செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

உள்ளுவதெல்லாம்..


1. "இலக்கை அடைகிறீர்கள், ஏற்கனவே அடைந்து விட்டதாக உணருவதன் மூலமாக."
- Eckhart Tolle.

2. "சரியான இலக்கில் ஆரம்பிக்கிறது வலுவான செயல்திட்டம்."
 _ Michael Porter

3. தன்னம்பிக்கை தனி அழகு.

4.“வழி ஆகாயத்தில் இல்லை. நம் இதயத்தில் இருக்கிறது.” _ புத்தர்

5. “துணிந்து நிற்பதில் அடங்கி இருக்கிறது சுதந்திரம் என்பது.”
-Robert Frost


6. நமது விருப்பத் தெரிவுகளால் ஆனதே வாழ்க்கை. சரியானவற்றைத் தெரிவு செய்வதில் அக்கறை கொள்வோம். தவறான தெரிவுகளிலிருந்து பாடம் கற்போம்.

7. "வாழ்க்கை ஒரு பியானோவைப் போன்றது. என்ன கிடைக்கிறது என்பது எப்படி வாசிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது."
_Tom Lehrer

8. சீரிய சிந்தனை சிறப்பான ஸ்தானத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.

9. செய்ய முடிவெடுத்து விட்டால் உடன் காரியத்தில் இறங்கி விட வேண்டும். தள்ளிப் போடுவதைத் தள்ளி வைக்க வேண்டும்.

10.  “ஒரு செயலைச் சரியாகச் செய்ய வரும் வரை பயிற்சியை மேற்கொள்ள எண்ணாதீர்கள். தவறு ஏற்படாமல் செய்யும் அளவிற்குத் தேர்ச்சி பெறும்வரை தொடருங்கள்!”

***

உங்களுடனான பகிர்வாகவும், எனக்கான சேமிப்பாகவும் தொகுப்பது தொடர்கிறது...

18 கருத்துகள்:

  1. பகிர்வும், சேமிப்பும் வளர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. படங்களும் கருத்துகளும் மிக அருமை. தொடரட்டும் சிந்தனைகள்....

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே அருமை. குறிப்பாக முதலிரண்டு.

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை...

    8 : எட்டுத்திக்கும் பரவட்டும்...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin