ஞாயிறு, 19 மே, 2024

நான் யார்?

 #1

முன்னர் எவ்வாறு இருந்ததோ 
அல்லது 
நீங்கள் எவ்வண்ணம் விரும்புகிறீர்களோ 
அவ்வாறன்றி 
நிசர்சனத்தை 
உள்ளது உள்ளவாறே எதிர்கொள்ளுங்கள்.
_ Jack Welch
 
#2
“உங்களுக்கு ஒன்றின் மேல் விருப்பமில்லையா, 
அதன் ஒரே சக்தியை அப்புறப்படுத்தி விடுங்கள்: 
அதன் மீதான உங்கள் கவனம்.”
__ James Duigan 


#3
உங்கள் இலக்கை அபத்தமான உயரத்தில் வைத்து 
அது தோல்வியைத் தழுவுமானால், 
மற்ற அத்தனை பேரின் வெற்றிக்கும் முன்னே 
தோற்றுப் போவீர்கள்.

#4
நான் புத்திசாலி என்பது எனக்குத் தெரியும், ஏனெனில் எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.

_ Socrates 

#5
“எந்த யோகாசனத்தை நீங்கள் கடினமெனத் தவிர்க்க நினைக்கிறீர்களோ, 
அதுவே உங்களுக்கு மிக அத்தியாவசியமானது.”

#6
“உங்களுக்கான பாடம் நிமிர்ந்து நிற்பது, 
நிமிர்த்திப் பிடிக்கப்பட்டிருப்பது அன்று.”
_ Marcus Aurelius

#7
“என்னிடம் என்ன இருக்கிறது எனக் கேட்காதீர்கள், 
நான் யார் என்பதைக் கேளுங்கள்.”
_ Heinrich Heine

#8
“உங்களுக்கான முறை வரும் வரை, 
உங்களுக்கான நேரம் வரும் வரை 
காத்திருங்கள்.”
_ Heinrich Heine 

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. இன்றைய படங்களை வெகுவாக ரசித்தேன்.

    இரண்டாவது படத்தின் செய்தி ஏதோ ஒரு வார்த்தை அல்லது வரி விட்டுப்போனது போல இருக்கிறது.

    4 மிக அருமை. எனக்கானது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி.

      புரியும்படியாக இல்லையோ? என் வரையில் சரியாகவே தோன்றுகிறது.

      4 :)).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அனைத்து பூனையார் படங்களும் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.நம் நேரம் வரும் வரை காத்து இருக்க வேண்டும் தான்.

    பதிலளிநீக்கு
  3. #2 & #8, கவனத்தை விலக்குவது, காத்திருப்பது சிறந்த ஆலோசனை, ஆனால் எளிதாகக் கைகூடுவதில்லை:).

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin