முத்துச்சரம்
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
ஞாயிறு, 30 நவம்பர், 2025
வாழ்வை வாழ்தல்
புதன், 26 நவம்பர், 2025
சாம்பல்-வயிற்றுக் காக்கா ( Grey-bellied cuckoo ) - பறவை பார்ப்போம்
கிளைகளைப் பற்றி அமரும் பாஸரின் வகைப் பறவைகளில் ஒன்று. சாம்பல் நிறத்தில் சிறிய காகம் போன்ற தோற்றத்தைக் கொண்டது.
சாம்பல் வயிற்றுக் காக்காவின் மொத்த உயரம் சுமார் 23 செ.மீ இருக்கும். வளர்ந்த பறவைகளுக்கு அடிவயிறும், வால் நுனியும் வெள்ளை நிறத்தில் இருக்கும். (வாலின் வெள்ளைப் பட்டையைப் படத்தில் காணலாம்).
சில பெண் பறவைகள் மேல் பகுதியில் அடர்ந்த கோடுகள் கொண்ட சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துடன், கோடுகள் இல்லாத வாலையும், அழுத்தமான அடர் - கோடுகள் கொண்ட வெள்ளை நிறக் கீழ்ப்பகுதிகளையும் கொண்டிருக்கும். இளம் பறவைகள் பெண் பறவையை ஒத்திருக்கும், ஆனால் மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும்.
பூச்சிகளை இரையாக்கிக் கொள்ளும். உயர்மரக்கிளைகளில் கம்பளிப்பூச்சி போன்றவற்றைத் தேடி உண்ணும்.
இவை குறுகிய தூரம் புலம்பெயர்ந்து செல்லும் பறவைகளாகும்.
ஞாயிறு, 23 நவம்பர், 2025
இலக்கின் கனல்
ஞாயிறு, 16 நவம்பர், 2025
குறையொன்றுமில்லை
செவ்வாய், 11 நவம்பர், 2025
இறகுகளின் வண்ணவிழா.. நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்.. – மைசூர் கராஞ்சி இயற்கைப் பூங்கா (2)
பறவைகளைக் கவனிப்பது ஒரு இனிய அனுபவம் எனில் எங்கு திரும்பினும் கண்ணைக் கவரும் வண்ண இறக்கைகளுடனான பறவைகள் சூழ இருக்க எதைக் கவனிப்பது என்பது மேலும் இனிதான அனுபவம். நீல மயில்களும் வெள்ளை மயில்களும் தம் கம்பீரமான அசைவுகளால் சுற்றுப்புறத்தை அழகால் நிரப்பின என்றால், அலெக்ஸாண்ட்ரின் கிளிகள் தம் கீச்சொலிகளாலும், துடிப்பான பறத்தல்களாலும் பூங்காவை உயிர்ப்புடன் வைத்திருந்தன. வளைத்து வளைத்து எடுத்த படங்களை அவ்வப்போது ஃப்ளிக்கர் தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து முடித்து, இங்கு தொகுப்பாக அளிக்கிறேன்.
நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்:
#3
#6
ஞாயிறு, 9 நவம்பர், 2025
மன்னிப்புக் கோர மறுப்பவள் - 'பண்புடன்' இதழ்: 6
மன்னிப்புக் கோர மறுப்பவள்
புதன், 29 அக்டோபர், 2025
அழகான கேசவன் - மைசூர் சோமநாதபுர கோயில் - பாகம் 2
புனித நதியான காவேரியின் கரையோரத்தில் அமைந்துள்ள சென்ன கேசவா கோயில் குறித்த தகவல்கள் மற்றும் 18 படங்களுடன் பகிர்ந்த பாகம் 1 இங்கே.
#2
இக்கோயில் ஹொய்சாளப் பேரரசு மன்னர்களால், அவர்களது ஆட்சியின் கீழிருந்த பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 1500 கோயில்களில் ஒன்று. அவர்களது கட்டிடக் கலையின் உச்சக்கட்ட வளர்ச்சியாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது. அதனாலேயே பல வழிகளில் தனித்துவமாக விளங்குகிறது.










.jpg)

.jpg)








.jpg)






