ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

கூர்மையான உலகம்

 1.

நாம் முடிவெடுக்கும் தருணத்தில், 
தயக்கம் முடிவுக்கு வருகிறது.
(தேன் பருந்து)

2.
"உலகத்தைப் பார்த்து நீங்கள் 
சிரிக்கத் தொடங்கும் அந்த நொடியில், 
அது உங்கள் மீதான தன் அதிகாரத்தை 
இழந்து விடுகிறது."
(கரும்பருந்து)

3.
அமைதியான மனங்களிலேயே 
ஆழ்ந்த வலிமை குடிகொள்கிறது.
(இந்திய சாம்பல் இருவாச்சி)

4.
உலகத்தின் குரலுக்குச் செவிசாய்த்து, 
உங்கள் கனவுகளைச் சுருக்கிக் கொள்ளாதீர்கள்.
(மணிப்புறாக்கள்)

5.
"கூர்ந்து கவனியுங்கள், 
உண்மையில் முக்கியமானவை 
பெரும்பாலும் முதல் பார்வையில் தெரிவதில்லை."
(காட்டுச் சிலம்பன்)

6.
"எச்சரிக்கை என்பது பயம் அல்ல, 
அது விழிப்புணர்வு."
(மணிப்புறா)

7.
ஒவ்வொரு பிரச்சனையும் 
ஒரு கலந்துரையாடலுக்குத் தகுதியானது.
('இளம்' பூச்சிபிடிப்பானும், 
சாம்பல் கரிச்சானும்)

8.
உலகம் எவ்வளவு கூர்மையானதாக இருந்தாலும், 
அமைதி தங்குவதற்கு ஓரிடத்தைக் கண்டடையும்.
(மணிப்புறாக்கள்)
*
பறவை பார்ப்போம் - பாகம்: 141
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 230
**

8 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்துமே அழகு. படங்களுக்குப் பொருத்தமான வாழ்வியல் சிந்தனைகள் நன்று. தொடரட்டும் உங்கள் பறவை பார்க்கும் நிகழ்வுகளும் வாழ்வியல் சிந்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  2. முடிவெடுக்கும் தருணத்தில் என்பதைவிட செயலில் இறங்கும் கணத்தில் தயக்கம் முடிவுக்கு வருகிறது என்று சொல்லலாமோ!

    மணிப்புறா முட்கம்பியில் எவ்வளவு லாவகமாக உட்காருகிறது!

    படங்களும் வரிகளும் வழக்கம்போல அழகு, ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவு எடுப்பதே செயலில் இறங்குவதற்குதான், எனினும் நீங்கள் சொல்வது சரியே. படத்தில் தேன்பருந்து இன்னும் செயலில் இறங்காததால் வாக்கியத்தை அப்படியே விட்டு விட்டேன் :)).

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகு, அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. உலகத்தின் குரலுக்குச் செவி சாய்த்து உங்கள் கனவுகளைச் சுருக்கிக் கொள்ளாதீர்கள்//

    அருமையான வரி. external validation ற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டே.

    அந்தப் புறா பறப்பது செம ஷாட். படங்கள் எல்லாம் அத்தனை அழகு.

    வரிகளையும் படங்களையும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin