Saturday, May 25, 2013

உன்னிடத்தில் என்னை விட்டு.. - ரோஜாப் பூந்தோட்டம் - கபினி ( இறுதிப் பாகம்)

‘பேசும் படங்கள்’ பகுப்பின் நூறாவது பதிவு. ஏன் இந்தப் பெயரில் தொகுக்கத் தொடங்கினேன் என்பது இறுதியில்..

இப்போது நுழையலாம் பூங்காவினுள்..

[14_ல் ஓரிரு படங்கள் முன்னர் சில பதிவுகளில் பகிர்ந்திருந்தாலும், கபினி தோட்டத்து மலர்கள் என்ற வகையில் மீண்டும் இடம் பெறுகின்றன.]

#1 அரும்பும் மலரும்..

#2 முகம் மலர்ந்து..

Wednesday, May 22, 2013

மெய்யெனப்படுவது.. - கீற்று மின்னிதழில்..


சலனமற்ற நீரில் தெரியும்
பிரதிபலிப்புகளாகவும்
நிஜமென்று மயங்க வைக்கும்
பிம்பங்களாகவும்
காண்கின்ற யாவும்.

Saturday, May 18, 2013

‘மலரே.. முகம் காட்டு..’ - பன்னீரில் நனைந்த பூக்கள் - படங்கள் 22 - கபினி (பாகம் 3)

#1  மலரே முகம் காட்டு..

காட்டியதா:)?

காணலாம் பதிவிலே, பன்னீரில் நனைந்த பூக்களை.

கபினி நதியோர மண்ணின் செழுமையால் மட்டுமின்றி நட்டு வளர்த்துப் பராமரிப்பவரின் உழைப்பாலும் மலர்ந்து சிரித்த மலர்கள்.

வாங்க இரசிக்கலாம், தோட்டத்தைச் சுற்றி நடந்தபடியோ இல்லை இப்படி அமர்ந்தபடியோ...

# 2

#3 கேந்திப் பூ

Thursday, May 16, 2013

கோடை மழை – ‘மட்சுவோ பஷோ’ ஜப்பானியக் கவித்துளிகள்



1.
ஊதக்காற்றில் சாயும் வாழைமரம்
ஊற்றுகிறது மழை நீரை
வாளிக்குள்.

2.
என் கூரையாய் நிற்கும் மரத்தின் கீழ்
ஏப்ரல் மழையின் சரிவான கோடுகள்
துளிகளாய்ப் பிரிகின்றன.

Friday, May 10, 2013

என் சின்னஞ்சிறு பெண்ணே..


நிற்க.. நடக்க.. 
சிறகு விரித்துப் பறக்க.. மட்டுமல்ல..
உன்னை நீ பாதுகாத்துக் கொள்ளவும் 
கற்றிட வேண்டும் கண்ணே!
Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin