ஓவியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓவியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

தேடலுடன் ஒரு படைப்பாளி

#1

தேடலுடன் இருக்கும் ஒரு படைப்பாளியின் ஆக்கத்திறன் எவரும் அறிந்திராத பாதைகளில் பயணப்படுகிறது. மனதில் உதிக்கும் கருவினை கேன்வாஸிலோ பேப்பரிலோ வடித்து முடிக்கும் வரை அது சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும். பல விதங்களில் பரீட்சித்துப் பார்ப்பது கலைஞனுக்குப் பிடித்தமான ஒன்று.” என்கிற ஓவியர் வசந்த் ராவ் ஒரு எழுத்தாளரும் கவிஞரும் கூட.  ஆங்கிலத்தில் 3 கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. எழுதிய கட்டுரைகள் பல முக்கிய பத்திரிகைகளில் வந்துள்ளன.

# 2



“முன் எப்போதையும் விட இந்தியச் சித்திரக் கலை மக்களை எளிதாக சென்றடைந்து வருகிறது. ஒரு மனிதன் எங்கெங்கோ பயணப்பட்டு இயற்கை அதிசயங்களையும், புராதானக் கோவில்களையும், பாரம்பரிய மிக்க திருவிழாக்களையும் கண்டு களித்து வரலாம். ஆனால்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

சித்திரப் பாவையர் - நெல்லை ஓவியர் மாரியப்பன் - (பாகம் 1)

 #1 அம்மா என்றால் அன்பு..

ஊர் மக்களால் ‘நெல்லை ரவிவர்மா’ என அன்புடன் அழைக்கப்படும் ஓவியர் மாரியப்பனின் கைவண்ணத்தை இந்த வருட சித்திரச் சந்தையிலும் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்ததை இங்கே (2014) சொல்லியிருந்தேன். கண்டு இரசித்த ஓவியங்களின் படங்களைப் பகிர்ந்திடுவதாக வாக்கும் அளித்திருந்தேன். அடுத்த சித்திரச் சந்தை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில் நினைவு வந்து அவசரமாகப் பகிர்ந்து கொள்கிறேன் இதோ உங்களுடன், இரண்டு பாகங்களாக:)!

ரசனை மிகு மாந்தர் கூட்டம்
தொடர்ச்சியாக இது 3வது வருடம். முத்துச்சரத்தைத் தொடரும் நண்பர்கள் இவரை நன்கறிவர். புதியவர்கள் எனில் முந்தைய கண்காட்சிகளில் இவர் காட்சிப்படுத்தியிருந்த ஓவியங்களைக் காண இங்கே செல்லலாம்:  2012 (படங்கள் 1, 17, 18, 19);  2013 (காவியமா ஓவியமா?); கல்கி ஆர்ட் கேலரியில் என் கட்டுரை

கடந்த வருடங்களைப் போலல்லாமல் இவ்வருடம் இவரது ஓவியங்களைப் படமாக்குவதில் சிரமம் இருந்தது. கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இடம் ஒதுக்கப்பட்டு வருகிறவர்களைக் கவரும் வகையில், நுழைவாயில் அருகாமையில் அமைந்திருந்தது  ஸ்டால். ஓவியங்கள் எல்லாம் நிழல் சூழ்ந்த இடத்தில், சுவற்றின் மேல் வைக்கப்பட்டிருந்ததால் விரும்பியபடி கோணம் அமைக்க முடியவில்லை. மேலும் நீளவாக்கில் ஸ்டால் அமைந்திருக்க, அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர் கூட்டம் ஒரு பக்கம். முடிந்த வரையில் சிறைப்படுத்தினேன் இவர் தூரிகையில் உதித்த சித்திரப் பாவையரை:

#2 கார்த்திகைப் பெண்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin