சனி, 30 டிசம்பர், 2017

தூறல்: 32 - முத்துச்சரம் 2017; பாகுபலி; வல்லமை; ஆல்பம்

முத்துச்சரம்:
ப்போதுதான் பிறந்தது போலிருந்த 2017 இதோ முடியப் போகிறது.  முத்துச்சரத்தில் கோத்தவற்றில் திரும்பிப் பார்க்கும் வகையில் அதிகம் ஏதுமின்றி நகர்ந்து போன வருடம். இருந்தாலும் இந்த வருடக் குறிப்பாக இருக்கட்டுமென...

சராசரியாக மாதம் ஐந்து பதிவுகள். எழுத்து குறைந்து போனாலும் கேமராவை கீழே வைக்காததால் ஃப்ளிக்கரில் பகிர்ந்த படங்களின் தொகுப்புகள், பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுப்பின் கீழ்: (17 பதிவுகள்)

2008_ஆம் ஆண்டு தொடங்கிய ஃப்ளிக்கர் பக்கத்தில், சராசரியாக தினம் ஒன்றாகப் பதிந்த படங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இடைவிடாமல் ஒரு துறையிலேனும் இயங்கி வருவதில் திருப்தியே.

முத்துச்சரத்தில், புகைப்பட வரிசையில் என் வீட்டுத் தோட்டத்தில்.. (19 பதிவுகள்) மற்றும் பறவை பார்ப்போம் (12 பதிவுகள்) பாகங்களும் அடங்கும்.


தினமலர் பட்டம் இதழில், எடுத்த படங்களுடன் வெளியான தகவல்கள்: (5)

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

சுவைக்கலாம் வாங்க.. (1)

டேபிள் டாப் போட்டோகிராபி சவாலானதும் சுவாரஸ்யமானதும் ஆகும். நாம் எடுக்கும் கருப்பொருட்களுக்கு சரியானபடி பக்கங்களிருந்தோ மேலிருந்தோ வெளிச்சம் கொடுக்க வேண்டும். அல்லது எக்ஸ்டர்னல் ஃப்ளாஷ் கூரையில் பட்டு பவுன்ஸ் ஆகி வெளிச்சம் கருப்பொருள் மீது பரவலாக விழ வேண்டும். இதற்கென்றே இப்போது பின்னணிக்காகப் பல வண்ண விரிப்புகளுடன் சிறு கூடாரங்கள் மற்றும் பக்க வாட்டில் உபயோகிப்பதற்கான லைட்ஸ் விதம் விதமாக விற்பனையில் உள்ளன. இணையத்தில் தேடி வரவழைத்துக் கொள்ளலாம். நான் சாதாரணமாக வீட்டு மேசைகளில் வைத்து, மேசை விளக்குகள் மற்றும் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷ் பயன்படுத்தி எடுத்த உணவுப் படங்கள், ஞாயிறு படங்களாக இன்று...

#1
உலர்ந்த அத்திப் பழம்


#2
பட்டர் குக்கீஸ்


#3
டோக்ளா


#4
பன்னீர் ஜிலேபி

வெள்ளி, 22 டிசம்பர், 2017

தோட்டத்துக்குப் போயேன் செல்லம்...

ன்றையக் குட்டிச் செல்லங்கள் பலருக்கும் பிடித்தமான, அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் பாட்டு கண்மணி ரைம்ஸின் (சோம்பேறிப் பையன்) ‘தோட்டத்துக்குப் போயேன் ராமா’. அதைத் தழுவி சுறுசுறுப்புச் செல்லத்தின் படங்கள் எட்டு...:)


**

#1
'தோட்டத்துக்குப் போயேன் செல்லம்..'

ஆஹா, அணில்கள் பார்க்கலாமே அம்மா!

#2
'மாடு மேச்சு வா செல்லம்..'

'ஓ, கன்னுக்குட்டிகளோடு விளையாடக்
கெளம்பிட்டேன் அம்மா!'

#3
'அடுப்பு மூட்டு செல்லம்!'

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தெளிவான பார்வை.. முழுமையான மனது..

#1
“அத்தனைப் பூக்களும் வெளிச்சத்தை வைத்திருக்கின்றன, 
வேரின் அடி ஆழத்தில்..”
_Theodore Roethke


#2
“தோல்விகளை விடவும் 
சந்தேகங்களே நமது பெரும்பாலான கனவுகளைக் கொன்று போடுகின்றன.”
__Suzy Kassem

#3
“சாதாரணமாகக் கவனிப்பதன் மூலமே 
ஏராளமானவற்றைக் கிரகிக்க முடியும்.”
_Yogi Berra

வெள்ளி, 8 டிசம்பர், 2017

செந்தார்ப் பைங்கிளி (அ) சிகப்பு ஆரக்கிளி - பறவை பார்ப்போம் (பாகம் 21)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 25)
ச்சை நிறத்துடன், வளைந்து சிவந்த அலகும், நீண்டு கூர்மையாக முடியும் வாலும் கொண்டவை செந்தார்ப் பைங்கிளிகள்.

#1
ஆங்கிலப் பெயர்: Rose-ringed parakeet

வால் அதன் சிறகுகளையும் சேர்த்து 40 செ.மீ நீளம் கொண்டவை. விரிகிற ஒரு பக்க இறக்கையின் நீளம் மட்டும் சராசரியாக 15-17 செ.மீ வரை இருக்கும்.

#2
உயிரியல் பெயர்: Psittacula krameri
ஆண் கிளிகளுக்கு கருப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தில் கழுத்தில் வளையம் போன்ற ஆரம் இருக்கும். அதனாலேயே ஆரக்கிளி எனும் பெயர் வந்தது. பெண் கிளிகளுக்கும் இளம் கிளிகளுக்கும் ஆர வளையம் இருக்காது. ஒரு சிலவற்றிற்கு

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மீட்க முடியாத மூன்று

#1
“எவ்வளவோ இருக்கிறது வாழ்க்கையில்,
அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும்..”
_ காந்திஜி

#2
“வானில் இல்லை, நம் மனதில் இருக்கிறது வழி!”
_புத்தர்

#3
"ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு."
_Protagoras

ஞாயிறு, 26 நவம்பர், 2017

என் வழி.. தனி வழி..!

#1
“ஏற்கனவே தம்மிடம்  இருப்பவற்றைப் போற்றிடத் தெரியாதவருக்கு என்றைக்குமே கிடைக்காது மகிழ்ச்சி.”
-புத்தர்

#2
“எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள். ஆனால்,
ஒருபோதும் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள்” 

#3
"ஓரிடத்தில் நிற்பதும் 
சில நேரங்களில் முன்னேறிச் செல்வதற்கு ஒப்பாகும்"

#4
"பொறுமை காத்திடுங்கள். 
சரியான நேரத்தில் எல்லாம் வந்து சேரும்."
_புத்தர்

வியாழன், 16 நவம்பர், 2017

அவளும் நோக்கினாள் - சிறுகதை

வலை உலகில் தங்கள் பாணி புதிய பாணி என ஒரு பல்சுவை இதழாகச் செயல்பட்டு வருகிறது “எங்கள் ப்ளாக்”.  அதன் ஆசிரியர்களில் ஒருவரான திரு ஸ்ரீராம், மறைந்த அவரது தந்தை எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசைப்படி, ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என நிறைவடையுமாறு கதை எழுத நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார். தன் தந்தை உறவினர் வட்டத்தில் முயன்றிடச் சொன்னதை அனைவருக்குமான அன்பு வேண்டுகோளாக முன் வைக்க... அந்த வரிசையில் 27_வது கதையாக எனது பார்வையில் சீதை ராமனை மன்னிக்கும் கதை..


அவளும் நோக்கினாள்
சிலுசிலு என்று வீசிய வேப்பமரக் காற்று உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆறுதலாய் இருக்க, வாசற்படியில் சாய்ந்து அமர்ந்திருந்த மைதிலி அப்படியே அதில் லயித்துக் கண் அசந்து விட்டாள்.

‘பாம்.. பாம்’

‘ஆஆ.. அவர் கார்..  ஆ.. வந்துட்டார்..’

‘பேரன் பேத்தி எடுத்த பிறகும் இப்படி வாசப்படியில ஒக்காந்து... வேடிக்கைப் பார்க்கிறேங்கற பேர்ல... வெட்கமாயில்ல...’ ஈட்டிப் பார்வையில் ஒலிக்காமல் ஒலித்த வார்த்தைகள் உள்ளத்தைத் துளைக்க விதிர்விதிர்த்து எழுந்து நின்றாள் மைதிலி.

புதன், 8 நவம்பர், 2017

கடவுளின் தாய்மொழி

#1
“அனுமானங்களில் நனைந்து நிற்பதை நாம் அறியாத வரையில் நம்மை நாம் அறிந்து கொள்ளவே முடியாது.” _Adrienne Rich

#2
"எந்தவொரு பிரச்சனையிலும் நீண்ட காலம் நின்று விட வேண்டாம், வாழ்க்கைப் படகு எப்போதுமே மிதமாகப் பயணிப்பதில்லை ஆதலால் மூழ்கிட நேரலாம்."

#3
“நம்மைப் பிரிப்பது நமக்கிடையேயான வித்தியாசங்கள் அல்ல. அவற்றை அங்கீகரிக்கவோ, ஒப்புக் கொள்ளவோ, கொண்டாடவோ முடியாத நம் இயலாமையே.”
_Audre Lorde

வெள்ளி, 27 அக்டோபர், 2017

குண்டுக் கரிச்சான்.. வண்ணாத்திக் குருவி.. ( Oriental magpie-robin ) - பறவை பார்ப்போம் (பாகம் 20)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 24)
#1
ஆங்கிலப் பெயர்: Oriental magpie-robin
குண்டுக் கரிச்சான் குருவி என அறியப்படும் oriental magpie-robin நான் பாகம் 15_ல் பகிர்ந்திருந்த ’வெண்புருவ வாலாட்டி'யின் அளவிலும் தோற்றத்திலும் இருந்தாலும் இவற்றுக்கு முகத்திலும் வாலிலும் வெண்ணிறக் கோடுகள் இருக்காது. கிளைகளைப் பற்றிக் கொண்டு அமரும் பாசரைன் வகைப் பறவையான இது ஒரு காலத்தில் பாடும் பறவைகளோடு வகைப்படுத்தப் பட்டிருந்தாலும், தற்போது  Old World flycatchers பூச்சிப் பிடிப்பான்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

#2

உயிரியல் பெயர்: Copsychus saularis

இவை தனித்துவமான கருப்பு-வெள்ளை நிறத்தில் இருக்கும். நீண்ட வாலை கீழுள்ள படத்தில் இருப்பது போல் உயர்த்திக் கொண்டு நிலத்தில் பூச்சிகளைத் தேடும்.

#3

செவ்வாய், 17 அக்டோபர், 2017

கல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..

256 பக்கங்களில் ஆன்மீகக் கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், நேர்காணல்கள், ஓவியங்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளுடன்.. எப்போதும் போலவே சிறப்பாக வெளிவந்துள்ளது  இந்த வருட கல்கி தீபாவளி மலர்.

எனது ஒளிப்படமும்.. பக்கம் 77_ல்..

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

புதன், 11 அக்டோபர், 2017

லலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)

மைசூரின் கிழக்குப் பாகத்தில், சாமுண்டி மலைக்கு அருகில் இருக்கும் லலித மஹால், நகரின் இரண்டாவது மிகப் பெரிய அரண்மனை.
#1

1921 _ ஆம் ஆண்டு மகராஜா நான்காவது கிருஷ்ண உடையாரினால், பிரிட்டிஷ் வைஸ்ராய் மற்றும் ஆங்கிலேய உயர் அதிகாரிகள் வந்து தங்குவதற்கென்றே பிரத்தியேகமாகக் கட்டப்பட்டது.

#2


லண்டனில் இருக்கும் செயிண்ட்.பால் கத்தீட்ரல் போலவே வடிவமைக்கப் பட்ட ஒன்று. குறிப்பாக நடுவில் இருக்கும் அதன் குவிந்த மாடம் (dome).  நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த அழகிய மாளிகை,

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அன்பால் மலையும் அசையுமடி!

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 23)
#1
“பறவையானது அதன் சொந்த வாழ்வாலும் உந்துதலாலுமே செலுத்தப்படுகிறது.”
_Dr. APJ Abdul Kalam

#2
“நம் கண்களுக்குப் புலப்படுவது நாம் எதை எதிர்நோக்கிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது”
_ John Lubbock

#3

“ஒரே இடத்தில் தங்கி விட அல்ல உலகம், அது மிகப் பெரியது. 
ஒரே விஷயத்தை மட்டுமே செய்வதற்கல்ல வாழ்க்கை, ஏனெனில் அது மிகக் குறுகியது.”


#4
“அத்தனை ஜீவராசிகளுக்கும் நண்பனாய் இருப்பவனே நல்ல மனிதன்.”__Mahatma Gandhi

புதன், 4 அக்டோபர், 2017

சிறகு விரிந்தது - ஒரு பார்வை - திண்ணையில்..

விதைகளைத் தன் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன்.  அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன.

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

வார்த்தைகள் தோற்கும் போது..

#1
‘கற்றலில் கிடைப்பது அறிவு. வாழ்தலில் கிடைப்பது ஞானம்.’
_ Anthony Douglas Williams


#2
‘வெற்றிகளை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். 
தோல்விகளை உங்கள் மனதில் இருத்தி வைக்காதீர்கள்’
_ Anthony Douglas Williams


#3
“காலம் கடிகாரங்களால் கணக்கிடப்படுவதன்று, 
நாம் வாழும் கணங்களால்..”

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)

மைசூர் அரண்மனையைப் பார்த்து ரசிப்பவர்கள் பெரும்பாலும் பார்க்கத் தவறிவிடுவது மேற்கே சற்று தொலைவிலேயே அமைந்த ஜெகன்மோகன் அரண்மனையை. இந்த அரண்மனை மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்டது. இந்து பாரம்பரியப் பாணியில் மூன்று தளங்களோடு கட்டப்பட்டுள்ளது. 1900_ஆம் ஆண்டில் வெளிப்புறத்தில்.. முகப்பில்.. மூன்று நுழைவாயில்களுடனான (படத்தில் காணலாம்) பெரிய கூடம் புதிதாக இணைக்கப்பட்டது. அரண்மனையின் உட்புறம் சுவர்ச் சித்திரங்களோடு திகழ்கிறது. மைசூர் ஓவியப் பள்ளியின் பாணியில் தசரா காட்சிகள், யானை சவாரி போன்றவை  மூன்று நீண்ட சுவர்களில் வரையப்பட்டுள்ளன. தொடக்கக் கால தசராக் கொண்டாட்டத்தைக் கண் முன் கொண்டு வரும் இந்த ஓவியங்கள்  காய்கனிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகளைச் சாயமாகப் பயன்படுத்தி வரையப்பட்டிருக்கின்றன. மரத்தில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட தசாவதாரக் காட்சிகளையும் இங்கே பார்க்கலாம். 

உடையார் குடும்பத்தினர் அம்பாவிலாஸ் அரண்மனை கட்டப்படும் வரை இங்குதான் இருந்தனர். 1912-ல் அம்பா விலாஸ் அரண்மனை முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படும் வரை ஆண்டுவிழா மற்றும் தசரா விழாக்கள் இங்குதான் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்களையும், சிற்பங்களையும் கொண்ட இந்த அரண்மனை தற்போது அருங்காட்சியமாகவும் ஓவியக் கலைக் கூடமாகவும் பராமரிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்களோடு உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிகளின் வரலாறும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

அவற்றுள் என்னை மிகக் கவர்ந்தவை ஓவியர் ராஜா ரவிவர்மா வரைந்த அசல் ஓவியங்கள் பதினாறு.

சனி, 23 செப்டம்பர், 2017

ஏரி குளங்களும்.. நவராத்திரி கொலுப் பொம்மைகளும்..

ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண ஹனுமன்
ழிவழியாய் மக்கள் வருடந்தோறும் கொண்டாடும் நவராத்திரியில் கொலு வைப்பதென்பது ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி எனத் தேவியரைப் போற்றும் இறை வழிப்பாட்டைத் தாண்டியும் சில முக்கியக் காரணங்கள் இந்தக் கலாச்சாரத்திற்கு இருந்திருக்கிறது.

ஒன்று, கல்வி. கொலு அலங்காரங்கள், பொம்மைகள் அடுக்குதல் என்பதில் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஈடுபடுவார்கள். முக்கியமாகக் குழந்தைகள் குதூகலத்துடன் தங்களால் இயன்றதைச் செய்வார்கள். அவர்களுக்கு கொலுப் பொம்மைகளின் மூலமாகவே நமது இதிகாசங்கள், புராணங்கள், வழிபாடுகள், கலாச்சாரங்கள், பொது அறிவு எனப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் பண்டிகையாக அமைகின்றன நவராத்திரி கொலுக்கள். அவரவர் வீட்டுப் பொம்மைகள் மட்டுமின்றி செல்லுமிடங்களில் காணும் பொம்மைகளைப் பற்றி கேட்டறிந்து அறிவை வளப்படுத்திக் கொள்ள உதவின.

#2
தசாவதாரம்
அடுத்து,

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

அதிர்ஷ்டசாலிகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (11) - சொல்வனம் 176_ஆம் இதழில்..



விரைவுச் சாலையில் மழையில் மாட்டிக் கொண்ட போது
நேரம் மாலை ஆறு பதினைந்து
நில், முதல் கியருக்கு மாறு, மீண்டும் நில்
நாங்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பணியிலிருப்பவர்கள்
வேறெதைப் பற்றியும் சிந்திக்க விரும்பாதவர்களாய்
வானொலியை எவ்வளவு முடியுமோ
அவ்வளவு சத்தமாக அலற விட்டிருந்தோம்
சிகரெட்டைப் பற்ற வைத்தபடி.

நாகரீக உலகின் பெரும்பாலான மக்கள்
ஒரு காலத்தில் மரத்திலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள்
இப்போது வாகனங்களில் அதுவும் சாலைகளில் வாழ்கிறார்கள்.

சனி, 9 செப்டம்பர், 2017

ஒரு மஞ்சக் குருவி.. தூக்கணாங்குருவி .. ( Baya Weaver ) - பறவை பார்ப்போம் (பாகம் 18)

#1
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் தூக்கணாங்குருவிகளின் இனப்பெருக்கக் காலம். சென்ற வருடமும் இதே நேரம்தான் தோட்டத்து முருங்கை மரத்தில் இக்குருவிகள் கட்டிய கூட்டை வியந்து பார்த்து முதன் முதலாகப் படமாக்கிப் பகிர்ந்திருந்தேன்: தூக்கணாங்குருவிகளும்.. செம்மீசைச் சின்னான்களும்.. ! [தொடர்ந்து தினமலர் பட்டம் இதழிலும்.. படங்களுடன்: தேர்ந்த நெசவாளி] முதல் பதிவில் 55-200mm லென்ஸின் ஃபோகல் லென்த் எனக்குப் போதுமானதாக இல்லை என்றும் சொல்லியிருந்தேன். பின் தோட்டத்து விஸிட்டர்களைப் படம் எடுக்க என்றே அடுத்த இரு  மாதங்களில் 70-300mm லென்ஸ் வாங்கியதில் ஓரளவுக்குப் பறவைகளை வீட்டுக்குள் இருந்தே நெருங்க முடிகிறது இப்போது.

#2

கடந்த இருமாதங்களில் பகிர்ந்த படத் தொகுப்புகளில் ஏற்கனவே இந்த சீசனில் எடுத்த படங்கள் சிலவற்றைச் சிந்தனைத் துளிகளோடு பகிர்ந்து விட்டுள்ளேன். மேலும் எடுத்த சில உங்கள் பார்வைக்கு...

#3
"You may see me struggle but you will never see me quit."
- C.J. Watson.
சென்ற வருட சீஸன் முடிந்ததும் கண்ணிலேயே படாமல் காணாது போய் விட்ட தூக்கணாங்குருவிகள், மறுபடியும் இந்த ஜூலையில் கூட்டம் கூட்டமாக வந்து பல கூடுகளை என் வீட்டு மரத்திலும் பக்கத்து வீடு, தோட்டத்தை அடுத்து வெளியே இருக்கும் ஈச்ச மரம் ஆகியவற்றில் கணக்கு வழக்கு இல்லாமல் கூடுகளைக் கட்ட ஆரம்பித்தன.

#3
முருங்கை மரத்திலும் ஈச்ச மரத்திலுமாக..

திங்கள், 4 செப்டம்பர், 2017

அம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)

சரா நெருங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை பேர், குறிப்பாகப் புகைப்படக் கலைஞர்கள் மைசூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது. சுற்றுலா நகரமாக வருடம் முழுவதுமே ஏராளமான பயணிகளை ஈர்க்கும் மைசூர், கோலாகலமான தசரா சமயத்தின் பத்து நாட்களில் (சென்ற வருடக் கணக்குப்படி)  சராசரியாக 10 முதல் 12 இலட்சம் மக்கள் வருகை தரும் இடமாக இருந்து வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்நேரத்தில் திட்டமிடப் பயனாகவும் ஒரு நினைவூட்டலாகவும் இருக்கட்டுமே என, ஐந்து வருடங்களுக்கு முன் சென்றிருந்த போது எடுத்த படங்கள் இருபத்தேழுடன் ஒரு பகிர்வு:

மைசூருக்குப் பெருமை சேர்க்கும் முதல் இடமாக இருப்பது “அம்பா விலாஸ்” அரண்மனை.
#1

மைசூர்  மாகாணத்தின் மையப் பகுதியில் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் கலைநுட்பத்துடன் கட்டப்பட்ட அரண்மனையானது  1897ம் ஆண்டு எதிர்பாராத வகையில் தீப்பிடித்து எரிந்து போக, அப்போது மன்னராக இருந்த மும்மடி கிருஷ்ணராஜ உடையார் புதிய அரண்மனை உருவாக்க திட்டமிட்டார்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..

மெட்ரோ, சாலை விரிவாக்கம், அதற்காக இழந்த மரங்கள், எங்கெங்கும் முளைத்திருக்கும் ஷாப்பிங் மால்கள், எந்தப் பக்கம் திரும்பினாலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஐடி வளாகங்கள்.. இவைதாம் தோட்ட நகரம் என அறியப்பட்ட பெங்களூரின் இன்றைய அடையாளங்கள். காலத்திற்கு அவசியமான மாற்றங்கள் என என்னதான் நியாயப் படுத்தினாலும் பெங்களூர் தன் பழைய அழகை எப்போதோ தொலைத்து விட்டிருப்பதை பல காலமாக இங்கே குடியிருப்பவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெங்களூரை அவ்வப்போது நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை ரொம்பப் பழகிய இடங்களுக்குச் சென்று வருகையில்.

நேற்று முன் தினம், ஒரு உணவகத்தில் அன்றைய பெங்களூரை நினைவு படுத்தும் விதமான ஓவியங்களைக் கண்டதும் மகிழ்ச்சி தாங்கவில்லை. அவை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பெங்களூரைச் சித்தரிப்பவையாக இருந்தன. நின்று நின்று ஒவ்வொன்றையும் ரசித்த பின்னர் படம் எடுத்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள. பிரபல கார்ட்டூனிஸ்ட் பால் ஃபெர்னான்டஸ் வரைந்த ஓவியங்கள் இவை. பின்னர் இணையத்தில் தேடியபோது அவரது படைப்புகள் மேலும் பல பார்க்கக் கிடைத்தன எனினும் நான் படமாக்கியவற்றை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன். என் கணிப்பின் படியே இவை 1960-70_களின் பெங்களூர் என்பதும் தெரிய வந்தது. ஓவியங்களுக்கு நேரெதிரே இருந்து எடுக்க முடியாமல் இருக்கைகள் தடுக்க, நிற்க முடிந்த இடங்களில் மின் விளக்குகளின் பிரதிபலிப்பு விழ, சமாளித்து எடுத்த கோணங்களில்.. படங்கள்:

#1
எம்.ஜி. ரோட் என அறியப்படும் மகாத்மா காந்தி சாலையில், ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை


எத்தனையோ முறை சென்றிருக்கிறேன். அருகே இருந்த பல பிரபல கடைகள், திரையரங்குகள் காணாமல் போயிருக்க இன்றைக்கும் தாக்குப் பிடித்து அதே கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

#2
எம்.ஜி ரோடில் காஃபி ஹவுஸ்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

நாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)

#1
காட்டு மைனா
வேறு பெயர்: காட்டு  நாகணவாய்
தெற்கு ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளான இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பர்மா மற்றும் இந்தோநேஷியாவில் சாதாரணமாகத் தென்படுகிற பறவை காட்டு மைனா. மரங்களில் அடையும், கிளைகளைப் பற்றி அமரும் 'பாசரைன்' (Passerine) வகைப் பறவைகளுள் ஒன்றே மைனா.


வனப் பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் பார்க்கலாம். குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகாமையில் நெல் சாகுபடியான வயல் பக்கங்களில் அதிகமாகத் தென்படும்.

#2
ஆங்கிலப் பெயர்: Jungle myna

ஒன்பது அங்குல உயரத்தில் சாம்பல்  நிறத்தில் இருக்கும்.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

வாழும் கலை

சென்ற வாரம் என் ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிர்ந்த படங்களின் தொகுப்பு:

#1
“சூரியன் கூடத் தனியேதான் இருக்கிறது. 
ஆனாலும் பிரகாசமாகவே இருக்கிறது.”

#2
“நீண்ட தொலைவுக்கு உங்கள் பார்வை செல்ல வேண்டாம்,  ஏனெனில் உங்களால் எதையுமே பார்க்க முடியாது போகும்.”

#3
“ஐந்தே நிமிடக் கருத்துப் பரிமாற்றம் ஓர் ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்க வல்ல மனஸ்தாபத்தையும் குழப்பத்தையும் தவிர்க்க உதவும்.”
_Joyce Meyer 

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

காட்டுச் சிலம்பன் - Jungle Babbler - பறவை பார்ப்போம் (பாகம் 16)

#1
ஆங்கிலப் பெயர்: Jungle babbler
காட்டுச் சிலம்பன் மைனாவைவிட சற்று சிறிதாக ஆனால் அதை விடக் குண்டாக, தவிட்டு நிறத்தில், சற்றே நீண்ட வாலுடன் இருக்கும். எப்போதும் ஏழெட்டு பறவைகளாகத் திரியும் என்பதால் ஆங்கிலத்தில் செவன் சிஸ்டர்ஸ் என்ற பெயரும் உண்டு.

ஆண், பெண் இரண்டும் பார்க்க கிட்டத்தட்ட ஒரே போலவே இருக்கும். தவிட்டுக் குருவியும் இதே தோற்றத்தில் இருப்பதால் பலர் இரண்டையும் ஒன்றாகக் கருதுவதுண்டு. ஆனால் yellow-billed babbler எனப்படும் தவிட்டுக்குருவியின்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இயேசுநாதரின் வாக்குறுதி..

#1
“உங்கள் உண்மை ஸ்வரூபத்தை 
நீண்ட நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது”
_ Cassandra Clare



#2
"நன்றியுடமை, அபரிமிதத்திற்கான திறந்த கதவுகள்"
ஈச்சம் பழம்

#3
"இயேசுநாதர் உயிர்தெழுவதாகக் கொடுத்த வாக்குறுதி விவிலியத்தில் மட்டும் இல்லை,

சனி, 5 ஆகஸ்ட், 2017

எல்லோருக்கும் ரமணா

#1
பேரமைதியுடன் திகழும் தியான மண்டபத்துடன் கூடிய ரமண மகிரிஷி கோவில் ஒன்று பெங்களூரின் மெக்ரி சர்க்கிள் அருகே உள்ளது.
#2

கோவிலை அடுத்த பூங்காவுக்கு ஏன் “ரமண மகிரிஷி பூங்கா” எனப் பெயர் வந்ததென்பது தற்செயலாகப் பூங்காவை ஒட்டி இருக்கும் மைதானத்தைக் கடந்து சென்ற போதுதான் புரிந்தது.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

தூறல்: 31 - ஒரு பாராட்டு; யாஷிகா டி; ஆல்பம்

ணைய உலகில் நாம் பகிரும் எதற்கும் பாராட்டோ, விமர்சனமோ எதுவாயினும் உடனுக்குடன் கருத்து கிடைத்து விடுகிறது. சமூக வலைத் தளங்களில் குறைந்தபட்ச அங்கீகாரமாக ஒரு விருப்பக் குறியேனும். ஆனால் அன்றைய நாட்களில் அப்படி அல்ல. நம் படைப்பை வாசித்து அக்கறையுடன் அது குறித்து ஆசிரியருக்கு ஒருவர் கடிதம் எழுத, அது பிரசுரமாகும் போதுதான் நமக்குத் தெரியவரும். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதிதான். அப்படி இருக்கையில் ஒரு சிறந்த எழுத்தாளரிடமிருந்து கிடைத்த பாராட்டை ஒரு பொக்கிஷமாக இங்கே சேமித்துக் கொள்கிறேன். இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்....
1990_ஆம் ஆண்டு நண்பர் வட்டம் இலக்கிய இதழில் நான் எழுதியிருந்த கதை குறித்து அதற்கு அடுத்த இதழில் 'எழுத்தாளர் வல்லிக்கண்ணன் - goo.gl/o41MBh',  தனது கடிதத்தில்:

வியாழன், 27 ஜூலை, 2017

வெண்புருவ வாலாட்டி ( white-browed wagtail ) - பறவை பார்ப்போம் (பாகம் 15)


ஆங்கிலப் பெயர்: white-browed wagtail
நம் நாட்டில் ஏழுவகையான வாலாட்டிகள் காணப்படுகின்றன. அவற்றுள்
வெண்புருவ வாலாட்டி (white-browed wagtail) அல்லது வரிவாலாட்டிக் குருவி என்பது இந்தியாவின் ஒரே ஒரு, இடம் பெயரா, வாலாட்டிப் பறவை இனமாகும். இதன் உயிரியல் பெயர்

புதன், 19 ஜூலை, 2017

என்னால் முடியும்! - மஹாத்ரிய ர பொன்மொழிகள் 11

#1
“நீங்கள் விரும்புவது கிடைப்பதில்லை. 
எதற்கு நீங்கள் தகுதியானவரோ அதுவே கிடைக்கிறது.”


#2
“நம் முன்னோர்கள் கற்றுத் தந்ததை விட்டொழித்தால், 
நம்முடையன எதுவுமே மிஞ்சாது"

#3
“எந்த ஒரு ஈர்ப்புக்கும் ஒரு கவனச் சிதறலும் தேவையாக இருக்கிறது. 
சிறு இடைவேளைகள் இல்லாது போயின் நாம் உடைந்து போவோம்.”

#4
“ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் வைத்திருப்பதோடு, தங்கள் சொல்லே இறுதியானதாக இருக்க விரும்புகிறார்கள்.” 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin