ஞாயிறு, 26 ஜூலை, 2026

காணாத உலகம்

1.
சிந்தனையுடன் கூடிய குரல், 
அதிகாரமான குரலை விட 
வெகுதூரம் பயணிக்கும்.

2.
பூமியின் ஒவ்வொரு மூலையிலும், 
அமைதியான வியப்பில் ஆழ்ந்து நிற்க 
ஒரு காரணம் உள்ளது.

3.
'நிலையான கண்கள் 
பெரும்பாலும் 
வலிமையான மனதைக் கொண்டிருக்கிறது.'

4.
'வாழ்க்கை பதில்களை விட, 
கவனத்தையே அதிகம் கோருகிறது.'

5.
"சற்று நிதானித்து கவனிப்பவர்களுக்கு, 
வாழ்க்கை தன்னை முற்றிலும் வேறுவிதமாக வெளிப்படுத்துகிறது."

6.
'எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறோமோ, 
அவ்வளவு அதிகமாக உணர முடியும்,  
இன்னும்  காணப்படாதவை எவ்வளவோ இருக்கின்றன 
என்பதை.'

7.
'சிலர் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும்போது, 
சிலர் எழுந்து சென்று அவற்றைச் சந்திக்கிறார்கள்.'

8.
'உலகை அது உள்ளபடி காணாமல், 
நாம் நமது மனதின் அடுக்குகள் வழியாகவே
அதைக் காண்கிறோம்.'
*
பறவை பார்ப்போம் - பாகம்: 144
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 238

**

3 கருத்துகள்:

  1. படங்களும் வரிகளும் அருமை.

    முதல் மூன்று படங்களுக்கு ஒரு சிறு உரை..

    1.  "யாரோ வர்றாங்களே..  அட..  அம்மா, ​அப்பா....."  மனைவி 
    2 " வந்துட்டாங்களா...   அவ்ளோதான்..  இனிமே  மூணுபேரும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க.."  கணவன்.
    3.  "ரெண்டுபேர் பார்வையிலும்தான் எவ்வளவு வித்தியாசம்?"  அம்மா / மாமியார் 
    4.  "நான்தான் சொன்னேன்ல..  மாப்பிள்ளை நம்மள சரியா வரவேற்க மாட்டாருன்னு "  மாமனார் 
    5.  'தாத்தா பாட்டி வந்திருக்காங்க..  வரவேற்பதா 'உம்'முனு இருக்கற மாதிரி காட்டிக்கறதா??!!!'  - குழந்தைகள் 

    பதிலளிநீக்கு
  2. பறவைகளின் படங்களும், அவற்றுக்கான வாசகங்களும் சிறப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பறவைகள் அனைத்தும் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin