#1 மகா கணபதி
மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம், இந்தியாவின் முதலாவது மட்டுமின்றி ஒரே ஒரு மணல் சிற்ப அருங்காட்சியகமும் கூட. சாமுண்டி மலைகளின் அடிவாரத்தில் சுமார் 13500 சதுர அடி நிலப்பரப்பில், மைசூரின் கலாச்சாரப் பாரம்பரியம், வனவிலங்கு மற்றும் மும்மதம் போன்ற 16 கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, 150-க்கும் மேற்பட்ட மணல் சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.
சிற்பங்கள் ஒவ்வொன்றும் மணல் கலைஞர் எம்.என். கௌரி என்பவரால் உருவாக்கப்பட்டவை. அவருக்கு இதில் எப்படி நாட்டம் வந்தது என்பது சுவாரஸ்யமானது. பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டில் அப்படிப்பைத் தொடராமல் வெளியேறியவர், கணினி அறிவியலில் பயிற்சி எடுத்தார். அப்போது 3d max எனும் மென்பொருளின் உதவி கொண்டு முப்பரிமாண சிற்ப மாதிரிகளை உருவாக்கினார். கணினியில் உருவாக்கிய தன் சிற்பங்களுக்கு "உயிரோட்ட உணர்வு" இல்லாததை உணர்ந்தவர், 2011_ஆம் ஆண்டு முதன் முறையாக மணல் சிற்பங்களை உருவாக்க முயற்சித்தார். அவரது முயற்சிக்குப் பாராட்டு கிடைத்ததும், 20 இலட்சம் ரூபாய் கடன் பெற்று இந்த மணல் சிற்ப அருங்காட்சியகத்தைத் தொடங்கினார். 150 சிற்பங்களையும் வடிவமைக்க 115_க்கும் மேற்பட்ட லாரி மணல் தேவைப்பட்டிருக்கிறது. 2014_ஆம் ஆண்டில் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
நுழைவாயிலில் 15 அடி உயரமான விநாயகர் சிலை பார்வையாளர்களை வரவேற்கிறது. சாமுண்டீஸ்வரி, மைசூர் தசரா, மகாபாரதக் காட்சி, சிரிக்கும் புத்தர், சாண்டா கிளாஸ் போன்ற பெரிய சிற்பங்கள் ஈர்க்கின்றன.
#2 கீதையின் பாதை
.jpg)
