#1
#2
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
#1
#2
யோக நரசிம்மர் திருக்கோயில்
#1
மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை ஊராட்சியின் கீழ்வரும் யானைமலையின் அடிவாரத்தில் நரசிங்கம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது யோக நரசிங்கப் பெருமாள் கோயில் (அல்லது) யோக நரசிம்மர் திருக்கோயில்.
#2
பெருமாள் எடுத்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம், முதன் முதலில் இங்குதான் எடுக்கப்பட்டதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. அதன் பொருட்டு இங்கு இந்த யோக நரசிம்மர் கோயில் அமைந்ததாகவும், ஏறத்தாழ 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான கோயில் என்றும் கூறப்படுகிறது.
#3
#1
மதுரையில் இருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் அழகர்கோயில் கிராமத்தில் உள்ளது அழகர் மலை. அழகர் மலையிலிருந்து வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்று வணங்கப்படும் கள்ளழகர்.
#2
#3
இக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்று. சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது. துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது.
#4
கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்து ஒரு கோட்டையைப் போல் காட்சி அளிக்கிறது.
இந்த வருடம் பார்த்த கொலுக்களின் தொகுப்பு..
பாகம் 1: இங்கே
கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், கொடி மரம், அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம் மற்றும் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளைக் கொண்டுள்ளது.
விநாயகருக்கு சிறிய கோபுரத்துடன் தனி மண்டபம் உள்ளது. மேலும் யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
#1
மதுரையிலிருந்து பிள்ளையார்ப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ளது வைரவன்பட்டி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் மற்றும் வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது இத்தலத்திற்கு வடுகநாதபுரி , வடுகநாதபுரம் , வைரவர் நகர் , வைரவமாபுரம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.
இடப்பக்கம் சிறிய கோபுரத்துடன் காணப்படுவது விநாயகர் மண்டபம்
இக்கோயிலின் மூலவராக வளர் ஒளி நாதர் எனப்படும் வைரவர் சுவாமி உள்ளார். தாயார் வடிவுடையம்பாள். தலவிருட்சம் ஏறழிஞ்சில் மரம். தல தீர்த்தம் வைரவர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
#3