்களாக உங்கள் பார்வைக்கு..
#2
சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்த பழமையான குடைவரைக் கோயில். சிறிய மலையின் அடிவாரத்தில் உள்ளது.
ஞாயிறு, 1 செப்டம்பர், 2024
எதுவரையிலும்?
#1
#2

















