ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தெளிவான பார்வை.. முழுமையான மனது..

#1
“அத்தனைப் பூக்களும் வெளிச்சத்தை வைத்திருக்கின்றன, 
வேரின் அடி ஆழத்தில்..”
_Theodore Roethke


#2
“தோல்விகளை விடவும் 
சந்தேகங்களே நமது பெரும்பாலான கனவுகளைக் கொன்று போடுகின்றன.”
__Suzy Kassem

#3
“சாதாரணமாகக் கவனிப்பதன் மூலமே 
ஏராளமானவற்றைக் கிரகிக்க முடியும்.”
_Yogi Berra

#4

"அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!
ஓடி வருகையிலே, கண்ணம்மா உள்ளம் குளிருதடி!
ஆடித் திரிதல் கண்டால், உன்னைப் போய் ஆவி தழுவுதடி!"
_மகாகவி சுப்பிரமணிய பாரதி
11 டிசம்பர், மகாகவியின் பிறந்த தினப் பகிர்வு
#5
“தெளிவான பார்வை.. முழுமையான மனது.. 
எதையும் இழக்காது!”
 _ T. Powell

#6
“கடந்து வந்த பயணத்தின் எந்தவொரு கணத்தையும் நினைத்து வருந்தத் தேவையில்லை. சென்று சேர வேண்டிய இடம் வராது போயிருப்பின் அதற்கானத் தயாரிப்பாக அதை எடுத்துக் கொள்வோம்.”

#7
“அனைத்தையும் கடந்து.. வா மேலெழுந்து..”

#8
“நமக்கான ஒரே பாதுகாப்பு 
நம்மை மாற்றிக் கொள்ளும் திறனே!”
 _John Lilly

#9
“நினைத்த காரியத்தைச் செய்து விடுவோம், 
அதற்காக நாம் தயாராகும் போது..!”

#10
 “பிடிமானத்தைப் பற்றிக் கொள். 
வாழ்க்கையைத் தேடிக் கொள். 
கடந்து வரப் பழகிக் கொள்.”

***
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...]

18 கருத்துகள்:

  1. படங்களும் எண்ணங்களும்
    கண்ணைப் பறித்து
    உள்ளம் நுழைகின்றன...

    பதிலளிநீக்கு
  2. படங்களும் வர்னனைகளும்அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. படங்களும் அதற்குத் தகுந்த வாசகங்களும் நன்று. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. படங்களை ரசிப்பதா... அழகான பொன்மொழிகளை ரசிப்பதா என்று புரியவில்லை.. ஒவ்வொன்றும் ரசனையின் உச்சம். நேர்த்தியான தொகுப்பு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. வரிகளையும் படங்களையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  6. ஆழ்மனதின் சக்தி, எண்ணங்களின் வலிமை ; அழகான படங்களுடன் சிந்தையைக் கவரும் வார்த்தைகள். வாசிப்பதற்குச் சுவாரஸ்யம். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. அழகான படங்கள். உரிய, பொருத்தமான கவிதைகள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin