புதன், 29 அக்டோபர், 2025

அழகான கேசவன் - மைசூர் சோமநாதபுர கோயில் - பாகம் 2

 

புனித நதியான காவேரியின் கரையோரத்தில் அமைந்துள்ள சென்ன கேசவா கோயில் குறித்த தகவல்கள் மற்றும் 18 படங்களுடன்  பகிர்ந்த பாகம் 1 இங்கே

#2

இக்கோயில் ஹொய்சாளப் பேரரசு மன்னர்களால், அவர்களது ஆட்சியின் கீழிருந்த பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 1500 கோயில்களில் ஒன்று. அவர்களது கட்டிடக் கலையின் உச்சக்கட்ட வளர்ச்சியாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது. அதனாலேயே பல வழிகளில் தனித்துவமாக விளங்குகிறது.

திங்கள், 27 அக்டோபர், 2025

வழி நடத்தும் நிழல்கள் - பண்புடன் இணைய இதழில்..

வழி நடத்தும் நிழல்கள்

மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றன 
தலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டி
மேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.
அதுவே சத்தியம் என 
கூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.
அவற்றின் காதுகள் 
பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமே 
செவிமடுக்கப் பழகி விட்டன.

வெள்ளி, 24 அக்டோபர், 2025

இந்திய வெள்ளைக்கண்ணி ( Indian white-eye ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்:  Indian white-eye 
உயிரியல் பெயர்: Zosterops palpebrosus
வேறு பெயர்கள்: முன்னர் Oriental white-eye என அறியப்பட்டு வந்தது.

இந்திய வெள்ளைக்கண்ணி, Zosterops palpebrosus எனப்படும் வெள்ளைக்-கண் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பாடும் பறவை இனமாகும். இதன் கண்களைச் சுற்றி ஒரு வெள்ளை வளையம் இருப்பதால், இதற்கு "வெள்ளைக்கண்ணி" என்று பெயர் வந்தது. 8-9 செ.மீ நீளமே உடைய மிகச் சிறிய பறவை. 

#2

இவற்றின் உடலின் மேற்பகுதி மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு வித ஆலிவ் நிறத்தையும்,  கீழ்ப்பகுதியும் கழுத்தும் நல்ல மஞ்சள் வண்ணத்தையும்  வயிற்றுப் பகுதி வெள்ளை கலந்த சாம்பல் வண்ணத்தையும் கொண்டு காணப்படும். சில துணை இனங்களில் வயிற்றின் பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

[வெகு காலமாக இதைக் காண இயலாதா என எதிர்பார்த்துக் காத்திருந்த போது கிளைகளுக்கு நடுவே, அடர்ந்த இலைகளுக்கு உள்ளேயிருந்து வெளிப்பட்டது ஓர் நாள்:)! 

செவ்வாய், 7 அக்டோபர், 2025

சென்னகேசவா கோயில் - சோமநாதபுரம், மைசூர் - பாகம் 1

 #1

சென்னகேசவர் கோயில் மைசூரிலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள சோமநாதபுரத்தில், காவேரி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. வைணவ இந்து கோயிலாகிய இது, சென்னகேஷவா கோயில் மற்றும் கேசவா கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது. சென்னகேசவ என்ற சொல் "அழகான கேசவன்" என்று பொருள்படும். இதுவே ஹொய்சாள அரசர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோயிலாகும். ஹொய்சாள கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றும் ஆகும்.

#2


#3


#4

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

கிளி ஜோஸியம் - பண்புடன் இணைய இதழின் நவராத்திரி சிறப்பிதழில்..

 


லய வாசலின் முன்னிருந்த
ஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டி
வீதியின் அமைதியான ஓரத்தில்
சாயம் போன குடைக்குக் கீழ்
மூங்கில் கூண்டிற்கு உள்ளே
சைகைக்காகக் காத்திருக்கிறது கிளி.

வருவோர் போவோரைக் கவரும்
வாய்கொள்ளாப் புன்னகையுடன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin