ஞாயிறு, 27 அக்டோபர், 2024

ஓய்வு நேரம்

  #1

"அனைவரும் ஒன்றாக முன்னோக்கி நகர்ந்தால், 
வெற்றி தானாக வந்து சேரும்."  
_ Henry Ford

#2

"யாரையும் கண்மூடித்தனமாகத் தொடராதீர்கள், 
உண்மையைத் தொடருங்கள்.
_ Brian Michael Good


#3
"எப்போதும் மற்றவர்களுக்காக இருங்கள், 
அதே நேரம்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

யோக நரசிம்மர்; திருமோகூர் காளமேகப் பெருமாள்; மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்கள்

 யோக நரசிம்மர் திருக்கோயில்

#1

துரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை ஊராட்சியின் கீழ்வரும் யானைமலையின் அடிவாரத்தில் நரசிங்கம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது யோக நரசிங்கப் பெருமாள் கோயில் (அல்லது) யோக நரசிம்மர் திருக்கோயில்.

#2


பெருமாள் எடுத்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம், முதன் முதலில் இங்குதான் எடுக்கப்பட்டதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. அதன் பொருட்டு இங்கு இந்த யோக நரசிம்மர் கோயில் அமைந்ததாகவும், ஏறத்தாழ 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான கோயில் என்றும் கூறப்படுகிறது.

#3

புதன், 23 அக்டோபர், 2024

அப்பா வீடு திரும்புகிறார் - திலீப் சித்ரே - சொல்வனம் இதழ்: 328


அப்பா வீடு திரும்புகிறார்

என் அப்பா பின்மாலைப் புகைவண்டியில் பயணிப்பார்
மஞ்சள் ஒளியில்  அமைதியான பயணிகளுக்கு நடுவே நின்றபடி
கவனிக்காத அவரது கண்களை புறநகர்கள் நழுவிக் கடந்து செல்லும் 
அவரது சட்டையும் கால்சட்டையும் நனைந்திருக்க 
அவரது கருப்பு மழை மேல்அங்கி சேறினால் கறை படிந்திருக்க

வெள்ளி, 18 அக்டோபர், 2024

கள்ளழகர் திருக்கோயில் - கோபுர தரிசனம்

 #1

ஏழு நிலை ராஜகோபுரம்

மதுரையில் இருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் அழகர்கோயில் கிராமத்தில் உள்ளது அழகர் மலை. அழகர் மலையிலிருந்து வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்று வணங்கப்படும் கள்ளழகர். 

#2

#3

இக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்று. சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது. துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது.  

#4

கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்து ஒரு கோட்டையைப் போல் காட்சி அளிக்கிறது.

சனி, 12 அக்டோபர், 2024

நவராத்திரியில் நான் பார்த்த கொலுக்கள் 6 - விஜய தசமி வாழ்த்துகள்!

 இந்த வருடம் பார்த்த கொலுக்களின் தொகுப்பு.. 

#1
‘பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு.’

தங்கை வீட்டுக் கொலுவிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஒவ்வொரு வருட கொலுவிலும்  மைசூர் தசரா, மகாபாரதம், கிருஷ்ணாவதாரம் என ஏதேனும் ஒரு கருவை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றவாறு இருக்கிற பொம்மைகளை வைத்துக் காட்சிகள் அமைத்து வருவார். 

#2


இந்த வருடம்  ‘கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணரின் பண்புகள்’ எனும் கருவையொட்டி காட்சிகளை அமைத்து குறிப்பிட்ட தலைப்புகளை ஒவ்வொரு காட்சிக்கு அருகிலும் வைத்திருந்தது வந்தவர்களைக் கவர்ந்தது.  கொலுவின் கருவை பெரிய அளவில் பிரின்ட் செய்து ஒரு பக்க சுவரில் மாட்டியிருந்தது வந்தவர்கள் கொலு அமைப்பைப் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது:

#3

*

*

கடந்த வருடங்களில் அனைத்துக் காட்சிகளையும் படமெடுத்து முந்தைய கொலுப் பதிவுகளில் பகிர்ந்து விட்டிருந்த படியால் இந்த முறைத் தனித்தனியாக அவற்றை எடுக்கவில்லை. காணொலியாக இங்கே பார்க்கலாம்:
[நான் இங்கே வலையேற்றிய காணொலி வேலை செய்யவில்லை. ஆகையால் ஃபேஸ்புக் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.]

#4

[பொம்மைகளை நன்கு ரசிக்க, படங்களை (Click)  சொடுக்கிப் பார்க்கவும் :).] 

#5 முழுக் காட்சி:

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

வளரொளி நாதர் திருக்கோயில் - வைரவன் பட்டி - பாகம்: 2

 பாகம் 1: இங்கே

#1 
நுழைவாயிலும் ஐந்து நிலை ராஜ கோபுரமும்

#2
கொடி மரம்

#3
கொடி மரம் இருக்கும் சுற்றுப் பிரகாரத்தின்
கூரை ஓவியங்கள்


ட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், கொடி மரம், அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம் மற்றும் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளைக் கொண்டுள்ளது.

விநாயகருக்கு சிறிய கோபுரத்துடன் தனி மண்டபம் உள்ளது. மேலும் யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

#4
வளரொளி நாதரைப் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியின் மண்டபமும்..,
கூரை ஓவியங்கள், சிற்பத் தூண்களுடன்
அற்புதமாகக் காட்சியளிக்கும்
பிரதான மண்டபமும்..

திங்கள், 23 செப்டம்பர், 2024

வைரவன்பட்டி வைரவர் திருக்கோயில் - கோபுர தரிசனம் - வைரவர் தீர்த்தம்

 #1

மதுரையிலிருந்து பிள்ளையார்ப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ளது வைரவன்பட்டி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் மற்றும் வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.  தற்போது இத்தலத்திற்கு வடுகநாதபுரி , வடுகநாதபுரம் , வைரவர் நகர் ,  வைரவமாபுரம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.

#2 

இடப்பக்கம் சிறிய கோபுரத்துடன் காணப்படுவது விநாயகர் மண்டபம்

இக்கோயிலின் மூலவராக வளர் ஒளி நாதர் எனப்படும் வைரவர் சுவாமி உள்ளார். தாயார் வடிவுடையம்பாள். தலவிருட்சம் ஏறழிஞ்சில் மரம். தல தீர்த்தம் வைரவர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

#3

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin