வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கப்படி

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!



பொங்கப்படி

செவ்வாய், 13 ஜனவரி, 2015

‘தூயோமாய் வந்தோம்..’ திருப்பாவை - பரதம் (பாகம் 2)

#1 நாராயணனே நமக்கே பறை தருவான்.. [Explored in Flickr]
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்"

#2 எல்லே இளங்கிளியே.. இன்னம் உறங்குதியோ..?
” எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
'வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்!'
'வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!'
'ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை?'
'எல்லாரும் போந்தாரோ?' 'போந்தார் போந்தெண்ணிக் கொள்'
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். “

#3 சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்!

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

‘கைவழி நயனஞ் செல்ல..’ கம்பர் - பரதம் (பாகம் 1)

தசராவையொட்டி நெல்லையில் நடைபெற்ற நடன நிகழ்வொன்றில் இரண்டு மூன்று குழுக்களாகச் சிறுமியர் அற்புதமாக ஆடி, பார்வையாளர்களின் பாராட்டுகளை அள்ளிச் சென்றார்கள். சுமார் நாற்பதடி  தொலைவிலிருந்து ஜூம் செய்து எடுத்த படங்களில் திருப்தியாக வந்தவற்றை ஃப்ளிக்கரில் பகிர்ந்தேன். இரண்டு பாகங்களாக இங்கேயும் தொகுக்கிறேன் நீங்களும் கண்டு மகிழ..

#1 மஹிஷாசுரமர்த்தினி


#2 ‘கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா ~
நின்றன்கீதம் இசைக்குதடா நந்தலாலா~ ~’
#3 ‘சொல்லடி சிவசக்தி..

சனி, 10 ஜனவரி, 2015

கனவும் இலக்கும்

#1
“குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை உயர்த்துங்கள்.
இடியல்ல, மழையே பூக்கச் செய்கிறது மலர்களை.” -ரூமி


#2
“புதிதாய் ஒன்றைத் தொடங்க அதில் முழுதாய்த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் தேர்ச்சியுற, ‘தொடங்குதல்’ அவசியம்.”
- Joe Sabha

#3
“கடந்த காலம் எத்தனைக் கடினமானதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மீண்டும் தொடங்கலாம் எப்போதும்.”
_ புத்தர்

வெள்ளி, 9 ஜனவரி, 2015

அரங்கு எண் 304, வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி


வாசிப்பவருக்கும் பதிப்பகத்தாருக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து வருகிற சென்னைப் புத்தகக் கண்காட்சி, இன்று தொடங்கி 21 ஜனவரி 2015 வரையிலும் நடைபெறவிருக்கிறது.


அதில்,

வியாழன், 8 ஜனவரி, 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 6 & 7)


சொல்கிறார்கள் குழந்தைகள் “ஓ! களைப்பாய் இருக்கிறோம் நாங்கள்.
எங்களால் ஓடிடவோ தாவிடவோ இயலாது __
எப்போதேனும் புல்வெளியை நாங்கள் நாடினால், அது
அதிலே விழுந்து உறங்க மட்டுமே.

வெள்ளி, 2 ஜனவரி, 2015

மண் வாசனை - நெல்லை ஓவியர் மாரியப்பன் - பாகம் (2)

டுப்பு ஊதும் பெண்மணியில் ஆரம்பித்து மஞ்சள் நீர் விளையாட்டு;  பந்து விளையாட்டு; ஆனையும் பாகனும்;   குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்.., குடை பிடித்து நடக்கும்.., கோவில் வாசலில் செருப்புகளை விடும்.., குறுஞ்செய்தி கண்டு புன்முறுவல் பூத்து நிற்கும்.., குத்துவிளக்கேற்றும்.. இளம் பெண்கள்; மரக்கிளைகளில் ஆனந்தமாய் அமர்ந்து அரட்டை அடிக்கும் சிறார், கோழிகளைத் துரத்தி விளையாடும் குட்டீஸ்... என  தத்ரூபமான நீர் வண்ண ஓவியங்களாக மண்வாசனை கமழும் கிராமியக் காட்சிகள் பதிமூன்று:

#1

#2


#3

அட, பாகன் ஏறவும் இறங்கவும் யானை இப்படிக் காலைத் தூக்கிக் கொடுக்கும் அழகை இப்போதுதான் கவனிக்கிறேன்.


எல்லா ஓவியங்களும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததால் சூரியனார் மரக் கிளைகளின் வழியாக எட்டி எட்டி ஓவியங்களை இரசித்ததன் பிரதிபலிப்பும் எடுத்த படங்களில் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பொறுத்திடுக :)!

#4

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin