செவ்வாய், 10 ஜனவரி, 2017

மனதுக்குப் பிடித்த கவிதைகள்.. - சென்னை புத்தகக் கண்காட்சி 2017

3 செப்டம்பர் 2016, நவீன விருட்சம் வலைப் பக்கத்தில்..
நன்றி திரு. அழகிய சிங்கர்!
எனது நூல்களான ‘இலைகள் பழுக்காத உலகம்’ (கவிதைத் தொகுப்பு) மற்றும் ‘அடை மழை’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகியன, 19 ஜனவரி 2017 வரை நடைபெறவிருக்கிற 40_வது சென்னை புத்தகக் கண்காட்சியின் “புலம்” அரங்கு எண் 35 மற்றும் அரங்கு எண் 409_ல் கிடைக்கின்றன.

விருப்பமுள்ள நண்பர்கள் வாய்ப்பினைப் பயன்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

**
அகநாழிகை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் புலம் அரங்கில் கிடைக்கின்றன.

***

வியாழன், 5 ஜனவரி, 2017

கல்கியில்.. ஈரோடு கதிரின் ‘கிளையிலிருந்து வேர் வரை’ - ஒரு பார்வை


வாழ்தலை வரமாக்கும் அனுபவங்கள்

நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பது அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுந்து அடங்கும் கேள்வி. விடை தேடுபவர் சிலர். தம் சிந்தனைக்கு எட்டிய வகையில் ஒரு பதிலைக் கண்டு திருப்தி அடைந்து விடுபவர் பலர். ஆசிரியரின் பார்வையில் விரிகிற உலகம் வெகு இயல்பாக இந்தத் தேடலைப் பூர்த்தி செய்கிறது. ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்' என்றே தன்னை அழைத்துக் கொள்ளும் ஈரோடு கதிர் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து விடும் அன்றாட நிகழ்வுகளையும் சாதாரண மனிதர்களையும் தன் ஆழ்ந்த அவதானிப்பால் புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறார். ..

8 ஜனவரி 2017 இதழில்.. 

புதன், 4 ஜனவரி, 2017

சல்லடைக் கூடு கட்டும் புள்ளிச் சில்லை - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (7)

2 ஜனவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின் அட்டையிலும்..
நம்மைச் சுற்றி.. நம்மைப் பற்றி.. பக்கத்திலும்..
படத்துடன், சேகரித்த தகவல்கள்..

சல்லடைக் கூடு அமைக்கும் சில்லைப் பறவை 

ஆங்கிலப் பெயர்:  SPOTTED MUNIA
வேறு பெயர்கள்:

திங்கள், 2 ஜனவரி, 2017

சென்ற வருடமும் சில சிந்தனைகளும்

விடை பெற்ற வருடத்தில்.. 
முத்துச்சரம் + எனது ஃப்ளிக்கர் பக்கம்
ஒரு பார்வை..

பதிவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும் கூட, வீடு மாற்றம், பல சொந்த வேலைகளுக்கு நடுவே இந்த அளவு முடிந்ததே திருப்தியாக உள்ளது.

ஒளிப்படங்கள்:

எழுத்து மிகவும் குறைந்து போன வருடம். ஆனாலும் ஃப்ளிக்கரில் ஒளிப்படப் பதிவுகளை விடாமல் தொடர்ந்ததும் இந்த ஆண்டில் 2500 படங்களை நிறைவு செய்ததும் நிறைவாக உணர வைத்தது.

# இரு தினங்களுக்கு முன்.. ஃப்ளிக்கர் பக்கத்தில் எனது 2500 வது பதிவு
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

செவ்வாய், 27 டிசம்பர், 2016

இந்த வார ‘குங்குமம்’ கவிதைக்காரர்கள் வீதியில்..

# 23 டிசம்பர் 2016, குங்குமம் வார இதழில்..


எனது கவிதைகள்.. இரண்டு..

உடைந்த சிறகுகள்

வியாழன், 22 டிசம்பர், 2016

பாடும் பறவை.. புல்புல்.. - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (6)

கொண்டைக்குருவி புல்புல்..
#

12 டிசம்பர் தினமலர் பட்டம் இதழின் அட்டையிலும்..
#

“நம்மைச் சுற்றி - நம்மைப் பற்றி” பக்கத்திலும்... 

செவ்வாய், 20 டிசம்பர், 2016

மங்கையின் உள்ளம்.. மாதுளம்

மாதுளையின்  தாவரவியல் பெயர் Punica Grantum. தமிழில் ஏன் மாதுளை என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் சுவாரஸ்யமானது. மங்கையின் உள்ளம் (மாது + உளம்), அதாவது எப்படி ஒரு பெண்ணின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை எளிதாக அறிந்திட இயலாதோ அதே போல பழத்தின் தோலை உரிக்காமல் அதன் முத்துக்களைக் கண்டறிய முடியாது. அதனால்தான் மாதுளங்கனி எனப் பெயர் பெற்றதாம். மாது உளம் கனி என்று பிரித்துச் சொல்கிறார்கள் கவிஞர்கள்.

மாதுளங்கனியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக முன்னோர்கள் சொல்லிச் சென்றதும் பரவலாக நம்பப் படுகிறது.
#1

ஏற்கனவே கடந்த தோட்டத்துப் பதிவுகளில் சில மாதுளை மலர்களின் படங்களைப் பகிர்ந்திருப்பினும் மேலும் சில இங்கே.. தகவல்களுடன்..

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தை மாதுளை மாதமாகக் கொண்டாடுகிறார்கள். கலிஃபோர்னியா, அரிசோனா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin