செவ்வாய், 30 டிசம்பர், 2025

பால் வாசம் - பண்புடன் மின்னிதழில்..

  

பால் வாசம் - (பத்து குறுங்கவிதைகள்)


1.
சரசரக்கும் சருகுகள்
கிளை தாவும் அணில்
காற்றின் வேகத்தில்.

2. 
அமைதியான பின்வாசல்
அணிலின் வாலசைவு விளையாட்டு  
நடனமாடும் அசைவின்மை.

3.
மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்
கொட்டையைக் கொறிக்கும் அணில்
திட்டமிடும் குளிர்காலம்.

திங்கள், 29 டிசம்பர், 2025

2025 பென் ஹீனி விருதை வென்ற டாம் பாலின் கவிதை - சொல்வனம் இதழ்: 356

டாம் பாலின் (தாமஸ் நீல்சன் பாலின் - ஜனவரி 25, 1949)  தனது கவிதைத் தொகுப்பான நாமன்லாக் (Namanlagh)_காக 2025_ஆம் ஆண்டின் பென் ஹீனி  (PEN Heaney) பரிசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த நூல் ஃபேபர் (Faber) வெளியீடாகும். 


(Belfast) பெல்ஃபாஸ்டில் வளர்ந்து, தற்போது ஆக்ஸ்ஃபோர்டில் வசிக்கும் டாம் பாலின் வட அயர்லாந்து கவிஞரும், விமர்சகருமாவார்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

வசந்தத்தின் வாக்குறுதி

 #1

'நல்ல உணர்வுகள் பகிரப்படும் இடமெல்லாம்
உலகம் இன்னும் சற்றே மலர்கிறது.'


#2
'பொறுமை, சிறிய அடிகளை
பெரிய பயணங்களாக மாற்றுகிறது.'


#3
'மலர்கள் வாடுவதற்கு அஞ்சுவதில்லை, 
அவை வசந்தத்தின் வாக்குறுதியை நம்புகின்றன.'


#4
'வாழ்க்கை விரியும் போக்கை நம்புங்கள்,
மெதுவாக நகரும் அத்தியாயங்களுக்கும் அர்த்தம் உண்டு.'


#5
'உலகம் பரந்தது,
ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வளர இடம் உண்டு.'


#6
'அதிகமாக சிந்திப்பதை நிறுத்தும்போது 
வாழ்க்கை அழகாக மலர்கிறது.'


#7
'நன்றியுள்ள இதயங்கள் வாழும் இடத்தில்
ஆசீர்வாதங்கள் மலர்கின்றன.'
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 223
**

செவ்வாய், 23 டிசம்பர், 2025

சாக்பீஸ் சூரியன் - [ஒன்பது குறுங்கவிதைகள்] - பண்புடன் இதழில்..


1.
மிதக்கும் சோப்புக் குமிழிகள்
அருகில் வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் மகிழ்ச்சி.

2.
பாதி கடித்த ஆப்பிள்
விரியத் திறந்த கதைப்புத்தகம்
வியப்புக்கு முடிவில்லை.

வியாழன், 18 டிசம்பர், 2025

ஆயிரம் வேர்களும் பதிலற்ற வினாக்களும் - 'புன்னகை' இதழ்: 86



நாம் நடந்து கொண்டிருப்பது 
எஞ்சிய தடங்களில்,
வேர்கள் ஒரு காலத்தில் 
பற்றிக் கொண்டிருந்த
மண்ணின் நெஞ்சங்களில். 
அவை தம் மூச்சை வைத்து 
உயிர் வாழ்ந்திருந்த இடத்தில் 
இப்போது இருப்பதெல்லாம்

திங்கள், 15 டிசம்பர், 2025

சூடா மணியே சுடரொளி போற்றி! - கார்த்திகை தீபங்கள் 2025

 கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் வீட்டு வாசலில் விளக்குகள் வைப்பது வழக்கம். திருக்கார்த்திகை அன்றும், அதன் பின்னர் கார்த்திகை மாதம் முடியும் வரையிலும் வீட்டின் வாசல் மற்றும் உள்ளே தினம் விளக்குகளை ஏற்றி பலவிதமாகப் படமாக்கி பகிர்ந்து வருகிறேன் தொடர்ந்து பல வருடங்களாக. அந்த வரிசையில் இந்த வருடப் படங்கள் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.

#1 ‘ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி!'


#2 ‘ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி!’


#3  ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி


#4 திருக்கார்த்திகை தீபங்கள்:

திங்கள், 8 டிசம்பர், 2025

மழையின் ரீங்காரம் - (ஒன்பது குறுங்கவிதைகள்) - பண்புடன் இதழ்: 7

1.
தரையில் இலையுதிர்க்கால இலை
காற்றில் சுழன்றாடும் குழந்தை
விழ அஞ்சுவதில்லை இருவரும்.

2.
ஓவிய நோட்டில் வண்ணத்துச்பூச்சி
உருளும் கிரேயான் 
சிறகுகள் பெறும் நிறங்கள்.

3.
காற்றில் உதிரும் பூவிதழ்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin