திறக்காதே உன் கண்களை
செளகரியமாகவே இருக்கட்டும் அவை
சின்ன மரத்தின் அடியில்
கூடைக்குள், கந்தல் பொதி மேல்.
எதுவும் சென்றுவிடவில்லை
தடதடக்கும் சரக்கு வண்டியைத் தவிர.
உன் அன்னை அதோ இருக்கிறாள்
சுள்ளிகளால் தீ மூட்டிக் கொண்டு.
அவளது முகம் கரிப் புழுதியாலும்
வியர்வையாலும் ஊறிப் போயிருக்கிறது.
கஞ்சியை முற்றுகையிடும் ஈக்களை
சூசூவென விரட்டிக் கொண்டிருக்கிறாள்.







