வெள்ளி, 27 அக்டோபர், 2017

குண்டுக் கரிச்சான்.. வண்ணாத்திக் குருவி.. ( Oriental magpie-robin ) - பறவை பார்ப்போம் (பாகம் 20)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 24)
#1
ஆங்கிலப் பெயர்: Oriental magpie-robin
குண்டுக் கரிச்சான் குருவி என அறியப்படும் oriental magpie-robin நான் பாகம் 15_ல் பகிர்ந்திருந்த ’வெண்புருவ வாலாட்டி'யின் அளவிலும் தோற்றத்திலும் இருந்தாலும் இவற்றுக்கு முகத்திலும் வாலிலும் வெண்ணிறக் கோடுகள் இருக்காது. கிளைகளைப் பற்றிக் கொண்டு அமரும் பாசரைன் வகைப் பறவையான இது ஒரு காலத்தில் பாடும் பறவைகளோடு வகைப்படுத்தப் பட்டிருந்தாலும், தற்போது  Old World flycatchers பூச்சிப் பிடிப்பான்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

#2

உயிரியல் பெயர்: Copsychus saularis

இவை தனித்துவமான கருப்பு-வெள்ளை நிறத்தில் இருக்கும். நீண்ட வாலை கீழுள்ள படத்தில் இருப்பது போல் உயர்த்திக் கொண்டு நிலத்தில் பூச்சிகளைத் தேடும்.

#3

செவ்வாய், 17 அக்டோபர், 2017

கல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..

256 பக்கங்களில் ஆன்மீகக் கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், நேர்காணல்கள், ஓவியங்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளுடன்.. எப்போதும் போலவே சிறப்பாக வெளிவந்துள்ளது  இந்த வருட கல்கி தீபாவளி மலர்.

எனது ஒளிப்படமும்.. பக்கம் 77_ல்..

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

புதன், 11 அக்டோபர், 2017

லலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)

மைசூரின் கிழக்குப் பாகத்தில், சாமுண்டி மலைக்கு அருகில் இருக்கும் லலித மஹால், நகரின் இரண்டாவது மிகப் பெரிய அரண்மனை.
#1

1921 _ ஆம் ஆண்டு மகராஜா நான்காவது கிருஷ்ண உடையாரினால், பிரிட்டிஷ் வைஸ்ராய் மற்றும் ஆங்கிலேய உயர் அதிகாரிகள் வந்து தங்குவதற்கென்றே பிரத்தியேகமாகக் கட்டப்பட்டது.

#2


லண்டனில் இருக்கும் செயிண்ட்.பால் கத்தீட்ரல் போலவே வடிவமைக்கப் பட்ட ஒன்று. குறிப்பாக நடுவில் இருக்கும் அதன் குவிந்த மாடம் (dome).  நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த அழகிய மாளிகை,

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அன்பால் மலையும் அசையுமடி!

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 23)
#1
“பறவையானது அதன் சொந்த வாழ்வாலும் உந்துதலாலுமே செலுத்தப்படுகிறது.”
_Dr. APJ Abdul Kalam

#2
“நம் கண்களுக்குப் புலப்படுவது நாம் எதை எதிர்நோக்கிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது”
_ John Lubbock

#3

“ஒரே இடத்தில் தங்கி விட அல்ல உலகம், அது மிகப் பெரியது. 
ஒரே விஷயத்தை மட்டுமே செய்வதற்கல்ல வாழ்க்கை, ஏனெனில் அது மிகக் குறுகியது.”


#4
“அத்தனை ஜீவராசிகளுக்கும் நண்பனாய் இருப்பவனே நல்ல மனிதன்.”__Mahatma Gandhi

புதன், 4 அக்டோபர், 2017

சிறகு விரிந்தது - ஒரு பார்வை - திண்ணையில்..

விதைகளைத் தன் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன்.  அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன.

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

வார்த்தைகள் தோற்கும் போது..

#1
‘கற்றலில் கிடைப்பது அறிவு. வாழ்தலில் கிடைப்பது ஞானம்.’
_ Anthony Douglas Williams


#2
‘வெற்றிகளை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். 
தோல்விகளை உங்கள் மனதில் இருத்தி வைக்காதீர்கள்’
_ Anthony Douglas Williams


#3
“காலம் கடிகாரங்களால் கணக்கிடப்படுவதன்று, 
நாம் வாழும் கணங்களால்..”

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin