ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ஏற்ற இறக்கம்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 40
 பறவை பார்ப்போம் - பாகம் 31
#1
“தன் செயல்களில் பிரச்சனை இருப்பதை உணராத ஒருவரை 
உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது.”


#2
“என்னை கீழே இழுக்கும் வல்லமை எனக்கு மட்டுமே உண்டு, 
ஆனால் மேலும் என்னைக் கீழே இழுக்க
என்னையே நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.”
 _C. JoyBell C.

#3
“ஏற்ற இறக்கங்களைக் கொண்டது வாழ்க்கை. 
உயரத்தில் இருக்கையில் வசந்தத்தை அனுபவித்திடு. 
இறக்கத்தில் இருக்கையில்..

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகமும் புறமும்

#1
“அச்சம் முடிவுறும் இடத்தில் 
வாழ்வு தொடங்குகிறது.”
_Osho

#2
“இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே!”
_Oliver Wendell Holmes, Sr.


#3
“நாம் நாமாக நம்மை ஒப்புக் கொள்ளுதல் என்பது

வெள்ளி, 19 அக்டோபர், 2018

காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)

விஜயதசமி வாழ்த்துகளுடன், இந்த நாளுக்குப் பொருத்தமாக, கொல்கத்தா தொடரின் இறுதிப் பதிவாக, காளிகாட் கோயில் குறித்த பதிவு 10 படங்களுடன்:

#1
கோவில் கோபுரம்

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட் காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.

#2
தோரணவாயில்
காட் என்பது தீர்த்தக் கட்டம் எனப்படும் நதியின் படித்துறையாகும்.

செவ்வாய், 16 அக்டோபர், 2018

நவராத்திரி வாழ்த்துகள் !


மேலிருக்கும் இணைப்பில் சென்ற வருடம் பகிர்ந்த
நவராத்திரி கொலுப் பதிவின் தொடர்ச்சியாக, 
தங்கை வீட்டின் இந்த வருடக் கொலுப் படங்கள்..

#1
கேரளத்து..


#2
கதக்களி..!

#3
பொய்க்கால் குதிரையில்.. 
தேசிங்கு ராஜா..
தேசிங்கு ராணி..

#4
கலைவாணியின் கடாட்சமும்..

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

உன் வாழ்க்கையை உனக்காக வாழ்!

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 39
#1
“பெரும்பாலான மக்கள் தங்களிடம் இல்லாத தகுதியை இருப்பதாக, 
உயர்வாக மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். 
இருக்கும் திறமையையோ தாழ்வாக எடை போடுகிறார்கள்.”
_ Malcolm S. Forbes

#2
“நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை உணர்வீர்களானால்,  
நிச்சயம் மிகுந்த சக்தி வாய்ந்தவர்களாக இருப்பீர்கள்!”
 _ Yogi Bhajan


#3
"வெற்றி எனது வரையறை அல்ல, ஆனால் உண்மை எனது வரையறை.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

யாரோடும் பேசாதவள் - இந்த வார கல்கி இதழில்..


21 அக்டோபர் 2018 இதழில்..


யாரோடும் பேசாதவள்

வள் பேசவே மாட்டாள் 
என்றார்கள்
ஒரு காலத்தில் 
பேசிக் கொண்டிருந்தவள்தாம் 
என்றார்கள்
யாருமற்ற தனிமையில்  
தனக்குத்தானே 
பேசிக் கொள்வாளாய் இருக்கும்
என்றார்கள்

வியாழன், 11 அக்டோபர், 2018

பிர்லா மந்திர் - கொல்கத்தா (5)

#1

தொழிலதிபர் பிர்லாவின் குடும்பத்தினரால் நாட்டின் பல இடங்களில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களில் ஒன்று கொல்கத்தாவிலும் உள்ளது. பளிங்கினால் கட்டப்பட்ட இக்கோவில் அசுதோஷ் செளத்ரி அவென்யூவில் இருக்கிறது.

#2

இக்கோவிலைக் கட்டி முடிக்க 26 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

ஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2) - கொல்கத்தா (4)

#1

தாஜ்மஹாலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ‘மக்ரனா’ எனும் உயர் வகை சலவைக் கற்களைக் கொண்டே விக்டோரியா நினைவிடமும் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேல் மாடங்களும், இன்னும் பிற கட்டமைப்புகளுக் கூட தாஜ் மஹாலைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

#2

தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிற   விக்டோரியா நினைவிடத்தில் மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரிட்டிஷ் கால ஓவியங்கள் மற்றும் காட்சிப் பொருட்களாக ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் போன்றவை உள்ளன.

விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்பட ஓவியங்கள் பலவும் உள்ளன. அதில் மிகவும் குறிப்படத்தக்க ஓவியமாக போற்றப் படுகிறது,

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

குற்றத்தை வெறுத்திடு.. குற்றவாளியை நேசித்திடு.. - மகாத்மா காந்தி பொன்மொழிகள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 38
#1
“பிழை செய்திடும் சுதந்திரம் இல்லாவிடில் 
அந்த சுதந்திரத்திற்கு எந்த மதிப்புமில்லை.”

#2
“உனது நம்பிக்கைகள் உனது சிந்தனைகளாகின்றன,
உனது சிந்தனைகள் உனது வார்த்தைகளாகின்றன,
உனது வார்த்தைகள் உனது செயல்களாகின்றன,
உனது செயல்கள் உனது பழக்கங்களாகின்றன,
உனது பழக்கங்கள் உனது பண்புகளாகின்றன,
உனது பண்புகள் உனது தலைவிதியாகின்றது!”

சனி, 6 அக்டோபர், 2018

அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) - கொல்கத்தா (3)

#1

றுபத்து நான்கு ஏக்கர்கள் பரப்பளவில், பரந்து விரிந்த மலர்த் தோட்டங்களுடன் கூடிய விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial),
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஜவஹர்லால் நேரு சாலை அருகே, ஹூக்ளி நதிக்கரையோரத்தில் உள்ளது.

#2

1819–1901 வரை வாழ்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான இந்த பளிங்கு மாளிகை, 1906-1921 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 'வேல்ஸ் இளவரசர்' ஐந்தாம் ஜார்ஜினால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்நினைவிடம் பிரிட்டிஷ் அரசின் வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. விக்டோரியா மகராணி இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

#3

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin