புதன், 17 செப்டம்பர், 2025

கோபுர தரிசனம் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்

 #1

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 6_ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வைணவக் கோவில் பார்த்தசாரதி வடிவிலான விஷ்ணு பகவானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. ' பார்த்தசாரதி ' என்ற பெயருக்கு ' அர்ஜுனனின் தேரோட்டி' என்று பொருள்படும். 

மூலவரான பார்த்தசாரதி பெருமாள் சுமார் ஒன்பது அடி உயர சிலையாக மீசையுடன் தனித்துவமான வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

உலகை நோக்கி விரியும் நிறங்கள்

 #1 

"பின்தொடருகிறவர் அனைவரும் பின்தங்கியவர் அல்ல, சிலர் தனித்துவமான வேகத்தில் உடன் நடப்பவர்."


#2 

"நீ நிறங்களை அணிவது மட்டுமல்ல, அதன் ஒளியை உலகெங்கும் பரப்புகிறாய்."


#3
"மங்க மறுக்கும் நிறமாகப் பிரகாசி."

திங்கள், 8 செப்டம்பர், 2025

கல்வாழை [ Canna Lily ]

 

ல்வாழை அல்லது மணிவாழை எனத் தமிழில் அழைக்கப்படுகிறது (canna lily) கன்னா லில்லி. தாவரவியல் பெயர்: Canna Indica. ஆங்கிலத்தில் Indian shot, African arrowroot, edible canna, purple arrowroot, Sierra Leone arrowroot ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றன. கன்னாசியே (Cannaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்த வாழை இனத்தில் சுமார் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.

#2


இந்த வகைச் செடிகள் கண்களைக் கவரும் அழகிய இலைகளைக் கொண்டவை ஆகையால் தோட்டக் கலைஞர்கள் இவற்றை அலங்காரத் தாவரங்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

#3


இவற்றின் அனைத்து வகை இனங்களுக்கும் பூர்வீகம்

வியாழன், 4 செப்டம்பர், 2025

முக்தி - நவீன விருட்சம்: இதழ் 130

 முக்தி

அடர்ந்த மரத்திலிருந்து 
உதிர்ந்த இலையொன்று
காற்றின் போக்கில் பயணித்து
நதிக்கரையோரத்து
புதர்ச் செடி மேல் அமர்கின்றது.
கீழிருக்கும் நீரில் மிதக்கின்றது
மேலிருக்கும் சூரியன். 

சனி, 30 ஆகஸ்ட், 2025

கோபுர தரிசனம் - வடபழநி ஆண்டவர் கோயில்

#1

#2

#3

டபழனி முருகர் கோயில் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒன்றாகும். முருகரின் சிலை தமிழகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பழனி கோயிலில் உள்ள சிலையைப் போலவே இருப்பதால், இது வடபழனி கோயில் என்று அழைக்கப்படலாயிற்று.

#4 தல வரலாறு:

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

வெற்றியின் வேர்

 

#1
"வாழ்வாதாரம் என்பது ஒரு வழிமுறையல்ல, செழித்து வளர்வதற்கான பணி."


#2
"உள்ளம் உறுதியாக இருக்கும்போது, கண்கள் உலகிற்குச் சொல்கின்றன."

#3
"புரிந்து கொள்ள ஒரே மாதிரி சிந்திக்க வேண்டியதில்லை, கேட்பதற்கான அக்கறை இருந்தால் போதும்."

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பது..


#1
"ஏறுவதற்கு பயப்படாதீர்கள். நீங்கள் தடுமாறினாலும், ஒவ்வொரு கட்டத்திலும் காணக் கிடைக்கும் காட்சிகள் அழகானவை."

#2
"ஞானம், பேசும் நேரம் வரும் வரைப் பொறுமையாக காத்திருக்கும்."
#3
"நிதானமாக இருப்பது என்பது ஒவ்வொரு விளைவையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தைத் துறப்பது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin