திங்கள், 29 ஏப்ரல், 2013

கொல்கத்தாவின் ஒரு நடைபாதையிலிருந்து.. - சமகால ஆங்கிலக் கவிதை - அதீதத்தில்..


திறக்காதே உன் கண்களை
செளகரியமாகவே இருக்கட்டும் அவை
சின்ன மரத்தின் அடியில்
கூடைக்குள், கந்தல் பொதி மேல்.
எதுவும் சென்றுவிடவில்லை
தடதடக்கும் சரக்கு வண்டியைத் தவிர.
உன் அன்னை அதோ இருக்கிறாள்
சுள்ளிகளால் தீ மூட்டிக் கொண்டு.
அவளது முகம் கரிப் புழுதியாலும்
வியர்வையாலும் ஊறிப் போயிருக்கிறது.
கஞ்சியை முற்றுகையிடும் ஈக்களை
சூசூவென விரட்டிக் கொண்டிருக்கிறாள்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

தூறல்:12 - பெங்களூரில்.. கம்ப இராமாயண முற்றோதல், புகைப்படக் கண்காட்சி; புன்னகை உலகில் ‘ங்கா’; In and Out Chennai

சுவையை அனுபவித்துவிட்டால், 
கம்பனால் என்ன செய்ய முடியும் 
என்பதற்கு எடுத்துக் காட்டு.

கம்பராமாயண முற்றோதல்:

எழுத்தாளர் சொக்கன் ஒருங்கிணைக்க திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் வழிநடத்த கடந்த இரண்டு சனிக்கிழமைகளாக பெங்களூரில் கம்பராமாயணம் வாசிப்பு நடைபெற்று வருகிறது.

திங்கள், 22 ஏப்ரல், 2013

நட்சத்திரக் கனவு - 'கல்யாண் நினைவுப் போட்டி' பரிசுக் கவிதை

இரு சிறுவிழிகள்
எத்தனைப் பரந்தவானை
இதயத்துள் நிரப்பி விடுகின்றன!
ஆயிரம் நட்சத்திரக் கண்களால்
வானமும் பூமியை
அளந்து கொண்டுதானே இருக்கும்?

நினைவு தெரிந்த நாளிலிருந்து
நான் பார்க்கும் வானில்
வித்தியாசங்கள் அதிகமில்லை.
பிரபஞ்சம் தோன்றிய நொடியிலிருந்து
வான் பார்க்கும் பூமியில்
எவ்வளவு வித்தியாசங்கள்?

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அதிகாலை நேரமே.. - சூர்யோதயம் - கபினி [பாகம் 2]


உதிக்கும் போதும் மறையும் போதும் பொன்மஞ்சளைப் பூசிக்கொண்டு
பிரகாசிக்கிற சூரியனை எந்நாளும்தான் பார்க்கிறோம் என்றாலும்  ஒருநாளைப் போல் ஒரு நாள் இருப்பதில்லை அது வானிலே தீட்டும் ஒளிச் சித்திரங்கள். அதுவும் ஏரி, கடல், நதிக்கரைகளில் என்றால் கேட்கவே வேண்டாம். வானோடு நீரும் தகதகக்கிற இரம்மியமான காட்சியில் உள்ளம் கொள்ளை போகிறது.

#1 அதிகாலை நேரமே..

புள்ளினங்கள் புறப்படும் வேளையில்
சவாரிக்குக் கிளம்புகின்றன பரிசல்களும்..
#2 தகதகவென..

திங்கள், 15 ஏப்ரல், 2013

என் பாட்டியின் வீடு - பண்புடன் இணைய இதழில்.. - கமலா தாஸ் கவிதை (3)



தொலைதூரத்தில் இருக்கிறது இப்போதும்,
எனக்கு அன்பை அள்ளித் தந்த வீடு...

அந்தப் பெண்மணி இறந்து விட்டாள்,
வீடும் மெளனத்துள் சுருங்கிக் கொண்டது,
புத்தகங்களுக்கு மத்தியில் சர்ப்பங்கள் நகருகின்றன,
அப்போதோ வாசிக்கும் வயதை எட்டாதிருந்தேன்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

விஜய - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மதுரை மீனாக்ஷி சுந்தரேஷ்வரர்-கூடலழகர்-நெல்லை காந்திமதி திருக்கோவில் கோபுரங்கள்

‘விஜய’ வருடத்தில்
அனைவர் வாழ்விலும் வெற்றிகள் மலரட்டும்! கனவுகள் மெய்ப்படட்டும்!
இயற்கையை மதிப்போம்!
சக மனிதரை, உயிர்களை நேசிப்போம்!
உலக அமைதிக்குப் பிரார்த்திப்போம்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***



புதன், 10 ஏப்ரல், 2013

பரிசலோட்டி பன்னீர் - படம் மீட்டெடுத்த காவேரிக்கரை நினைவும், ரிஷிகேஷ் நிகழ்வும்

செல்லுமிடங்களில் ஒரு சில நிமிடங்களோ மணிகளோ, சந்திக்கிற மனிதர்களின் பெயர்களைக் கேட்டறிந்து படத்தோடு அவர்கள் பெயரையும் குறிப்பிடுவார் தன் அனைத்துப் பயணக் கட்டுரைகளிலும் பதிவர் துளசி கோபால் அவர்கள். அவரிடத்தில் பிடித்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த நல்ல வழக்கத்தைக் கடைப்பிடிக்க நினைத்தாலும் பலநேரங்களில் மறந்து போகிறேன்.

படத்தில் இருப்பவர் பெயர் பன்னீரா என்றால், இல்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin