ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மகிழ்ச்சியின் அளவுகோல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 64


#1
"சிறந்த உணர்வுகள் என்பவை 
வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை."


#2
"எந்த அளவுக்கு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென நீங்கள் தீர்மானிக்கிறீர்களோ
உண்மையிலேயே அந்த அளவுக்கு மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்."

#3
"நேசியுங்கள் 
செய்யும் எந்தச் செயலையும்."

#4
"சின்ன விஷயங்கள் நம்மைக் காயப் படுத்துகின்றன. 
சின்ன விஷயங்கள் நமக்கு ஆறுதலும் அளிக்கின்றன."


#5
"மலர்களைக் காண்பது மனதின் களைப்பை ஆற்றுகிறது.
அவற்றுக்கு உணர்ச்சியும் கிடையாது. 
சண்டை சச்சரவுகளும் கிடையாது."
_ Sigmund Freud


#6
"சிறிதளவு ஈரமும் கருணையும் 
உலகில் நிலவும் 
வெறுப்பைக் குறைத்து
அன்பை வளர்க்கும்."


எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.

***



10 கருத்துகள்:

  1. மலர்கள் அனைத்தும் மிக அழகு. இடையே வரும் வரிகளும் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
  2. ரோஜாமலர்களின் அழகிய அணிவகுப்பு.   அருமை.   வரிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. ரோஜா மலர்கள் அனைத்தும் மிக அழகு.
    கொடுக்கப்பட்ட வாழ்வியல் சிந்தனைகள் அருமை.இரக்கமும் அன்பும் இருந்தால் ஈரமும் கருணையும் வரும. எல்லோர் இடத்திலும் இருந்தால் பூலோகம் சொர்க்கம்தான்.

    பதிலளிநீக்கு
  4. மலர்கள் அவற்றுடன் தந்த வாசகங்கள் என அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேமிப்பும் பகிர்வும்!

    பதிலளிநீக்கு
  5. ரோஜாவை ரசிக்கவா , வரிகளை ரசிக்கவா ...அனைத்தும் மிக சிறப்பு

    எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக ....மிக ரசித்த வாசகம்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin